புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்கி வருகிறது. தற்போது புதிதாக அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட 30 இடங்களை இணைக்கும் 17 நாள் சுற்றுலாத் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமாயண யாத்ரா என்ற பெயரில் ரயில்களை ஐஆர்சிடிசி இயக்கி வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சுற்றுலாத் திட்டம் 5-வது சிறப்பு ராமாயணா சிறப்பு ரயிலாகும். இந்த ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில் திட்டம் வரும் 25-ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். அயோத்தி, நந்திகிராம், சீதாமார்ஹி, ஜனக்பூர், புக்சார், வாராணசி, பிரயாக்ராஜ், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 30 புனித்தலங்களை இந்த சுற்றுலாத் திட்டம் இணைக்கிறது. இறுதியாக இந்த ரயில் டெல்லியை வந்தடையும். இதுகுறித்து ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறும்போது,…
Author: admin
சென்னை: பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழு கவனம் செலுத்தி வருவதால், அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூலை 8-ம் தேதி சென்னை வர இருப்பதாகவும், அப்போது கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவரது சென்னை வருகை ரத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித் ஷாவின் சென்னை வருகையின்போது, அதிமுக – பாஜக கூட்டணியை பலப்படுத்துவதற்காக, பாமகவையும் கூட்டணியில் இணைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் முடிவுக்கு வராததால், அமித் ஷாவின் பயணம் ரத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணிகளில் அமித் ஷா முழு கவனம் செலுத்தி வருவதால், கட்சியின் தேசிய தலைமை நியமனத்துக்குப் பிறகு அவர் தமிழகம் வருவார் என்று பாஜக…
சியா விதைகளை இரண்டு வாரங்களுக்கு உங்கள் உணவில் இணைப்பதன் அற்புதமான நன்மைகளை டாக்டர் ச ura ரப் சேத்தி எடுத்துக்காட்டுகிறார். இந்த சிறிய விதைகள், ஃபைபர், ஒமேகா -3 கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளன, நீரேற்றத்தை ஊக்குவிக்கின்றன, செரிமானத்தை மேம்படுத்துகின்றன, எடை நிர்வாகத்தை ஆதரிக்கின்றன. வழக்கமான நுகர்வு வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் ஆரோக்கியமான, அதிக கதிரியக்க சருமத்திற்கு வழிவகுக்கும். சியா விதைகள், பெறப்பட்டவை சால்வியா ஹிஸ்பானிகா ஆலை, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏற்றப்படுகின்றன. மிருதுவாக்கிகள் முதல் தயிர் வரை, அவை ஊறவைக்கும்போது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் விதிவிலக்கான ஜெல் நிலைத்தன்மைக்கு பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து அவற்றை சாப்பிடும்போது உண்மையில் என்ன நடக்கும்? முடிவுகள் அதிசயமாக இருக்கலாம்! ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டு-பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, சியா விதைகளை 14 நாட்களுக்கு உட்கொள்வதன்…
புதுடெல்லி: ‘‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சொத்துகளை விற்க நினைக்கவில்லை. அதை காப்பாற்றவே காங்கிரஸ் கட்சி முயற்சித்தது’’ என்று நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதாடினார். அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜேஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவகர்லால் நேரு தொடங்கினார். இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. நிதி நெருக்கடி ஏற்பட்டதால், இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்தது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோருக்கு மாற்றப் பட்டன. ஆனால், ரூ.2,000 கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு…
மூலவர்: ஏகபுஷ்ப பிரியநாதர் அம்பாள்: தாயுனும் நல்லாள் தல வரலாறு: பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் ‘தேவ அர்க்கவல்லி’ என்ற மலரைக் கொண்டு சிவனை பூஜித்தால், உலகிலுள்ள அனைத்து மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்பதை நாரதரும், தேவலோக ரிஷிகளும் அறிந்தனர். அதனால் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியைத் தேர்வு செய்து, அம்மலரைத் தேடச் செய்தனர். பிருகு மகரிஷியும் பூவுலகில் தவம் செய்து நிறைவாக திருத்தியமலை வந்தார். அந்த நேரத்தில் அங்கு அகத்தியரும், அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். பிருகு மகரிஷி, அகத்தியரிடம் தேவ அர்க்கவல்லி மலரின் ரகசியத்தைக் கேட்டறிந்தார். அப்போது மலையின் மீது இருந்த மரத்தருகே ஆயிரக்கணக்கான பறவைகள் காணப்பட்டன. மகா சிவராத்திரி தினத்தில் பறவைகள் ‘ஓம் நமசிவாய’ என்று கூக்குரலிட்டபடி பறந்தன. பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டுகொண்டதால், பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார். அகத்தியர் முதல் முறையாக பிருகு முனிவரையும்,…
