Author: admin

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் கோயி​லில் 16 ஆண்​டு​களுக்கு பிறகு நாளை (ஜூலை 7) மகா கும்​பாபிஷேகம் நடக்​கிறது. அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் மூலவர் சுப்பிரமணியர், வள்ளி மற்றும் தெய்வானை அம்மனுக்கு, அறநிலை​யத் துறை சார்​பில் ரூ.100 கோடி​யில் திருப்​பணி​கள் நிறைவு பெற்​றுள்​ளன. இதையடுத்​து, கடந்த 1-ம் தேதி கும்​பாபிஷேக விழா யாக​சாலை பூஜை​யுடன் தொடங்​கியது. தந்​திரி சுப்​பிரமணி​யரு தலை​மை​யில் கேரள முறைப்​படி யாகங்​கள் நடை​பெறுகின்​றன. அதே​போல, மூலவர் சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ராஜகோபுரத்​தின் கீழ் பிரம்​மாண்ட யாக​சாலை​யில் 71 ஹோம குண்​டங்​கள் அமைத்​து, 700 கும்​பங்​களு​டன் பூஜைகளும், 5 ஹோம குண்​டங்​களில் வேள்வி​களும் நடை​பெற்று வரு​கின்​றன. இன்று காலை 10-ம் கால யாக​சாலை பூஜை நடக்​கிறது. நாளை காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்​குள் ராஜகோபுர கலசங்​கள், மூல​வர், வள்​ளி, தெய்​வானை விமான கலசங்​களுக்கு தந்​திரி மற்​றும் போத்​தி​களும், சுவாமி சண்​முகர்…

Read More

திருச்சி: விடு​தலை சிறுத்தைகள் கட்சித் தலை​வர் திருமாவளவன் திருச்சியில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கச்​சத்​தீவை மீட்க வேண்​டும் என தொடர்ந்து வலி​யுறுத்​தி​யும், இந்​திய அரசு எந்த நிலைப்​பாட்​டை​யும் எடுக்​கவில்லை என்​பது வேதனைக்​குரியது. தமிழகத்​தில் சங்​பரி​வார் அரசி​யல் எந்த வகை​யிலும் நுழை​யாமல் தடுக்க, அனைத்து ஜனநாயக சக்​தி​களும் ஓரணி​யில் திரள வேண்​டும். நடிகர் விஜய்க்கு மத்​திய அரசு ஏற்​கெனவே ஒய் பிரிவு பாது​காப்பு வழங்​கி​யுள்​ளது. தாமத​மாக தற்​போது அதி​முக பொதுச்செய​லா​ளர் பழனி​சாமிக்கு மத்​தியஅரசு இசட் பிளஸ் பாது​காப்பு வழங்கி உள்​ளது. இதை நாங்​கள் வரவேற்​கிறோம். அந்​தக் கூட்​ட​ணி​யில் பெரிய கட்சி அதி​முக​தான். ஆனாலும், தேர்​தலுக்​குப் பின்​பு​தான் முதல்​வரை தேர்ந்​தெடுப்​போம் என்று சொல்​லக்​கூடிய நிலை இருக்​கிறது. இது தொடர்​பாக பழனி​சாமி​தான்விளக்​கம் அளிக்க வேண்​டும். திமுக, பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய தவெக தலை​வர் விஜய், அதி​முக பற்றி எது​வும் கூற​வில்​லை. எனில், அவர் அதி​முகவை தோழமைக் கட்​சி​யாகப் பார்க்​கிறா​ரா? இந்​தக் கேள்விக்கு விஜய்…

Read More

சென்னை: மூத்த தமிழறிஞர் வா.மு.சேது​ராமன் கால​மா​னார். அவருக்கு வயது 91. அவரது உடலுக்கு முதல்​வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர். காவல் துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. மூத்த தமிழறிஞர் பெருங்​கவிக்கோ வா.​மு.சேது​ராமன்​(91) உடல்​நலக்​குறைவு காரண​மாக சென்​னை​யில் நேற்று முன்​தினம் கால​மா​னார். ராம​நாத​புரம் மாவட்​டம், முதுகுளத்​தூர் அருகே ஆண்​ட​நாயகபுரத்​தில் 1935-ம் ஆண்டு பிறந்த சேது​ராமன், சென்னை பல்​கலைக்​கழகத்​தில் முனை​வர் பட்​டம் பெற்​றார். விரு​கம்​பாக்​கம் சின்​மயா நகரில் குடும்​பத்​துடன் வசித்து வந்​தார். அவருக்கு மகன்​கள் திரு​வள்ளுவர், க​வியரசன், ஆண்​டவர், தமிழ் மணி​கண்​டன், மகள் பூங்​கொடி உள்​ளனர். நெஞ்​சத்​தோட்​டம், ஐயப்​பன் பாமாலை, தமிழ் முழக்​கம், தாய்​மண், சேது காப்​பி​யம் உட்பட ஏராள​மான நூல்​களை எழு​தி​யுள்​ளார். ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட கவிதைகளை பதிப்​பித்​துள்​ளார். பன்​னாட்டு தமிழுறவு மன்​றத்​தின் நிறு​வன​ராக இருந்த இவருக்​கு, பெருங்​கவிக்​கோ, செந்​தமிழ்க் கவிமணி போன்ற பட்​டங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. திரு​வள்​ளுவர் விருது, கலை​மாமணி விருது, சி.​பா.ஆ​தித்​த​னார் மூத்த தமிழறிஞர் விருது உள்​ளிட்ட…

