புதுடெல்லி: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மேற்கு மற்றும் மத்திய மாலியின் பல இடங்களில் ராணுவ தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது கடந்த ஜூலை 1 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசுக்குத் தெரிய வந்துள்ளது. அப்போது கேய்ஸில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதுடன், இந்தியாவைச் சேர்ந்த 3 தொழிலாளர்களையும் கடத்திச் சென்றனர். இந்திய அரசு இந்த மோசமான வன்முறைச் செயலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. கடத்தப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாலி அரசாங்கத்தை இந்திய அரசு கேட்டுக்கொள்கிறது. அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், இந்திய நாட்டினரைப் பாதுகாப்பாகவும்…
Author: admin
சென்னை: “பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்காக நிவாரணம் கோரி போராடியவர்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா?. மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் ” என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? பட்டாசு ஆலைப் பாதுகாப்பை…
ஆரம்பகால கண்டறிதலுக்கான திறவுகோல் விழிப்புணர்வு மற்றும் வழக்கமான சுகாதார பரிசோதனைகள். இது தவிர, HPV தடுப்பூசி கர்ப்பப்பை வாய், யோனி, வல்வார், ஆண்குறி, குத மற்றும் ஓரோபார்னீஜியல் புற்றுநோய்கள் மற்றும் பிறப்புறுப்பு மருக்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும் HPV வகைகளிலிருந்து பாதுகாக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை, தடுப்பூசி 45 வயது வரை 11 அல்லது 12 வயதிற்குள் எடுக்கப்படலாம் (முதலில் உங்கள் மருத்துவரிடம் சரிபார்க்கவும்)குறிப்புகள்: மொஃபிட் புற்றுநோய் மையம் மொஃபிட் புற்றுநோய் மையம் – ஐந்து எச்சரிக்கை அறிகுறிகள் தேசிய புற்றுநோய் நிறுவனம் கார்கினோஸ் ஹெல்த்கேர் அமெரிக்க புற்றுநோய் சங்கம் Nhs.ukமறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பாதித்தால் எப்போதும் மருத்துவ நிபுணரை அணுகவும்
புதுடெல்லி: ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது முன்னர் திட்டமிட்டதை விட ஒரு வாரம் அதிகமாகும். முன்னதாக, இந்தக் கூட்டத்தொடரை ஆகஸ்ட் 12-ம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் இப்போது அது ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சுதந்திர தின கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 13 மற்றும் 14-ம் தேதிகளில் கூட்டத்தொடர் நடைபெறாது என்று கிரண் ரிஜிஜு தெரிவித்தார். முக்கிய சட்டங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடர் கூடுகிறது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள முக்கிய மசோதாக்களில் அணுசக்தி துறையில் தனியார்…
சிவகங்கை: போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கை 2-வது நாளாக திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று திருப்புவனம் வந்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ், காவல்நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி, விசாரணையை தொடங்கினார். அவரிடம் ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் வழக்கு தொடர்பான ஆவணங்களை அளித்தனர். தொடர்ந்து ஏடிஎஸ்பி, ஆய்வாளர், அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்த கோயில் பணியாளர் உள்ளிட்ட பலரிடம் 12…
நிபந்தனை: 180 நாட்களுக்குள் 90 நாட்கள் வரை இருங்கள். செல்லுபடியாகும், பல நுழைவு இங்கிலாந்து விசா ஒரு முறையாவது பயன்படுத்தப்படுகிறது; பாஸ்போர்ட் 6+ மாதங்களுக்கு செல்லுபடியாகும்செர்பியா ஐரோப்பாவின் காட்டு இலக்கு, மலிவு, கலகலப்பான மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்தது. பெல்கிரேடின் போஹேமியன் காலாண்டுகள், டானூபில் மிதக்கும் இரவு விடுதிகள், மற்றும் கிராமப்புற மடங்கள் அனைத்தும் விசா இல்லாமல் உங்கள் நாட்களைக் கழிக்கவும்.நீங்கள் பறப்பதற்கு முன் விரைவான உதவிக்குறிப்புகள்தங்குமிடம், திரும்ப டிக்கெட்டுகள் மற்றும் போதுமான நிதிகளின் ஆதாரத்தை எப்போதும் கொண்டு செல்லுங்கள் சில நாடுகளில் உங்கள் இங்கிலாந்து விசா ஒரு முறையாவது பயன்படுத்தப்பட வேண்டும்உங்கள் விசா முழு தங்குவதற்கு செல்லுபடியாகும் என்றால் மட்டுமே பெரும்பாலான நுழைவை அனுமதிக்கவும்முன்பதிவு செய்வதற்கு முன் தூதரகம் அல்லது உத்தியோகபூர்வ சுற்றுலா தளத்துடன் எப்போதும் இருமுறை சரிபார்க்கவும்-விதிகள் மாறுகின்றன!குறிப்பு: விசா விதிமுறைகள் குறுகிய அறிவிப்பில் மாறலாம். பயணம் செய்வதற்கு முன் உங்கள் இலக்கின் தூதரகம் அல்லது தூதரகத்துடன் சமீபத்திய தேவைகளை…
வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார். அமெரிக்காவிற்கு நான்கு நாள் பயணமாகச் சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, “இந்தியாவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் இந்த மசோதா குறித்து எப்போதும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவை ஆதரித்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமுடன் தொடர்பில் இருக்கிறோம். இந்த மசோதாவில் எங்கள் கவலைகள் மற்றும் அக்கறைகள் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல எரிசக்தி பாதுகாப்பில் எங்கள் கவலைகள் மற்றும் நலன்கள் குறித்தும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த மசோதா வரும்போது, நாங்கள் அந்தப் பாலத்தைக் கடப்போம்” என்று கூறினார் முன்னதாக, குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் போது, அவர் இந்தியா மற்றும் சீனாவைப்…
சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழக அரசை கண்டித்தும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (3-ம் தேதி) காலை 10 மணிக்கு எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் நாள் மற்றும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து…
அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் கூற்றுப்படி, நுரையீரல் புற்றுநோயைத் தொடர்ந்து, உலகளவில் ஆண்களில் பொதுவாக கண்டறியப்பட்ட இரண்டாவது புற்றுநோயாக புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளது. 2025 ஆம் ஆண்டில் மட்டும், புரோஸ்டேட் புற்றுநோய்க்கான 313,780 புதிய வழக்குகள் இருக்கும் என்று தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஆபத்தான கணிப்புகள் மதிப்பிடுகின்றன-ஆண்களில் அனைத்து புதிய புற்றுநோய் நோயறிதல்களிலும் 15.4% மற்றும் சுமார் 35,770 இறப்புகள், புற்றுநோய் தொடர்பான அனைத்து இறப்புகளில் 5.8% ஐக் குறிக்கின்றன.இந்த புள்ளிவிவரங்கள் எண்கள் அல்ல, அவை விழித்தெழுந்த அழைப்பு. புரோஸ்டேட்டில் தொடங்கும் ஒரு நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரம்பகால கண்டறிதலை மேம்படுத்தவும், சிகிச்சை உத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் அவை சுட்டிக்காட்டுகின்றன -ஆண் இனப்பெருக்க அமைப்பில் ஒரு சிறிய ஆனால் முக்கிய சுரப்பி. புரோஸ்டேட் புற்றுநோயின் உலகளாவிய சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் தாக்கங்களை புரிந்துகொள்வது அவசியம் என்பதால் இனி விருப்பமில்லை.புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன?புரோஸ்டேட் என்பது ஆண் இனப்பெருக்க அமைப்பில் ஒரு…
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடா பகுதியில் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு எருதுகள் அல்லது டிராக்டரை வாங்க அவருக்கு வசதி இல்லை. கூலித் தொழிலாளர்களை நியமிக்கவும் முடியாத வறுமை நிலை. இதனால் வேறு வழியில்லாமல், தானே எருதாக மாறி அம்பதாஸ் பவாரும் அவரது மனைவி முக்தாபாயும் பல ஆண்டுகளாக நிலத்தை ஒரு மரக்கலப்பை மூலம் உழுது விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி விவசாயிகள் படும் கஷ்டத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து முக்தாபாய் கூறுகையில், “எங்களது மகன் நகரத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறான். வயதான நாங்கள்தான் உழவு முதல் அறுவடை வரை அனைத்து விவசாய வேலைகளையும் செய்து வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக பெய்த கனமழையால் பயிர் சேதமடைந்து கடன்…
