மும்பை: ஐசிசி தொடரில் ஆஸ்திரேலிய அணி உடனான பலப்பரீட்சை குறித்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலியா உடன் விளையாடி உள்ளது. இதில் 2023-ல் இரண்டு இறுதிப் போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவியது. அதுவும் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை தழுவியது. அந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஃபைனலில் 6 விக்கெட்டுகளில் ஆஸி. வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. “ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நமது ஒருநாள் உலகக் கோப்பை கனவை பாழாக்கியது. அதனால் நாமும் அவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்க வேண்டுமென என முடிவு செய்தோம். இது…
Author: admin
சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், ரூ.150 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 82-வது பட்டமளிப்பு விழா, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஸ்டான்லி அரசு மருத்துவமனை வட சென்னை மக்களின் மருத்துவ தேவையை முழுமையாக நிறைவேற்றி வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.66.38 கோடியில் உயர் சிறப்பு மருத்துவ மைய கட்டிடம், ரூ.2.44 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம், ரூ.2.50 கோடி செலவில் முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், சீரமைக்கப்பட்ட மாணவர் நூலகம், கருத்தரங்கு கூடம், உணவு கூடம், திறன் ஆய்வகம், நூற்றாண்டு நிர்வாக அலுவலக கட்டிடம் உள்பட பல்வேறு கட்டமைப்புகள் இந்த மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில்…
சில்லுகள், சர்க்கரை தின்பண்டங்கள், துரித உணவு மற்றும் ஆயத்த உணவு போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மிகவும் வசதியாக இருக்கலாம், ஆனால் உங்கள் குடலை அழிக்கின்றன, ஏனெனில் அவை பெரும்பாலும் சர்க்கரைகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் செயற்கை சேர்க்கைகள் அதிகம். இந்த பொருட்கள் உங்கள் குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் சமநிலைக்கு தீங்கு விளைவிக்கும். மோசமான பாக்டீரியாக்கள் அதிகமாக வளரும்போது, அது வீக்கம் மற்றும் வீக்கம் மற்றும் அச om கரியம் போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.அதற்கு பதிலாக, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் கொட்டைகள் போன்ற இயற்கையான உணவுகளை இன்னும் சாப்பிட முயற்சிக்கவும். இந்த உணவுகள் உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, இது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் சீரானதாகவும் வைத்திருக்க உதவுகிறது.
புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் கதாகாலட்சேபம் செய்பவர் தாக்கப்பட்ட விவகாரம் ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது. இவர் ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், பிராமணர் என பொய் கூறி மோசடி செய்ததாகவும் இரு வழக்குகள் பதிவாகி உள்ளன. உ.பி.யின் அவுரய்யா நகரை சேர்ந்த முகுந்த்மணி சிங் யாதவ், கடந்த 15 வருடங்களாக கதாகாலட்சேபம் செய்து வருகிறார். இவர், ராமாயணம், மகாபாரதம் தொடர்பான கதாகாலட்சேபங்களில் பிரபலமானவர். இவர், எட்டாவா மாவட்டத்தின் தந்தர்பூர் கிராமத்துக்கு கதாகாலட்சேபம் செய்ய அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு கும்பல் இவரை தாக்கியதுடன் மொட்டை அடித்து விரட்டியது. அப்போது அவரது உதவியாளரும் தாக்கப்பட்டார். பிராமணர் அல்லாத ஒருவர் பிரசங்கம் செய்யக்கூடாது என அக்கும்பல் தன்னை மிரட்டியதாக முகுந்த்மணி புகார் கூறினார். இது, உ.பி.யில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முகுந்த்மணி மீது தாக்குதல் நடத்திய நால்வரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் முகுந்த்மணி, அவரது உதவியாளர் சந்த் குமார்…
பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் ஓரளவுக்கு மீண்டு முதல் இன்னிங்ஸில் 190 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பிறகு ஆஸ்திரேலியாவை 2-வது இன்னிங்ஸில் பிரமாதமான பந்து வீச்சில் திணறச் செய்து அந்த அணியை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் என்று முடக்கியுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் 10 ரன் முன்னிலையைக் கழித்தால் 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று உள்ளது. இரண்டாம் நாளில் 10 விக்கெட்டுகள் சாய்ந்தன. ஆட்ட முடிவில் டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் கிரீசில் இருக்கின்றனர். இந்த டெஸ்ட் விறுவிறுப்பான நிலையில் உள்ளது, ஆனால் டெஸ்ட் எப்படி முடியும் என்ற கணிக்க முடியாத நிலை உள்ளது. ஆஸ்திரேலியா இன்னும் ஒரு 150-200 ரன்களைச் சேர்க்க முடிந்தால் மே.இ.தீவுகள் சேஸ் செய்வது இந்தப் பிட்சில் மிக…
