புரி: உலகம் புகழ்பெற்ற ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை 2 நாட்களுக்கு முன் தொடங்கியது. புரியில் உள்ள குடிச்சா கோயில் அருகே நேற்று காலை 4 மணிக்கு ரத யாத்திரை ஊர்வலம் வந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்த பகுதியில் ரதயாத்திரையில் பங்கேற்கும் இரண்டு வாகனங்கள் உள்ளே நுழைந்தன. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரேமகந்த் மொகந்தி (80), வசந்தி சாகு (36), பிரபதி தாஸ் (42) ஆகியோர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, காவல்துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, விஐபிக்களின் தரிசனத்துக்கு காவல்துறை ஏற்பாடு செய்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது. ரூ.25 லட்சம் உதவித் தொகை: இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு ரூ.25…
Author: admin
சென்னை: சென்னையில் இன்று முதல்(ஜூன் 30) ஜூலை 6-ம் தேதி வரை 71-வது மாநில அளவிலான ஆடவர், மகளிர் சீனியர் வாலிபால் போட்டி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் ஆதரவுடன் இந்தப் போட்டியை சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் ஜவஹர்லால் நேரு மைதானத்திலும், எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்திலும் நடத்தவுள்ளது. ஆடவர் பிரிவில் 24 அணிகளும், மகளிர் பிரிவில் 38 அணிகளும் பங்கேற்கவுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும். போட்டி தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும். போட்டிக்கு எஸ்என்ஜே குரூப்ஸ், ஜாஸ் பெர்ப்யூம்ஸ், டிவோசா, ரேடியன்ஸ் ரியால்டி, காவேரி டிஎம்டி பார்ஸ் அன்ட் ஸ்டிரக்ச்சுரல், பிவெல் ஹாஸ்பிட்டல்ஸ், காஸ்கோ இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்கின்றன. சாம்பியன் பட்டம் பெறும் ஆடவர், மகளிர் அணிகளுக்கு எஸ்என்ஜே கோப்பை வழங்கப்படும். ஆடவர் பிரிவில் 2-ம் இடம்பெறும் அணிக்கு டிவோசா கோப்பையும்,…
எழுபதுகளில் முன்னணி நடிகர்களாக இருந்த பலர், ஒரு ஆக்ஷன், சமூகப் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது, காமெடி படங்களுக்கும் தங்கள் கால்ஷீட்களை ஒதுக்கி வந்தனர். அதில் முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் நடித்து பல காமெடி படங்கள் அப்போது வெளிவந்தன. அப்படி ‘தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கர் நடித்து வெளியான காமெடி படங்களில் ஒன்று, ‘அவசரக் கல்யாணம்’. நண்பர்களான சேகரும் ரகுவும் வேலை தேடி சென்னை வருகிறார்கள். வந்ததுமே பணத்தைப் பறி கொடுத்து விடுகிறார்கள். பின்னர், பிச்சைக்காரி வேடத்தில் அலையும் பணக்காரியான கமலாவை யார் என தெரிந்துகொண்டு, பொய்ச்சொல்லி ஏமாற்றி மணந்து கொள்கிறார் ரகு. அவன் சொன்னது பொய் என்று சேகர் போட்டுக் கொடுக்க, முதலிரவு அன்றே வெளியேற்றப்படுகிறான், ரகு. இதனால் சேகர் மீது ரகுவுக்கு கோபம். இதற்கிடையே வழக்கறிஞரான வசந்தியை காதலிக்கிறான், சேகர். அவரைப் பழிவாங்க நினைக்கும் ரகு, சேகருக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டதாக வசந்தியிடம் சொல்கிறான். வசந்தி,…
சென்னை: வட சென்னை வியாசர்பாடி பகுதியில் கணேசபுரம் ரயில்வே மேம்பாலப் பணி 40 சதவீதம் மட்டுமே நிறைவடைந் திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் பதில் அளித்துள்ளது. வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே மேம்பாலப் பணி நீண்ட காலமாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம், சென்னை மாநகராட்சி மேயரிடம் அண்மையில் மனு அளித்திருந்தார். இதற்கு பதில் அளித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம், டி.கே.சண்முகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கணேசபுரம் மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி முடிவுற்று. தற்போது வடக்கு பகுதியில் ஆழ்துளைக் கடைக்கால்கள் அமைக்கும் பணி, சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய்களை மாற்றியமைக்கும் பணி மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 40 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. வடக்கு பகுதியில்…
