புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் ஸ்ரவண மாதத்தை முன்னிட்டு காவடி யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரை செல்லும் பாதைகளில் உணவகம் நடத்தும் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்க உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்துகின்றனரா என்று பிரபல துறவி யோகா குரு யஷ்வீர் மஹராஜ் தனது 5,000 சீடர்களுடன் சோதனை நடத்தி வருகிறார். அதன்படி உணவக பணியாளர்களின் ஆடைகளை அவிழ்த்து சோதித்தது சர்ச்சையானது. எனினும், உணவக பணியாளர் தஜும்முல் என்பவர், கடை உரிமையாளர் சொன்னபடி கோபால் என பெயரை மாற்றி வேலை செய்வதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து மேலும் 30 இந்துத்துவா அமைப்பினர் உணவகங்களின் உரிமையாளர் அடையாளங்களை கண்டறிய களம் இறங்கியுள்ளனர். அவர்கள் ராமர், ஹனுமர் மற்றும் சிவன் படங்களுடன் கும்பலாக கடைகளுக்கு செல்கின்றனர். பிறகு, கடையில் உள்ள பேடிஎம் க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்து உண்மையான பெயர்களை கண்டுபிடிக்கின்றனர். இதுகுறித்து இந்து சங்கர்ஷ் சமிதி…
Author: admin
திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால் தாமதம் ஏற்படும். எனவே, நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணையே போதுமானது என்று அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27), நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணையின்போது உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், அஜித்குமாரின் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்த வழக்கில் தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும், பயப்படாமல் வந்து நீதிபதியிடம் சாட்சியம் அளிக்கலாம். ஜூலை 6-ம் தேதி வரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த உள்ளார். கொலை வழக்கில் 6-வது குற்றவாளியான போலீஸ் வேன் ஓட்டுநரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம். அஜித்குமாரை தாக்கிய தனிப்படை போலீஸார் 6 பேர், ஆய்வாளர், டிஎஸ்பி, எஸ்.பி.…
புதுடெல்லி: விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்துக்கு இந்திய விண்வெளி வீரரும், கேப்டனுமான ஷுபன்ஷு சுக்லா பயணம் செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் கடந்த மாதம் 25-ம் தேதி பால்கன் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது. இதில் 14 நாட்கள் அறிவியல் பயணத்துக்காக, இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு பயிர்களை விளைவிப்பது உள்ளிட்ட 7 ஆராய்ச்சியில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஷுபன்ஷு சுக்லா காணொலியில் பிரதமர் மோடியுடன் உரையாடி மகிழ்ந்தார். இதனிடையே, ஷுபன்ஷு சுக்லா, பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளுடன் நேற்று மாலை 3.47 மணிக்கு வணிகரீதியான வானொலி தொடர்பு சேவை அளிக்கும் ‘ஹாம் ரேடியோ’ மூலம் பெங்களூருவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்துடன்…
திருப்புவனம் / மதுரை: அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை அளித்துள்ளது கண்துடைப்பாகும். அவர் இருக்குமிடத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் காரைக்குடியில் வேலை கொடுத்துள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய நயினார் நாகேந்திரன், ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள் நடந்துள்ளன. எஃப்ஐஆர் பதிவு செய்யாமல், அஜித்குமாரை காவல் நிலையத்தில் அடித்துள்ளனர். பின்னர் தனிப்படை போலீஸார் 2 நாட்கள் அவரைத் தாக்கியுள்ளனர். தலைமைச் செயலகத்திலிருந்து ஒரு அதிகாரி சொன்னார் என்பதற்காக 6 போலீஸார் சேர்ந்து அடித்துள்ளனர். 3 இடங்களில் சிகரெட்டால் சுட்டுள்ளனர். இந்த அளவுக்கு கடுமையாக தாக்க வேண்டிய அவசியம் என்ன? மேலதிகாரியின் அழுத்தம்தான் காரணம் என்றால், தலைமைச் செயலகத்திலிருந்து அழுத்தம் கொடுத்த…
