Author: admin

திருச்சி: அறிவு, திறன், அணுகுமுறை, கடின உழைப்பு, திட்டமிடல் இருந்தால் யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம் என திருச்சியில் நேற்று நடைபெற்ற ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட எஸ்.பி., பயிற்சி ஆட்சியர் உள்ளிட்டோர் போட்டித் தேர்வர்கள், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். நாட்டின் அதிகாரமிக்க உயரிய பதவிகளில் அமர்வதற்கான வாய்ப்பை வழங்கும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதற்கான ஆலோசனைகளை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் `இந்து தமிழ் திசை- ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. செ.செல்வநாகரத்தினம், தீபிசனு, சரண்யா, சத்யஸ்ரீ பூமிநாதன், மு.முருகேசன் இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி மாவட்ட எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம் பேசியது: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி என…

Read More

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி திடீர் பயண​மாக நேற்று மாலை டெல்லி புறப்​பட்டுச் சென்​றார். பாமக நிறுவனர் ராம​தாஸ் மற்​றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்​புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரு​கிறது. இரு​வரும் தாங்​கள்​தான் உண்​மை​யான பாமக என்று கூறிக் கொள்​வதோடு, ஒரு​வரின் ஆதர​வாளரை, மற்​றொரு​வர் கட்​சிப் பொறுப்​பில் இருந்து நீக்​கு​வதும் நியமிப்பதுமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. மேலும் இரு தரப்​புக்​கும் இடையே கடுமை​யான சொற்​போரும் நடந்து வரு​கிறது. இந்​நிலை​யில் அன்​புமணி திடீர் பயண​மாக, நேற்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் சென்​னை​யில் இருந்து டெல்லி புறப்​பட்டுச் சென்​றார். அங்கு அவர், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா மற்​றும் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் தலைமை தேர்​தல் அதி​காரி​களை சந்​திக்க இருப்​ப​தாக​ கூறப்படுகிறது.

Read More

எலும்புகள் தாதுக்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. எலும்புகள் உயிருடன் உள்ளன, பகுதி கனிம, பகுதி வாழ்க்கை திசு. கொலாஜன் என்பது அந்த திசுக்களின் உள் சாரக்கட்டு ஆகும். கொலாஜன் இல்லாமல், எலும்புகள் சுண்ணாம்பு போல கடினமாக ஆனால் உடையக்கூடியதாகின்றன.கொலாஜன் எலும்புகளுக்கு அவற்றின் நெகிழ்வுத்தன்மையையும் எலும்பு முறிவுகளுக்கு எதிர்ப்பையும் தருகிறது. வயது அதிகரிக்கும்போது அல்லது மன அழுத்தத்தின் கீழ், உடல் குறைவான கொலாஜனை உற்பத்தி செய்கிறது, இது எலும்புகளை பலவீனப்படுத்தும். உடலுக்கு கொலாஜன் உற்பத்தி செய்வதில் வைட்டமின் சி ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. அம்லா (இந்திய நெல்லிக்காய்), சிட்ரஸ் பழங்கள் மற்றும் எலும்பு குழம்பு போன்ற உணவுகள் இந்த உள் வலிமையை வளர்க்கும்.மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் வயதான பெரியவர்களில் எலும்பு அடர்த்தியை மேம்படுத்துவதற்கான சமீபத்திய ஆய்வுகளில் கொலாஜன் (குறிப்பாக கடல் அல்லது வகை I கொலாஜன்) கூடுதலாக காட்டப்பட்டுள்ளது.

Read More

சென்னை: ராமதாஸூட​னான சந்​திப்பில் திமுக​வின் சூழ்ச்சி இல்லை என காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்துள்​ளார். காங்​கிரஸ் மூத்த தலை​வர் சி.கே.பெரு​மாளின் 80-வது பிறந்​த ​நாளை​யொட்​டி, ‘உள்​ளிக்​கோட்டை டூ செங்​கோட்​டை’, ‘அரசி​யலில் 60 ஆண்​டு​கள்’ ஆகிய நூல்​கள் வெளி​யீட்டு விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு, பேர​வைத் தலை​வர் அப்​பாவு, திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி, இந்​திய கம்​யூனிஸ்ட் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணு, தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் தலை​வர்​கள் கே.​வி. தங்​க​பாலு, சு.​திரு​நாவுக்​கரசர் மற்​றும் சி.கே.பெரு​மாள் குடும்​பத்​தினர் கலந்து கொண்​டனர். இந்​நிகழ்ச்​சி​யின் முடி​வில் செல்​வப்​பெருந்​தகை செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாமக நிறு​வனர் ராம​தாஸூட​னான சந்​திப்பை அன்​புமணி விமர்​சித்​துள்​ளார். சமூக நீதிக்​காக யாரெல்​லாம் போராடு​கிறார்​களோ அவர்​கள் மீது பாச​மும் மதிப்​பும் எனக்கு உண்​டு. மரி​யாதை நிமித்​த​மாக சந்​திப்​பை அவர் அரசி​ய​லாக்​கு​வது வேதனை. ராம​தாஸ் மீது உண்​மை​யான அன்பு எங்​களுக்கு இருக்​கிறது. அவர் காங்​கிரஸ் கூட்​ட​ணி​யில்…

