Author: admin

நாள்பட்ட சிறுநீரக நோய் (சி.கே.டி) என்பது மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு நிலை. இந்த நிலை நீண்ட கால சேதத்தால் குறிக்கப்பட்டுள்ளது, இது இறுதியில் சிறுநீரகங்களை பலவீனமாக மாற்றுகிறது, மேலும் அவர்களால் இரத்தத்தை வடிகட்ட முடியாது. இது உடலில் கழிவு மற்றும் கூடுதல் திரவத்தை உருவாக்க வழிவகுக்கிறது. சி.கே.டி -க்கு நேரடி சிகிச்சை இல்லை என்றாலும் (அது முற்போக்கானது), சிகிச்சைகள் அறிகுறிகளை நிர்வகிக்கவும் அதன் முன்னேற்றத்தை குறைக்கவும் உதவும், இதில் வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள், டயாலிசிஸ் அல்லது மேம்பட்ட நிகழ்வுகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும். இருப்பினும், வழக்கமான சிகிச்சைகள் தவிர, இப்போது சில நம்பிக்கை உள்ளது. தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜியில் வெளியிடப்பட்ட ஒரு அண்மையில் ஏற்பட்ட மருத்துவ ஆய்வு நம்பிக்கைக்குரிய செய்திகளைக் கொண்டு வந்துள்ளது: சோடியம் பைகார்பனேட்டுடன் தினசரி கூடுதல், பேக்கிங் சோடா என்றும் அழைக்கப்படுகிறது, இது…

Read More

திருவனந்தபுரம்: கேரளா​வில் பள்ளி மாணவ, மாண​வியரின் உடல்​நலன், மனநலனை மேம்​படுத்த ஜும்பா நடன பயிற்சி வழங்கப்​படு​கிறது. இதற்கு மத அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. ஜும்பா என்​பது நடனத்தை உள்​ளடக்​கிய உடற்பயிற்சி ஆகும். கடந்த 2001-ம் ஆண்​டில் கொலம்​பிய நடன கலைஞர் பீட்டோ பெரெஸ், ஜும்பா நடனத்தை உரு​வாக்​கி​னார். தற்​போது உலகம் முழு​வதும் 180-க்​கும் மேற்​பட்ட நாடு​களில் இந்த நடனம் பிரபல​மாக இருக்​கிறது. கேரளா​வில் அரசு மற்​றும் தனி​யார் பள்ளி மாணவ, மாண​விருக்கு ஜும்பா நடன பயிற்சி வழங்​கும் திட்​டம் நடப்பு கல்​வி​யாண்​டில் அறி​முகம் செய்​யப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் மாணவ, மாணவியரின் உடல் நலன், மன நலன் மேம்​படும். போதை பொருள் பழக்​கத்​துக்கு மாணவர்​கள் அடிமை​யா​வது தடுக்​கப்​படும் என்று கேரள கல்​வித் துறை விளக்​கம் அளித்து உள்​ளது. ஆனால் பல்​வேறு மத அமைப்​பு​கள் ஜும்பா நடன பயிற்சி திட்​டத்​துக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. முஸ்​லிம் மாணவர்​கள் கூட்​டமைப்​பின் தலை​வர் நவாஸ் கூறும்​போது,…

Read More

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. சாய் கிஷோர் அதிரடியாக விளையாடி 55 ரன்கள் (34 பந்துகள். 8 பவுண்டரி. ஒரு சிக்ஸர்) குவித்தார். பின்னர் விளையாடிய நெல்லை அணி 19.4 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது. திருப்பூர் அணி சார்பில் டி.நடராஜன் 3, மோகன் பிரசாத் 2, சாய்கிஷோர், இசக்கிமுத்து, முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Read More

சென்னை: திமுக கூட்​ட​ணியை மறு​பரிசீலனை செய்ய அவசி​யமில்லை என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக நிர்​வாகக் குழு கூட்​டம் கட்​சி​யின் அவைத் தலை​வர் ஆடிட்​டர் அர்​ஜூன​ராஜ் தலை​மை​யில் சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில் பொதுச்​செய​லா​ளர் வைகோ சிறப்​புரை ஆற்​றி​னார். பொருளாளர் மு.செந்​தில​திபன், முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ, துணைப் பொதுச்​செய​லா​ளர்​கள் மல்லை சத்​யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடு​துறை இரா.​முரு​கன், தி.​மு.​ராஜேந்​திரன், ரொஹையா மற்​றும் நிர்​வாகக் குழு உறுப்​பினர்​கள் கலந்​து​கொண்​டனர். கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள்: தமிழகத்தை வளர்ச்​சிப் பாதை​யில் முன்​னெடுத்​துச் செல்​லும் திமுக அரசு தொடர​வும், இந்​துத்​துவ மதவாத சக்​தி​களை முறியடிக்​க​வும் கூட்​டணி என்ற மதி​முக எடுத்த முடிவை வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலிலும் கடைப்​பிடிப்​போம். அரசி​யலமைப்​பில் மதச்​சார்​பற்ற, சோசலிச எனும் வார்த்​தைகளை நீக்க வேண்​டும் என்று ஆர்​எஸ்​எஸ் கூறி​யிருப்​பது கடும் கண்​டனத்​துக்​குரியது. முரு​கன் மாநாட்​டில் பெரி​யார், முன்​னாள் முதல்​வர் அண்​ணாதுரையை சிறுமைப்​படுத்தி வெளி​யான காணொலிக்கு கடும் கண்​டனம். திருச்​சி​யில் நடை​பெறவுள்ள முன்​னாள்…

