மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 75 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார். கேரளா, கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரில் கடந்த 2 வாரங்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து நேற்று மாலை 60,740 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 8 மணி விநாடிக்கு நீர்வரத்து 73,452 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 4 மணிக்கு 114 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு 116.89 அடியாக உயர்ந்ததுள்ளது.…
Author: admin
வானளாவிய கட்டிடங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு முன்பு, நகரங்கள், கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் பலவற்றின் சலசலப்பான மையங்கள் இருந்தன. இந்த பண்டைய நகர்ப்புற அற்புதங்களில் சில பண்டைய உலகின் ஒரு காட்சியை நமக்கு வழங்குகின்றன.
சென்னை: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டு அதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தம், நீக்கம், சேர்க்கை விவரங்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உத்தேச முன்னுரிமை பெயர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களில் 4 சதவீத…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 2021 முதல் பாகிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தாலிபான் என்ற தனி அமைப்பு இந்த தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஆப்கனிஸ்தானை ஒட்டிய கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தற்கொலைப் படைத் தீவிரவாதி மோதியதில், ராணுவ வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பொதுமக்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட 20=க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர், “ஒரு தற்கொலைப் படை தீவிரவாதி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவ வாகனங்கள் மீது மோதியதில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். முந்தைய தாக்குதலின்போது 13 பேர் உயிரிழந்த…
புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கு நாளை (ஜூன் 29) காலை 10 முதல் 12 மணிக்குள் வேட்பு மனுதாக்கல் நடைபெற இருக்கிறது. ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அகில இந்திய அளவில் பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு மாநில தலைவர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். யூனியன் பிரதேசமான புதுவையில் பாஜக தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான தேர்தல் ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை மனுக்களை திரும்பப்பெறலாம். இதற்கான அறிவிப்பை தேர்தல் நடத்தும் அதிகாரி அகிலன் வெளியிட்டுள்ளார். அநேகமாக ஒருவர் மட்டுமே மனு தாக்கல்…
நம்பிக்கை எப்போதும் ஒரு வளர்ந்து வரும் குரல் அல்லது விவேகமான கவனத்தை ஈர்க்கும் ஒரு அறைக்குள் நடக்காது. மிகவும் நம்பிக்கையுள்ள சிலர் அமைதியானவர்கள், பூமிக்கு கீழே, அவர்களிடம் இருப்பதில் திருப்தி அடைகிறார்கள்.உண்மையில், உண்மையான நம்பிக்கை எதையும் நிரூபிப்பது அல்ல; அதற்கு பதிலாக, நிலையான சரிபார்ப்பு தேவையில்லாமல் உங்கள் மதிப்பை அறிந்து கொள்வது பற்றியது. இது செயல்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் ஒருவர் தங்களை மக்களிடையே முன்வைக்கும் விதம் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது; மேலும், மிகவும் நம்பிக்கையுள்ளவர்கள் எப்போதும் அச்சமின்றி உணரவில்லை, அவர்கள் எப்படியும் முன்னேறுவது எப்படி என்பதை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.அதிக நம்பிக்கையுள்ள நபர்கள் தோல்விக்கு பயப்படுவதில்லை, அவர்கள் கருத்துக்களை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் குற்ற உணர்ச்சியின்றி ஆம் அல்லது இல்லை என்று எப்போது சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் நம்பிக்கை ஒன்று அல்லது இல்லாத ஒன்று அல்ல. இது படிப்படியாக ஒருவர் உருவாக்கக்கூடிய ஒரு திறமை.நம்பிக்கையுள்ளவர்கள் பயிற்சி செய்யும் ஐந்து அன்றாட…
