கொல்கத்தா: கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று அந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மனோஜித் மிஸ்ரா, பிரதிம் முகர்ஜி மற்றும் ஜைத் அகமது ஆகிய மூன்று பேரும் ஏற்கெனவே சில மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளதாக இந்த சம்பவத்தை விசாரிக்கும் 9 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அதிகாரிகள், “இந்த முழு விஷயமும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய, அவர்கள் மூவரும் பல நாட்களாக சதி செய்து வந்தனர். அந்த இளம்பெண் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே, அவர் முக்கிய குற்றவாளியால் குறிவைக்கப்பட்டதை நாங்கள் விசாரணையில் கண்டறிந்துள்ளோம். இவர்கள் ஏற்கெனவே சில மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் எங்களுக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரும் இதுபோன்ற…
Author: admin
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பல்லவர் கால மூத்ததேவி சிற்பத்தை துர்க்கை அம்மன் என கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் வயல்வெளிகளுக்கு இடையே பாதியளவுக்கு கூடுதலாக மண்ணில் ஒரு சிற்பம் புதைந்திருந்தது. இதனை துர்க்கை அம்மன் என கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக, அதே கிராமத்தில் வசிக்கும் முரளி என்பவர் அளித்த தகவலின் பேரில் ஆய்வு செய்யப்பட்டது. சிற்பத்தை வெளியே எடுத்து பார்த்தபோது, 3 அடி உயரம் உள்ள மூத்ததேவி சிற்பம் என தெரியவந்தது. எளிய தலை அலங்காரம் மற்றும் ஆடை அலங்காரத்துடன் மூத்ததேவி காட்சியளிக்கிறாள். இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையிலும் இரண்டு கரங்களும் தொடை மீது வைத்த நிலையிலும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. மூத்ததேவி சிற்பங்களில் தவறாமல் இடம்பெறும் காக்கை கொடி, இந்த சிற்பத்தில் இல்லை.…
ஷாப்பிங் இல்லாமல் எந்த ஆடம்பர அனுபவமும் முழுமையடையாது, இந்த பாப்-அப் அதை உள்ளடக்கியது. பரிசுக் கடை தோல் பொருட்கள், பாகங்கள், காலணிகள் மற்றும் பயணத் துண்டுகளின் பிரத்யேக வரம்பை வழங்குகிறது. மூன்றாவது மாடியில், லு கபே லூயிஸ் உய்ட்டன் பார்வையாளர்களை ஒரு பயணக் கப்பல்-ஈர்க்கப்பட்ட அமைப்பில் ஓய்வெடுக்க அழைக்கிறார், இதில் சூடான காடுகள், மென்மையான விளக்குகள் மற்றும் தண்டு-கருப்பொருள் உட்புறங்கள் உள்ளன. இது அடிப்படையில் மிகவும் ஸ்டைலான காபி இடைவெளி.
மதுரை: ‘மடப்புரம் கோயில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா?’ என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ராஜராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் இன்று (ஜூன் 30) காலை நேரில் ஆஜராகி, மடப்புரம் காளி கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் காவலில் இறந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது அவர்கள், ‘மடப்புரம் காளி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவரின் காரில் இருந்த நகைகள் திருடப்பட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், கோயில் காவலரான அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது போலீஸார் அஜித்தை…
சாதகமான வானிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் விலை சரிவடைய தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி படிப்படியாக தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை நீடித்தது. இதன் காரணமாக உப்பளங்களை சீரமைக்கும் பணிகளை உற்பத்தியாளர்கள் பிப்ரவரி மாத தொடக்கத்தில் தான் தொடங்கினர். சீரமைப்பு பணிகள் முடிந்து உப்பு வாறும்…
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, இது கலோரிகளை வெட்டுவது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் சாப்பிடுவது பற்றியது. எடை இழப்பு செயல்முறையை குறைக்கக்கூடிய உணவுகளை அடையாளம் காண்பது முக்கியம். புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது நீண்ட நேரம் முழுதாக இருக்க உதவும், இது எடை இழப்புக்கு உதவுகிறது. மறுபுறம், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் எடை இழப்பைத் தடுக்கும். இந்த உணவுகள் பசி அதிகரிப்பதன் மூலமும், கொழுப்பு சேமிப்பை ஊக்குவிப்பதன் மூலமும், இரத்த சர்க்கரை கூர்முனைகளை ஏற்படுத்துவதன் மூலமும் முன்னேற்றத்தைத் தடுக்கும்.சில உணவுகளுக்கு உங்கள் உடல் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது ஆரோக்கியமான தேர்வுகளைச் செய்ய உதவும். வெற்றிகரமான எடை இழப்புக்கான திறவுகோல் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்துகிறது, குறைந்த கலோரி மட்டுமல்ல. உங்கள் எடை இழப்பு பயணத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்ஆழமான வறுத்த தின்பண்டங்கள்:…
