கோவை: பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோராக ஈஷா உயர்த்தியுள்ளது என்றும், இது வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும் முன்னெடுப்பு என்றும் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: ஈஷா அறக்கட்டளை பல ஆண்டுகளாக அருகிலுள்ள பழங்குடி மற்றும் கிராமப்புற பகுதியில் உள்ள மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, இப்பகுதி மாணவர்கள் உயர் கல்வியை தொடர கல்வி உதவித் தொகைகள், அனைத்து மக்களுக்கும் 24 மணி நேரமும் சுகாதார சேவைகள், கழிவு மேலாண்மை, ஊட்டச்சத்து தொகுப்புகள் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு திறன் மேம்பாட்டு பட்டறைகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஈஷா செய்து வருகிறது. இந்நிலையில், கோவை ஈஷா யோக மையதுக்கு நேற்று மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் ஜூவல் ஓரம் வருகை புரிந்தார். அப்போது,…
Author: admin
வாதங்கள் எல்லா இடங்களிலும் காண்பிக்கப்படுகின்றன – வேலையில், வீட்டில், சாதாரண உரையாடல்களில் கூட. நேர்மையாக இருக்கட்டும், அவை நாங்கள் திட்டமிடும் வழியில் அரிதாகவே செல்கின்றன. நீங்கள் உண்மைகள் மற்றும் தர்க்கத்துடன் ஆயுதம் ஏந்தியிருக்கலாம், ஆனால் இன்னும் கேள்விப்படாத அல்லது விரக்தியடைந்ததாக உணர்கிறீர்கள். ஏனென்றால், பெரும்பாலான வாதங்களில், நீங்கள் சொல்வதை விட அதிகமாக இல்லாவிட்டால், நீங்கள் எதையாவது சொல்வது எவ்வளவு முக்கியமானது.நாம் உணர்ந்ததை விட மக்கள் தொனி, உணர்ச்சி மற்றும் வடிவமைப்பதற்கு பதிலளிப்பார்கள். ஆகவே, உங்கள் கருத்தை கடினமாக்குவதற்கு பதிலாக, உங்களுக்கு மேலதிக கையை வழங்கும்போது விஷயங்களை அமைதியாக வைத்திருக்கும் சில உளவியல் அடிப்படையிலான நுட்பங்களைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.
பாட்னா: பிஹார் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா, நேற்று இரவு பாட்னாவில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். பாட்னாவில் பனாச் ஹோட்டலுக்கு அருகில் உள்ள ‘ட்வின் டவர்’ சொசைட்டியில் கோபால் கெம்கா வசித்து வந்தார். அவர் நேற்று இரவு தனது வீட்டுக்குச் செல்வதற்காக காரில் இருந்து இறங்கியபோது, மர்ம நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பேசிய பாட்னா நகர மத்திய காவல் கண்காணிப்பாளர் தீக்ஷா, “ஜூலை 4-ம் தேதி இரவு 11 மணியளவில், காந்தி மைதான காவல்நிலையப் பகுதியில் தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. குற்றம் நடந்த இடம் இப்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். சம்பவ இடத்திலிருந்து ஒரு தோட்டா மீட்கப்பட்டுள்ளது” என்றார். கோபால் கெம்கா கொலை வழக்கு தொடர்பாக பிஹார் காவல்துறை சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது…
சென்னை: தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை வரும் ஜூலை 15-ம் தேதி சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இம்முகாம் மூலம் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தில், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதல்வர் அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை, வரும் ஜூலை 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும்…
பெண்களுக்கு குடல் ஆரோக்கியம் பெரும்பாலும் அவர்களின் இரண்டாவது மூளை என்று அழைக்கப்படுகிறது, மேலும் ஒரு காரணத்திற்காக உங்களை ஆச்சரியப்படுத்தும். உணவு ஜீரணிக்க மட்டும் இல்லை; இது மனநிலை, ஹார்மோன்கள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மன அழுத்த பதிலை ஒழுங்குபடுத்துகிறது, அதனால்தான் இது இரண்டாவது மூளை என்று அழைக்கப்படுகிறது, நம் உடல்கள் அதிக ஹார்மோன் மாறும் மற்றும் குடல் ஏற்றத்தாழ்வுகளுக்கு உணர்திறன் கொண்டவை.
