விண்வெளி ஆய்வு 2025 ஆம் ஆண்டில் ஒரு அற்புதமான புதிய சகாப்தத்தில் நுழைகிறது, குறிப்பிடத்தக்க பணிகள் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்த தயாராக உள்ளன சந்திரன்அருவடிக்கு செவ்வாய்மற்றும் அப்பால். இந்த பணிகள், நாசா, இஸ்ரோ, ஈசா, ஜாக்சாமற்றும் தனியார் நிறுவனங்கள், விஞ்ஞான அறிவை முன்னேற்றுவது மட்டுமல்லாமல், எதிர்கால மனித ஆய்வு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும். குழு சந்திர சுற்றுப்பாதையில் இருந்து தொலைதூர நிலவுகளில் ரோபோ எக்ஸ்ப்ளோரர்கள் வரை, வரும் ஆண்டுகளில் பார்க்க வேண்டிய முதல் 10 விண்வெளி பயணங்கள் இங்கே.சந்திர லேண்டர்கள் முதல் கிரக ஆய்வாளர்கள் வரை: மிகவும் லட்சிய விண்வெளி பயணங்கள்1. உள்ளுணர்வு இயந்திரங்கள் IM-3 (ப்ரிஸம்)வெளியீட்டு தேதி: 2026இலக்கு: சந்திரன்குறிக்கோள்: சந்திர புவியியல் மற்றும் எதிர்காலத்திற்கான சோதனை தொழில்நுட்பங்களைப் படிக்க அறிவியல் பேலோடுகள் மற்றும் ரோவர்ஸை வழங்கவும் ஆர்ட்டெமிஸ் பயணங்கள்.கண்ணோட்டம்: ஐ.எம் -3 மிஷன் என்பது நாசாவின் வணிக சந்திர பேலோட் சர்வீசஸ் (சி.எல்.பி.எஸ்) திட்டத்தின் ஒரு…
Author: admin
புதுடெல்லி: டிஜிட்டல் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இத்திட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன், இந்தியா மிகுந்த நம்பிக்கையுடன் அறியப்படாத பிரதேசத்தில் ஒரு துணிச்சலான பயணத்தை தொடங்கியது. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியர்களின் திறனை சந்தேகித்து பல தசாப்தங்கள் கழிந்தாலும், நாங்கள் இந்த அணுகுமுறையை மாற்றி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியர்களின் திறனை நம்பினோம், இதுபோலவே சமத்துவமின்மையை தொழில்நுட்பம் அதிகரிக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இத்திட்டம் தற்போது இருப்பவர் – இல்லாதவர் இடையிலான இடைவெளியை போக்கும் பாலமாக திகழ்கிறது. நோக்கம் சரியாக இருக்கும்போது குறைந்த அதிகாரம் கொண்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக புதுமை…
சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்த திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா, டெல்லியைப்போன்று, தமிழகத்திலும் ஆட்சியமைப்போம் என தெரிவித்திருந்தார். இதை கடுமையான சொற்களால் திமுக எம்.பி. ஆ.ராசா விமர்சித்திருந்தார். அதற்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, ஆ.ராசாவைக் கண்டித்து ஜூலை 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார். அதேநேரம், ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை, கொளத்தூர், அம்பத்தூர், அயனாவரம், சிவானந்தா சாலை, பனகல் மாளிகை, திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நேற்று மாலை பாஜகவினர் திரளத் தொடங்கினர். அப்போது, கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, கராத்தே தியாகராஜன், வினோஜ் பி.செல்வம், ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் இரு…
பியோன்சே தனது மகள் ரூமி கார்டருடன் நேரலையில் நிகழ்த்தும் வீடியோ வைரலாகிவிட்டது, ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த காரணங்களுக்காக அல்ல. இப்போது சமூக ஊடக தளங்களில் பரவி வரும் கிளிப், இளம் ரூமி ஒரு குறிப்பிட்ட கை சைகை செய்வதைக் காட்டுகிறது, அவளது விரல் நுனியைத் தொடுவதன் மூலம் ஒரு முக்கோணத்தை உருவாக்குகிறது, இது இல்லுமினாட்டி குறியீட்டுவாதத்துடன் நீண்ட காலமாக தொடர்புடைய ஒரு நடவடிக்கை மற்றும் பிரபலமற்ற “அனைத்தையும் காணும் கண்”.மேடையில் கைப்பற்றப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் தருணம்ஒரு குழந்தையால் சைகை செய்யப்படும் பார்வை ஆன்லைனில் ஒரு நரம்பைத் தாக்கியுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ரகசிய சங்கங்கள் மற்றும் இல்லுமினாட்டியுடன் இணைக்கப்பட்டதாக பியோனஸ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், பார்வையாளர்கள் இப்போது தனது மகளின் ஈடுபாட்டைப் பற்றி தீவிரமான கவலைகளை எழுப்பி வருகின்றனர்.”வழிபாட்டு முறை இப்படித்தான் தொடங்குகிறது,” என்று மனம் உடைந்த பார்வையாளர்கள் கூறுகிறார்கள்இணையம் சீற்றத்திலும் இதய துடிப்பிலும் வெடித்தது. இளம் பெண் மீது கவலை தெரிவிக்கும்…
புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா (42) சில தினங்களுக்கு முன்பு மும்பையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதுகுறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது: மனிதர்களின் இயற்கையான ஆயுட்காலம் 150 முதல் 200 ஆண்டுகளாகும். உணவுமுறை, எண்ணங்கள், உடல் அமைப்பு சரியாக இருந்தால் 100 ஆண்டுகளுக்கு மேலும் வாழலாம். ஆனால் நாம் 100 ஆண்டுகளில் சாப்பிட வேண்டிய உணவை, 25 ஆண்டுகளிலேயே சாப்பிட்டு விடுகிறோம். மேலும், மூளை, இதயம், கண்கள், கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கு அதிக வேலை கொடுக்கிறோம். இதனால் இளம் வயதிலேயே மரணம் வந்துவிடுகிறது.எனக்கு தற்போது 60 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனால் யோகா, உணவுமுறை, நடத்தையால் சிறந்த ஆரோக்கியமான, வாழ்க்கையை வாழ்கிறேன். இதனால் நான் ஆரோக்கியமாகவும், முழு ஆற்றலுடனும் இருக்கிறேன். நடிகை ஷெபாலி 42 வயதிலேயே இறந்துவிட்டார். அவரது உடலில் உள்ள `ஹார்ட்வேர்’ நன்றாக இருந்தது. ஆனால் `சாப்ட்வேர்’ பழுதாகிவிட்டது. நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும்…
