அவர்கள் “லேண்ட் ஸ்நோர்கெலிங்” என்று யாராவது சொல்வதை நீங்கள் கேட்டால், உங்கள் முதல் எண்ணம், “அது எந்த அர்த்தமும் இல்லை” என்று இருக்கலாம். ஸ்நோர்கெலிங் பொதுவாக தண்ணீரை உள்ளடக்கியது, இல்லையா? துடுப்புகள், கண்ணாடிகள், பவளப்பாறைகள்? எனவே, நிலத்தில் அது எப்படி நடக்கும்? அந்த குழப்பம் அழகின் ஒரு பகுதியாகும். ஏனெனில் நில ஸ்நோர்கெலிங் நீச்சல் அல்லது டைவிங் பற்றியது அல்ல. இது மெதுவாகச் செல்வது மற்றும் பெரும்பாலான மக்கள் இரண்டாவது பார்வையின்றி கடந்த ஒரு உலகத்தை உற்று நோக்குவது பற்றியது.அது உண்மையில் என்ன?லேண்ட் ஸ்நோர்கெலிங் என்பது முதலில் வேடிக்கையானதாகத் தோன்றும் ஒரு சொல், ஆனால் இது விந்தையான அழகான ஒன்றை விவரிக்கிறது: ஒரு நிலப்பரப்பு வழியாக மெதுவாக நகரும், வழக்கமாக குறைந்த அல்லது படுத்துக் கொண்டாலும், இயற்கையான உலகின் மிகச்சிறிய விவரங்களை எறும்புகள் புல் கத்திகள், ஒரு மரத்தின் வேரில் பாசியின் நிறம் அல்லது ஒரு பாறையில் லிச்சனின் அமைப்பு ஆகியவற்றைக்…
Author: admin
இம்பால்: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக, இனக் குழுக்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மணிப்பூரில் தெங்னவ்பால், காங்போக்பி, சண்டேல், சுராசந்த்பூர் ஆகிய 4 மலைப்புற மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் போலீஸார் ஒருங்கிணைந்த சோதனை மேற்கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், 3 கையெறி குண்டு லாஞ்சர்களை கைப்பற்றினர். மேலும் 30 வெடிகுண்டுகள், 10 கையெறி குண்டுகள் உள்ளிட்ட பெருமளவு வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஸாக்ரெப்: சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி குரோஷியாவின் ஸாக்ரெப் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ரேபிட் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட் செஸ் டூரில் இந்த தொடரும் ஒன்றாக உள்ளது. இதன் ரேபிட் பார்மெட் முதல் சுற்று ஆட்டத்தில் குகேஷ் தோல்வியை தழுவினார். அதன் பின்னர் நடைபெற்ற 5 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 6-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தினார். தொடர்ந்து 7-வது சுற்றில் அனிஷ் கிரி, 8-வது சுற்றில் இவான் சரிச் உடன் விளையாடினார். அந்த இரண்டு சுற்றும் டிராவில் முடிந்தது. இதன் மூலம் ரேபிட் பிரிவில் 14 புள்ளிகளுடன் பட்டம் வென்றார் குகேஷ். ரேபிட் பிரிவில் 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார் போலந்து வீரர் துடா. 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார் கார்ல்சன். 9…
நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் தபு, சம்யுக்தா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு கதைப் பிடித்திருந்தால் நடிக்கச் சம்மதிக்கிறேன். ஓர் இயக்குநரின் கடந்த கால தோல்விகளை வைத்து, அந்த இயக்குநரை எடை போடுவதில்லை. அப்படி ஏன் மதிப்பிட வேண்டும்? புரி ஜெகன்நாத் இயக்கும் படம் முழுவதும் ஆக்ஷனை கொண்டது. இதற்கு முன் இப்படியொரு படத்தில் நான் நடித்ததில்லை இதில், நடிகை தபுவுடன் முதன்முறையாக நடிக்கிறேன். அவருக்கு முக்கியமான வேடம். திறமையான ஒரு நடிகருடன் இணைந்து நடிப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது. நான் நடித்த ‘மகாராஜா’ படத்தின் வெற்றி பற்றி கேட்கிறீர்கள். இதுவரை நடித்ததிலேயே இந்தப் படத்தில்தான் எனக்குக் கடினமான கதாபாத்திரம். அழுத்தமான கதைகளைக் கொண்ட படங்களில் நடிப்பதுதான் எனது பலம். அதற்காக முழுமையான பொழுதுபோக்கு…
சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் காசிமேடு காசிமாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த ராஜா(61), அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி(60), சேகர், ஜெகன், விஜயமூர்த்தி, சுதாகர் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 30-ம் தேதி சென்றனர். சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 58 கடல் மைல் தொலைவில் கடந்த 1-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்று வேகமாக வீசியுள்ளது. கடலடி நீரோட்டமும் வேகமாக இருந்துள்ளது. இதனால், படகில் இருந்து வலையோடு கடலுக்குள் வீசப்பட்டிருந்த கயிறு பாறையில் சிக்கி உள்ளது. ஒரு கட்டத்தில் நீரோட்டம் மிகவும் வேகமாக இருந்ததால் படகு பாறை மீது மோதி கவிழ்ந்தது. உடனே படகில் இருந்த 6 பேரும் கடலில் குதித்தனர். பின்னர், மிதவை மூலம் கரையை நோக்கி புறப்பட்டனர். ஆனால் ராஜாவும், மாசிலாமணியும் கடலில் நீந்த முடியாமல், அங்கேயே சிக்கிக் கொண்டனர். மீதி 4 பேரும் கடலில் நீந்தி, ஆந்திர மாநிலம்…
