புதுடெல்லி: உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என்று மார்கன் ஸ்டான்லியின் சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்டவை தங்களின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க அதிக தொகையை செலவிட்டு வருகின்றன. ஆனால் சர்வதேச பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது. கரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு சர்வதேச பொருளாதாரம் முழுமையாக மீட்சி அடையவில்லை. பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அரசு வர்த்தக வரிகளை விதித்துள்ளது. இதன்காரணமாக கடந்த ஏப்ரலில் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. இது உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. நடப்பாண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதமாக இருக்கும். வரும் 2026-ம் ஆண்டில் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதமாக இருக்கும். நடப்பாண்டில் அமெரிக்காவில்…
Author: admin
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி ஆகியோர் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, தரவரிசையில் 116-வது இடத்தில் உள்ள இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவுடன் மோதினார். இதில் எலிசபெட்டா கோசியாரெட்டோ 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். 5-ம் நிலை வீராங்கனையான சீனாவின் குயின்வென் ஹெங் 5-7, 6-4, 1-6 என்ற செட் கணக்கில் 81-ம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் கேத்ரினா சினியகோவாவிடம் வீழ்ந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், சகநாட்டைச் சேர்ந்த 95-ம் நிலை வீரரான லூக்கா நார்டியை எதிர்த்து விளையாடினார். இதில் ஜன்னிக்…
சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் பணிக்கு தனியாக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக அரசின் பிரத்யேக குழுவை அணுகலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுவைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப்பெற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மதுபாட்டில்களை விற்கும்போது ரூ.10 கூடுதலாக பெற்றுக்கொண்டு, காலி பாட்டில்களை ஒப்படைத்தால், அந்த ரூ.10 திருப்பிக் கொடுக்கப்படும். இத்திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்கு டாஸ்மாக் கடைகளில் தற்போது பணியாற்றும் ஊழியர்களை நியமிக்காமல், தனியாக பணியாளர்களை நியமிக்கக் கோரியும், காலி மதுபாட்டில்களை சேகரித்து வைக்க தனி இடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரியும், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு…
பர்மிங்காம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபிக்கான தொடரில் ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி 371 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி சாதனை படைத்திருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் 5 சதங்கள் அடிக்கப்பட்ட போதிலும் வலுவில்லாத பந்துவீச்சால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. தொடரில் 0-1 என பின்தங்கியிருக்கும் நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்று பர்மிங்காமில் இங்கிலாந்துடன் மீண்டும் மோதுகிறது இந்திய அணி. பர்மிங்காமிலும் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் ஹெட்டிங்லி மைதானம் போன்றே…
சிவகங்கை: சாத்தான்குளம் சம்பவம்போல மடப்புரத்தில் மற்றொரு சம்பவம் நடைபெற்றதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத் தான் குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை நடத்தி வந்த இருவரையும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி சிறிய வாக்குவாத பிரச்சினைக்காக போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இருவரையும் காவல் நிலையத்திலேயே போலீஸார் கொடூரமாகத் தாக்கினர். சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடையச் செய்தது. தற்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள், திரைப்பட பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலதரப்பிலும் கடும்கண்டன குரல்கள் எழுந்தன. இதனால் அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் ஆனந்த், கண்ணன், சங்கர மணிகண்டன். ராஜா, பிரபு. காவல் துறையினர் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு…
சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் 100 நாள் சவாலை ஏற்று மாணவர்களின் வாசித்தல், கணிதத்திறனில் முன்னேற்றம் அடையச் செய்த 4,552 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கற்றல் திறன் அடைவுகள் குறித்து 100 நாள் சவாலை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இதற்காக முதல்கட்டமாக 4,552 பள்ளிகள் கடந்த நவம்பர் மாதம் அழைப்பு விடுத்தன. இந்த பள்ளிகள் 100 நாள் சவால் என்ற அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை கற்பித்து, பொதுவெளியில் சவாலை நடைமுறைப்படுத்தின. அப்போது தமிழ், ஆங்கில எழுத்துகளை அடையாளம் காணுதல், வார்த்தைகளை பிழையின்றி வாசித்தல், கணிதத்தில் ஒற்றை, இரட்டை எண்களை கண்டுபிடித்தல்,…
ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். இதில் ஆரோக்கியடேனியல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பெரிக், சீனு, சசிக் குமார், முக்கூரான், முத்து சரவணன், காளிதாஸ், செந்தில் ஆகிய 7 மீனவர்கள் பாக் நீரிணை கடல் பகுதியில் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 7 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர், சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்நாட்டு மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர்,…
கோவை: காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெறும் மதிமுக மண்டலக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி இன்று (ஜூலை 1) காலை விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய இயக்கம் குறைந்தபட்ச அங்கீகாரம் பெற வேண்டும். அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு குறிப்பிட்ட சீட்டை பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. ஆனால், இறுதி முடிவு எடுப்பது இயக்கத்தின் தலைமை தான். ரயில்வே துறையில் கட்டண உயர்வை ரத்து செய்ய…
உடற்தகுதி என்பது தசைகள் அல்லது நீண்ட டிரெட்மில் அமர்வுகள் பற்றியது. உண்மையான வலிமை அடிப்படை ஒருமைப்பாட்டில் உள்ளது, ஐந்து கூறுகள் (பூமி, நீர், நெருப்பு, காற்று, இடம்) எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன.நவீன உடற்பயிற்சி பெரும்பாலும் தசை வலிமை அல்லது இருதய சகிப்புத்தன்மையில் கவனம் செலுத்துகிறது. ஆனால் உண்மையான நல்வாழ்வு உடலுக்குள் உள்ள உறுப்புகளை சீரமைப்பதன் மூலம் வருகிறது என்பதை சத்குரு வலியுறுத்துகிறார். இது வலுவாக இருப்பதைப் பற்றியது அல்ல, இது உள்நாட்டில் சீரான மற்றும் நெகிழ்ச்சியுடன் இருப்பது பற்றியது.தொடங்குவதற்கான எளிய வழிகள்:ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் மண் அல்லது புல் மீது வெறுங்காலுடன் நடந்து செல்லுங்கள்.இயற்கையான கூறுகள், சூரிய ஒளி, காற்று, மழை, அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உடலை அம்பலப்படுத்துங்கள்.அங்கம்தானா அல்லது யுபிஏ-யோகாவைப் பயிற்சி செய்யுங்கள், இதற்கு எந்த உபகரணங்களும் தேவையில்லை மற்றும் உடல் நெகிழ்வுத்தன்மை, உறுப்பு ஆரோக்கியம் மற்றும் மன விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.இந்த அடிப்படை இணைப்பு நோய்…
சென்னை: தமிழகத்தில் தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தில் வீட்டு மின்நுகர்வோரைத் தவிர தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிஃப்ட், உடற்பயிற்சிக் கூடம் போன்றவற்றை உள்ளடக்கிய பொது சேவை பிரிவுக்கு யூனிட் ரூ.8.55-இல் இருந்து ரூ.8.80-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. குடிசை தொழில், குறுந்தொழில்களுக்கு, 500 யூனிட் வரை யூனிட் ரூ.4.80-ல் இருந்து ரூ.4.95-ஆகவும்; 500 யூனிட்டுக்கு மேல் ரூ.6.95-ல் ரூ.7.15-ஆகவும் அதிகரித்துள்ளது. விசைத்தறிக்கு 500 யூனிட் வரை ரூ.6.95-ல் இருந்து ரூ.7.15-ஆக அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.8.25-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. தற்காலிக மின் இணைப்பு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.12.85-ல் இருந்து ரூ.13.25-ஆக உயர்ந்துள்ளது. மின்கட்டண உயர்வு குறித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வீடுகள்…
