புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்த 10 ஆண்டுகள் பழைய டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பெட்ரோல் வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்க டெல்லி அரசு தடை விதித்தது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்த நிலையில், அரசு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், பழைய வாகனங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தங்களுடைய பழைய வாகனங்களை டெல்லிவாசிகள் அவசர அவசரமாக விற்பதில் மும்முரமாக உள்ளனர். ரூ.1 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கிய மெர்சிடஸ் உள்ளிட்ட சொகுசு வாகனங்கள் வந்த விலைக்கு விற்கும் நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் டெல்லி பழைய வாகன விற்பனையாளர்கள் வட்டாரம் கூறும்போது, ‘‘டெல்லி அரசின் ஸ்கிராப் பாலிசியால் 10, 15 ஆண்டுகளை நெருங்கும் பழைய டீசல், பெட்ரோல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தகவல் வெளியானதால், வாகன உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.…
Author: admin
சென்னை: தமிழுக்கும், தமிழகத்துக்கும் செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேடாவிட்டால், தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்தி திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமை போர், மாநில எல்லைகளைக் கடந்து தற்போது மராட்டியத்தில் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகப் பள்ளிகளில் 3-வது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி 2-ம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். இந்தி திணிப்புக்கு எதிராக சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது. உத்தரப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன, இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன,…
நாம் உற்பத்தித்திறனைக் காட்டிலும் உலகில் வாழ்கிறோம். எங்கோ வழியில், உடற்பயிற்சி அந்த சலசலப்பான கலாச்சார மனநிலையில் இருந்தது. இன்ஸ்டாகிராமில் மக்கள் தங்கள் இரண்டு மணி நேர ஜிம் அரைப்புகளைப் பற்றி தற்பெருமை காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம், அவர்களின் அதிகாலை 5 மணி மராத்தான்கள் அல்லது வாரத்தின் ஆறாவது பயிற்சி. ஒவ்வொரு நாளும் மணிநேரங்களுக்கு நீங்கள் வியர்வையில் நனைக்கவில்லை என்றால் நீங்கள் போதுமானதாக இல்லை என்று உணருவது எளிது. ஆனால் இடைநிறுத்துவோம். நீங்கள் உண்மையில் ஆரோக்கியமாக இருக்க எவ்வளவு உடற்பயிற்சி தேவை – மற்றும் ஓவர்கில் எவ்வளவு?குறுகிய பதில்? நீங்கள் நினைக்கும் அளவுக்கு கிட்டத்தட்ட இல்லை.உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் போன்ற முன்னணி உலகளாவிய சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, பெரியவர்கள் ஒவ்வொரு வாரமும் சுமார் 150 நிமிட மிதமான உடல் செயல்பாடுகளை இலக்காகக் கொள்ள வேண்டும். இது ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்கள், வாரத்தில்…
புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்கி வருகிறது. தற்போது புதிதாக அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட 30 இடங்களை இணைக்கும் 17 நாள் சுற்றுலாத் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமாயண யாத்ரா என்ற பெயரில் ரயில்களை ஐஆர்சிடிசி இயக்கி வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சுற்றுலாத் திட்டம் 5-வது சிறப்பு ராமாயணா சிறப்பு ரயிலாகும். இந்த ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில் திட்டம் வரும் 25-ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். அயோத்தி, நந்திகிராம், சீதாமார்ஹி, ஜனக்பூர், புக்சார், வாராணசி, பிரயாக்ராஜ், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 30 புனித்தலங்களை இந்த சுற்றுலாத் திட்டம் இணைக்கிறது. இறுதியாக இந்த ரயில் டெல்லியை வந்தடையும். இதுகுறித்து ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறும்போது,…
சென்னை: பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழு கவனம் செலுத்தி வருவதால், அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூலை 8-ம் தேதி சென்னை வர இருப்பதாகவும், அப்போது கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவரது சென்னை வருகை ரத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித் ஷாவின் சென்னை வருகையின்போது, அதிமுக – பாஜக கூட்டணியை பலப்படுத்துவதற்காக, பாமகவையும் கூட்டணியில் இணைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் முடிவுக்கு வராததால், அமித் ஷாவின் பயணம் ரத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணிகளில் அமித் ஷா முழு கவனம் செலுத்தி வருவதால், கட்சியின் தேசிய தலைமை நியமனத்துக்குப் பிறகு அவர் தமிழகம் வருவார் என்று பாஜக…