சென்னை: மத்திய அரசின் இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இஎல்ஐ இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ.99,446 கோடி நிதி ஒதுக்கியது. முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் இருதரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டமானது 2 பகுதிகளாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி முதல் பகுதியில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதல் முறையாக பணியில் இணைந்து வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியர்கள் அங்கு ஓர் ஆண்டு வேலை செய்யும் பட்சத்தில், அவருக்கு 2 தவணையாக ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் முதல் தவணையாக 6…
Last Updated : 05 Jul, 2025 06:40 AM Published : 05 Jul 2025 06:40 AM Last Updated : 05 Jul 2025 06:40 AM பாட்னா: காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தீவிர சிறப்பு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது, பிஹார் வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பதற்கும் அவர்களின் அடிப்படை வாக்களிக்கும் உரிமையை மறுப்பதற்கும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகும். இதனால், 2 கோடி வாக்காளர்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகி உள்ளது. அதிகாரம் என்பது நிலையற்றது. அது நாளை யார் கையில் வேண்டுமானாலும் வரலாம். நீங்கள் ஏன் அவர்களுக்கு (பாஜக) இவ்வளவு அடிமையாக இருக்கிறீர்கள்?. நீங்கள் (தேர்தல் ஆணையம்) அரசியலமைப்பை பின்பற்றினால் நல்லது. இவ்வாறு பவன் கேரா கூறினார். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!
சிவகங்கை: “ஜூன் 28 மால 6.30 மணியளவில் அஜித்குமாரை ஆட்டோவில் போலீஸார் கொண்டு வந்தனர். நான் பரிசோதித்தபோது அஜித்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது. அதை நான் போலீஸாரிடம் தெரிவித்தேன். உடலை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கச் சொன்னேன். ஆனால், உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் உடலை எடுத்துச் சென்றனர்.” என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் கொடூரமாக தாக்கி ஜூன் 28-ம் தேதி கொலை செய்தனர். இதையடுத்து அதை மறைக்க நினைத்த போலீஸார், தாங்கள் விசாரித்து கொண்டிருந்தபோது, அஜித்குமார் தப்பியோட முயன்று கீழே விழுந்தார். அதில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, ஆட்டோவில் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சிவகங்கை தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் அங்கிருந்தும் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றோம். அங்கு அஜித்குமார் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததாக…
எலுமிச்சை, அதன் வைட்டமின் சி மற்றும் இயற்கை அமிலங்களுடன், சருமத்தை பிரகாசமாக்கும், நிறமி மங்கச் செய்யலாம் மற்றும் இறந்த செல்களை வெளியேற்றும். எலுமிச்சை சாற்றை தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்யுங்கள், 5-10 நிமிடங்களுக்கு விண்ணப்பிக்கவும், பின்னர் ஈரப்பதமாக்கவும். உணர்திறன் வாய்ந்த தோல் அல்லது திறந்த காயங்களைத் தவிர்த்து, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இதைப் பயன்படுத்தவும். அதை தயிர் அல்லது மஞ்சள் உடன் இணைப்பது இயற்கையான பிரகாசத்திற்கு அதன் விளைவுகளை மேம்படுத்தும். சரி, ஒரு விஷயத்தை நேராகப் பெறுவோம், மக்கள் உங்கள் முகத்தை எலுமிச்சையுடன் “ப்ளீச்” என்று கூறும்போது, அவர்கள் பயங்கரமான, முடி-ஒளிரும் வகையை அர்த்தப்படுத்துவதில்லை. இது அந்த இருண்ட இடங்களை ஒளிரச் செய்வது, உங்கள் தோல் தொனியைக் கூட வெளியேற்றுவது, மற்றும் உங்கள் சமையலறையிலிருந்து பொருட்களைப் பயன்படுத்தி திவா போல ஒளிரும். ஆமாம், எலுமிச்சை உதவலாம். ஆனால், அதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே…
பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் ரஹ்மானை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கேரளாவில் உள்ள கண்ணூர் விமான நிலையத்தில் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரவீன் நெட்டூரு (28) கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து, 14 பேரை கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகள் 6 பேர் தலைமறைவாக இருந்ததால் அவர்களை தேடி வந்தனர். கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள விமான நிலையத்தில் தலைமறைவாக இருந்த அப்துல் ரஹ்மானை கைது செய்தனர். 14 பேரிடம் விசாரணை: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, ”பிரவீன் நெட்டூரு…
