Author: admin

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநரில் இன்று நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் பங்கேற்றனர். ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியின் பேரன் இமாம் ஹுசைன் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஸ்ரீநகரில் இன்று (ஜூலை 4) மொஹரம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் கலந்து கொண்டு, இஸ்லாமிய ஆதரவு கோஷங்கள் மற்றும் ஈரான் ஆதரவு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். மொஹரம் ஊர்வலத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து 3-வது ஆண்டாகவும், வழக்கமாக செல்லும் முக்கிய வீதிகள் வழியாகவும் ஊர்வலம் அமைதியாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஸ்ரீநகரின் குரு பஜார் பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதில் பங்கேற்க, ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் முன்னதாகவே வந்திருந்தனர். அங்கிருந்து தொடங்கிய ஊர்வலம், ஜஹாங்கீர் சௌக், மவுலானா ஆசாத் சாலை வழியாகச் சென்று தல்கேட் பகுதியில் நிறைவடைந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாதவாறு, ஊர்வலம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.…

Read More

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், தன் ஆதர்சமான விராட் கோலி பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் கேப்டன்சி பேட்டிங்கை தொடர் சதங்களுடன் தொடங்கியுள்ளார். இங்கிலாந்தில் இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர், கேப்டனாக அதிகபட்ச ஸ்கோர் என்று சாதனைகள் பலவற்றை அவர் நிகழ்த்தியுள்ளார். மாறாக டாஸ் வென்று ஹெடிங்லே போல் கனவுடன் இந்திய அணியை பேட் செய்ய அழைத்ததன் கொடுமையை இந்நேரம் பென் ஸ்டோக்ஸ் உணர்ந்திருப்பார். இன்னும் கூட இங்கிலாந்தை நெருக்கதலுக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும். இனி இது போன்ற பிட்சைப் போட்டு எதிரணியை மட்டமாக நினைத்து பாஸ்பால் போட்டு வென்று விடலாம் என்று இங்கிலாந்து கனவிலும் நினைக்கக் கூடாது என்னும் அளவுக்கு 650-700 ரன்களைக் குவித்திருக்க வேண்டும். இப்போது பவுலர்களை அதிக பணிச்சுமை ஏற்றி அவர்கள் காயமடைந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்கு பென் ஸ்டோக்ஸ்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஒரு டெஸ்ட் போல் இன்னொரு டெஸ்ட் அமையாது என்பதை பாஸ்பால் குழு…

Read More

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: டிரினிடாட்&டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும் பரிசாக வழங்கினார். அரசுமுறை பயணமாக டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடியை, பியார்கோ சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக இன்று போர்ட் ஆஃப் ஸ்பெயின் வந்தார். 1999-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவின் அடையாளமாக, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, டிரினிடாட் & டொபாகோ பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் மற்றும் அந்நாட்டின்…

Read More

சென்னை: மடப்​புரம் கோயில் காவலர் அஜித்​கு​மார் காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்டதைக் கண்டித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட மடப்​புரம் கோயில் காவலர் அஜித்​கு​மார் மரணத்​துக்கு நீதி கேட்​டும், உயர் நீதி​மன்​றத்​தின் நேரடிக் கண்​காணிப்​பின் கீழ் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு அமைத்து நீதி விசா​ரணை நடத்த வேண்​டும் என வலி​யுறுத்​தி​யும், கடந்த 4 ஆண்​டு​களில் 24 பேர் காவல் நிலை​யத்​தில் மரணம் அடைந்​தது குறித்து உயர் ​நீ​தி​மன்​றமே அதிருப்தி தெரி​வித்​துள்ள நிலை​யில், இதுகுறித்​து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளி​யிட வலி​யுறுத்​தி​யும் தமிழக வெற்​றிக் கழகத்​தின் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் அறிவிக்​கப்​பட்டிருந்​தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் மூன்பு இன்று (ஜூலை 4) தவெக சார்பில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி…

Read More

பிராட் பிட் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறார், ஆனால் எந்த தவறும் செய்யாதீர்கள், அது வடுக்கள் இல்லாமல் வரவில்லை. 61 வயதான ஹாலிவுட் புராணக்கதை சிவப்பு கம்பளத்தின் மீது கவலைப்படாமல் தோன்றக்கூடும், ஆனால் திரைக்குப் பின்னால், அவர் நவீன பாப் கலாச்சார வரலாற்றில் குழப்பமான பிரபலமான இதய துடிப்புகளில் ஒன்றாகும். ஏஞ்சலினா ஜோலியின் விவாகரத்து? இறுதியாக முடிந்தது. உணர்ச்சி சேதம்? கூட நெருக்கமாக இல்லை. பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோலி சிவப்பு கம்பளத்தின் மகிழ்ச்சியான காலங்களில். | கடன்: x/brangelinaforever4 நீங்கள்அவர் அவளை நேசித்தார்… ஆனால் அவர் அதை வெடித்தார் என்று அவருக்குத் தெரியும்உண்மையானதாக இருக்கட்டும், பிராங்கெலினா கவர்ச்சியான குழப்பத்தின் தங்கத் தரமாகும். ஆனால் இப்போது, ​​பிராட் மிருகத்தனமான நேர்மையைத் தவிர வேறொன்றுமில்லாமல் பிராட் அந்த அழிந்த விசித்திரக் கதையை பிரதிபலிக்கிறார் என்று கூறுகிறார்கள். திருமணத்தில் “அவர் தவறுகளைச் செய்தார் என்று தனக்குத் தெரியும்” என்றும் “அவளை உண்மையிலேயே நேசித்தார்”…

