Author: admin

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவரது மனைவி பொற்கொடி, புதிய கட்சியைத் தொடங்கினார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பின்னர், அவர் வகித்த தலைவர் பதவியில் ஆனந்தனும், மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் நியமிக்கப்பட்டனர். பின்னர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும், தன்னுடைய குடும்பத்தைக் கவனித்து கொள்வதிலும் பொற்கொடி முழுமையாக கவனம் செலுத்துவார் என்று கூறி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பொற்கொடியை கட்சி தலைமை விடுவித்தது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்தில் அவரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், வள்ளலார் நினைவிடத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என…

Read More

சென்னை: ‘இந்து தமிழ் திசை நாளிதழ் நடத் தும் ‘சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ- 2025 இரண்டு நாள் வீட்டு வசதி கண்காட்சி, சென்னை நந் தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.காலை 10 முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், ஐ ஆட்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் நிறு வனமும் இணைந்து, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அபி எஸ்டேட் நிறு வனத்தின் ஆதரவுடன் சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ -2025 என்ற இரண்டு நாள் வீட்டுவசதி கண்காட்சியை சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடத் துகின்றன. இந்த கண்காட்சியை பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொதுமேலாளர் ரோஹித் சஹா நேற்று தொடங்கிவைத்தார். வங்கியின் உதவி பொதுமேலாளர் கள் சேஷாசலம்.ராதாகிருஷ்ணன். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளர் அன்புமணி. அபி எஸ்டேட் நிறு வனத்தின் மக்கள் தொடர்பு அதி காரி…

Read More

தொடர்ச்சியான நுரை சிறுநீர் சுகாதார பிரச்சினைகளின் அடையாளமாக இருக்கலாம், ஆனால் அவ்வப்போது குமிழ்கள் பொதுவாக பாதிப்பில்லாதவை மற்றும் நீரேற்றத்துடன் தீர்க்கப்படுகின்றன. நீர் உட்கொள்ளல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் இருந்தபோதிலும் குமிழ்கள் தொடர்ந்தால், சிறுநீரில் புரதத்தை சோதிப்பது முக்கியம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அல்லது சிறுநீரக நோயைக் குறிக்கும் என்று டாக்டர் ஷெர்லி கோஹ் அறிவுறுத்துகிறார். உங்கள் சிறுநீர் கழிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் வளர்சிதை மாற்றத்தின் இந்த துணை தயாரிப்பு உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய சொல்ல முடியும். சிறுநீர் வழக்கத்திற்கு மாறாக குமிழியாகத் தெரிந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டுமா? நுரை சிறுநீர், நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது குமிழ்கள் இருப்பதுதான் மிகவும் பொதுவானது; இருப்பினும், இது இன்னும் எதையாவது சமிக்ஞை செய்யலாம். எனவே, இது ஒரு பாதிப்பில்லாத விஷயம் அல்லது தீவிரமான ஒன்றின் அறிகுறியா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? மலேசியாவின் கோலாலம்பூரை தளமாகக் கொண்ட…

Read More

கஞ்சம்: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமின் (ஜேஎன்ஐஎம்) என்ற அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய அமைப்பு. இந்த அமைப்பின் தீவிரவாதிகள் மாலியில் ஐ.நா. அமைதிப் படை வீரர்கள், மாலி ராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டினரை குறிவைத்து செயல்படுகின்றனர். இந்​நிலை​யில் மேற்கு மாலி​யில் உள்ள காயெஸ் என்ற இடத்​தில் உள்ள சிமென்ட் தொழிற்​சாலை வளாகத்​துக்கு சென்ற தீவிர​வா​தி​கள் அங்​கிருந்த வெளி​நாட்டு தொழிலா​ளர்​கள் சிலரை கடத்​திச் சென்​றனர். இதில் 3 பேர் இந்​தி​யர்​கள் என தெரிய​வந்​துள்​ளது. அவர்​களில் ஒரு​வர் ஒடிசா மாநிலம் கஞ்​சம் மாவட்​டத்​தைச் சேர்ந்த வெங்​கட்​ராமன்​(28) என தெரிய​வந்​துள்​ளது. ப்ளூ ஸ்டார் நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் இவர், 6 மாத சிறப்பு பணிக்​காக மாலி​யில் உள்ள சிமென்ட் தொழிற்​சாலைக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளார். இந்த கடத்​தல் சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம், கடத்​தப்​பட்ட இந்​தி​யர்​களை மீட்க தேவை​யான நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளும்​படி மாலி அதி​காரி​களை கேட்​டுக்​…