Read More

தர்மசாலா: புத்த மதத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை நான் உயிர் வாழ வேண்டுமென விரும்புகிறேன் என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார். திபெத்தின் புத்த மத தலைவரான தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாள் நாளை( ஜூலை 6) கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தர்மசாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தலாய் லாமா, “ அவலோகிதேஸ்வராவின் ஆசிகளை நான் பெற்றதாகவே உணர்கிறேன். இதுவரை நான் எனது பணிகளை சிறப்பாக செய்துள்ளேன். நாம் மேலும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. குழந்தைப் பருவம் முதலே எனக்கு அவலோகிதேஸ்வராவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. பவுத்தத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை நான் உயிர் வாழ வேண்டுமென விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். தலாய் லாமாவின் அடுத்த வாரிசு குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில், அவரின்…

Read More

பர்​மிங்​காம்: 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து அணிக்கு 536 ரன்​களை இலக்​காக நிர்​ண​யித்​தது இந்​திய அணி. கேப்​டன் ஷுப்​மன் கில் 2-வது இன்​னிங்​ஸில் 162 பந்​துகளில் 161 ரன்​கள் விளாசி அசத்​தி​னார். பர்​மிங்​காமில் உள்ள எட்​ஜ்​பாஸ்​டன் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 587 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஷுப்​மன் கில் 269 ரன்​கள் விளாசி​னார். இதையடுத்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 3-வது நாள் ஆட்​டத்​தில் 89.3 ஓவர்​களில் 407 ரன்​கள் எடுத்து முதல் இன்​னிங்​ஸில் ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜேமி ஸ்மித் 184, ஹாரி புரூக் 158 ரன்​கள் விளாசினர். இந்​திய அணி தரப்​பில் முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 180 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 13 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 64…

Read More

பியூனஸ் அயர்ஸ்: அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது அர்​ஜென்​டி​னா​வில் லித்​தி​யம் சுரங்​கங்​களை அமைப்​பது குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அர்​ஜென்​டினா தலைநகர் பியூனஸ் அயர்​ஸுக்கு சென்​றார். விமான நிலை​யத்​தில் ஏராள​மான இந்​தி​யர்​கள், அவரை உற்​சாக​மாக வரவேற்​றனர். இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பியூனஸ் அயர்​ஸில் இந்​திய சமூகத்​தினரின் அன்​பான வரவேற்​பால் நெகிழ்ச்சி அடைந்​தேன். இந்​தி​யா​வில் இருந்து ஆயிரக்​கணக்​கான கி.மீ. தொலை​வில் வாழ்ந்​தா​லும் இந்​திய உணர்வு பிர​காச​மாக இருக்​கிறது. கலாச்​சார தொடர்​புக்கு தொலைவு ஒரு தடையல்ல. அர்​ஜென்​டினா உடனான உறவு​கள் மேம்​படுத்​தப்​படும். அதிபர் சேவியர் மிலேய் உடன் விரி​வான பேச்​சுவ​ார்த்தை நடத்த உள்​ளேன்” என்று தெரி​வித்​துள்​ளார். கடந்த 2018-ம் ஆண்​டில் அர்​ஜென்​டி​னா​வில் ஜி20 உச்சி மாநாடு நடை​பெற்​றது. அப்​போது அந்த நாட்டு அதிபர் மிலேயை பிரதமர் நரேந்​திர மோடி முதல்​முறை​யாக சந்​தித்​துப் பேசி​னார். அதன்பிறகு இரு…

Read More

சென்னை: அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை மக்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமை சிதம்​பரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்​கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விடு​பட்​ட​வர்​கள் இதில் விண்​ணப்​பிக்​கு​மாறு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: மக்​களின் குறை​களை நேரடி​யாக கேட்​டறி​யும் திட்​டம் தொடங்​கப்​படும் என்று சட்​டப்​பேரவை கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார். அதன்​படி, தமிழகத்​தில் உள்ள அனைத்து நகர்ப்​புற, ஊரக பகு​தி​களில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டம் தொடங்​கப்​படு​கிறது. தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை அவர்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கு​வது​தான் இதன் நோக்​கம். இத்​திட்​டத்​தின்​கீழ் நகர்ப்​புறங்​களில் 3,768 முகாம்​கள், ஊரகப் பகு​தி​களில் 6,232 முகாம்​கள் என 10 ஆயிரம் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​படும். இதில் முதல் முகாமை, கடலூர் மாவட்​டம் சிதம்​பரம் நகராட்​சி​யில்…