பெங்களூரு: வலிமையான நிலையில் இருந்து அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும், காலக்கெடுவுக்கு கட்டுப்பட்டு அல்ல என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஏற்கெனவே செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “இரு தரப்பினருக்கும் பயன் அளிக்கக் கூடியதாக இருந்தால் மட்டுமே, அது சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தமாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தமாகவும் இருக்கும். எங்களின் தேச நலன்தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதை மனதில் கொண்டே எங்களின் முடிவு இருக்கும். வளர்ந்த நாடுகளுடன் அத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது” என்று கூறியிருந்தார். பியூஷ் கோயலின் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பியூஷ் கோயல் எப்படி வேண்டுமானாலும் மார்தட்டிக் கொள்ளட்டும். நான் சொல்வதை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். ட்ரம்ப்பின் வரிவிதிப்பு காலக்கெடுவுக்கு மோடி…
சென்னை: “கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் தவெக மிக உறுதியாக இருக்கிறது. கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரானதாகத் தான் இருக்கும்.” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார். சென்னையை அடுத்த பனையூரில் தவெக செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய்தான் இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டணி குறித்த முடிவெடுக்கும் அதிகாரத்தை விஜய்க்கு வழங்குவது என்றும் முடிவு எட்டப்பட்டது. மேலும், தவெகவின் மாநில மாநாட்டை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவது, பேரவைத் தேர்தலையொட்டி விஜய் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று முடிவு செய்யப்பட்டது. இதுதவிர, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டத்துக்கு தவெக துணை நிற்கும், ஜாக்டோ -…
வாஷிங்டன்: வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தினார். இதற்கு அனைத்து நாடுகளும் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதையடுத்து, பல்வேறு விதமான வரி விகிதங்களை மாற்றி 90 நாட்களுக்கு தற்காலிக அடிப்படை வரியாக 10%-ஐ நிர்ணயித்து ட்ரம்ப் உத்தரவிட்டார். இந்த காலக்கெடு முடிவடைவதற்குள் அமெரிக்கா உடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பல்வேறு நாடுகளும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தின. பிரிட்டன் உடனான பேச்சுவார்த்தை மட்டுமே முடிவுக்கு வந்தது. பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி உயர்வு மட்டும் விதிக்கப்படும் என்ற ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்பட பல நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 90 நாட்கள் காலக்கெடு ஜூலை…
தர்ஷன் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு. ‘கனா’ மற்றும் ‘தும்பா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடித்துள்ளார் தர்ஷன். அடுத்து ‘ஹவுஸ் மேட்ஸ்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஃபேன்டஸி ஹாரர் காமெடி பாணியில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள். இப்படத்தின் உரிமையை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. தற்போது ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இதில் காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி , தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் உள்ளிட்ட பலர் தர்ஷனுடன் நடித்துள்ளார்கள். இதனை புதுமுக இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர். ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தினை விஜய பிரகாஷ் மற்றும் சக்திவேல் இணைந்து தயாரித்துள்ளார்கள். இதன் ஒளிப்பதிவாளராக சதீஷ், இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஓர் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் நடக்கும்…
என்னதான் காசு கொடுத்து கூட்டம் கூட்டினாலும் வந்த கூட்டத்தை தக்கவைக்க குத்துப் பாட்டுக்கு நடனமாட வைப்பது இப்போது பெரும்பாலான அரசியல் கட்சிகளில் ஃபேஷனாகி விட்டது. கூட்டத்தை தக்கவைக்கத்தான் அப்படி என்றால் சொந்தக் கட்சியினரை குஷிப்படுத்தவும் ஆபாச நடனம் ஆடவைத்து வலைதளங்களில் வறுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆற்காடு அதிமுக-வினர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சிக்கு அண்மையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆற்காடு நகரச் செயலாளர் ஜிம் எம்.சங்கர் தடபுடலாகச் செய்திருந்தார். காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர்கள் அங்கு வருவதற்கு முன்னதாக அரங்கத்தில் கூடிய அதிமுக-வினருக்கு அலுப்புத் தட்டாமல் இருப்பதற்காக பெங்களூருவைச் சேர்ந்த கலைக் குழுவினரின் ‘ஆடல் பாடல்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தக் குழுவினர் ஆரம்பத்தில்…