Read More

புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டில், 186 நாடுகளை உள்ளடக்கிய உலக வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தொழில்முனைவில் பாலின இடைவெளி குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்திய பெண்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தொழில்முனைவோராக உள்ளனர் என்றும் இது உலக சராசரியைவிட குறைவு என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய ஆண்களில் (15-64 வயது) சுமார் 3% பேர் தொழில்முனைவோராக உள்ளனர். இது உலக சராசரியுடன் ஒத்துப் போகிறது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Read More

புதுடெல்லி: பண மோசடி வழக்​கில் கடந்த மாதம் கைது செய்​யப்​பட்ட ஹரி​யானா முன்​னாள் காங்​கிரஸ் எம்​எல்ஏ தரம் சிங் சோக்​கருக்கு சொந்​த​மான ரூ.557 கோடி மதிப்​பிலான சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கி​யுள்​ளது. இதுகுறித்து அமலாக்​கத் துறை கூறி​யுள்​ள​தாவது: பணமோசடி வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள ஹரி​யானா முன்​னாள் காங்​கிரஸ் எம்​எல்ஏ தரம் சிங் சோக்​கர் என்​பவருக்கு சொந்​த​மான ரூ.557 கோடி மதிப்​பிலான சொத்​துகள் முடக்​கப்​பட்​டுள்​ளன. இதையடுத்​து, இந்த வழக்​கில் முடக்​கப்​பட்​டுள்ள ஒட்​டு மொத்த சொத்​துகளின் மதிப்பு ரூ.638 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. மஹிரா இன்ப்​ராடெக் (முன்பு சாய் அய்னா பார்ம்​ஸ்) உள்​ளிட்ட இந்த வழக்​கில் தொடர்​புடைய மற்​றும் சோக்​கர் மற்​றும் அவரது உதவி​யாளர்​களுக்கு சொந்​த​மான சொத்​துகளும் இதில் அடக்​கம். குறிப்​பாக, குர்​கானில் உள்ள 35 ஏக்​கர் நிலம், பல்​வேறு செக்​டார்​களில் உள்ள வணிக மற்​றும் குடி​யிருப்பு கட்​டிடங்​கள் ஆகியவை இந்த பணமோசடி வழக்​கில் முடக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அமலாக்​கத் துறை தெரி​வித்​து உள்​ளது. தரம்​ சிங்​…

Read More

சென்னை: எங்​கள் கூட்​டணி யார் தலை​மை​யில் என்​பதை பலமுறை பல விளக்​கங்​களை அமித் ஷா சொல்​லி​விட்​டார். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இன்​னும் பல கட்​சிகள் வர இருக்​கிறார்​கள் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். பிரதமர் மோடி​யில் 123-வது மனதின் குரல் நிகழ்ச்சி நாடு முழு​வதும் நேற்று ஒலிபரப்​பானது. அதன் ஒருபகு​தி​யாக தி.நகரில் உள்ள தனி​யார் மண்​டபத்​தில் பாஜக சார்​பில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்த மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு நிகழ்​வில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கலந்து கொண்​டார். இதையடுத்​து, ஆழ்​வார்ப்​பேட்​டை​யில் நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் கலந்து கொண்ட அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விவ​சா​யிகள் பயன்​படுத்​தும் நிலத்​தடி நீருக்கு மத்​திய அரசு வரி விதிக்க உள்​ளது என்ற தவறான தகவலை வேக​மாக பரப்பி வரு​கிறார்​கள். மத்​திய அரசு அதற்​கான விளக்​கத்தை ஏற்​கெனவே கொடுத்​துள்​ளது. விவ​சா​யிகளுக்​கான நிலத்​தடி நீரில் எந்த ஒரு கட்​ட​ண​மும் வசூலிக்​கப்​ப​டாது என்​பதை ஜல்​சக்தி துறை அமைச்​சகம் தெளி​வாக…

