ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை பவானி இறந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதற்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் கலந்துகொள்வதற்காக சென்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை பவானி (62), உடல் நலக்குறைவால் மரணமடைந்தது. பின்னர், ராமேசுவரம் கொண்டுவரப்பட்ட யானையின் உடல், ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஈஸ்வரி அம்மன் கோயில் தோப்பில் அடக்கம் செய்யப்பட்டது. பவானி யானையை, ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவன அதிபர் ராமசாமி ராஜாவால் 1960-ம் ஆண்டில் கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போதிலிருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராமநாதசுவாமி கோயிலில் சேவை புரிந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. பவானி யானை இறந்ததை அடுத்து, யானைக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்தது. அதன்படி, பவானி இறந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பக்தர்கள் நினைவுகூரும் விதமாக மணி…
Author: admin
திருப்புவனம்: போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் சகோதரர் நவீனுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் இன்று வழங்கினார். மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவையும் அவர் வழங்கினார். முன்னதாக நேற்று அஜித்குமாரின் தாய், சகோதரரிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பான வீடியோவையும் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று (ஜூலை 2) காலையில், அமைச்சர் பெரியகருப்பன் அஜித்குமாரின் சகோதரர் நவீனுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கியதோடு அஜித்குமார் குடும்பத்தினரிடம் இலவச வீட்டு மனைக்கான பட்டாவையும் வழங்கினார். நவீனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் நிலவுகிறது. பின்னர்…
இன்னும் தேடுகிறீர்களா? எந்த கவலையும் இல்லை, நீங்கள் தனியாக இல்லை. சரியான திசையில் உங்களுக்கு ஒரு முட்டாள் தேவைப்பட்டால், படத்தின் கீழ் வலது மூலையை சரிபார்க்க முயற்சிக்கவும். ஆமாம், கீழே. உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், கவனமாக ஸ்கேன் செய்து, பந்து உங்களை நோக்கி வெளியேறுகிறதா என்று பாருங்கள்.சில நொடிகளில் நீங்கள் அதைக் கண்டால், மெய்நிகர் உயர் ஐந்தை உங்களுக்குக் கொடுங்கள்-நீங்கள் உங்கள் டென்னிஸ் ரசிகர் பேட்ஜைப் பெற்றுள்ளீர்கள்! இல்லையென்றால், ஏய், குறைந்தபட்சம் உங்கள் மூளைக்கு ஒரு திட பயிற்சி கிடைத்தது.
இந்திய மூலத்தில் விண்வெளி வீரர் அனில் மேனன் தனது முதல் விண்வெளி பணிக்கு தயாராக உள்ளார் சர்வதேச விண்வெளி நிலையம் ஜூன், 2026 இல், நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.”நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தனது முதல் பணியை மேற்கொள்வார், விமான பொறியியலாளராக பணியாற்றுவார் பயணம் 75 குழு உறுப்பினர், “என்று அது கூறியது.”மேனன் ரோஸ்கோஸ்மோஸில் தொடங்குவார் சோயுஸ் எம்.எஸ் -29 விண்கலம் ஜூன் 2026 இல், ரோஸ்கோஸ்மோஸ் காஸ்மோனாட்ஸ் பியோட்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோருடன். கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து தொடங்கப்பட்ட பிறகு, மூவரும் சுமார் எட்டு மாதங்கள் சுற்றுப்பாதை ஆய்வகத்தில் செலவிடுவார்கள், “என்று அது மேலும் கூறியது.மேனன் தனது பணியின் போது, விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொள்வார் மற்றும் மனித விண்வெளி ஆய்வுகளை முன்னேற்றுவதையும், மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்ட புதிய தொழில்நுட்பங்களை சோதிப்பார்.அனில் மேனன் யார்?மினசோட்டாவின் மினியாபோலிஸில் மேனன்…
மும்பை: கர்நாடகாவின் மங்களூருவை சேர்ந்தவர் பிலால் அகமது டெலி (21). பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ள அவர், இணையதள வடிவமைப்பு தொடர்பாக ஓராண்டு டிப்ளமோ படிப்பையும் நிறைவு செய்துள்ளார். இதன்பிறகு துபாய், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி உள்ளார். தற்போது குஜராத்தின் சூரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிலால் பணியாற்றி வருகிறார். அவரது மாத ஊதியம் ரூ.1.25 லட்சம் ஆகும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு பிலால் சென்றுள்ளார். அங்கு தன்னை பிஎச்டி ஆய்வு மாணவர் என்று அறிமுகம் செய்துள்ளார். இதுதொடர்பான போலி ஆவணங்களையும் காண்பித்து உள்ளார். ஐஐடி விடுதியில் தங்கியிருந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த வகுப்புகளில் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து மும்பை போலீஸார் கூறியதாவது: கடந்த மே 27-ம் தேதி மும்பை ஐஐடி வளாகத்தில் பிலால் நுழைந்துள்ளார். அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்களை ஏமாற்றி 14 நாட்கள் வரை ஐஐடி வளாகத்தில் அவர்…