திருப்புவனம்: திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு தேமுதிக சார்பில் திருப்புவனத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: அஜித்குமாரை போலீஸார் அடித்தே கொன்றுள்ளனர். அவரைக் கொன்றவர்களுக்கும் இதுபோன்ற தண்டனை கொடுக்க வேண்டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசாரிக்கவில்லை. எனவே, இவ்விவகாரத்தில் சிபிஐ உண்மையை வெளிக்கொணர வேண்டும். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் வரதட்சணைக் கொடுமையால் 4 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. போதை வழக்கில் 2 நடிகர்களை கைது செய்து, இந்த விவகாரத்தை திசை திருப்புகின்றனர். திமுக ஆட்சி என்றாலே அராஜகமும், ரவுடியிசமும்தான். அனைத்து காவல் நிலையங்களிலும், கைதிகளை விசாரிக்கும் இடங்களிலும் சிசிவிடி கேமராக்களை பொருத்த வேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் காவல் துறை தாங்காது. மது ஒழிந்தால்தான் தமிழகத்துக்கு விடிவுகாலம் பிறக்கும்.…
சென்னை: இந்திய ரயில்வேயில் விரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக, முன்பதிவு பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இதனால், கடைசி நேரத்தில் டிக்கெட் உறுதியாகாத சூழலில், பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதற்கு தீர்வு காண ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பாக, முன்பதிவு பட்டியலை வெளியிட வேண்டும் என்று ரயில்வே வாரியம் பரிந்துரை செய்தது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் விரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பு, முன்பதிவு பட்டியல் வெளியிடும் நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “அனைத்து ரயில்களுக்கும் 8 மணி நேரம் முன்பாகவே முன்பதிவு பட்டியல் வெளியிடப்படும். குறிப்பாக, அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கே முன்பதிவு…
திருவள்ளூர்: திருப்புவனம் வழக்கில் தனக்கு தொடர்புடையதாக அவதூறு பரப்பப்படுகிறது என பாஜக பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் நகை திருட்டு புகார் அளித்த நிகிதா தலைமறைவான நிலையில், அவர் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் இருப்பதுபோன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த புகைப்படத்தில் இருப்பது நிகிதா அல்ல; தான் தான் என்று தமிழக பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பொன்னேரி காவல்நிலையத்தில் அளித்த புகார் மனு: என் மண் என் மக்கள் யாத்திரையின்போது, அப்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, நிகிதா என அவதூறு பரப்புகின்றனர். இதனால் எனக்கும், தமிழக பாஜகவின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
தடிமனான, மஞ்சள் அல்லது நொறுங்கிய கால் விரல் நகங்கள் பூஞ்சை தொற்றுநோய்களில் பொதுவானவை. பெரும்பாலான மக்கள் இறுக்கமான காலணிகள் அல்லது லாக்கர் அறைகளை குறை கூறுகிறார்கள். ஆனால் கல்லீரல் ஆரோக்கியமும் இங்கே ஒரு பாத்திரத்தை வகிக்கக்கூடும்.சமரசம் செய்யப்பட்ட கல்லீரல் காலப்போக்கில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். நோயெதிர்ப்பு மறுமொழி குறையும் போது, பூஞ்சை உயிரினங்கள் குடியேறி செழித்து வளர எளிதானது, குறிப்பாக கால் விரல் நகங்களைச் சுற்றியுள்ள இருண்ட, ஈரமான சூழலில். உடல் அதன் இயற்கையான பாதுகாப்புகளில் சிலவற்றை இழக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும்.[This article is for informational purposes only and is not a substitute for professional medical advice, diagnosis, or treatment. The signs and symptoms described here can have multiple causes and may not necessarily indicate liver damage. It is important to consult a qualified…
சென்னை: பெண் போலீஸாரை பாதுகாப்பு பணியில்அதிகம் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியது குறித்து தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன் 30-ம் தேதி காணொளி வாயிலாக மாவட்ட, மாநகர அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், பெண் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. போக்சோ குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பிற குற்றங்களில் விரைவாக விசாரணை நடத்தி வழக்குகளை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டுதான் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. சட்ட விதிகளின்படி, போக்சோ வழக்குகளில், 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே, பாதுகாப்பு பணிக்கு பெண் போலீஸாரை நியமிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. பெண் குற்றவாளிகளை கைது செய்தல், குற்றம்சாட்டப்பட்ட பெண்கள் மற்றும் பெண் சாட்சிகளின் வாக்குமூலங்களை விசாரித்து…