சியா விதைகளை இரண்டு வாரங்களுக்கு உங்கள் உணவில் இணைப்பதன் அற்புதமான நன்மைகளை டாக்டர் ச ura ரப் சேத்தி எடுத்துக்காட்டுகிறார். இந்த சிறிய விதைகள், ஃபைபர், ஒமேகா -3 கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளன, நீரேற்றத்தை ஊக்குவிக்கின்றன, செரிமானத்தை மேம்படுத்துகின்றன, எடை நிர்வாகத்தை ஆதரிக்கின்றன. வழக்கமான நுகர்வு வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் ஆரோக்கியமான, அதிக கதிரியக்க சருமத்திற்கு வழிவகுக்கும். சியா விதைகள், பெறப்பட்டவை சால்வியா ஹிஸ்பானிகா ஆலை, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏற்றப்படுகின்றன. மிருதுவாக்கிகள் முதல் தயிர் வரை, அவை ஊறவைக்கும்போது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் விதிவிலக்கான ஜெல் நிலைத்தன்மைக்கு பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து அவற்றை சாப்பிடும்போது உண்மையில் என்ன நடக்கும்? முடிவுகள் அதிசயமாக இருக்கலாம்! ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டு-பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, சியா விதைகளை 14 நாட்களுக்கு உட்கொள்வதன்…
புதுடெல்லி: ‘‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சொத்துகளை விற்க நினைக்கவில்லை. அதை காப்பாற்றவே காங்கிரஸ் கட்சி முயற்சித்தது’’ என்று நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதாடினார். அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜேஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவகர்லால் நேரு தொடங்கினார். இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. நிதி நெருக்கடி ஏற்பட்டதால், இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்தது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோருக்கு மாற்றப் பட்டன. ஆனால், ரூ.2,000 கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு…
மூலவர்: ஏகபுஷ்ப பிரியநாதர் அம்பாள்: தாயுனும் நல்லாள் தல வரலாறு: பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் ‘தேவ அர்க்கவல்லி’ என்ற மலரைக் கொண்டு சிவனை பூஜித்தால், உலகிலுள்ள அனைத்து மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்பதை நாரதரும், தேவலோக ரிஷிகளும் அறிந்தனர். அதனால் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியைத் தேர்வு செய்து, அம்மலரைத் தேடச் செய்தனர். பிருகு மகரிஷியும் பூவுலகில் தவம் செய்து நிறைவாக திருத்தியமலை வந்தார். அந்த நேரத்தில் அங்கு அகத்தியரும், அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். பிருகு மகரிஷி, அகத்தியரிடம் தேவ அர்க்கவல்லி மலரின் ரகசியத்தைக் கேட்டறிந்தார். அப்போது மலையின் மீது இருந்த மரத்தருகே ஆயிரக்கணக்கான பறவைகள் காணப்பட்டன. மகா சிவராத்திரி தினத்தில் பறவைகள் ‘ஓம் நமசிவாய’ என்று கூக்குரலிட்டபடி பறந்தன. பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டுகொண்டதால், பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார். அகத்தியர் முதல் முறையாக பிருகு முனிவரையும்,…
திருப்புவனம்: திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு தேமுதிக சார்பில் திருப்புவனத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: அஜித்குமாரை போலீஸார் அடித்தே கொன்றுள்ளனர். அவரைக் கொன்றவர்களுக்கும் இதுபோன்ற தண்டனை கொடுக்க வேண்டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசாரிக்கவில்லை. எனவே, இவ்விவகாரத்தில் சிபிஐ உண்மையை வெளிக்கொணர வேண்டும். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் வரதட்சணைக் கொடுமையால் 4 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. போதை வழக்கில் 2 நடிகர்களை கைது செய்து, இந்த விவகாரத்தை திசை திருப்புகின்றனர். திமுக ஆட்சி என்றாலே அராஜகமும், ரவுடியிசமும்தான். அனைத்து காவல் நிலையங்களிலும், கைதிகளை விசாரிக்கும் இடங்களிலும் சிசிவிடி கேமராக்களை பொருத்த வேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் காவல் துறை தாங்காது. மது ஒழிந்தால்தான் தமிழகத்துக்கு விடிவுகாலம் பிறக்கும்.…
சென்னை: இந்திய ரயில்வேயில் விரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக, முன்பதிவு பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இதனால், கடைசி நேரத்தில் டிக்கெட் உறுதியாகாத சூழலில், பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதற்கு தீர்வு காண ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பாக, முன்பதிவு பட்டியலை வெளியிட வேண்டும் என்று ரயில்வே வாரியம் பரிந்துரை செய்தது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் விரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பு, முன்பதிவு பட்டியல் வெளியிடும் நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “அனைத்து ரயில்களுக்கும் 8 மணி நேரம் முன்பாகவே முன்பதிவு பட்டியல் வெளியிடப்படும். குறிப்பாக, அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கே முன்பதிவு…