Read More

உங்கள் தினசரி நடைப்பயணத்தை எளிய மாற்றங்களுடன் சக்தி நிறைந்த வொர்க்அவுட்டாக மாற்றவும். இடைவெளி நடைபயிற்சி ஆகியவற்றை இணைத்து, உங்கள் வேகத்தை அதிகரிக்கவும், மேம்பட்ட கலோரி எரியும் மற்றும் வலிமைக்கும் எடையைச் சேர்க்கவும். அதிக தசைகளில் ஈடுபட மலைகள் அல்லது படிக்கட்டுகள் போன்ற சாய்வுகளைத் தேர்வுசெய்க. உங்கள் சக்தி நடைப்பயணத்தின் போது காயங்களைத் தடுப்பதற்கும் சுவாச செயல்திறனை மேம்படுத்துவதற்கும் நல்ல தோரணையை பராமரிப்பது மிக முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழக்கமான உடற்பயிற்சி அவசியம். ஆனால் சுறுசுறுப்பாக இருப்பது எப்போதுமே தீவிரமான உடற்பயிற்சிகளையோ அல்லது சிக்கலான நடைமுறைகளையோ குறிக்க வேண்டியதில்லை. நடைபயிற்சி போன்ற எளிமையான ஒன்று கூட உங்களுக்கு சுகாதார நன்மைகளை வழங்க முடியும் மற்றும் நோய்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இதய நோய், பக்கவாதம் மற்றும் பல புற்றுநோய்கள் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களின் அபாயத்துடன் நடைபயிற்சி இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் சாதாரண நடைபயிற்சி இன்னும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கலாம் என்றாலும், சில எளிய மாற்றங்களைச்…

Read More

புதுடெல்லி: இந்​தியா – பாகிஸ்​தான் இடையே கடந்த மே மாதம் நடை​பெற்ற போரில் இந்​திய விமானப்​படை​யில் எத்​தனை போர் விமானங்​கள் சேதம் அடைந்தன என்ற விவரத்தை தெரிவிக்க வேண்​டும் என மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல் கேள்வி எழுப்பினார். முப்​படை தளபதி ஜெனரல் அனில் சவு​கான் ஏற்​கெனவே அளித்த பேட்​டி​யில், ‘‘இந்​தி​யா​வின் 6 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது என பாகிஸ்​தான் கூறு​வது முற்​றி​லும் தவறான தகவல். தாக்​குதல் உக்​தி​களில் ஏற்​பட்ட தவறுகளை சரிசெய்​து, அனைத்து வகை விமானங்​களை​யும் பயன்​படுத்தி பாகிஸ்​தானின் தொலை​தூர பகு​தி​களில் துல்​லிய தாக்​குதல் நடத்​தினோம்’’ என்​றார். இந்​நிலை​யில் இந்​தோ​னேஷி​யா​வில் சிறப்பு பணிக்கு அனுப்​பப்​பட்ட இந்​திய கடற்​படை கேப்​டன் சிவ குமார் என்​பவர் சமூக ஊடகத்​தில் விடுத்த செய்​தி​யில், ‘‘பாகிஸ்​தான் மீதான தாக்​குதலில், அரசி​யல் தலை​மை​யின் கட்​டுப்​பாடு காரண​மாகத்​தான், இந்​திய விமானப்​படை போர் விமானங்​களை இழந்​தது’’ என கூறி இருந்​தார். இதை மேற்​கோள் காட்​டி​யுள்ள காங்​கிரஸ் மூத்த தலை​வர்…

Read More

மதுரையை சேர்ந்த ராம் என்கிற ராமச்சந்திரனுக்கு (விக்ரம் பிரபு), முப்பது வயதைத் தாண்டியும் திருமணம் நடக்கவில்லை. ஒரு காலத்தில் அவர் பல பெண்களை நிராகரித்த நிலையில் இப்போது அவரை பலர் நிராகரிக்கின்றனர். ‘அவன் ராசிக்கு பெண்ணே கிடைக்காது’ என்று சொல்லப்படும் நிலையில் அவருக்கு வேறு ஊரில், வேறு சாதியில் அம்பிகா (சுஷ்மிதா பட்) என்ற பெண்ணை, தரகர் மூலம் பார்க்கிறார்கள். இதற்காக கோபிசெட்டிப்பாளையம் செல்கின்றனர், ராமின் குடும்பத்தினர். இந்த நேரத்தில் கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்படுகிறது. பெண் வீட்டிலேயே அவர்கள் சில வாரங்கள் தங்கி இருக்க வேண்டிய சூழல். இந்தக் காலக்கட்டத்தில் ராமின் உறவினர்களால் ஏற்படும் குழப்பத்தில் அவர் திருமணத்துக்குச் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கல் தீர்ந்ததா? ராமின் திருமணக் கனவு என்னவாகிறது என்பது கதை. திருமண வயதைத் தாண்டியும் பெண் கிடைக்காமல் இருக்கும் ஒரு மணமகன், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு ஒரு பீல் குட்’ படத்தை…

Read More