சென்னை: பார் கவுன்சில், மெடிக்கல் கவுன்சில் போன்ற இந்தியாவில் உள்ள முக்கிய அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ரமேஷ்பாபு தாக்கல் செய்திருந்த மனு: வழக்கறிஞர்களின் முக்கிய அமைப்பாக கருதப்படும் பார் கவுன்சில் மற்றும் மருத்துவர்களுக்கான மெடிக்கல் கவுன்சில், டெண்டல் கவுன்சில், பார்மசி கவுன்சில் போன்ற இந்தியாவில் உள்ள பிரதான அமைப்புகளின் நிர்வாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.மனோஜ்குமார் ஆஜராகி மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின்படி அவர்களுக்கு இந்தியாவில்…
Author: admin
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அவர்களின் பிள்ளைகளுக்கான திருமண முன்பணம் அரசால் வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த 1989-ம் ஆண்டு, அரசு ஊழியர் அல்லது அவரது மகன் திருமணத்துக்கு ரூ.3 ஆயிரம், பெண் ஊழியர் அல்லது மகள் திருமணத்துக்கு ரூ.5 ஆயிரம் முன்பணமாக வழங்கப்பட்டது. அதன்பின், 1995-ல் இத்தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 110 விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் ஆண்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை பல மடங்கு உயர்த்தி அரசு அலுகள், ஆசிரியர்கள் அனைவருக்ககும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்’’ என அறிவித்தார். இதன்படி, திருமண முன்பணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி…
திருச்சி மாவட்ட திமுக என்றால் அது நேரு தான் என்ற பிம்பமே இன்றளவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தலைமைக் கழகத்தில் முதன்மைச் செயலாளராக பதவி உயர்வுபெற்றுவிட்டாலும் சொந்த மாவட்டமான திருச்சி அரசியலை இன்னமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் நேரு. ஆனால், அவரின்றி திருச்சி திமுக-வில் எதுவும் அத்தனை எளிதில் அசைந்துவிடாது என்று தெரிந்தும் மாவட்ட திமுக எம்எல்ஏ-க்கள் இருவர் நேருவுக்கு எதிராக தங்களது மனக்குமுறலை பொதுவெளியில் பகிரங்கமாக போட்டுடைத்து வருகிறார்கள். நேருவின் சொந்த ஊரை உள்ளடக்கிய லால்குடி தொகுதிக்கு எம்எல் ஏ-வாக இருக்கும் சவுந்தரபாண்டியன், “எனது தொகுதிக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கூட அதிகாரிகள் என்னை அழைக்கப் பயப்படுகிறார்கள். அதற்குக் காரணம் அமைச்சர் நேரு” என முகநூலில் முன்பு ஆதங்கப்பட்டார். இந்தப் பஞ்சாயத்து அறிவாலயம் வரைக்கும் போய் சமாதானம் செய்துவைக்கப்பட்ட பிறகும் சவுந்தரபாண்டியன் – நேரு சச்சரவுகள் முடிவுக்கு வந்தபாடில்லை. அண்மையில், தனது மகன் திருமணத்தை நடத்தி வைக்க முதல்வர் ஸ்டாலினிடம் தேதி வாங்கித்…
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் புதன்கிழமை காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பூக்குழி திருவிழா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு கோயில் திருப்பணிகள் தொடங்கியது. முழுவதும் உபயதாரர்கள் நிதியில் புதிய கொடிமரம், தேர் சீரமைப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றது. ஜூன் 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. கடந்த 3 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று…
சென்னை: தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயை அணைக்கும் வகையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பந்து வடிவிலான நவீன தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் டிஜிபி அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த கருவி பொருத்தப்பட உள்ளது. சென்னை காவல் ஆணையரகத்தின் தலைமை அலுவலகம் வேப்பேரியில் 8 தளங்களுடன் உள்ளது. தரை தளத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை தினங்கள் தவிர தினமும் காவல் ஆணையர் தரப்பில் பெற்றுக் கொள்ளப்படுகிறது. மற்ற தளங்களில் சைபர் க்ரைம், மத்திய குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல், போலீஸ் அதிகாரிகளுக்கான நூற்றுக்கணக்கான அறைகள் உள்ளன. 8-வது தளத்தில் காவல் ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர்களுக்கென தனித்தனி அலுவலகம் உள்ளது. காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரிகின்றனர். இதுபோக அமைச்சுப் பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். பல்வேறு வழக்கு தொடர்பான முக்கியமான ஆவணங்களும்…
பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா நிதானமாக ஆடி 310 ரன்கள் எடுத்துள்ளது கேப்டன் ஷுப்மன் கில் சதம் பதிவு செய்தார். பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் களமிறங்கினார். அதேவேளையில் சாய் சுதர்சன், ஷர்துல் தாக்குர் ஆகியோர் நீக்கப்பட்டு நித்திஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ரன்கள் சேர்க்க தடுமாறிய கே.எல்.ராகுல் 26 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் போல்டானார். ஆஃப் ஸ்டெம்புக்கு…
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘சிவ சிவ’ முழக்கத்துடன் நடராஜ பெருமானை தரிசித்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ நிகழ்வு கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு ரதஙகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இரவு தேரில் இருந்து மேளதாளம் முழங்க கோயிலுக்கு வந்த ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முக்கிய திருவிழாவான ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று நடைபெற்றது. அதிகாலை 4 மணி தொடங்கி 6 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பு பகுதியில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும்,…
தீபாவளி, பொங்கல் என்றால் ஒருசில திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு அன்பளிப்பு கொடுத்து அசத்துவார்கள். அதுவும் ஆளும் கட்சியாக இருந்துவிட்டால் இந்தக் ‘கவனிப்பு’ கொஞ்சம் தாராளமாகவே இருக்கும். ஆனால், இப்போது தீபாவளியும் இல்லை… பொங்கலும் இல்லை. ஆனலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கிளைக் கழக நிர்வாகிகள் தொடங்கி அத்தனை பேருக்கும் ரூபாய் ஐயாயிரத்தில் தொடங்கி அன்பளிப்புகளை தந்து அசத்திக் கொண்டிருக்கிறார் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அண்ணாச்சி. 2021 தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியைத் தவிர்த்து மற்ற 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வாக்குப் பதிவுக்கு சில தினங்களுக்கு முன்னதாக திடீரென காலமான நிலையில், அந்தத் தொகுதியை அதிமுக கைப்பற்றியது. இந்தத் தொகுதியில் அதிமுக வென்றது அண்ணாச்சியின் அரசியல் சாணக்கியத்துக்கே சவாலாக அமைந்தது. இந்த நிலையில், கடந்த நவம்பரில் விருதுநகருக்கு அரசு நிகழ்ச்சிக்காக வருகை…
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 3-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 48-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவை எதிர்த்து விளையாடினார். இதில் அரினா சபலெங்கா 7-6(7-4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில்37-ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் ஓல்கா டானி லோவிக்கை தோற்கடித்தார். 22-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக் 1-6, 3-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் 102-ம் நிலை வீராங்கனையான கிறிஸ்டினா புக்சாவிடம் தோல்வி அடைந்தார். இதே போன்று 29-ம் நிலை வீராங்கனையான கனடாவின்…
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று (ஜூலை 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில், “யார் தனிப்படை விசாரணைக்கு உத்தரவிட்டது?” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார். அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், காவலாளி அஜித்குமாரின் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழக அரசு காவல் துறையைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியது: “திமுக பிரமுகர் காரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஏற்றிச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? இதை கண்டித்து அன்றைய தினம் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அஜித்குமாரின் தாய் நீதி கேட்கிறார். நீதி கேட்பது தேசக் குற்றமா? மாவட்டக் கண்காணிப்பாளர் ஏன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்? உண்மை நிலவரம் முதல்வருக்கு தெரிந்துவிட்டது. அதனால் மாவட்டக்…
