Author: admin

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் ஸ்ரவண மாதத்தை முன்​னிட்டு காவடி யாத்​திரை தொடங்க உள்​ளது. யாத்​திரை செல்​லும் பாதைகளில் உணவகம் நடத்​தும் உரிமை​யாளர் பெயர் உள்​ளிட்ட விவரங்​களை அறி​விப்பு பலகை​களில் எழுதி வைக்க உ.பி. அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இந்த உத்​தரவை அமல்​படுத்​துகின்​றனரா என்று பிரபல துறவி யோகா குரு யஷ்வீர் மஹராஜ் தனது 5,000 சீடர்​களு​டன் சோதனை நடத்தி வரு​கிறார். அதன்​படி உணவக பணி​யாளர்​களின் ஆடைகளை அவிழ்த்து சோதித்​தது சர்ச்​சை​யானது. எனினும், உணவக பணி​யாளர் தஜும்​முல் என்​பவர், கடை உரிமை​யாளர் சொன்​னபடி கோபால் என பெயரை மாற்றி வேலை செய்​வ​தாக ஒப்​புக்​கொண்​டார். இதையடுத்து மேலும் 30 இந்​துத்​துவா அமைப்​பினர் உணவகங்​களின் உரிமை​யாளர் அடை​யாளங்​களை கண்​டறிய களம் இறங்​கி​யுள்​ளனர். அவர்​கள் ராமர், ஹனு​மர் மற்​றும் சிவன் படங்​களு​டன் கும்​பலாக கடைகளுக்கு செல்​கின்​றனர். பிறகு, கடை​யில் உள்ள பேடிஎம் க்யூஆர் கோடு​களை ஸ்கேன் செய்​து உண்மையான பெயர்களை கண்டுபிடிக்கின்றனர். இதுகுறித்து இந்து சங்​கர்ஷ் சமிதி…

Read More

திருப்புவனம்: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கை சிபிஐ விசா​ரித்​தால் தாமதம் ஏற்​படும். எனவே, நீதி​மன்ற நேரடிக் கண்​காணிப்​பில் சிபிசிஐடி விசா​ரணையே போது​மானது என்று அஜித்​கு​மார் குடும்ப வழக்​கறிஞர் கணேஷ்கு​மார் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் (27), நகை திருட்டு புகார் தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தார். இந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்​குப் பரிந்​துரை செய்து தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இதற்​கிடை​யில், அஜித்​கு​மாரின் குடும்ப வழக்​கறிஞர் கணேஷ்கு​மார் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: இந்த வழக்​கில் தகவல் தெரிந்​தவர்​கள் யாராக இருந்​தா​லும், பயப்​ப​டா​மல் வந்து நீதிப​தி​யிடம் சாட்​சி​யம் அளிக்​கலாம். ஜூலை 6-ம் தேதி வரை மாவட்ட நீதிபதி விசா​ரணை நடத்த உள்​ளார். கொலை வழக்​கில் 6-வது குற்​ற​வாளி​யான போலீஸ் வேன் ஓட்​டுநரை​யும் கைது செய்​யு​மாறு வலி​யுறுத்​தி​யுள்​ளோம். அஜித்​கு​மாரை தாக்​கிய தனிப்​படை போலீ​ஸார் 6 பேர், ஆய்​வாளர், டிஎஸ்​பி, எஸ்​.பி.…

Read More

புதுடெல்லி: விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்துக்கு இந்திய விண்வெளி வீரரும், கேப்டனுமான ஷுபன்ஷு சுக்லா பயணம் செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் கடந்த மாதம் 25-ம் தேதி பால்கன் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது. இதில் 14 நாட்கள் அறிவியல் பயணத்துக்காக, இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு பயிர்களை விளைவிப்பது உள்ளிட்ட 7 ஆராய்ச்சியில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஷுபன்ஷு சுக்லா காணொலியில் பிரதமர் மோடியுடன் உரையாடி மகிழ்ந்தார். இதனிடையே, ஷுபன்ஷு சுக்லா, பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளுடன் நேற்று மாலை 3.47 மணிக்கு வணிகரீதியான வானொலி தொடர்பு சேவை அளிக்கும் ‘ஹாம் ரேடியோ’ மூலம் பெங்களூருவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்துடன்…