Read More

திருமலை: திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தின் கடைசி நாளன்று ஆனிவார ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய நாளில் மூலவருக்கு புதிய பட்டாடை உடுத்தி, உற்சவர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகள் ஒப்படைக்கப்படும். இந்த நாள் மிகவும் விசேஷ நாளாக ஆண்டாண்டு காலமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆனிவார ஆஸ்தானம் ஜூலை 16-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு முந்தைய நாளான 15-ம் தேதி, கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் 15-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிறகே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு இந்த இரு நாட்களும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Read More

சென்னையில் வசிக்கும் வாசுதேவனின் (சரத்குமார்) குடும்பம் அடிக்கடி வீடு மாறுகிறது. சொந்த வீடு வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்க்கிறார் வாசுதேவன். மனைவி சாந்தி (தேவயானி) தன் பங்குக்கு கை கொடுக்கிறார். மகன் பிரபு (சித்தார்த்) பெரியவனாகி குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்கிற கனவில், பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைக்கிறார்கள். அண்ணனுக்காக அரசுப் பள்ளியில் படிக்கிறார் தங்கை ஆர்த்தி (மீதா ரகுநாத்). ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழும் அந்தக் குடும்பத்தின் ஒரே கனவு சொந்த வீடு வாங்குவது. அது நிறைவேறியதா, இல்லையா என்பது கதை. நடுத்தரக் குடும்பங்களுக்குச் சொந்த வீடு, பெரும் கனவு என்பதால், அனைவருடனும் எளிதாக ’கனெக்ட்’ ஆகிற கதைக் களம் இது. அதை முடிந்தவரை சுவாரஸியமாகத் திரைக்கதையாக்கி இருக்கிறார், இயக்குநர் கணேஷ். வெறுமனே வீடு வாங்கும் கனவை மட்டும் சொல்லாமல், அதற்காக ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு போராடுகிறார்கள் என்பதைப் பல இடங்களில் உணர்வுப்பூர்வமாகச்…

Read More

சென்னை: தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​துவகல்​லூரி மருத்​து​வ​மனை​களில், முதல்​வர் பதவிக்​கான முறை​யான பதவி உயர்வு பட்​டியல் தயாரித்து 4 வாரங்​களில் தகு​தி​யானவர்​களை முதல்​வர்​களாக நியமிக்க தமிழக அரசுக்​கு, உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் சுகா​தா​ரத் துறை​யில் அரசு உதவி மருத்​து​வ​ராக பணி​யில் சேரும் மருத்​து​வர்​களுக்கு அடுத்​த​படி​யாக இணை பேராசிரிய​ராக​வும், அதன்​பிறகு 3 ஆண்​டு​கள் பணி அனுபவத்​துடன் 4 ஆராய்ச்சி கட்​டுரைகளை வெளி​யிட்டு இருந்​தால் பேராசிரிய​ராக​வும் பதவி உயர்வு வழங்​கப்​படு​கிறது. பேராசிரிய​ராக 5 ஆண்​டு​கள் பணிபுரிந்து இருந்​தால் அடுத்​தக்​கட்​ட​மாக அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை முதல்​வ​ராக (டீன்) சிவில் மருத்​துவ பட்​டியலின் பதவி மூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு வழங்​கப்​படுகிறது. இந்​நிலை​யில், கடந்த 2024-25 ம் ஆண்​டுக்​கான பதவி உயர்வு பட்​டியலில் 26 பேராசிரியர்​களுக்கு முதல்​வ​ராக பதவி உயர்வு வழங்க கடந்​தாண்டு அக்​.1-ம் தேதி​யன்று அறி​விப்​பாணை வெளி​யிட்ட தமிழக அரசு, இதுதொடர்​பாக, ஆட்​சேபங்​களை தெரிவிக்க 2 மாதம் அவகாசம் இருந்​தும், அக்​.3-ம் தேதி​யன்​று,…