புதுடெல்லி: சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்த சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் எனக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவித்தீர்கள். நான் இதற்கு தகுதியானவன் என்று கருதவில்லை. ஆனால், துறவிகளிடமிருந்து நாம் எதைப் பெற்றாலும், அதை ‘பிரசாதமாக’ ஏற்றுக்கொள்வது நமது கலாச்சாரம். எனவே, இந்த ‘பிரசாதத்தை’ நான் பணிவுடன் ஏற்றுக்கொண்டு, அதை மா பாரதிக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று பிரதமர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த நாள் சிறப்பு வாய்ந்தது,…
சென்னை: மீனவர்கள் நலனில் கடுகளவு அக்கறை கூட பாஜகவுக்கு இல்லை என்பதைத் தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 11 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மூடி மறைப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார். நெருக்கடி நிலை காலத்தில், ஒன்றிய காங்கிரஸ் அரசு கச்சத்தீவு குறித்து இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தினால் தான் மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். 1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தின் போது, நெருக்கடி நிலை அமலில் இல்லை. இந்த ஒப்பந்தம் குறித்து 1974 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மக்களவையில் அன்றைய வெளியுறவுத்துறை…
இன்றைய வேகமான வேலையில், இருதய ஆரோக்கியம் பெரும்பாலும் பின்சீட்டை எடுக்கும்; காரணம் வசதி. பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், உட்கார்ந்த வாழ்க்கை முறைகள் மற்றும் மன அழுத்தம் அனைத்தும் இருதய நோய்களின் அதிகரிப்புக்கு பங்களித்தன, அவை அதிகரித்து வருகின்றன. மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் உலகளவில் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும், 2019 இல் 17.9 மில்லியன் இறப்புகள் (WHO). இது அந்த ஆண்டின் அனைத்து உலகளாவிய இறப்புகளில் 32% ஐ குறிக்கிறது. குறிப்பாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் இந்த இறப்புகளில் 85% ஆகும்.ஆடம்பரமான உணவுகள், குறைந்த கார்ப் உணவு மற்றும் மருந்துகள் நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கும் அதே வேளையில், உண்மை என்னவென்றால், உங்கள் அன்றாட வாழ்க்கை முறை தேர்வுகள் நீங்கள் நினைப்பதை விட மிகப் பெரிய பாத்திரத்தை வகிக்கின்றன. (ஆதாரம்: ஹெல்த்லைன், என்ஐஎச்.ஜோவ்,)நவீன மருத்துவத்தை நம்புவதில் நீங்கள் பெரியவராக இருந்தால், இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கானவை;…
திருப்பூர் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றின் இடைநிலைத் தொழிலாளி சாந்தகுமார். பணியிடத்தில் மேலாளரால் ஏற்படும் அவமானம், மனைவியின் வசை, வீட்டு உரிமையாளர் போலீஸில் கொடுக்கும் புகார் உள்பட பல அழுத்தங்கள் அவரைத் தாக்குகின்றன. அவற்றிலிருந்து தப்பிக்க, மதுவை நாடும் அவர், நிலைகொள்ளாத போதையில் செய்யும் செயல்கள், அவரின் அன்றைய இரவில் பல எதிர் விளைவுகளைக் கொண்டு வருகின்றன. அந்த இரவு முடியும்போது அவர் என்னவாகிறார் என்பது கதை. கதை என்பதை விட, ஒரு சாமானியனின் போதை இரவில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் வழியாக அவனது குணமும் வாழ்க்கையும் சுயசரிதைபோல் விரித்துக் காட்டப்படுவதுதான் படம். கதை சொல்லலில், நம்பகமான காட்சிகளுடன் கூடிய தேர்ச்சிமிக்க திரைக்கதை உத்திகளும், ஒளிப்பதிவில் இரவில் விழித்திருக்கும் திருப்பூர் நகரத்தின் உள்ளோடிய முகமும், இசையில் தன்னிலை உணரும் ஒருவனின் விடுதலைக்கான ஏக்கமும் இயல்பாக இருப்பதால், ஒரு யதார்த்த சினிமாவாக இப்படம் உயர்ந்துவிடுகிறது. அறை நண்பனிடம், முதலாளியிடம், மேலாளரிடம், மனைவியிடம்,…
