வாஷிங்டன்: ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிப்பது தொடர்பாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்காவிடம் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க அரசு ரஷ்யா மீதான தடை தொடர்பாக புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. குடியரசுக்கு கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஆதரவுடன் வெளிவந்துள்ள இந்த மசோதா ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வழிவகை செய்கிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய தடை மசோதாவால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெரிதும் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது இருதரப்பிலும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Author: admin
சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தாக்கி கொலை செய்தது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு புகார் தொடர்பான விசாரணையின்போது தனிப்படை போலீஸார் தாக்கியதில் இவர் உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து, திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கி, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் கடந்த 2-ம் தேதி விசாரணையை தொடங்கினார். சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் வழக்கு தொடர்பான ஆவணங்களை அவரிடம் அளித்தனர். இதை தொடர்ந்து, கோயில் பணியாளர்கள் சக்தீஸ்வரன், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் சிசிடிவி…
புதுடெல்லி: எச்எஸ்பிசி இந்திய சேவைகள் பிஎம்ஐ வணிக செயல்பாட்டு குறியீடு கடந்த மே மாதத்தில் 58.8-ஆக இருந்த நிலையில் ஜூன் மாதத்தில் அது 60.4-ஆக அதிகரித்துள்ளது. புதிய வணிகங்களுக்கான ஆர்டர் கணிசமாக அதிகரித்ததால் இந்த குறியீடு ஏற்றம் கண்டுள்ளது. பர்சேசிங் மேனேஜர்ஸ் இன் டெக்ஸ் (பிஎம்ஐ) குறியீடு 50-க்கு மேல் இருந்தால் அது விரிவாக்கத்தையும். அதேநேரத்தில் 50-க்கு கீழ் இருந்தால் பின்னடைவையும் குறிப்பதாகும். இதுகுறித்து எச்எஸ்பிசி-யின் தலைமை பொருளாதார நிபுணர் பிரஞ்சுல் பண்டாரி கூறுகையில், “புதிய உள்நாட்டு ஆர்டர்கள் வரத்து குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. ஒப்பீட்டு அளவில் தற்போது உள்ளீட்டு செலவினங்கள் குறைந்து நிறுவனங்களின் லாபவரம்பு மேம்பட வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் சேவைகள் துறை சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. அதேபோன்று வேலைவாய்ப்பும் தொடர்ந்து 37-வது மாதமாக உயர்ந்தது. இவை சேவை துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்றார்.
எலும்பு ஆரோக்கியம், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் மனநிலை ஆகியவற்றிற்கு வைட்டமின் டி முக்கியமானது, ஆனால் குறைந்த சூரிய வெளிப்பாடு மற்றும் மோசமான உணவு காரணமாக குறைபாடு பரவலாக உள்ளது. வைட்டமின் டி அளவை அதிகரிக்க சூரிய ஒளி மிகவும் பயனுள்ள வழியாகும், குறிப்பாக மதிய வேளையில் யு.வி.பி கதிர்கள் வலுவாக இருக்கும்போது. ‘சன்ஷைன் வைட்டமின்’ என்றும் அழைக்கப்படும் வைட்டமின் டி, உடலுக்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். எலும்பு ஆரோக்கியம், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் மனநிலை ஒழுங்குமுறை ஆகியவற்றைப் பராமரிப்பதில் இருந்து, இந்த ஊட்டச்சத்து உடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. ஆயினும்கூட, வைட்டமின் டி குறைபாடு மிகவும் பொதுவானது. வைட்டமின் டி குறைபாடு சுமார் 1 பில்லியன் மக்களை பாதிக்கிறது, சில மக்கள்தொகையில், குறைபாடு விகிதம் கிட்டத்தட்ட 50%ஆகும். சூரிய வெளிப்பாடு இல்லாதது, சமநிலையற்ற உணவு அல்லது பிற நோய்கள் காரணமாக இருக்கலாம். வைட்டமின் டி அவசியம் என்பதில்…
புதுடெல்லி: அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். இதையடுத்து ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரவிஷா மனைவி மற்றும் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ரவிஷா காரை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாலேயே விபத்து நடந்துள்ளது. எனவே, இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரவிஷா குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும்…
பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் ஷூப்மன் கில் 269 ரன்கள் விளாசி அசத்தினார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 2, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87, கருண் நாயர் 31, ரிஷப் பந்த் 25, நித்திஷ் குமார் ரெட்டி 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 114, ரவீந்திர ஜடோ 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ஷுப்மன் கில்லும், ஜடேஜாவும் இங்கிலாந்து…
புதுடெல்லி: மாலி நாட்டில் பணியாற்றிய 3 இந்தியர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க மாலி அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டில் ராணுவத்துக்கும் அல்காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. மாலி நாட்டின் மத்திய, மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. இதில் 80 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் கடந்த 1-ம் தேதி மாலியின் கேய்ஸ் நகரில் உள்ள சிமென்ட் ஆலை மீது அல்காய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்று உள்ளனர். இதில் 3 பேர் இந்தியர்கள். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட…
2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக வைத்துக் கொண்டு சொன்ன உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் நாளிதழ் பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜக-வும் இடம்பெறும். அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்” என்று இபிஎஸ் தரப்புக்கு இன்னொரு ஷாக் கொடுத்திருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு பாஜக பகீரத பிரயத்தனம் செய்தது. ஆனால் அண்ணாமலையின் அதிரடிகளால் அதிருப்தி கொண்ட இபிஎஸ், “பாஜக-வுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை” என திட்டவட்டமாக அறிவித்தார். அதிமுக-வின் இந்த முடிவால் உதிரிக் கட்சிகளை கூட்டு சேர்த்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்த பாஜக-வுக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. இதனால் இபிஎஸ் மீதும் அதிமுக மீதும் கடும் கோபத்தில் இருந்தார் அமித் ஷா. மக்களவைத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் கோட்டைவிட்டு விடக்கூடாது…
வெங்காய சாறு என்பது முடி உதிர்தல் மற்றும் முடி ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான பிரபலமான வீட்டு வைத்தியம். இது பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதன் செயல்திறன் இன்னும் ஆராய்ச்சி செய்யப்படுகிறது. முடி பராமரிப்புக்காக வெங்காய சாற்றை முயற்சிப்பதற்கு முன், அதன் நன்மைகளையும் சாத்தியமான குறைபாடுகளையும் புரிந்துகொள்வது அவசியம். வெங்காயத்தில் சமையலுக்கு அப்பால் பயன்பாடுகள் உள்ளன, அவற்றின் சாறு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பண்புகளைக் கொண்டிருக்கலாம்.இருப்பினும், அதன் செயல்திறனை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை. முடி பராமரிப்புக்காக வெங்காய சாற்றைப் பயன்படுத்துவதை நீங்கள் கருத்தில் கொண்டால், அதன் சாத்தியமான நன்மைகள் மற்றும் உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் அது எவ்வாறு பொருந்தக்கூடும் என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்வது முக்கியம். முடி பராமரிப்புக்கு வெங்காய சாற்றை எவ்வாறு பயன்படுத்தலாம்?முடி பராமரிப்புக்காக வெங்காய சாற்றை முயற்சிக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஹெல்த்லைன் படி, இங்கே நீங்கள் வீட்டில் முயற்சி செய்யலாம் ஒரு எளிய செய்முறை:…
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் ஸ்வரண மாதத்தை முன்னிட்டு காவடி யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள உணவகங்களில் கடை உரிமையாளர் பெயர் உட்பட முழு விவரங்களை அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்று பிரபல துறவி யஷ்வீர் மஹராஜின் சீடர்கள் 5,000 பேர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களில் ஒரு குழுவினர் முசாபர்நகரின் ‘பண்டிட்ஜி வைஷ்னோவ் தாபா’வை முஸ்லிம்கள் நடத்துவதாக கண்டுபிடித்தனர். அப்போது, அங்கு வேலை செய்தவர்களின் கீழாடைகளை அகற்றி சோதித்தனர். இது பெரும் சர்ச்சையானது. ஆனால், அங்கு வேலை செய்யும் ஒருவர் நேற்று உண்மையை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளரிடம் ஆதார் அட்டையை காட்டி அந்த ஊழியர் கூறும்போது, “எனது உண்மையான பெயர் தஜும்முல். என்னை கோபால் என்ற பெயரில் வேலை செய்ய உரிமையாளர் கேட்டுக் கொண்டார். எனக்கு வேலை வேண்டும் என்பதால் பொய் கூறி…