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் பயணமாக நே;ற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் இன்று அல்லது நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை. விதிகள்படி புதிய ஆளுநர் பதவியேற்கும்வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடருவார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இதனிடையே, தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வருவதால், அடிக்கடி ஆளுநர் டெல்லி சென்று வருகிறார். கடந்த மாதம் 26-ம் தேதி ஒரு நாள் பயணமாக ஆளுநர் டெல்லி சென்றுவிட்டு வந்தார். இந்நிலையில், மீண்டும் 4 நாட்கள் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து டெல்லி சென்றார். ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், ஒரே வாரத்தில் 2-வது முறையாக 4 நாட்கள் பயணமாக டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் திருமண படம் சில ஆண்டுகள் டேட்டிங் செய்த பிறகு, பில்லியனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் பத்திரிகையாளர் லாரன் சான்செஸ் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக கணவன் -மனைவி. இந்த ஜோடி (இறுதியாக) ஜூன் 27, 2025 அன்று ஒரு கனவான இத்தாலிய திருமணத்தில் முடிச்சு கட்டியது, இப்போது எல்லா கண்களும் சக்தி ஜோடி மீது மட்டுமல்ல, புதிதாக கலந்த, உயர்மட்ட குடும்பத்திலும் உள்ளன. ஒன்றாக, அவர்கள் இப்போது ஏழு குழந்தைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்: முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் உடன் பெசோஸின் நான்கு குழந்தைகள், மற்றும் முந்தைய உறவுகளைச் சேர்ந்த சான்செஸின் மூன்று குழந்தைகள்.லாரன் சான்செஸின் மூன்று குழந்தைகள் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பார்ப்போம்-ஏனென்றால் அவர்கள் அவளுடைய குழந்தைகள் மட்டுமல்ல, ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது சொந்த கவனத்தை ஈர்க்கும் கதைகள் உள்ளன:1. நிக்கோ கோன்சலஸ்: ஸ்டைலான சாகசக்காரர்(படம் அக்டோபர் கோன்சலஸ் ஐ.ஜி: நிக்கோ, அக்டோபர், டோனி…
போபால்: மத்திய பிரதேச மாநிலம், நரசிங்பூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சந்தியா சவுத்ரி. இவர் கடந்த 27-ம் தேதி மாவட்ட மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச் சென்றார். அங்கு வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் சந்தியா அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நரசிங்பூர் எஸ்.பி. மிருககி டேகா கூறுகையில், “இந்த சம்பவத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அபிஷேக் கோஸ்டி என்ற அந்த இளைஞனும் சந்தியாவும் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளனர். கடந்த ஜனவரியில் வேறு ஒருவருடன் சந்தியாவை அபிஷேக் பார்த்துள்ளார். இதனால் சந்தியாவை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள அபிஷேக் திட்டமிட்டார். ஆனால் அவரது தற்கொலை முயற்சி தோல்வி அடைந்தது’’ என்றார்.
ஜெய் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படத்துக்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, கருடாராம், ஸ்ரீமன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், பிவி ஃபிரேம்ஸ் சார்பில் தயாரித்து, இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின்முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. “பிரபஞ்சம் அடுத்தடுத்து மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியம், ஆனந்தம், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம்நாட்டில் நிகழ்கிற, தொடர்ந்து நிகழப்போகிற பெரும் ஆபத்தைப் பற்றி இந்தப்படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. காதலும் களவும் என அன்பின் ஐந்திணையைக் கொண்டு, ரொமான்டிக் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது” என்றது படக்குழு.
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்-டாப் வழங்கப்படும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற ‘வெற்றி நிச்சயம்’ திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு..க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் 3-வது ஆண்டு வெற்றி விழாவும், ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் தொடக்க விழாவும் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இத்திட்டத்தையும் அடுத்த ஆண்டு ஷாங்காய் நகரில் நடைபெறும் உலக திறன் போட்டியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69 சதவீத வளர்ச்சி வீதத்தில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நான் முதல்வன் திட்டத்தால் இதுவரை 41 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு வளர்ந்து வரும் நவீன தொழில்துறைக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப திறன், தகவல் தொழில்நுட்பம், மொழி அறிவு, ஹேக்கத்தான்ஸ்,…
