சென்னை: பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைத்த சாலைகள் எத்தனை என தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராம ஊராட்சி, இரண்டு பக்கமும் பவானி ஆற்றால் சூழப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காலங்களில், பரிசல் போக்குவரத்து தடைபடுவதால், சுமார் 8 கி.மீ தொலைவுக்குச் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அவசர மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள், குறித்த நேரத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாமல், பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பவானி ஆற்றைக் கடந்து செல்ல, உயர்மட்டப் பாலம் அமைத்துத் தரக் கோரி, பல ஆண்டுகளாக அம்மாபாளையம் கிராமப் பொதுமக்கள், முதல்வரிடமும், அந்தியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தின்…
Author: admin
சென்னை: திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுவதாக விசிக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், காங்கிரஸ் குறித்த விசிக நிர்வாகியின் கருத்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறினாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மூலம் திமுக செய்து வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பிறகு , “2011-ம் ஆண்டு போல் விசிகவும், பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும்” என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். செல்வப்பெருந்தகையின் கருத்தை கடுமையாக விமர்சித்து தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் வலிமையாகவா இருக்கிறது. எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கூறுகிறோம். நான் கூட்டணி கட்சியை குறைத்து மதிப்பிடவில்லை. அதேநேரம், காங்கிரஸின் வலிமை குறித்து தமிழகத்தில் கருத்துகணிப்பு நடத்தினால் உண்மை…
உங்களிடம் ஒரு நாய் இருந்தால், நாய்கள் உடல் மொழி மூலம் தொடர்புகொள்வதை நீங்கள் அறிந்து கொள்ளலாம், எனவே அவற்றின் குறிப்புகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. நாய்கள் மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை அனுபவிக்கின்றன, மேலும் இந்த உணர்ச்சிகள் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சுகாதார கவலைகளால் பாதிக்கப்படலாம். அவர்களின் தனித்துவமான வெளிப்பாடு வழிகள் மூலம் அவர்கள் தெரிவிக்க முயற்சிப்பதை அங்கீகரிப்பதன் மூலம், நீங்கள் அவர்களின் கவலையைக் குறைக்கலாம் மற்றும் சாத்தியமான சிக்கல்களைத் தடுக்கலாம். நாய்கள் சோகமாகவும், அழுத்தமாக இருக்கும்போது திரும்பப் பெறவும் முடியும், அது தொடர்ந்தால் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். உங்கள் நாய் மீண்டும் மகிழ்ச்சியாகவும் நிதானமாகவும் உணர உதவ, எந்தவொரு அடிப்படை மருத்துவ சிக்கல்களையும் நிராகரிக்க ஒரு கால்நடை மருத்துவரை அணுகவும். உங்கள் நாயின் மகிழ்ச்சியான தன்மையை மீண்டும் கொண்டு வர சில வாழ்க்கை முறை மாற்றங்களையும் பழக்க மாற்றங்களையும் செய்ய முயற்சி செய்யலாம்.என்ன நாய் மனச்சோர்வு? நாய்களில் மனச்சோர்வு அடிப்படை சுகாதார பிரச்சினைகள்…
சென்னை: ஆர்டிஇ திட்டத்தில் 2 ஆண்டுகளாக நிதி வழங்கப்படாததால் சேர்க்கை பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணத்தை செலுத்த தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதிலும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். அவர்களுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்தும். அதன்படி தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 4 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பதால் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுதவிர முந்தைய…
பர்மிங்காம்: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் ஆகியோரது அபாரமான ஆட்டத்தால் 400 ரன்களை கடந்தது. 3ஆவது நாள் முடிவில் இந்திய அணி தற்போது 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் விளாசினர். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 18, ஹாரி புரூக் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஜோ ரூட் 22 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன்…