ஒவ்வொரு குடும்பமும் அன்பு, பொறுமை மற்றும் அன்றாட குழப்பம் ஆகியவற்றின் கலவையில் இயங்குகிறது. ஒரு குடும்ப அமைப்பில் பின்பற்ற முறையான விதிகள் எதுவும் இல்லை என்றாலும், நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதை அமைதியாக வழிநடத்தும் சில சொல்லப்படாத எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த பேசப்படாத சொற்கள் ஒழுக்கத்தைப் பற்றியது அல்ல, ஆனால் இணைப்பு பற்றியது. அவை எங்கள் வீடுகளில் பாதுகாப்பு, மரியாதை மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் நாங்கள் பின்பற்றாத ஒப்பந்தங்கள்.பேசப்படாத குடும்ப விதிகள் என்பது தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு நாம் கடந்து செல்லும் விஷயங்கள் கூட உணராமல். கருத்து வேறுபாடுகளை நாங்கள் எவ்வாறு தீர்க்கிறோம், இரவு உணவு மேஜையில் நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு நடந்துகொள்கிறோம், அல்லது யாராவது நமக்குத் தேவைப்படும்போது நம்மை எவ்வாறு கிடைக்கச் செய்கிறோம். இந்த பழக்கவழக்கங்கள் சிறியதாகத் தோன்றலாம், ஆனால் அவை நம் வளர்ச்சியை அமைதியாக பாதிக்கின்றன மற்றும் குடும்ப உறவுகளை வலுவாக வைத்திருக்கின்றன.இன்று, உலகம் அணு குடும்ப இயக்கவியலை…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயது சட்டக் கல்லூரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான மேங்கோ என்ற மனோஜித் மிஸ்ரா நீண்ட காலமாக மனநோயால் (சைக்கோ) பாதிக்கப்பட்டவர் என அவரது முன்னாள் வகுப்பு தோழர்களும், ஜூனியர்களும் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா நீண்ட காலமாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பாலியல் வன்முறையில் ஈடுபடும் அளவுக்கு மோசமான நடத்தை உடையவர். அதனால்தான், கடந்த 2021-ம் ஆண்டு கல்லூரியின் திரிணமூல் பிரிவில் இருந்து மிஸ்ரா வெளியேற்றப்பட்டார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி உட்பட எந்த பெண்களைப் பார்த்தாலும் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று பலமுறை தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து நண்பர்களிடையே பரப்பும் அளவுக்கு மனநோய் உடையவர் மிஸ்ரா. மேலும், பெண்களை உடல்ரீதியாகவும் அவமானப்படுத்துவார். பாலியல்…
சென்னை: பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று (ஜூன் 30) மதியம் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்கள் மட்டுமே மேற்கண்ட தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பர்மிங்ஹாம்: விக்கெட்களை வீழ்த்துவதற்கே நான் முன்னுரிமை அளித்து வருகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் ஜூலை 2-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரசித் கிருஷ்ணா. பயிற்சியின் இடையே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில்தான் நான் அறிமுகமானேன். இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளேன். இங்கிலாந்து தொடர் சவாலானதாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், முடிவு வேறு விதமாகிவிட்டது. முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாகவே பந்துவீசினோம். ஆனால் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். முதல் இன்னிங்ஸில் சரியான லென்த்தில் என்னால் பந்து வீச இயலவில்லை. ஆனால் 2-வது இன்னிங்ஸின்போது சுதாரித்து பந்துவீசினேன். மேலும் ஆடுகளமும்…
கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள படம், ‘ஓஹோ எந்தன் பேபி’. இதில் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார். ரொமான்டிக் படமான இதை, ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஜூலை 11-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா, செல்லா அய்யாவு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் கார்த்தி என பலர் கலந்துகொண்டனர். விஷ்ணு விஷால் பேசும்போது, “ருத்ரா, என்னுடைய சொந்த தம்பி இல்லை. பெரியப்பா மகன். அப்பா – பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள். பிறகு பெரியப்பாவுக்கு படிப்பு வரவில்லை. அதனால் அவர்…
சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிகளில் 3 தளர்வுகளை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது. பின்னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டது. இதை பெறுவதற்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், நான்கு சக்கர வாகனம் (கார், ஜீப் போன்றவை) வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் திட்டத்துக்கு தகுதியற்றவர்களாக கருதப்பட்டனர். அதேநேரம், அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதியுள்ள பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்களில் கடந்த முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டது. இதற்கிடையே, திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஜூலை 15 முதல்…
