சென்னை: செயற்கைக் கோள் தரவு மற்றும் ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்வள தகவல் மேலாண்மை அமைப்புக்கான இணையதளங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 169 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு மூலம் உதவிப் பொறியாளர் (சிவில்) பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, நீர்வளத் துறைக்கு ஒதுக்கப்பட்ட 169 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். இணையதளங்கள் தொடக்கம்: தமிழ்நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்புக்கான (TNWRIMS) இணையதளத்தை உருவாக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த இணையதளத்தை உருவாக்க, நீரை பயன்படுத்தும் பல்வேறு பங்குதாரர்களிடம் இருந்து அனைத்து தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எதிர்கால முன்மொழிவை உருவாக்க, நீர் தொடர்பான தரவு தளத்துக்கான, நம்பகத் தன்மையுடன் கூடிய…
Author: admin
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வரும் 6-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், 7 முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக, விஞ்ஞானிகள் தாவரங்கள் முக்கியமாக இரவில் செயலில் இருக்கும் புரதங்கள் மூலம் வெப்பத்தைக் கண்டறிந்தன என்று நினைத்தனர். இப்போது, சமீபத்திய கண்டுபிடிப்புகள் மிகவும் சிக்கலான செயல்முறையை வெளிப்படுத்தியுள்ளன. தாவரங்கள் வெப்பத்திற்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பது பற்றிய நமது தற்போதைய புரிதலை இது மாற்றுகிறது. தாவரங்கள் சூரிய ஒளி, சர்க்கரை மற்றும் உள் சமிக்ஞைகளின் கலவையை பகலில் அரவணைப்புக்கு அவற்றின் வளர்ச்சி பதிலைக் கட்டுப்படுத்துகின்றன, இது என அழைக்கப்படுகிறது தெர்மோமார்போஜெனெஸிஸ். இந்த திருப்புமுனை தாவரங்கள் அவற்றின் சூழலுக்கு ஏற்ற சிக்கலான வழிகளில் புதிய ஒளியைக் குறைக்கிறது. அது சூடாக இருக்கும்போது, அவர்கள் எதிர்வினையாற்றுவதில்லை – அவர்கள் சிந்தித்து சரிசெய்கிறார்கள். அவர்கள் சர்க்கரைகளைப் பயன்படுத்தி தங்கள் சுற்றுப்புறங்களைப் புரிந்துகொள்வதற்கும், நிலைமைகள் சரியாக இருக்கும்போது சரியாக வளரவும் பயன்படுத்துகிறார்கள்.சூரிய ஒளியில் வெப்பத்தைக் கண்டறிய தாவரங்கள் சர்க்கரையை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வு காட்டுகிறதுவிஞ்ஞானிகள் முன்பு சில புரதங்கள் (பைட்டோக்ரோம் பி மற்றும் எல்ஃப் 3)…
அக்ரா: அரசுமுறை பயணமாக கானா நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7-ம் தேதிகளில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க செல்லும் வழியில் கானா, டிரினிடாட் அன்ட் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக, மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா தலைநகர் அக்ராவுக்கு பிரதமர் மோடி கடந்த 2-ம் தேதி சென்றார். கானா அதிபர் ஜான் டிராமணி மகாமாவை அவர் நேற்று சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே கலாச்சாரம், தரநிலை சான்று, ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:…
சென்னை: நீட் தேர்வின்போது மின்தடை ஏற்பட்டதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 4-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அன்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக, தங்களால் சரியாக தேர்வு எழுத முடியாததால், மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 பேர், பிற மையங்களில் தேர்வு எழுதிய 3 பேர் என மொத்தம் 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை தரப்பில், ‘மின்தடை ஏற்பட்டாலும், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. பெரும்பாலான மாணவர்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர். மறுதேர்வு…
