சென்னை: தியாகங்கள் புரிந்த தீரர்கள், அறிஞர்கள், தலைவர்களை போற்றி 4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய பணிகளில் சிறந்த பணி, பல்லாயிரக்கணக்கான தலைமுறைகளுக்கும் தனித்தோங்கி நிற்கும் பணி, தென்கோடி குமரி முனையில் திருவள்ளுவருக்கு உலகமே கண்டு வியக்கும் வண்ணம் 133 அடி உயரத்தில் 7,000 டன் எடை கொண்ட மாபெரும் கற்சிலையை ரூ.9 கோடியே 65 லட்சத்தில் நிறுவி 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை போல எண்ணற்ற சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் நிறுவி தியாகிகளை போற்றியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குமரி முனையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் வெள்ளி விழாவை 2024-ம் ஆண்டு டிசம்பர் 30,…
Author: admin
சென்னை: ரிசர்வ் வங்கி அறிவித்த ரெப்போ விகித மாற்றத்தை தொடர்ந்து, சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் வைப்புத் தொகை வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, மூத்த குடிமக்களுக்கான வைப்பு தொகைக்கு, 12 மாதங்களுக்கு 7.2%, 24 மற்றும் 36 மாதங்களுக்கு 7.5% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல பிற வாடிக்கையாளர்களுக்கான வைப்புத் தொகைக்கு, 12 மாதங்களுக்கு 6.7%, 24 மற்றும் 36 மாதங்களுக்கு 7% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம், டிஜிட்டல் வைப்புத் தொகை வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது, சேமிப்பை இதுவரை இல்லாத வகையில் எளிதாகவும், பாதுகாப்பாகவும், எளிமையாக அணுகக்கூடியதாகவும் மாற்றியுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்களது வைப்புத் தொகைகளை ஒரே சீரான மற்றும் பாதுகாப்பான செயல்முறை வழியாக டிஜிட்டல் முறையிலேயே முதலீடு செய்யவும் அவற்றை நிர்வகிக்கவும் முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி வருவாயுடன் முழுமையான…
நீங்கள் மிகவும் கடினமாக முயற்சி செய்யாமல் உங்கள் ஆடை வேலை செய்வது போல, ஆடை அணிவது சிரமமின்றி உணரும்போது நாட்கள் உள்ளன. உங்கள் அலமாரி நிரம்பியிருந்தாலும், எதுவும் சரியாக உணரக்கூடிய நாட்கள் உள்ளன. வித்தியாசம்? பெரும்பாலும், இது சமநிலைக்கு வருகிறது. 60-30-10 விதி அமைதியாக ஒரு கடுமையான சூத்திரமாக அல்ல, ஆனால் ஒரு எளிய, காட்சி வழிகாட்டியாக உங்கள் அலங்காரத்தை கட்டாயப்படுத்தாமல் சிந்திக்க உதவுகிறது.”ஸ்டைலிங்கில் முதல் பாடம் சமநிலை ஆகும். 60-30-10 விதி என்பது உங்கள் மனநிலை, ஆறுதல் மற்றும் சந்தர்ப்பம்-ஒரு ஒத்திசைவான தோற்றத்தை ஒன்றிணைக்க உதவும் ஒரு கருவியாகும். ஃபேஷனில் எங்களுக்கு இது உள்ளுணர்வு. ஆனால் மற்றவர்களுக்கு, இந்த எளிய சூத்திரம் ஒரு உண்மையான விளையாட்டு மாற்றியாக இருக்கலாம் ”என்று பிரபல ஒப்பனையாளர் இஷா பன்சாலி காஸ்மோபாலிட்டனிடம் கூறினார்.அதன் இதயத்தில், 60-30-10 விதி விகிதாச்சாரத்தைப் பற்றியதுஒரு அலங்காரத்தில் வண்ணங்களை எவ்வாறு விநியோகிப்பது என்பதைக் கண்டுபிடிக்க இது உதவுகிறது, இதனால் அது…
வாஷிங்டன்: “காசா விவகாரத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடைபெற்றுக் கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. மேலும், இளம்பெண்கள் உட்பட 251 இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 56,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், அணுஆயுத சர்ச்சை தொடர்பாக ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தற்போது ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வெளியிட்ட…
சென்னை: டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் மேலாளர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் பணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் உற்பத்தி முதல் விற்பனை வரை என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி விற்பனையை கண்காணிக்க டாஸ்மாக் நிர்வாகம் டிஜிட்டல்மயமாகி உள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலும், செல்போன் வடிவலான கையடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்து அதன் பிறகே விற்கப்படுகிறது. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளிலும், நேரடியாக கைகளில் பணம் பெறுவதை தவிர்த்து செல்போன் செயலி வழியான பணப்பரிவர்த்தனை போன்ற டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்க வேண்டும் என…