Read More

வாஷிங்டன்: வர்த்தக வரி விதிப்பு தொடர்​பாக 12 நாடு​களுக்​கான உத்​தர​வில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்​திட்​டுள்​ளார். எந்​தெந்த நாடு​கள் என்ற விவரம் நாளை வெளி​யிடப்​படும் என்​றும் தெரி​வித்​துள்​ளார். இந்​தி​யா உட​னான ஒப்​பந்​தம் கையெழுத்​தா​காத நிலை​யில், கூடு​தல் வரி விதிக்​கப்​பட்​டால் பதில் வரி விதிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. அமெரிக்க அதிப​ராக, 2-வது முறை​யாக கடந்த ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பொறுப்​பேற்​றார். அமெரிக்கா​வுக்கு இந்​தியா உட்பட உலக நாடு​கள் தங்​கள் நாட்டு பொருட்​களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்​ப​தாக தெரி​வித்​தார். இதற்கு பதிலடி​யாக பரஸ்பர வரி விதிக்​கப்​படும் என அறி​வித்த அவர், கடந்த ஏப்​ரல் 2-ம் தேதி அதற்​கான பட்​டியலை​யும் வெளி​யிட்​டார். இதில் இந்​திய பொருட்​களுக்கு 26% வரி விதிக்​கப்​படும் என கூறப்​பட்​டிருந்​தது. 90 நாட்கள் அவகாசம்: எனினும், இந்​தியா உள்​ளிட்ட சில நாடு​கள் பேச்​சு​வார்த்தை நடத்த முன்​வந்​தன. இதையடுத்​து, இடைக்​கால ஒப்​பந்​தம் ஏற்​படுத்​திக் கொள்ள ஏது​வாக பரஸ்பர வரி…

Read More

புதுடெல்லி: மத்​திய பிரதேசத்​தின் திகம்​கர் மாவட்​டம், சிப்ரி கிராமத்தை சேர்ந்​தவர் ரவிசங்​கர். ஒன்​பது வயதில் வீட்​டில் இருந்து வெளி​யேறிய அவர், மத்​திய பிரதேசத்​தின் பிண்டு மாவட்​டம், ராவத்​பு​ரா​வில் உள்ள அனு​மன் கோயி​லில் தங்கி ஆன்​மிக பிரச்​சா​ரம் செய்​தார். பின்​னர் ராவத்​புரா கிராமத்​தில் 62 ஏக்​கர் பரப்​பள​வில் பிரம்​மாண்ட சிவன் கோயிலை கட்​டி​னார். தற்​போது அவர் ராவத்​புரா சிவன் கோயி​லின் மடா​திப​தி​யாக உள்​ளார். மேலும் மத்​திய பிரதேசம், சத்​தீஸ்​கர் மாநிலங்​களில் மருத்​து​வம், பொறி​யியல், நர்​சிங், பார்​மசி, ஐடிஐ கல்வி நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். சத்​தீஸ்​கர் தலைநகர் ராய்ப்​பூரில் ரவி சங்​கரின் அறக்​கட்​டளை சார்​பில் மருத்​து​வக் கல்​லூரி நடத்​தப்​படு​கிறது. இந்த கல்​லூரி​யில் அண்​மை​யில் மத்​திய அரசின் தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) மூத்த அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். அப்​போது அந்த மருத்​து​வக் கல்​லூரியின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கு சாதக​மாக அதி​காரி​கள் அறிக்கை சமர்ப்​பித்​தனர். இதற்​காக என்​எம்சி அதி​காரி​களுக்கு பெரும் தொகை லஞ்​ச​மாக வழங்​கப்​பட்டுள்ளது. இதுதொடர்​பாக கடந்த…

Read More

சென்னை: என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்எல்சி விவகாரத்தில் இழப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வீதம் 2022 லோக் ஆயுக்தா (மக்கள் நீதிமன்றம்) வாயிலாக சென்று மக்களுக்காக பெற்றுத் தரப்பட்டதை அனைவரும் அறிவர். ஆனால் அதன் பின்னணியும் இன்னும் தீராத வேதனையும் ஏராளம். ஏராளம். இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்களின் ஐம்பதுக்கும் மேற்பட்ட பல ஏக்கர் நிலங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வீதம் கருணைத் தொகையாகவும் உயர்த்தி தரப்பட்டுள்ளதில் இருந்து இதை பார்க்கலாம். திமுக கவுன்சிலர் மற்றும், ஆளுங்கட்சியான திமுக நிர்வாகிகளின் குடும்பங்களை சார்ந்த நிலத்துக்குரியோர் மட்டுமே பலன் பெற்றவர்களாவர் என்பதே இங்கு உண்மைநிலை. அனைவருக்குமான பொது இழப்பீடை லோக் அதாலத் மூலமாக பெற்றிடாத வகையில் முதலில் தடுத்து நிறுத்தியவர்களும்…

Read More