சென்னை: “நானே பரந்தூர் பகுதி மக்களை அழைத்துக் கொண்டு வந்து, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தங்களை நேரில் சந்தித்து, அவர்கள் சார்பாக முறையிடும் சூழல் உருவாகும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பரந்தூர் பகுதியில், விவசாய நிலங்களை அழித்துவிட்டுப் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களும் விவசாயிகளும் ஏகனாபுரம் கிராமத்தில் வருடக்கணக்காகப் போராடி வருகின்றனர். போராடும் மக்களை தவெக சார்பாக நான் சந்தித்த மறுநாளே, பரந்தூர் பகுதி ‘மக்கள் பாதிக்காத வண்ணம்’ விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால். ‘மக்கள் பாதிக்காத வண்ணம்’ என்றால், பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வரவே வராது என்றோ அல்லது யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் வேறு இடத்தில் அமைக்கப்படும் என்றோ எத்தகைய சரியான…
விசைப்பலகைகள் மற்றும் திரைகள் ஆதிக்கம் செலுத்தும் உலகில், ஆராய்ச்சி பாரம்பரிய எழுத்தின் நன்மைகளை பேனா -ஹேண்ட்ரேட்டட் குறிப்புகளுடன் காட்டுகிறது. வளர்ந்து வரும் ஆராய்ச்சி அமைப்பு, கையால் எழுதுவது தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல; இது உண்மையில் கற்றல், நினைவகம் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையை மேம்படுத்தக்கூடும். ஆய்வுகளின்படி, கையால் எழுதப்பட்ட குறிப்புகள் தட்டச்சு செய்ததை விட வலுவான புரிதலுக்கும் சிறந்த நினைவுகூரலுக்கும் வழிவகுக்கும். நீங்கள் வகுப்பில் அதிக உள்வாங்க முயற்சிக்கும் மாணவராக இருந்தாலும் அல்லது இன்னும் தெளிவாக சிந்திக்க விரும்பும் ஒரு தொழில்முறை நிபுணராக இருந்தாலும், கையெழுத்து என்பது அறிவாற்றல் நன்மைகளை வழங்கக்கூடும், இது தட்டச்சு செய்வது வெறுமனே பொருந்தாது. உங்கள் மூளை பேனாவை ஏன் நேசிக்கிறது என்பது இங்கே.கையெழுத்து கற்றலில் தட்டச்சு செய்பவர்களை விட சிறப்பாக செயல்படுகிறதுபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் யு.சி.எல்.ஏவின் ஆராய்ச்சியாளர்கள் கையெழுத்து அல்லது தட்டச்சு குறிப்புகளைத் தட்டச்சு செய்வது மாணவர்களுக்கு சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவுகிறதா என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினர். அவர்களின்…
சென்னை: மத்திய பல்கலை.களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தேர்வுக்குரிய முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில்(க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வை தேசியதேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டு இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு கடந்த மே 13 முதல் ஜூன் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத நாடு முழுவதும் 13 லட்சத்து 54,699 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 10 லட்சத்து 71,735 மாணவர்கள் தேர்வெழுதினர். தமிழ் உட்பட 13 மொழிகளில் இந்த க்யூட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் க்யூட் தேர்வு முடிவுகளை என்டிஏ நேற்று வெளியிட்டது. அவற்றை மாணவர்கள் என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். பாடவாரியாக நடத்தப்பட்ட இந்த தேர்வில் 2,679 மாணவர்கள்…
சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்துவிட்டார் என்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்திய பிறகும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உயர் அதிகாரிகள் சொன்னதாக கூறி, போலீஸார் தங்கள் வாகனத்தில் எடுத்து சென்றனர் என்று மதுரை மாவட்ட நீதிபதியிடம் அரசு மருத்துவர் சாட்சியம் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு புகார் தொடர்பான விசாரணையின்போது, தனிப்படை போலீஸார் தாக்கியதில் இவர் உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் கடந்த 2-ம் தேதி திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கி, விசாரணையை தொடங்கினார். அன்றைய தினம் சிவகங்கை ஏடிஎஸ்பி…
நீங்கள் மிகவும் வீங்கியதாக உணர்ந்தால், சில மிளகுக்கீரை தேநீரைப் பருகவும். மிளகுக்கீரை எண்ணெயும் வீக்கத்தை ஆற்றும். மிளகுக்கீரை மெந்தோலைக் கொண்டுள்ளது, இது இரைப்பைக் குழாயை தளர்த்தி வாயுவைக் குறைக்கிறது. ஒவ்வொரு முறையும், உணவுக்குப் பிறகு, நீங்கள் பருகலாம். இருப்பினும், அமில ரிஃப்ளக்ஸ் உள்ளவர்கள் மருத்துவரை அணுக வேண்டும், ஏனெனில் மிளகுக்கீரை சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகளை மோசமாக்கக்கூடும்.