Read More

சென்னை: தனது வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். சாகித்ய அகாடமி, டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்தார். ‘முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இலக்கிய ஆளுமை’ எனும் சிறப்பு மலரையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவிதை, புனைகதை, செவ்வியல், நாடகம், திரை வசனம், உரைநடை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. கருணாநிதி பன்முகத் திறன் பெற்றவர் என்பதை இது காட்டுகிறது. அவர் தனது வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர். வாழ்வையே தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்ததால்தான் 5 முறை தமிழக முதல்வராக அவரால் இருக்க முடிந்தது. இலக்கியத்தை இளைப்பாறும் நிழலாக கருதினார். ‘எனது செங்கோலை பறித்துவிடலாம்.…

Read More

மடப்புரத்தில் உள்ள கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: காவல் துறையை கட்​டுப்​பாட்​டில் வைத்​திருக்க வேண்​டிய முதல்​வர் கண்​டும் காணா​மல் இருப்​ப​தால் அப்​பாவி மக்​கள் உயி​ரிழக்​கின்​றனர். மடப்​புரம் சம்​பவத்​துக்கு முதல்​வர் என்ன சொல்​லப் போகிறார்? அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: ஒரு​வர் தவறு செய்​த​தாக காவல் துறை கரு​தி​னால், கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஒப்​படைத்​து, உரிய சட்ட நெறி​முறையைப் பின்​பற்ற வேண்​டும். சட்​டத்தை கைகளில் எடுத்​துக்​கொள்​ளக் கூடாது. தனது நேரடிக் கட்​டுப்​பாட்​டில் உள்ள காவல் துறையைக்​கூட நிர்​வகிக்​கத் தெரி​யாத முதல்​வருக்கு கடும் கண்​டனம் தெரி​வித்​துக் கொள்​கிறேன். மாவட்ட நீதிபதி தலை​மையி​லான குழு விசா​ரணை நடத்​தி, உயி​ரிழப்​புக்​குக் காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இறந்​தவர் குடும்​பத்​துக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: திமுக ஆட்​சி​யில் காவல் நிலை​யத்​துக்கு வரு​வோரின் உயிர்​களுக்​கு பாது​காப்பு இல்​லாத நிலை…

Read More

சென்னை: இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்க கல்வி துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை: தொடக்க கல்வி துறை​யில் மலை சுழற்சி மாறு​தல் கலந்​தாய்வு (21 ஒன்​றி​யங்​களுக்கு மட்​டும்) ஜூலை 2-ல் நடை​பெறும். இடைநிலை ஆசிரியர்​களுக்​கான பணிநிர​வல் கலந்​தாய்வு ஒன்​றி​யம் கல்வி மாவட்​டத்​துக்​குள் ஜூலை 3-ம் தேதி​யும், வரு​வாய் மாவட்​டத்​துக்​குள் ஜூலை 4-ம் தேதி​யும் நடத்​தப்​படும். இடைநிலை ஆசிரியர்​களின் பொது மாறு​தல் கலந்​தாய்வு ஜூலை 5-ல் தொடங்கி 11-ம் தேதி வரை நடை​பெறும். தொடக்​கப் பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கான கலந்​தாய்வு ஜூலை 19, 21-ம் தேதி​களி​லும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கான கலந்​தாய்வு ஜூலை 22, 23-ம் தேதி​களி​லும் நடத்​தப்​படும். மேலும், பட்​ட​தாரி ஆசிரியருக்​கான இடமாறு​தல் கலந்​தாய்வு ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை நடை​பெறும்.…

Read More

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்​குர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக இன்று சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. ஜூலை 1, 2-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும், வரும் 3-ம் தேதி ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மித​மான மழை​யும், 4, 5-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு​கள் இன்று (ஜூன் 30) முதல் திறக்கப்பட உள்ளன. தமிழகத்​தில் அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் நடப்​பாண்டு மாணவர் சேர்க்​கைக்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு கடந்த மே 7 முதல் 27-ம் தேதி வரை நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க 2 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​தனர்​.​முதல்​கட்​ட​மாக சிறப்​புப் பிரிவுக்​கான கலந்​தாய்வும், தொடர்ந்து பொதுப் பிரிவுக்​கான கலந்​தாய்வும் நிறைவடைந்​தது. இதையடுத்து, அரசுக் கல்​லூரி​களில் முதல்​கட்ட கலந்​தாய்​வின்​போது நிரம்​பாத இடங்​களை நிரப்​புவதற்​கான 2-ம்​கட்ட சேர்க்​கைப் பணி​கள் தற்​போது தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. இதற்​கிடையே கலை, அறி​வியல் படிப்​பு​களில் சேர்ந்த முதலா​மாண்டு மாணவர்​களுக்கு ஜூன் 30-ம் தேதி வகுப்​பு​கள் தொடங்​கப்​படும் என்று கல்​லூரிக்​கல்வி இயக்​குநரகம் அறி​வித்​திருந்​தது. அதன்​படி முதலா​மாண்டு மாணவர்​களுக்​கான வகுப்​பு​கள் இன்​று(ஜூன் 30) தொடங்​கப்பட உள்​ளன. இதையடுத்து மாணவர்​களை வரவேற்க அரசுக் கல்​லூரி​களில் சிறப்பு நிகழ்ச்​சிகள் ஏற்​பாடு​ செய்​யப்​பட்​டு உள்​ளன. மேலும், ராகிங்…

Read More

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை முன்னிட்டு, படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இதில் பிரதீப் ரங்கநாதன், “இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன். அப்போது நான் ‘கோமாளி’ படத்தையும் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார். அதன்…

Read More