ஜூலை வடக்கு அரைக்கோளம் முழுவதும் வெளிவருகையில், கோடை வானம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வான நிகழ்வுகளில் ஒன்றைக் கொண்டு திகைக்கத் தயாராகிறது. பக் மூன் என. ஆண் மான் புதிய எறும்புகளை வளர்க்கத் தொடங்கும் காலத்திற்கு பாரம்பரியமாக பெயரிடப்பட்டது, பக் மூன் ஜூலை மாதத்தின் ப moon ர்ணமி மற்றும் ஜூலை 10, 2025 இரவு அதன் உச்ச பிரகாசத்தை எட்டும். இந்த ஒளிரும் காட்சி மாதத்தின் ஒரே சிறப்பம்சம் அல்ல. வேலைநிறுத்தம் செய்யும் கிரக சீரமைப்புகள் முதல் வரவிருக்கும் விண்கல் மழை வரை, இந்த சீசன் அண்ட செயல்பாட்டின் பணக்கார அட்டவணையை உறுதியளிக்கிறது. ஸ்கைவாட்சர்கள் மற்றும் ஸ்டார்கேஸர்களைப் பொறுத்தவரை, ஜூலை பிரபஞ்சத்தின் அதிசயங்களுடன் மீண்டும் இணைக்க சரியான வாய்ப்பை வழங்குகிறது.ஜூலை ப moon ர்ணமி அல்லது பக் மூன் என்றால் என்ன”பக் மூன்” என்ற சொல் வட அமெரிக்காவின் பழங்குடி மக்களிடமிருந்து உருவாகிறது, குறிப்பாக அல்கொன்கின் போன்ற பழங்குடியினர், பருவங்கள்…
சென்னை: அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை நடிகர் விஜய் பார்த்து பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். ஆக்ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த நவம்பர் 14-ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது நாளை (ஜூலை 4) ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் விஜய் இதனை வெகுவாக பாராட்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் உடன் படத்தின் நாயகன் சூர்யா சேதுபதியும், இயக்குநர் அனல் அரசுவும் உள்ளனர். இந்த புகைப்படம்…
சென்னை: பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு (யுமிஸ்) தளம் வாயிலாக, தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களில் 9.40 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் தரவுகளை ஒருங்கிணைத்து பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு (யுமிஸ்) செயல்பட்டு வருகிறது. கல்வி மேலாண்மை தகவல் அமைப்பை (எமிஸ்) போலவே, ஒற்றைச் சாளர முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தளமானது, தரவுகளை ஒருங்கிணைப்பது, செயல்முறைகளைதானியங்கி மயமாக்குவது, உயர்கல்வித் துறைக்கு தேவையான பகுப்பாய்வுகளை செய்ய உதவுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, எமிஸ், என்பிசிஐ, இ-சேவை, ஆதார் போன்ற பிற தளங்களில் உள்ள விவரங்களுடன், இத்தளத்தில் உள்ள மாணவர் தரவுகளை சரிபார்த்து, அதை உறுதி செய்கிறது. அதேபோல், தகவல் பகிர்வுக்காக மாநிலக் கல்வி உதவித்தொகை இணையதளம், நான் முதல்வன், முதலமைச்சர் தகவல் பலகை…
பெங்களூரு: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) முதல் எல்.சி.ஏ தேஜாஸ் எம்.கே 1 ஏவை அதன் புதிய நாஷிக் உற்பத்தி வரிசையில் இருந்து ஜூலை இறுதிக்குள் வெளியிடுகிறது, ஆகஸ்ட் தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட அஸ்ட்ரா ஏர்-டு-ஏர் ஏவுகணையின் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை துப்பாக்கிச் சூடு, ஹால் சிஎம்டி டி.கே சுனில் ஒரு நேர்காணலில் டோயிடம் கூறினார்.என்ஜிக் விநியோகக் கட்டுப்பாடுகள் மற்றும் சுதேச ரேடார் ஒருங்கிணைப்பு தாமதங்கள் மூலம் நிரல் செயல்படும்போது, தேஜாஸ் உற்பத்தியை அளவிட ஹால் முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லை நாசிக்கிலிருந்து வெளியிட்டது குறிக்கிறது. “நாஷிக் முதல் முதல் விமானம் ஏற்கனவே இறுதி சட்டசபை மற்றும் சோதனையின் கீழ் உள்ளது. ஒரு மாதத்தில் ரோல்அவுட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று சுனில் கூறினார், நடப்பு ஆண்டு நாஷிக் இருந்து மூன்று முதல் நான்கு விமானங்களைக் காணும்போது, இந்த ஆலை வருடாந்திர எட்டு உற்பத்தியை ஆதரிப்பதற்காக கட்டப்பட்டுள்ளது.தற்போது, ஹால் பெங்களூரில் இரண்டு உற்பத்தி வரிகளை…
சென்னை: ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஆமிர் கானின் கதாபாத்திரம் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் நாகார்ஜுனா, சவுபின் சாகீர், உபேந்திரா, ஆமிர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். விரைவில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கவுள்ளது படக்குழு. பல மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துவிட்டது படக்குழு. ஆனால் ஆமிர்கானின் கதாபாத்திரத்தை மட்டும் ரகசியமாகவே வைத்திருந்தது. படக்குழுவினரும் ஆமிர்கான் இப்படத்தில் நடிப்பது குறித்து வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் ஆமிர்கான் நடிப்பில் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் ப்ரோமோஷன் பேட்டிகளின் போது ‘கூலி’ படத்தில் தான் நடிப்பதை ஆமிர் கான் உறுதி செய்தார். இந்த நிலையில் ஆமிர் கானின் கதாபாத்திரத்தை படக்குழு…