Read More

திருப்புவனம் / மதுரை: அஜித்​கு​மாரின் சகோ​தரருக்கு அரசு வேலை அளித்​துள்​ளது கண்​துடைப்​பாகும். அவர் இருக்​குமிடத்​திலிருந்து 80 கி.மீ. தொலை​வில் காரைக்​குடி​யில் வேலை கொடுத்​துள்​ளனர் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீ​ஸார் தாக்​குதலில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறிய நயி​னார் நாகேந்​திரன், ரூ.5 லட்​சம் நிதி​ உதவி அளித்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: திமுக ஆட்​சி​யில் கடந்த 4 ஆண்​டு​களில் 24 விசா​ரணை மரணங்​கள் நடந்​துள்​ளன. எஃப்​ஐஆர் பதிவு செய்​யாமல், அஜித்​கு​மாரை காவல் நிலை​யத்​தில் அடித்​துள்​ளனர். பின்​னர் தனிப்​படை போலீ​ஸார் 2 நாட்​கள் அவரைத் தாக்​கி​யுள்​ளனர். தலை​மைச் செயல​கத்​திலிருந்து ஒரு அதி​காரி சொன்​னார் என்​ப​தற்​காக 6 போலீ​ஸார் சேர்ந்து அடித்​துள்​ளனர். 3 இடங்​களில் சிகரெட்​டால் சுட்​டுள்​ளனர். இந்த அளவுக்கு கடுமை​யாக தாக்க வேண்​டிய அவசி​யம் என்ன? மேல​தி​காரி​யின் அழுத்​தம்​தான் காரணம் என்​றால், தலை​மைச் செயல​கத்​திலிருந்து அழுத்​தம் கொடுத்த…

Read More

பண்டைய இந்திய மருத்துவ அமைப்பான ஆயுர்வேதம் பெரியவர்களுக்கு மட்டுமல்ல. இப்போது உலகில் உள்ள அனைவருமே வலியுறுத்தப்படுகிறார்கள், குழந்தைகள் வேறுபட்டவர்கள் அல்ல. இன்றைய புதிய வயது குழந்தைகள் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். ஒருபுறம், அவர்கள் சகாக்களின் அழுத்தம், மன அழுத்தம், கொடுமைப்படுத்துதல் போன்றவற்றைக் கையாள வேண்டும், மறுபுறம், இது மோசமான உணவு, உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மாசுபாடு. இந்த ஒருங்கிணைந்த அனைத்தும் வளர்ந்து வரும் ஆண்டுகளில் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். இருப்பினும், ஆயுர்வேதம் மீட்புக்கு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நினைவகத்திற்காக குழந்தைகள் தினமும் பின்பற்ற வேண்டிய 5 ஆயுர்வேத சடங்குகள் இங்கே (வயதுவந்தோர் மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்யப்பட வேண்டும்)

Read More

சென்னை: தமிழக அரசின் இந்த ஆண்​டுக்​கான ‘தகை​சால் தமிழர்’ விருதுக்​கு, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் கே.எம்​.​காதர் மொய்​தீன் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். சுதந்​திர தின விழா​வில் அவருக்கு ரூ.10 லட்​சத்​துக்​கான காசோலை, பாராட்டு சான்​றிதழை முதல்​வர் ஸ்டா​லின் வழங்க உள்​ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​துக்​கும், தமிழ் இனத்​தின் வளர்ச்​சிக்​கும் பெரும் பங்​காற்​றிய​வர்​களை பெரு​மைப்​படுத்​தி, கடந்த 2021-ம் ஆண்டு முதல் ‘தகை​சால் தமிழர்’ என்ற விருது வழங்​கப்​படு​கிறது. கடந்த 4 ஆண்​டு​களில் சங்​கரய்​யா, நல்​ல​கண்​ணு, கி.வீரமணி, குமரி அனந்​தன் ஆகியோ​ருக்கு இந்த விருது வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், இந்த ஆண்டு விரு​தாளரை தேர்வு செய்​வதற்​காக அமைக்​கப்​பட்ட குழு​வின் ஆலோ​சனை கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் அன்​புக்​குரிய மூத்த அரசி​யல் தலை​வரும், ‘மணிச்​சுடர்’ இதழின் ஆசிரியரும், சமூக நல்​லிணக்​கத்​துக்​காக வாழ்​நாளெல்​லாம் உழைத்து வருபவரு​மான கே.எம்​.​காதர் மொய்​தீனுக்கு விருதை வழங்க…

Read More

ஒமேகா -3 ஒரு ஆரோக்கியமான கொழுப்பு அமிலமாகும், இது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் மேம்பட்ட மூளை செயல்பாடு மற்றும் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் கற்றல், நினைவகம், அறிவாற்றல் நல்வாழ்வு மற்றும் மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று ஸ்டுடிஷேவ் காட்டுகிறது. ஒமேகா -3, குறிப்பாக ஈபிஏ (ஈகோசாபென்டெனோயிக் அமிலம்) மற்றும் டிஹெச்ஏ (டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம்) ஆகியவை மூளை உயிரணு சவ்வுகளை உருவாக்கி பராமரிக்கும் அத்தியாவசிய கொழுப்புகள். கொழுப்பு மீன் (சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி), சியா விதைகள், ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள் மற்றும் பாசி எண்ணெய் (தாவர அடிப்படையிலான டிஹெச்ஏ சப்ளிமெண்ட்ஸ்) போன்ற உணவுகள் ஒமேகா -3 இன் நல்ல ஆதாரங்கள்.