டாக்டர் வெண்டி லெப்ரெட் எடை தாங்கும் பயிற்சிகளை கொழுப்பு கல்லீரல் நோயைத் தடுப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முக்கியமானது, இது மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் நிலை. கார்டியோவுக்கு மேல் தசைக் கட்டமைப்பிற்கு முன்னுரிமை அளிப்பது நோயின் வளர்ச்சியின் முக்கிய காரணியான இன்சுலின் எதிர்ப்பை எதிர்த்துப் போராட உதவுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் குறைந்த சீரான உணவுடன் இணைந்து நடைபயிற்சி, குந்துகைகள் மற்றும் மதிய உணவுகள் போன்ற பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. கொழுப்பு கல்லீரல் நோய் என்பது வளர்ந்து வரும் சுகாதார அக்கறை, இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது. மிகவும் பொதுவான வகைகளில் ஒன்று வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) ஆகும், இது முன்னர் மதுபானமற்ற கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என்று அழைக்கப்பட்டது. மோசமான உணவு, உடல் பருமன் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறையுடன் இணைக்கப்பட்ட இந்த நிலை, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கல்லீரல் அழற்சி, வடு மற்றும் சிரோசிஸுக்கு வழிவகுக்கும்.…
விருதுநகர்: இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஆய்வு முடிவு அறிக்கை வெளியிட்டுவிட்டது. இனியாவது மத்திய அரசு கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடுமா என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை அறிவியல் வழியில் ஆய்வு செய்து, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம். கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்குப் பின்னராவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா? இவ்வாறு தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து வரும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை இந்திய துறைமுகங்கள் வழியாக (கப்பல் மூலம்) நேரடியாகவும் மறைமுகமாகவும் கொண்டு செல்ல மத்திய அரசு தடை விதித்தது. இதனால் கடல்சார் தளவாட போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், விதிமீறல்களை கண்டறிவதற்கான சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கையின்படி இதுவரை ரூ.9 கோடி மதிப்புள்ள 1,100 டன் பொருட்களை ஏற்றிச் சென்ற 39 கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பொருட்கள் ஐக்கிய அரபு அமீரக பொருட்கள் என தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது சோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து கராச்சி சேம்பர் ஆப் காமர்ஸ் அன்ட் இண்டஸ்ட்ரி தலைவர் ஜாவேத் பில்வானி கூறும்போது, “இந்தியாவின் தடையால் பெரிய கப்பல்கள் பாகிஸ்தானுக்கு வருவதில்லை. இதனால் இறக்குமதியாளர்கள் சிறிய கப்பல்களை நம்பி இருப்பதால் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. அத்துடன் இறக்குமதி 30 முதல் 50 நாட்கள் வரை தாமதமாகிறது.…
இஸ்லாமபாத்: பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள கைபர் பக்துன்குவா பகுதியில் நேற்று முன்தினம் ராணுவத்தினரின் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அவற்றின் மீது வெடிகுண்டுகள் ஏற்றிவந்த வாகனம் மோதியதில் பாக். ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு தெக்ரிக் – இ-தலிபான் என்ற பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தற்கொலைப்படை பிரிவான ஹபிஸ் குல் பகதூர் பொறுப்பேற்றது. ஆனால், பாகிஸ்தானின் ராணுவம் விடுத்துள்ள செய்தியில், ‘‘இந்தியாவின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள், வெடிகுண்டு வாகனத்தை ராணுவத்தினர் வாகனங்கள் மீது மோதி தாக்குதல் நடத்தினர்’’ என தெரிவித்துள்ளது. இந்தியா மறுப்பு: இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், ‘‘வசிரிஸ்தானில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. இதை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம்’’ என கூறியுள்ளார்.
சேலம்: அன்புமணியின் பின்னால் கட்சி நிர்வாகிகள் மட்டும்தான் உள்ளனர். ராமதாஸின் பின்னால் வன்னியர்கள், வாக்காளர்கள் உள்ளனர் என்று பாமக எம்எல்ஏ அருள் கூறினார். சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ராமதாஸைப் பற்றி எவருமே சொல்லாத, சொல்லத் தயங்கிய வார்த்தைகளை அன்புமணி பேசியது வேதனை அளிக்கிறது. கொலை, கொள்ளை வழக்கில் உள்ளவர்கள், சாலையோரம் இலந்தைப் பழம் விற்பவர்களுக்கு ராமதாஸ் பொறுப்புகளை வழங்கியிருப்பதாக அன்புமணி கூறியுள்ளார். பாட்டாளி வர்க்கத்தினரை அன்புமணி இழிவுபடுத்தி விட்டார். ராமதாஸைச் சுற்றி 3 தீய சக்திகள் இருப்பதாக அன்புமணி கூறுகிறார். ஆனால், அன்புமணியைச் சுற்றித்தான் தீய சக்திகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தைபோல இருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். எனில், 3 ஆண்டுகளுக்கு முன்பு பாமக தலைவராக அன்புமணியை ராமதாஸ் அறிவித்தது எப்படி செல்லும்? ராமதாஸ் பின்னால் வன்னியர்கள், சிறுபான்மையினர், வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆனால், அன்புமணியின் பின்னால் கட்சி நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர். எங்கள் உயிருக்கு ஆபத்து..…