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டம், பாஷமிலாராம் தொழிற்பேட்டையில் உள்ள மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ரசாயன ஆலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த விபத்து நிகழ்ந்தது. அதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, 13 பேர் இடிபாடுகளுக்கு இடையேயிருந்து மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த அனைத்து தொழிலாளர்களும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் பலர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடி விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனம் ரசாயனம் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், மருந்து சம்பந்தப்பட்ட…
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி குரல் கொடுத்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மவுனம் காப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சொத்து வரியைக் குறைத்து முறைகேடு செய்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உட்பட 8 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும், மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகங்களில் நீண்ட காலம் வருவாய்ப் பிரிவு கணினி தொழில்நுட்பங்களைக் கையாண்ட முக்கிய ஊழியர் ஒருவரையும், மண்டலத் தலைவர்கள் சிலரையும் போலீஸார் விசாரணைக்கு அழைக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், மண்டலத் தலைவர்களை விசாரணைக்கு அழைக்க விடாமல் மாநகர் ஆளும் கட்சி முக்கியப் புள்ளி, போலீஸாருக்கு முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்கு ஆஜரானால் தங்கள் எதிர்கால அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என…
எந்தவொரு தனிநபர் அல்லது ஜோடிகளுக்கும் பெற்றோருக்குரியது ஒருபோதும் நேரியல் அல்ல, ஒரு அளவு எல்லாவற்றிற்கும் பொருந்தாது. எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைக்கு சிறந்ததை விரும்புகிறார்கள், ஆனால் சில நேரங்களில் கவனக்குறைவாக, அவர்கள் கவலை உட்பட சில ஆபத்தான நடத்தைகளை தங்கள் குழந்தைகளுக்கு அனுப்புகிறார்கள். குழந்தைகளில் கவலை மேலும் மேலும் பொதுவானதாகி வருகிறது, சில சமயங்களில், இது பெற்றோரின் (அறியப்படாத) நடத்தை காரணமாக இருக்கலாம். பலவீனப்படுத்தும் வழிகளில் தங்கள் குழந்தைகளை பாதிக்கும் மக்களின் இதுபோன்ற 7 பழக்கவழக்கங்கள் இங்கே ….அதிகப்படியான பாதுகாப்பாக இருப்பதுஉங்கள் குழந்தைகளை ஆபத்திலிருந்து விலக்கி வைப்பது இயல்பானது. ஆனால் பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்போது, குழந்தைகள் தங்களைத் தாங்களே சவால்களைக் கையாள முடியாது என்று உணரலாம், மேலும் உதவியற்றவர்களாக மாறுகிறார்கள். இது புதிய விஷயங்களை முயற்சிப்பதில் அல்லது சிக்கல்களை எதிர்கொள்வதில் அவர்களுக்கு பயமாகவும் ஆர்வமாகவும் இருக்கும். இதன் காரணமாக,குழந்தைகளுக்கு நம்பிக்கையையும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களையும் வளர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது.அவர்கள் தோல்வி…
சிம்லா: இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது. இமாச்சலில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பாதிப்புகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்லாவில் பலத்த மழை பெய்து வருவதால் பட்டாகுஃபாரில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை இடிந்து விழுந்தது. நேற்று இரவு அந்த குடியிருப்பை காலி செய்ததால் மக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிம்லா உட்பட மாநிலத்தின் சில பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்ததால், இந்த அடுக்குமாடி வீட்டை காலி செய்தனர். அருகிலுள்ள நான்கு வழிச் சாலை கட்டுமானப் பணிகள் காரணமாக இந்தக் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான வீடியோவில், கனமழையால் விரிசல் ஏற்பட்டு முழு கட்டிடமும் சரிந்து விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. शिमला :…