Read More

பெங்களூரு: கர்​நாடக மாநிலத்​தில் கடந்த ஓரிரு ஆண்​டு​களாக 30 வயதுக்​கும் குறை​வான இளைஞர்​கள் மாரடைப்​பால் உயி​ரிழப்​பது அதி​கரித்து வரு​கிறது. மது மற்​றும் சிகரெட் பழக்​கம், இணை நோய் அறிகுறிகள் உள்​ளிட்​டவை இல்​லாத போதும், திடீர் மாரடைப்பு ஏற்​படு​வது அதி​கரித்து வரு​வ​தாக சுகா​தா​ரத்​துறை ஆய்​வு​கள் கூறுகின்​றன. ஹாசன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 23 இளைஞர்​கள் மாரடைப்​பால் உயி​ரிழந்​துள்​ளனர். இதில் 18 பேருக்கு வீட்​டிலேயே உயிர் பிரிந்​துள்​ளது. இந்​நிலை​யில் கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, ‘‘இளம்​வயது மாரடைப்பு மரணங்​கள் அதி​கரிப்​பது அதிர்ச்​சி​யாக இருக்​கிறது. பெங்​களூர் மற்​றும் மைசூரு​வில் உள்ள ஜெயதேவா இதய நோய் மருத்​து​வ​மனை​களில் அவசர இதயச் சிகிச்​சைக்​காக வருபவர்​களின் எண்​ணிக்கை 20 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. மாரடைப்பு மரணங்​கள் அதி​கரிப்​ப​தற்கு என்ன காரணம் என்​பதை கண்​டறிய வேண்​டும். இதுகுறித்து முறை​யாக விசா​ரித்​து, ஆய்​வறிக்கை சமர்ப்​பிக்​கு​மாறு ஜெயதேவா இதய நோய் ஆய்வு மையத்​துக்கு உத்​தர​விட்​டுள்​ளேன். கரோனா தடுப்​பூசி காரண​மாக இந்த மரணங்​கள் நிகழ்ந்​த​தாக பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினர்…

Read More

தெஹ்ரான்: இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான போர் காரணமாக கடந்த ஜூன் 13-ம் தேதி ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையங்களும், ஈரான் நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரானில் முழுமையாக விமானங்கள் இயங்கத் தயாராக உள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, இஸ்ஃபஹான் மற்றும் தப்ரிஸில் உள்ள விமான நிலையங்களைத் தவிர, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலிருந்தும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும் என்று ஈரான் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உள்கட்டமைப்பு பணிகள் முடிந்தவுடன் இஸ்ஃபஹான் மற்றும் தப்ரிஸில்…

Read More

சென்னை: லாக்-அப் உயிரிழப்புகள், வரதட்சணை கொடுமை ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறினார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: லாக்-அப் உயிரிழப்புகள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பொதுமக்களுக்கு போலீஸார் தரும் தொந்தரவுகள் குறித்து, முதல்வர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வரதட்சணை கொடுமையால் தமிழகத்தில் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வரதட்சணை வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும் தவறுதான். எனவே, லாக்-அப் உயிரிழப்புகள், வரதட்சணை கொடுமை போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சினிமா துறையில் மட்டும்தான் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாகக் கூறமுடியாது. பள்ளி, கல்லூரி உள்பட எல்லா இடத்திலும் போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறது. திரைத் துறையில் 2 பேர் சம்பந்தப்பட்டு இருப்பதால், உடனே திரைத்துறையில் போதைப்பொருள் அதிகமாகி விட்டது என்பதா? இதை தடுப்பதற்கான வழியைப் பார்க்காமல், பூதக்கண்ணாடி வைத்து, பெரிதாக்கக்…

Read More

இந்திய சேலை கடை, பச்சாயப்பாஸ் சில்க்ஸ், அதன் எல்வி காஞ்சிபுரம் சேலையுடன் வைரஸ் உணர்வைத் தூண்டியுள்ளது, இது பாரம்பரிய தமிழ்நாடு பட்டு கொண்டு லூயிஸ் உய்ட்டன் மோனோகிராம்களை கலக்கும் கையால் உருவாக்கப்பட்டது. மேற்கத்திய வடிவமைப்பாளர்களுக்கு இந்திய கைவினைப்பொருட்களை கையகப்படுத்தும் இந்த விளையாட்டுத்தனமான பதில் சமூக ஊடகங்களைப் பற்றவைத்துள்ளது, இந்த தனித்துவமான இணைவுக்கான பல விருப்பங்களை வெளிப்படுத்துகிறது. பாரிஸ் பேஷன் வீக்கில் பிராடாவின் கோலபுரி சப்பல் தருணத்திலிருந்து (அவர்கள் இந்தியாவுக்கு கடன் வழங்குவதை வசதியாக மறந்துவிட்டோம்) நாங்கள் இன்னும் மீண்டு வந்தபோது, ​​அட்டவணைகள் திரும்பியுள்ளன, மேலும் மிகவும் பெருங்களிப்புடைய, தேசி வழியில்.உள்ளிடவும்: எல்வி காஞ்சிபுரம் புடவைகள். ஆம், லூயிஸ் உய்ட்டன் தமிழ்நாட்டை சந்திக்கிறார், இல்லை, நீங்கள் கனவு காணவில்லை.பிரபலமான தென்னிந்திய சேலை கடையில் இருந்து ஒரு ரீல், பச்சாயப்பாஸ் சில்க்ஸ் இன்ஸ்டாகிராமில் கையகப்படுத்தப்பட்டுள்ளது, இதில் பேஷன் வரலாற்றில் மிகச்சிறந்த கிளாபேக்காக இருக்கலாம். வைரஸ் வீடியோ (3 லட்சம் காட்சிகள் மற்றும் எண்ணிக்கையுடன்) எல்வி…

Read More