ஓபனாயின் உயர் ஐடியன் ஊழியர் மெட்டாவில் சேர வெளியேறுகிறார்: இந்திய-ஆரிஜின் ஆராய்ச்சியாளர் டிராபிட் பன்சால் யார்? இந்திய மூலமாக AI ஆராய்ச்சியாளரும் ஓபனாயின் ஓ-சீரிஸ் மாடல்களின் இணை உருவாக்கியவருமான டிராபிட் பன்சால், புதிதாக தொடங்கப்பட்ட சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆய்வகங்களின் ஒரு பகுதியாக மெட்டாவில் இணைந்துள்ளார். ஐ.ஐ.டி கான்பூர் மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி) பட்டதாரி, பன்சலின் கல்வியில் இருந்து உலகளாவிய AI ஆராய்ச்சியின் முன்னணியில் பயணம் சிலிக்கான் பள்ளத்தாக்கின் போட்டி நிலப்பரப்பில் இந்திய திறமைகளின் விரைவான உயர்வை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.அவரது இந்த நடவடிக்கை ஓபனாயில் இருந்து மெட்டாவுக்கு மற்றொரு உயர்மட்ட புறப்பாட்டைக் குறிக்கிறது, ஏனெனில் மார்க் ஜுக்கர்பெர்க் செயற்கை பொது நுண்ணறிவு (ஏஜிஐ) வரை பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்துகிறார்.ஒரு நட்சத்திர கல்வி அறக்கட்டளைஇளங்கலை: பன்சால் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) கான்பூரில் படித்தார். முதுகலை: இயற்கையான மொழி செயலாக்கம் (என்.எல்.பி), மெட்டா கற்றல் மற்றும் வலுவூட்டல் கற்றல்…
Author: admin
புதுடெல்லி: திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ ஆராய்ச்சி இந்திய கவுன்சில் (ஐசிஎம்ஆர்), நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் (என்சிடிசி) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து. கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் வரை நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட நபர்களில் சிலர் திடீர் மரணங்களை சந்தித்தனர். இதற்கு இவர்கள் செலுத்திக்கொண்ட கரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என வதந்தி பரவியது. இதையடுத்து ஐசிஎம்ஆர் தொற்று நோயியல் மையம் மற்றும் என்சிடிசி ஆகியவை நாடு முழுவதும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மருத்துவமனைகளில் கடந்த 2023-ம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு ஆய்வுகளை நடத்தியது. இதில் கரோனா தடுப்பூசி, திடீர் மரணங்களை அதிகரிக்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இளைஞர்கள் இடையே விவரிக்கமுடியாத திடீர் மரணங்களுக்கான ஆய்வில் புது டெல்லி…
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’. இதை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார். இந்தப் படம் பெண்களுக்கு எதிரானது என்றும் ஆணாதிக்க சிந்தனை படம் முழுவதும் விரவி இருப்பதாகவும் அதிக வன்முறையை கொண்ட படம் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் இந்தப் படம் வசூலிலும் சாதனைப் படைத்தது. இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அனிமல் படம் பற்றி பேசியுள்ளார். அவர் கூறும்போது, “ஒரு படத்தில் ஹீரோ புகைப்பிடித்தால் அது ரசிகர்களையும் புகைப்பிடிக்கத் தூண்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் சமூகத்தில் புகைப்பிடிப்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் திரைப்படங்களில் புகைப்பிடிக்க மாட்டேன். நான் ‘அனிமல்’ படத்தில் நடித்திருப்பதால், ஒரு திரைப்படத்தை படமாகப் பாருங்கள் என்றுதான் கூறுவேன். நான் ஒருபோதும் படம் பார்த்து பாதிப்படைய மாட்டேன். அப்படி நினைத்தால் அது போன்ற படங்களை பார்க்க வேண்டாம். ஒரு படத்தைப் பாருங்கள் என்று…
சென்னை: பாமகவின் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவது, அதே பதவியில் அவர்கள் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவிப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது. சமீபத்தில் ராமதாஸ் பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருளை கட்சியின் இணை பொதுச்செயலாளராக ராமதாஸ் நியமித்தார். இதையடுத்து, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து இரா.அருளை நீக்கிய அன்புமணி அந்த பொறுப்பில் க.சரவணன் என்பவரை நியமனம் செய்தார். இந்நிலையில், இரா. அருளை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமகவின் சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும்,…
சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு நீடித்துவரும் நிலையில் இதுவரை பேர் 51 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேரைக் காணவில்லை. இமாச்சலில் கடந்த 10 நாட் களுக்கும் மேலாக பெய்துவரும் பருவ மழையால் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலபிரதேச வருவாய் துறையின் கீழ் இயங்கி வரும் மாநில அவசர உதவி மையம் (எஸ்இஓசி) ஒட்டுமொத்த சேத மதிப்பீட்டு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இமாச்சலின் 12 மாவட்டங்களில் கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 1 வரை வெள்ளம், நீரில் மூழ்குதல், நிலச்சரிவு, மின்னல் தாக்குதல், சாலை விபத்துகள் உள்ளிட்ட பேரிடர்களில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேரை காணவில்லை. 103 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 84 கால்நடைகள் இறந்துள்ளன. கனமழை தொடர்பான சம்பவங்களில் தனியார் சொத்துகள் மற்றும் பொது உட்கட்டமைப்புகளும் சேதம் அடைந்துள்ளன. மேலும்…
மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்தபோது, இவர் குறித்து சமூக வலை தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு கருத்துகளை பதிவிட்டனர். இதையடுத்து சீமானுக்கு எதிராக திருச்சி 4-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் டிஜஜி வருண்குமார் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சீமான் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும்போது, வருண்குமாரின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித் தேன். இதற்காக எனக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் டிஜஜி வருண்குமார் என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என நீதித்துறை நடுவரை கேட்டுக்கொண்டேன். எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஒரு காவல் அதிகாரி போல்…
சென்னை: விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி போலீஸாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான போலீஸாரின் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவவிட்டுள்ளார். இதுதொடர்பாக மண்டல ஐஜிக்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் துணை ஆணையர்கள். போலீஸ் எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரின்கீழ் செயல்படும் சிறப்பு (தனிப்படை) படைகள் நிரந்தரமாக செயல்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது குற்ற வழக்குகள் நடைபெற்றால் அதில் துப்பு துலக்குவதற்காக மட்டுமே துணை ஆணையர்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களுக்குகீழ் பணியாற்ற தனிப்படைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தனிப்படையை அமைப்பதற்கும் மண்டல ஐஜிக்கள் மற்றும் காவல் ஆணையர்கள் ஆகியோரிடம் உரிய…
பெரியகுளம்: தேனி மாவட்டம் தேவதானப் பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர், தனது கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, தனது கட்சிக்காரருடன் வந்து புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக 14.1.2025-ல் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை தனக்கு வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பாண்டிய ராஜன் மனு அளித்தார். அதையேற்று, அன்றைய தினத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் அவரிடம் வழங்கப்பட்டது. அதை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவரை போலீஸார் இழுத்துவந்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இருந்தன. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. போலீஸாரால் தாக்கப்பட்டவர் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சம்பவத்தன்று ரமேஷ் என்பவர் மதுபோதையில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்…
சென்னை: விசாரணையின்போது கோயில் காவலர் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: இது முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை. அவரது ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனிதஉரிமை மீறல். இதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும். பதில் சொல்ல வேண்டிய முதல்வர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார். சிபிசிஐடி விசாரணை மீது துளி கூட நம்பிக்கையில்லை. அவரது தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தமிழக மக்கள் தவிக்கின்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: அஜித்குமார் மரணம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய கண்காணிப்பில் உயர்நிலைக் குழு அமைத்து, சுதந்திரமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் காவல்நிலைய விசாரணையின்போது நிகழ்ந்த…
அழற்சி என்பது நோய்த்தொற்றுக்கு உடலின் இயல்பான பதிலாகும், மேலும் தொற்று குணமடையும் போது பொதுவாக அதன் சொந்தமாக குறைகிறது. இருப்பினும், ரூட் கால்வாய் பகுதியில் நாள்பட்ட நோய்த்தொற்றுகள் உடலில் தொடர்ந்து வீக்கத்தை ஏற்படுத்துகின்றன, இது மிகவும் ஆபத்தானது. இது, இரத்த நாளங்களை சேதப்படுத்தும், இது தமனிகளில் பிளேக்குகளை உருவாக்க வழிவகுக்கும் – இது பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது.பெருந்தமனி தடிப்பு தமனிகளை நீண்ட காலத்திற்கு குறைக்கிறது, மேலும் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கலாம், ஓரளவு அல்லது முழுமையாக, மாரடைப்புக்கு வழிவகுக்கும். இருப்பினும், இந்த செயல்முறை வழக்கமாக மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகும், மேலும் ஒரே இரவில் ஏற்படாது.