Read More

சென்னை: ‘ஊட்​டச்​சத்து வேளாண் இயக்​கம்’ எனும் திட்​டத்தை தொடங்​கி​ வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ரூ.103.38 கோடி​யில் 52 வேளாண் கட்​டிடங்​களை​யும் திறந்து வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தலை​மைச்​செயல​கத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், வேளாண்​துறை சார்​பில் ‘ஊட்​டச்​சத்து வேளாண்மை இயக்​கம்’ என்ற புதிய திட்​டத்தை முதல்​வர் ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார். ஊட்​டச்​சத்து வேளாண்மை இயக்​கத்​தின் கீழ், மக்​களின் அன்​றாட காய்​கறித் தேவை​களை நிறைவு செய்​ய​வும், வீட்​டுத் தோட்​டங்​களில் காய்​கறிகள் வளர்ப்​பதை ஊக்​குவிக்​கும் வித​மாக​வும் தக்​காளி, கத்​தரி, வெண்​டை, மிள​காய், கொத்​தவரை, கீரை வகைகள் போன்ற காய்​கறி விதைகள் அடங்​கிய 15 லட்​சம் காய்​கறி விதைத் தொகுப்​பு​களை​யும், விரை​வில் பலனளிக்​கும் பப்​பாளி, கொய்​யா, எலுமிச்சை ஆகிய பழச்​செடிகள் அடங்​கிய 9 லட்​சம் பழச்​செடி தொகுப்​பு​கள் மற்​றும் புரதச்​சத்து நிறைந்த மரத்​து​வரை, காராமணி உள்​ளிட்ட பயறு வகைகள் அடங்​கிய ஒரு லட்​சம் பயறு வகை விதைத் தொகுப்​பு​கள் ஆகிய​வற்​றை​யும் விவ​சா​யிகளுக்கு வழங்​கும்…

Read More

சென்னை: ​பாமக​வில் இருந்து அக்​கட்சி எம்​எல்ஏ இரா.அருள் நீக்​கப்​பட்​டதை தொடர்ந்து அவர் வகிக்​கும் கொறடா பதவி​யில் இருந்து மாற்​றக்​கோரி பேரவை தலை​வரிடம் அன்​புமணி சார்​பில் கடிதம் வழங்​கப்​பட்​டது. பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக பாமக சேலம் மாநகர் மாவட்ட செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து சேலம் மேற்கு தொகுதி எம்​எல்ஏ இரா.அருளை கட்​சி​யின் இணை பொதுச்​செய​லா​ள​ராக ராம​தாஸ் நியமித்​தார். இதையடுத்​து, மாவட்ட செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து இரா.அருளை நீக்​கிய அன்​புமணி, அந்த பொறுப்​பில் க.சர​வணன் என்​பவரை நியமித்​தார். தொடர்ந்​து, இரா.அருளை கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினர் உள்​ளிட்ட அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் நீக்​கி​னார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் பாமக கட்சி தலை​வ​ராக ஜி.கே.மணி​யும், கட்​சி​யின் கொற​டா​வாக இரா.அருளும் உள்​ளனர். இந்​நிலை​யில், நேற்று பாமக உறுப்​பினர்​கள் ச.சிவக்​கு​மார், எஸ்​.பி.வெங்​கடேசன், எஸ்​.ச​தாசிவம் மற்​றும் வழக்​கறிஞர் க.பாலு ஆகியோர் தலைமை செயல​கம் வந்து பேரவை தலை​வர்…

Read More

சென்னை: ​கொள்கை எதிரி, பிளவு​வாத சக்​தி​களான திமுக, பாஜக​வுடன் என்​றைக்​கும் கூட்​டணி இல்லை என தவெக தலை​வர் விஜய் தெரி​வித்​தார். தமிழக வெற்​றிக் கழகத்​தின் செயற்​குழு கூட்​டம் நேற்று சென்​னை​யில் நடை​பெற்​றது. கூட்​டத்​துக்கு கட்​சி​யின் தலை​வர் விஜய் தலைமை தாங்​கி​னார். பொதுச் செய​லா​ளர் ஆனந்த், துணை பொதுச் செய​லா​ளர் சிடிஆர் நிர்​மல் குமார், தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, கொள்கை பரப்பு பொதுச்​செய​லா​ளர் அருண்​ராஜ், இணை செய​லா​ளர் தாஹி​ரா, உறுப்​பினர் சேர்க்கை அணி மாநில செய​லா​ளர் விஜயலட்​சுமி உட்பட கட்சி மாநில நிர்​வாகி​கள், மாவட்ட செய​லா​ளர்​கள், மாநில செயற்​குழு உறுப்​பினர்​கள், சிறப்​புக் குழு உறுப்​பினர்​கள் பங்​கேற்​றனர். இதில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்​தில் வரும் ஆகஸ்ட் மாதம் 2-வது மாநில மாநாட்​டை​யும், செப்​டம்​பர் முதல் டிசம்​பர் மாதம் வரை தமிழகம் முழு​வதும் விஜய் சுற்​றுப்​பயண​மும் 2026 பேர​வைத் தேர்​தலில் கூட்​டணி தொடர்​பான அனைத்து முடிவு​களை​யும் எடுக்​கும் முழு அதி​காரம் கட்சி…

Read More