Read More

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலக்​கா​விரி, பாகமண்​டலா, மடிகேரி, மைசூரு உள்​ளிட்ட இடங்​களில் கனமழை பெய்து வரு​கிறது. இதனால் காவிரி ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ள​தால் மண்​டியா மாவட்​டத்​தில் உள்ள கிருஷ்ண​ராஜ சாகர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. கடந்த 30-ம் தேதி கிருஷ்ண​ராஜ சாகர் அணை நிரம்​பியதை தொடர்ந்து மைசூரு, மண்​டியா மாவட்ட விவ​சாய பாசனத்​திற்காக நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. நேற்று மாலை 7 மணி நில​வரப்​படி, 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ண​ராஜ சாகர் அணை​யின் நீர்​மட்​டம் 123.70 அடி​யாக உள்​ளது. மைசூரு மாவட்​டம் எச்​.டி. கோட்​டை​யில் 19.52 டிஎம்சி கொள்​ளளவு கொண்ட கபினி அணை​யின் தற்போதைய கொள்​ளளவு17.05 டிஎம்சி ஆக‌ உள்​ளது. அணை​யில் இருந்து 10,000 கன அடி நீர்​திறந்​து​விடப்​பட்​டுள்​ளது.கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி ஆகிய இரு அணை​களில் இருந்​தும் தமிழகத்​துக்கு மொத்​த​மாக விநாடிக்கு 47 ஆயிரத்து 590 கன அடி நீர்​ திறந்​து​விடப்​பட்​டுள்​ளது.

Read More

ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கரிகாலனை (சம்பத்) கொலை செய்த குற்றத்துக்காக, சிறுவர் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்படுகிறார், 17 வயது சூர்யா (சூர்யா சேதுபதி). அவரை, அந்த பள்ளியிலேயே தீர்த்துக்கட்ட ஆட்களை அனுப்புகிறார், கொல்லப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரின் மனைவி மாயா (வரலட்சுமி சரத்குமார்). ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சூர்யா, சட்டப்பேரவை உறுப்பினரைக் கொன்றது ஏன்? அவருடைய ஆட்களிடம் இருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா? என்பது கதை. இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் அனல் அரசு ஸ்டன்ட் இயக்குநர் என்பதால் ஒரு பழிவாங்கும் கதையை, ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க நினைத்திருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி கதையை ஊறுகாய் போல வைத்துக் கொண்டு ஆக்‌ஷன் காட்சிகளை அதிரடியாகத் தந்திருக்கிறார். மிரட்டுகிற அக்காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் தொடர்ந்து வருகிற, அதே போன்ற காட்சிகளும் தெறிக்கும் ரத்தமும் ஒரு கட்டத்தில் சோர்வடைய வைக்கின்றன. ‘ஹீரோ எப்படி இத்தனை பேரை தாக்க முடியும்?’ என்று எழும் கேள்விக்கு பிளாஷ்பேக்கில் வரும்…

Read More

வலுவான கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டே இருந்தாலும் பாஜக – அதிமுக கூட்டணியை பொருந்தாத கூட்டணியாகவே பலரும் விமர்சிக்கிறார்கள். இதுகுறித்து அதிமுக-வுக்குள்ளும் இருவேறு கருத்துகள் இருக்கவே செய்கின்றன. கூடவே, பாஜக-வின் ‘கூட்டணி ஆட்சி’ கோஷமும் அதிமுக-வினரை சீண்டிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். பாஜக-வுடன் எந்தக் காலத்திலும் இனி கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் அதனுடன் இணைந்துள்ளீர்களே..? கூட்​டணி என்​பது தேர்​தல் காலத்​தில் செய்​யப்​படு​கின்ற ஒரு தற்​காலிக ஏற்​பாடு. பெரும்​பாலும் வெற்​றியை அடிப்​படை​யாகக் கொண்​டு​தான் கூட்​ட​ணி​கள் உரு​வாகும். கொள்​கை​யின் அடிப்​படை​யில் இல்​லை. இந்​தி​யா​வில் பெரும்​பாலான கட்​சிகள் பாஜக-வுடன் கூட்​டணி வைத்​திருக்​கின்​றன. அது​போல பாஜக உடன் நாங்​கள் கூட்​டணி அமைத்​ததும் இயல்​பான ஒன்​று​தான். இது அதிமுக-வுக்கு சாதகமான கூட்டணி என நம்புகிறீர்களா? ஆம். கடந்த மக்​கள​வைத் தேர்​தல் முடி​வின் கணக்​கு​களை வைத்து…

Read More