Author: admin

கொல்கத்தா: கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மாநிலத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது என்று மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க தலைவருமான சுகந்த மஜும்தார் குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகந்த மஜும்தார், “கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது, கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் ஒரு மாணவி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் சம்பவம், மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்பாக இல்லை என்பதையே காட்டுகிறது. முதல்வர் மம்தா பானர்ஜியின் நேரடி கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ள போதிலும், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது.…

Read More

‘ட்ரான்’, ‘டாப் கன் மாவெரிக்’ படங்களின் மூலம் ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஜோசப் கோசின்கி இயக்கத்தில் ப்ராட் பிட் நடிக்கும் ஸ்போர்ட் டிராமா என்றதுமே ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. அதிலும் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்பட்டது என்ற அறிவிப்பு வெளியாகி பெரிய திரையில் இதன் பிரம்மாண்டத்தை காணும் ஆவலை ரசிகர்களுக்கு தூண்டியது. ‘F1’-ன் அந்த எதிர்பார்ப்புகள் காட்சி ரீதியாக ரசிகர்களை திருப்திபடுத்தியதா? 90-களில் மிகச் சிறந்த எஃப்-1 ரேஸர்களில் ஒருவராக வளர்ந்து கொண்டிருந்த சன்னி ஹேயஸின் (ப்ராட் பிட்) கரியர் ஒரு விபத்துக்குப் பிறகு முடங்கிப் போகிறது. தற்போது ஐம்பதைக் கடந்த வயதில் இருக்கும் அவர், சிறிய அளவிலான பந்தயங்களில் கலந்து கொண்டும் டாக்ஸி டிரைவராகவும் தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். தனது முன்னாள் சக ரேஸரும் நண்பருமான ரூபனை சந்திக்கும் சன்னியின் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. அபெக்ஸ் எனப்படும் ஒரு எஃப்-1 ரேஸிங் டீமை…

Read More

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்ந்தெடுத்தது உள்பட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது, என்ற கோரிக்கைகளுடன் அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கக்கூடாது, என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, உள்கட்சி விவகாரம் குறித்து அதிகார வரம்பு உள்ளதா? என ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து ஏழு வாரங்கள் கடந்த பின்னும், அதிகாரவரம்பு குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை எனக்கூறி,…

Read More

ஜவாய் சிறுத்தை ரிசர்வ் இந்த அழகிய நில விலங்குகளைப் பார்க்கும் இந்தியாவின் சிறந்த இடங்களில் ஒன்றாகும். ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜவாய் சிறுத்தை பிரியர்களுக்கு ஒரு சொர்க்கம். முழு இடமும் அதன் கிரானைட் மலைகளால் வரையறுக்கப்பட்ட ஒரு அழகிய அழகைக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, சிறுத்தைகள் இந்த இடங்களை தங்கள் வீடுகளை உருவாக்கியுள்ளன, இயற்கை குகைகளில் ஒளிந்து கொண்டுள்ளன அல்லது ரபாரி சமூகத்துடன் இணக்கமாக வாழ்கின்றன, இந்த பிராந்தியத்தில் சிறுத்தைகள் குடும்பமாக கருதப்படுகின்றன.பார்வையிட சிறந்த நேரம்: அக்டோபர் முதல் ஏப்ரல் வரை

Read More

கிங்டாவோ: எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது, சுகோய்-30 ரக போர் விமானங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். சீனாவின் கிங்டாவோ நகரில் நேற்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்கு இடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், தற்போதைய புவிசார் அரசியல் சூழல்கள், எல்லை தாண்டிய தீவிரவாதம், இந்திய – ரஷ்ய பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவுடன் வலுவான நட்புறவை ரஷ்யா கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஆண்ட்ரி பெலோசோ, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தாக்குதல் கோழைத்தனமானது என்று குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை…

Read More

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் பதவிக்கு வரும் 30 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அகில இந்திய அளவில் பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களிலும் பாஜக தலைவர், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறிய மாநிலமான புதுச்சேரியில் தலைவரை தேர்வு செய்யும் பணி இழுபறியாக நீடிக்கிறது. தலைவர் பதவிக்கான போட்டியில் பலரும் இறங்கியதால் தலைவரை தேர்வு செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என பாஜக அகில இந்திய தலைமை முடிவு செய்தது. சில நாட்கள் முன்பு புதுச்சேரி மாநில பாஜக மையக்குழு மேலிட பொறுப்பாளர் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா இன்று மீண்டும் புதுவைக்கு…

