அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதற்கான கதை முடிவாகி, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தயாரிப்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. முதலில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது அந்நிறுவனமும் விலகிக் கொண்டது. அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் தான் அனைத்து செலவும் செய்து வருகிறது. ஆடி மாதம் முடிந்தவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடும் வகையில், படப்பிடிப்பை திட்டமிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது ‘குட் பேட் அக்லி’. இதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இதற்கு பெரும்…
Author: admin
நகராட்சி, பேரூராட்சிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்துக்குத் தேவையான தட்டுகள், டம்ளர்கள், தரைவிரிப்புகளை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே வாங்குமாறு தமிழக அரசு கெடுபிடி காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வி கற்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவும் தமிழக முதல்வரின் காலை உணவுத்திட்டம் 2022 செப்.15 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் கிராமப்புறங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் பின்னர் கிராமப் புறங்களிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 முதல் விரிவுபடுத்தப் படுகிறது. இதையடுத்து நகராட்சி, பேரூராட்சிகளிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகத்தினரே காலை உணவுத் திட்டத்துக்குரிய தட்டுகள், டம்ளர்கள், தரை விரிப்புகள் வாங்க வேண்டும் என…
பறப்பது பொதுவாக மிகவும் வேடிக்கையான அனுபவமாகும். ஆனால் அதுவும் மன அழுத்தமாக இருக்கும். நீண்ட கோடுகள், தடைபட்ட நிலைமைகள் மற்றும் காற்று அழுத்தம் மாற்றங்கள் அச om கரியத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும். சிலர் கடுமையான விமான தலைவலியை அனுபவிக்க முடியும், இது கடுமையானதாக இருக்கும். தீவிர சந்தர்ப்பங்களில், இது பயணத்தின் பயத்திற்கு வழிவகுக்கும்.சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் பயணம் தொடர்பான மன அழுத்தத்தை நிர்வகிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். இந்த சாத்தியமான சிக்கல்களைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம், பயணிகள் தங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும் செய்யச் செய்யக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கலாம். தளர்வு நுட்பங்கள் உதவக்கூடும்.விமானத் தலைவலி என்றால் என்ன?நரம்பியல் லைவ் படி, விமானப் பயணங்களால் விமானத் தலைவலி கொண்டு வரப்பட்டு சில பயணிகளை பாதிக்கிறது. அவை ஒரு உடல் பிரச்சினையை விட அதிகமாக இருக்கலாம். அவை உங்கள் மனநிலை மற்றும் ஒட்டுமொத்த பயண…
கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (GMCH) சமீபத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2025-ம் ஆண்டில் இதுவரை, இந்த மருத்துவமனையில் 44 பேர் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து பேசிய கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் அச்சுத் சந்திர பைஷ்யா, “கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜூன் மாதத்தில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகமாகியுள்ளது. இதுவரை, எங்கள் மருத்துவமனையில் 44 பேருக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது, இவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த மருத்துவமனையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44 பேரில் கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர், நல்பாரியை சேர்ந்த 10 பேர், தர்ரங்கை சேர்ந்த 7 பேர் மற்றும் கம்ரூப் (மெட்ரோ) மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர்”…
அஜித்குமார் மரணம் தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ள நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா? அரசுப் பதவியில் உள்ளவர்களால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல்போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில், “லாக்கப் கொலைகள். பழிக்குப்பழி கொலைகள். வரதட்சணை கொடுமை தற்கொலைகள். வயது பாராமல் மிருகத்தனமான பாலியல் குற்றங்கள். கொடூரமான கொள்ளை சம்பவங்கள். அஜித்குமார் என்ற காவலாளி இளைஞர் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்! உயர் அதிகாரிகள் உத்தரவிட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் அடித்து கொல்பவர்களுக்கு மனதில் சிறிதாவது ஈவிரக்கம் வேண்டாமா? மிளகாய் பொடியை கரைத்து வாயில் ஊற்றுவதா? காரில்…
சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோர் மீது வழக்கு பதிவு செய்வது அராஜகத்தின் உச்சம் என்றும் திமுக அரசின் அராஜகங்கள், அட்டூழியங்களை பார்க்கும்போது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் நவீன எமர்ஜென்சி அமலாகி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது எனவும் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, ரவுடி குழுக்களின் ஆட்சி நடக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு அட்டூழியங்களும், அராஜகங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. “காவல்துறையினர் மனித மிருகங்களாக மாறி கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்தே கொன்று விட்டனர்” என்று ஆளும் திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பகிரங்கமாக குற்றச்சாட்டும் அளவுக்கு தான் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கிறது. இது தொடர்பாக இனிகோ இருதயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிஜிபி சார், கைது செய்யப்பட்ட காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டுபோடப்படுவார்களா? அல்லது தப்பி…
நடைபயிற்சி லன்ஜ்கள் எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் நோக்கம் மற்றும் நிலைத்தன்மையுடன் செய்யப்படுகின்றன, அவை மாற்றுவதற்கான வலிமையைக் கொண்டுள்ளன -கால்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சகிப்புத்தன்மை மற்றும் உடல் அமைப்பு. மந்திரத்தின் வாக்குறுதிகள் இல்லை, ஆனால் அர்ப்பணிப்புடன், 45 நாட்களுக்குள் 4 கிலோ இழப்பு உண்மையான, ஆரோக்கியமான மைல்கல்லாக மாறும்.
புதுடெல்லி: பாஜகவில் தேர்வாகி உள்ள புதிய நிர்வாகிகளுக்கு மீண்டும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் செல்வாக்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், அக்கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு பதவிகள் இல்லையா எனும் கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது ஆர்எஸ்எஸ். இந்த பழம்பெரும் அமைப்பின் செல்வாக்கு அதன் அரசியல் பிரிவான பாஜகவில் துவக்கம் முதல் தொடர்ந்தது. 2014-இல் அமைந்த ஆட்சியில் பிரதமரான நரேந்திர மோடிக்கு, ஆர்எஸ்எஸ் உடன் கருத்து வேறுபாடுகள் உருவானதாகத் தகவல்கள் வெளியானது. இது, 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளில் வெளிப்படையாக தெரிந்தது. இந்த தேர்தலில் கடந்த இரு தேர்தல்களை விடக் குறைவான தொகுதிகளை பாஜக பெற்றது. இந்நிலையில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு இடையே இணக்கமானப் பேச்சுவார்த்தைகள் உ.பி.யில் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இதன் பலனாக தற்போது மீண்டும் பாஜகவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு கூடுவதாகத் தெரிகிறது. தற்போது பாஜகவின் நிர்வாகிகள் தேர்தல் முடிந்து அதன் பெயர்…
கொழும்பு: இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை கைது செய்வது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது ஆகிய நடவடிக்கைகள் தொடரும் என இலங்கை எச்சரித்துள்ளது. கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடிக்கிறார்கள். இது இலங்கையின் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பிரச்சினையை நாங்கள் இந்தியத் தரப்பிடமும் எடுத்துச் செல்கிறோம். இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது” என தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் இரண்டு மாதம் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14, 2025 வரை இந்த வருடாந்திர தடைக்காலம் அமலில் இருந்தது. பாக் ஜலசந்தியில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. இரண்டு…
நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயில்வான் ரங்கநாதன் உளிட்டோருக்கு நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களின் அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது தென்னிந்திய நடிகர் சங்கம். தற்போது இதனை மேலும் தீவிரப்படுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும், பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் என்றும் எங்கள் தலையாய கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில், எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து மிக அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதுமின்றியும் பல தவறான பொய்யான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சேகுவாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் என்னும் நபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சட்ட ரீதியாக மாண்புமிகு உயர்…