பண்டைய இந்திய மருத்துவ அமைப்பான ஆயுர்வேதம் பெரியவர்களுக்கு மட்டுமல்ல. இப்போது உலகில் உள்ள அனைவருமே வலியுறுத்தப்படுகிறார்கள், குழந்தைகள் வேறுபட்டவர்கள் அல்ல. இன்றைய புதிய வயது குழந்தைகள் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். ஒருபுறம், அவர்கள் சகாக்களின் அழுத்தம், மன அழுத்தம், கொடுமைப்படுத்துதல் போன்றவற்றைக் கையாள வேண்டும், மறுபுறம், இது மோசமான உணவு, உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மாசுபாடு. இந்த ஒருங்கிணைந்த அனைத்தும் வளர்ந்து வரும் ஆண்டுகளில் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். இருப்பினும், ஆயுர்வேதம் மீட்புக்கு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நினைவகத்திற்காக குழந்தைகள் தினமும் பின்பற்ற வேண்டிய 5 ஆயுர்வேத சடங்குகள் இங்கே (வயதுவந்தோர் மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்யப்பட வேண்டும்)
சென்னை: தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் அவருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தி, கடந்த 2021-ம் ஆண்டு முதல் ‘தகைசால் தமிழர்’ என்ற விருது வழங்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சங்கரய்யா, நல்லகண்ணு, கி.வீரமணி, குமரி அனந்தன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அன்புக்குரிய மூத்த அரசியல் தலைவரும், ‘மணிச்சுடர்’ இதழின் ஆசிரியரும், சமூக நல்லிணக்கத்துக்காக வாழ்நாளெல்லாம் உழைத்து வருபவருமான கே.எம்.காதர் மொய்தீனுக்கு விருதை வழங்க…
ஒமேகா -3 ஒரு ஆரோக்கியமான கொழுப்பு அமிலமாகும், இது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் மேம்பட்ட மூளை செயல்பாடு மற்றும் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் கற்றல், நினைவகம், அறிவாற்றல் நல்வாழ்வு மற்றும் மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று ஸ்டுடிஷேவ் காட்டுகிறது. ஒமேகா -3, குறிப்பாக ஈபிஏ (ஈகோசாபென்டெனோயிக் அமிலம்) மற்றும் டிஹெச்ஏ (டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம்) ஆகியவை மூளை உயிரணு சவ்வுகளை உருவாக்கி பராமரிக்கும் அத்தியாவசிய கொழுப்புகள். கொழுப்பு மீன் (சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி), சியா விதைகள், ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள் மற்றும் பாசி எண்ணெய் (தாவர அடிப்படையிலான டிஹெச்ஏ சப்ளிமெண்ட்ஸ்) போன்ற உணவுகள் ஒமேகா -3 இன் நல்ல ஆதாரங்கள்.
சென்னை: ‘ஊட்டச்சத்து வேளாண் இயக்கம்’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டிடங்களையும் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்துறை சார்பில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ், மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற காய்கறி விதைகள் அடங்கிய 15 லட்சம் காய்கறி விதைத் தொகுப்புகளையும், விரைவில் பலனளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய பழச்செடிகள் அடங்கிய 9 லட்சம் பழச்செடி தொகுப்புகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகள் அடங்கிய ஒரு லட்சம் பயறு வகை விதைத் தொகுப்புகள் ஆகியவற்றையும் விவசாயிகளுக்கு வழங்கும்…
சென்னை: பாமகவில் இருந்து அக்கட்சி எம்எல்ஏ இரா.அருள் நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வகிக்கும் கொறடா பதவியில் இருந்து மாற்றக்கோரி பேரவை தலைவரிடம் அன்புமணி சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருளை கட்சியின் இணை பொதுச்செயலாளராக ராமதாஸ் நியமித்தார். இதையடுத்து, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து இரா.அருளை நீக்கிய அன்புமணி, அந்த பொறுப்பில் க.சரவணன் என்பவரை நியமித்தார். தொடர்ந்து, இரா.அருளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். தமிழக சட்டப்பேரவையில் பாமக கட்சி தலைவராக ஜி.கே.மணியும், கட்சியின் கொறடாவாக இரா.அருளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று பாமக உறுப்பினர்கள் ச.சிவக்குமார், எஸ்.பி.வெங்கடேசன், எஸ்.சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் க.பாலு ஆகியோர் தலைமை செயலகம் வந்து பேரவை தலைவர்…
சென்னை: கொள்கை எதிரி, பிளவுவாத சக்திகளான திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆனந்த், துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், இணை செயலாளர் தாஹிரா, உறுப்பினர் சேர்க்கை அணி மாநில செயலாளர் விஜயலட்சுமி உட்பட கட்சி மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், சிறப்புக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 2-வது மாநில மாநாட்டையும், செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணமும் 2026 பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் கட்சி…