சென்னை: 10 நாட்களில் வன்னியர் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டு, நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்ட காலக்கெடு வரும் 11 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. வெறும் 3 மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்ட காலக்கெடு 30 மாதங்களாக நீட்டிக்கப்பட்டும் கூட, ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது வன்னிய மக்கள் மீது திமுக அரசு எந்த அளவுக்கு வன்மத்தைக் குவித்து வைத்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்றும், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்றும் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் 1188 நாள்கள் ஆகிவிட்ட நிலையில்,…
“எங்கள் வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.”இந்த மேற்கோள் எளிமையானதாகத் தெரிகிறது, ஆனால் இது கவனம் செலுத்துவதற்கான பெரிய நினைவூட்டல். நாங்கள் பணம், தலைப்புகள் மற்றும் ஒப்புதலைத் துரத்துகிறோம், மகிழ்ச்சிதான் உண்மையான இறுதி குறிக்கோள் என்பதை மறந்து விடுகிறோம். உங்கள் தேர்வுகள் அங்கு முன்னிலை வகிக்கவில்லை என்றால், போக்கை மாற்றுவதற்கான நேரம் இது.
ஆக்ஸியம் -4 (AX-4) மிஷனின் ஒரு பகுதியாக சுபன்ஷு சுக்லா தற்போது ஐ.எஸ்.எஸ்ஸில் உள்ளார், இது ஆக்சியம் ஸ்பேஸால் தொடங்கப்பட்ட 14 நாள் வணிக விண்வெளிப் பயணமாகும். இந்த பணியில் நான்கு விண்வெளி வீரர்கள் உள்ளனர், அனைவரும் நீண்ட கால மனித விண்வெளிப் பயணத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய முன்னோடி அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.சமீபத்திய அறிக்கையின்படி, இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா இஸ்ரோவில் உள்ள மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் ஹாம் ரேடியோ வழியாக தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்) ஆன் ஜூலை 4 வெள்ளிக்கிழமை. இந்த அரிய மற்றும் எழுச்சியூட்டும் நிகழ்வு தி அரிஸ் (அமெச்சூர் ரேடியோ ஆன் தி இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்) திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது உலகளாவிய மாணவர்களை STEM கல்வியில் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளி வீரர்களுடன் இணைக்கிறது. பெங்களூரில் உள்ள உர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் ஒரு டெலிபிரிட்ஜ்…
புதுடெல்லி: கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் தொற்றுக்குப் பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) நடத்திய விரிவான ஆய்வுகளை மேற்கோள்காட்டி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கோவிட்-க்குப் பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் ஆகியவற்றின் விரிவான ஆய்வுகள், கோவிட் 19 தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக நிரூபித்துள்ளன. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) நடத்திய ஆய்வுகள், இந்தியாவில் உள்ள கோவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.…
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500% வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் இந்த புதிய மசோதாவை ஆதரித்து பேசிய அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “இந்த மசோதாவை வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ட்ரம்ப் என்னிடம் கூறினார். உக்ரைன் மீதான போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பேச்சுவார்த்தை மேஜைக்குக் கொண்டுவரும் ஒரு புதிய கருவியாக இந்த முயற்சி இருக்கும். ட்ரம்பின் இந்த முடிவு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும். நீங்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள், உக்ரைனுக்கு உதவவில்லை என்றால், அமெரிக்காவிற்குள் வரும் உங்கள் தயாரிப்புகளுக்கு 500% வரி விதிக்கப்படும் என்பதுதான் இந்த மசோதாவின் அடிப்படையாகும். இந்தியாவும், சீனாவும் புதினின் கச்சா எண்ணெயில் 70% வாங்குகின்றன. அவர்கள் அவரது போர் இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்குகிறார்கள். ரஷ்யா…