Read More

ஓவன் வில்சன், அட்ரியன் பிராடி மற்றும் ஜேசன் ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோரைக் கொண்ட தி டார்ஜிலிங் லிமிடெட் (2007) பெரும்பாலும் இந்தியா முழுவதும் படமாக்கப்பட்டது, ஒரு ரயிலில் படமாக்கப்பட்ட முக்கியமான காட்சிகள் மற்றும் ராஜஸ்தானின் ஜோத்பூர். இந்த திரைப்படம் மூன்று சகோதரர்களைப் பற்றியது, அவர்கள் உடைந்த உறவுகளை குணப்படுத்தும் முயற்சியில் இந்தியா வழியாக ஒரு ரயில் பயணத்தில் ஒரு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டனர். ராஜஸ்தான், பாலைவன நிலப்பரப்புகள் மற்றும் வரலாற்று கட்டிடங்களின் வண்ணங்கள் திரைப்படத்தின் இழப்பு, நல்லிணக்கம் மற்றும் சுய-உணர்தல் கருப்பொருள்களை வளமாக்குகின்றன

Read More

திண்டிவனம்: “பாமகவில் நிலவும் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் என்று அன்புமணி புரிதல் இல்லாமல் சொல்கிறார். பாஜகவை சமாதானப்படுத்துவதற்காக அன்புமணி அவ்வாறு கூறியிருப்பாரே தவிர, அவருடைய உள்மனது அப்படி சொல்லாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜூன் 27) சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கடந்த 40 வருடங்களாக பொது வாழ்க்கையில் தொடர்பில் இருப்பவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அவரை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்ததில் எந்தவித அரசியலும் கிடையாது. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு. நேற்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தலைவர் இளையபெருமாளின் நூற்றாண்டின் நிறைவு விழா நடந்தது. இதில் நானும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்துகொண்டோம். நேற்று இரவு நேரமாகிவிட்டதால், புதுச்சேரியில் தங்கிவிட்டு, காலையில் இவ்வழியாக போகும்போது, பாமக நிறுவனர் ராமதாஸை…

Read More

நேரம் இன்னும் நிற்கும் இடங்கள், அதே போல் தூதர்ஷனில் ஆண்டெனாக்கள் செய்யுங்கள். இன்ஸ்டாகிராம் வடிப்பான்கள், விமான நிலைய செல்ஃபிக்கள் மற்றும் ரிசார்ட் பஃபேக்கள் குறிப்பிடப்பட்ட உணவுகளின் பெயர்களுடன், உண்மையான விடுமுறை இருந்தது: 90 களின் குடும்ப மலை நிலைய பயணம். நீங்கள் காலை 6 மணிக்கு ரயில்களைப் பிடிக்க வேண்டியிருந்தது, நைலான் கயிற்றால் கட்டப்பட்ட சூட்கேஸ்கள் மற்றும் உங்கள் பெயரைக் கொண்ட ஒரு ஸ்டிக்கர், தேயிலை தெர்மோஸ் பிளாஸ்க்ஸ் மற்றும் சில தின்பண்டங்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. நீங்களும் ஏக்கம் உணர்கிறீர்கள் என்றால், இந்த ஐந்து மலை நிலையங்கள் இன்னும் அந்த தெளிவற்ற பழைய உலக அழகைக் கொண்டுள்ளன.இந்த மலை நிலையங்களில் இப்போது வைஃபை மற்றும் ஆடம்பரமான ரிசார்ட்டுகள் இருக்கலாம், ஆனால் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து, அந்த பழைய கேண்டீனில் சாப்பிட்டால், மேகங்கள் உருண்டு ஒரு பெஞ்சில் உட்கார்ந்தால், 90 களின் நேரம் குறைந்து வருவதைக் காண்பீர்கள், குடும்பங்கள்…

Read More

மதுரை: நெல்லையப்பன் கோயில் ஆனி தேரோட்டம் சாதி அடையாளங்கள் இல்லாமல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய டிஜிபி, அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் திருவிழாவில் ஜூலை 8-ல் தேர் திருவிழா நடைபெறுகிறது. இந்த தோரோட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொள்வர். பொதுவாக நெல்லையப்பர் கோயில் திருவிழாவின் போது சாதி ரீதியான கலர் வண்ணங்களை கொண்ட பட்டாசுகள் வெடிக்க செய்வது, சாதி தலைவர்களை வாழ்க வாழ்க என கோஷமிடுவது, சிலர் ஒழிக என கோஷம் போடுவது, திருவிழாவுக்கு வரும் இளைஞர்கள் சாதி ரீதியான டி- ஷர்டுகள், சாதி ரீதியான ரிப்பன்கள் அணிந்து வருவது ஆகியன நடக்கும். நெல்லை மாவட்டத்தில் சாதி படுகொலைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. பொது இடங்களில் சாதி அடையாளங்களை வெளிப்படுத்துவது இப்படுகொலைகளுக்கு முக்கிய காரணமாக…

Read More