சென்னை: தீவிரவாதிகள் தாக்குதலைத் தடுக்கும் வகையில் நடைபெற்ற 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நேற்றுடன் நிறைவடைந்தது. ஒத்திகையின்போது தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 13 வீரர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை `சாகர் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் காவல் துறையின் சார்பில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நேற்று முன்தினம் காலை 6 மணிமுதல் நேற்று மாலை 6 மணிவரை 36 மணி நேரம் நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை சென்னையிலும் நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஒத்திகையில் தொடர்ச்சியான வாகனத் தணிக்கை,…
நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: அபுஜ்மாத்தில் உள்ள கோகமெட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து புதன்கிழமை மாலை நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தொடங்கினர். மாவோயிஸ்ட்களின் மாட் பிரிவின் மூத்த போராளிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. அப்போது இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பெண் நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நக்சல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.
விழுப்புரம்: சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே கட்சிக்கும், ஆட்சிக்கும் கருணாநிதி தலைமை வகித்தபோது ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: என் மூச்சிருக்கும் வரை பாமக தலைவராக இருப்பேன். அவர் (அன்புமணி) செயல் தலைவராக இருப்பார். கட்சியின் வளர்ச்சிக்கு செயல் தலைவர் பொறுப்பு முக்கியமானது. ஆனால் அவர் செயல் தலைவர் பொறுப்பை ஏற்க மறுக்கிறார். ஏற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும். நான் சுயம்புவாக உருவாக்கிய கட்சி பாமக. என் கட்சியினரை உயரத்தில் வைத்துப் பார்த்து ரசித்துள்ளேன். என் மூச்சு நின்ற பிறகு அவர் தானே (அன்புமணி) தலைவர் பொறுப்புக்கு வரப் போகிறார். திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் இருந்தபோதுகூட கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைவராக இருந்தார். அப்போது ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை. என்னுடன் ஆரம்பத்தில் இருந்து தன்னலம் பார்க்காமல் மக்களுக்கு உழைத்து, கட்சியை வளர்த்தவர்கள், ஒதுக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கொடுத்து வருகிறேன். இது…
எலும்பு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது நீண்டகால நல்வாழ்வுக்கு முக்கியமானது, குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸின் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி உட்கொள்ளலை உறுதி செய்தல், புரதத்தை இணைப்பது, புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை விட்டு வெளியேறுவது மற்றும் இலக்கு பயிற்சிகளில் ஈடுபடுவது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் எலும்புகளை கணிசமாக வலுப்படுத்தும். உடற்தகுதி மற்றும் ஆரோக்கியமானது முன்பைப் போலவே கவனத்தை ஈர்த்தது. தசைகளை உருவாக்குவதிலும், உடல் எடையை குறைப்பதிலும் அதிக கவனம் செலுத்துகையில், எலும்பு ஆரோக்கியம் ஒரு பின்சீட்டை எடுத்துள்ளது. ஆனால் எலும்பு ஆரோக்கியத்தை புறக்கணிப்பது வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கும், குறிப்பாக ஒரு வயதினராக. வயதைக் கொண்டு, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளின் அபாயமும் அதிகரிக்கிறது, இது எலும்பு முறிவுகள், இயக்கம் இழப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தில் சரிவு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் எலும்பு ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறை கொள்ளத் தொடங்க…
புதுடெல்லி: இமாச்சல பிரதேசம், காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் மழை பாதிப்பு, விபத்து காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. இமாச்சல பிரதேசத்தில் மணாலி, ஜீவா நல்லா, ஷிலாகர், ஸ்ட்ரோ, ஹோரன்கர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளின் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இமாச்சலின் தரம்சாலா பகுதி, கன்னியாரா கிராமத்தில் நீர்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 16 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலைப் பகுதி சாலைகள்…
