லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் 52-ம் நிலை வீரரான ஸ்பெயினின் பெட்ரோ மார்ட்டின்ஸை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் 7-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் 55-ம் நிலை வீராங்கனையான ஹெய்லி பாப்டிஸ்டை தோற்கடித்து 4-வது சுற்றில் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 19-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் லியுட்மிலா சம்சோனாவா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 18-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் தரியா கசட்கினாவை வீழ்த்தினார்.
Author: admin
வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையிலும், வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொழுது போக்கு வசதிகளுடன் கூடிய ஒரு விளையாட்டு மையத்தை அமைக்க தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், வேளச்சேரி ரயில் நிலைய வளாகம் மேலும் வளர்ச்சியடைந்து, விளையாட்டுகள், உடற்பயிற்சி, உடல்நலம், ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை உள்ளடக்கிய முக்கிய சமூக பயன்பாட்டு மையமாக உருவெடுக்க உள்ளது. இதற்காக, ஒப்பந்தப்புள்ளியை சென்னை ரயில்வே கோட்டம் கோரியுள்ளது. இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் பங்கேற்கக் கூடிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு திட்டங்களை வழங்கும் விதமாக, வேளச்சேரி ரயில் நிலையத்தில் விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. மேலும், ரயில்…
காலை நாள் முழுவதும் தொனியை அமைத்தது. நம்மில் பெரும்பாலோருக்கு, சாயைக் குறைப்பது, காலை உணவைத் தவிர்ப்பது, அல்லது நாங்கள் படுக்கையை உருவாக்குவதற்கு முன்பே மன அழுத்தத்தில் ஹெட்ஃபர்ஸை டைவிங் செய்வது என்று பொருள். ஆனால் இந்த பாதிப்பில்லாத பழக்கவழக்கங்கள் அமைதியாக உங்கள் உடலில் உள்ள மிக முக்கியமான மற்றும் மதிப்பிடப்படாத – ஆர்வமுள்ளவர்களில் ஒன்றாகும்: கல்லீரல்?ஆம், உங்கள் கல்லீரல். அமைதியான, திரைக்குப் பின்னால் உள்ள உறுப்பு நச்சுகளை வடிகட்டுகிறது, கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகளை வளர்சிதைமாக்குகிறது, ஆல்கஹால் மற்றும் மருந்துகளை உடைக்கிறது, மேலும் உங்கள் உடலை நன்கு எண்ணெயிடப்பட்ட இயந்திரத்தைப் போல இயங்க வைக்கிறது. உங்கள் இதயம் அல்லது மூளையைப் போலல்லாமல், உங்கள் கல்லீரல் அரிதாகவே புகார் செய்கிறது – இது ஏற்கனவே அதிக வேலை, மந்தமான அல்லது வீக்கமடையும் வரை. அதற்குள்? சேதம் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கலாம்.உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்காமல் அல்லது போதைப்பொருள் டீஸில் ஒரு செல்வத்தை செலவழிக்காமல், உங்கள் கல்லீரலை…
நிக்கோல் ஐயர்ஸ் மூலம் கைப்பற்றப்பட்ட ஸ்பிரிட் (பட வரவு: x @astro_ayers) வட அமெரிக்காவிற்கு மேலே சுற்றும் போது, நாசா விண்வெளி வீரர் நிக்கோல் ஐயர்ஸ் பூமியின் மேல் வளிமண்டலத்தில் பளபளக்கும் ஒரு அரிய பார்வை-ஒளிரும் சிவப்பு விளக்குகள். நிகழ்வு, a என அழைக்கப்படுகிறது நிலையற்ற ஒளிரும் நிகழ்வு .அரிய நிகழ்வு, ஒரு நிலையற்ற ஒளிரும் நிகழ்வு (டி.எல்.இ) என அழைக்கப்படுகிறது, இது ஒரு ஸ்பிரிட் என்று அழைக்கப்படுகிறது- சிவப்பு ஒளியின் சுருக்கமான ஃபிளாஷ், இது சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழைக்கு மேலே நிகழ்கிறது. மின் ஆற்றலின் இந்த பாரிய வெடிப்புகள் பூமியின் மேற்பரப்பில் 100 கிலோமீட்டர் வரை எட்டலாம் மற்றும் “குளிர் பிளாஸ்மாவை” கொண்டிருக்கலாம், இது வழக்கமான மின்னலை விட ஒரு ஒளிரும் ஒளி குழாய்க்குள் பளபளப்பைப் போன்றது. அவற்றின் அதிக உயரம் மற்றும் குறுகிய காலம் காரணமாக, உருவங்கள் தரையில் இருந்து அரிதாகவே தெரியும், ஐயர்களின் விண்வெளி அடிப்படையிலான…
பாட்னா: பிஹாரில் தொழிலதிபரும் பாஜக நிர்வாகியுமான கோபால் கெம்கா அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிஹாரில் பாஜகவின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் கோபால் கெம்கா. பெட்ரோல் பங்க் நடத்தி வரும் இவருடைய வீடு பாட்னாவில் உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வெளியிலிருந்து வீடு திரும்பிய கெம்காவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகன் கொலை செய்யப்பட்ட நிலையில் இப்போது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து பாட்னா காவல் கண்காணிப்பாளர் திக் ஷா கூறும்போது, “கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கும் மருத்துவமனைக்கும் விரைந்தனர். சம்பவ இடத்திலிருந்து ஒரு புல்லட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து…
கால்கரி: கனடாவின் கால்கரி நகரில் கனடா ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகத் தரவரிசையில் 6-வது முதலிடத்தில் உள்ள சீன தைபேவின் சவு டியன் சென்னுடன் மோதினார். 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 49-ம் நிலை வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-18, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நாளை (ஜூலை 7) கோவை மேட்டுப்பாளையத்தில் ‘புரட்சி தமிழரின் எழுச்சிப்பயணம் – மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.இதற்கான இலட்சினை மற்றும் பாடலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூலை 7-ம் தேதி (நாளை) கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன். 234 தொகுதிகளுக்கும் செல்ல உள்ளேன். எனது பயணத்தின் நோக்கம் திமுக ஆட்சியின் கொடுமையை அம்பலப்படுத்தி மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான். திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து கூற உள்ளோம். ஸ்டாலின் ஆட்சியின் வேதனையை பட்டியலிட்டு, மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவோம். இச்சுற்றுப்பயணம் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். 2026 தேர்தலில் அதிமுக…
தரம்சாலா: திபெத்தைச் சேர்ந்த ஆன்மிக தலைவர் டென்ஜின் கியாஸ்டோ 14-வது தலாய் லாமாவாக உள்ளார். தரம்சாலா அருகே உள்ள தலாய் லாமா கோயிலில் அவருடைய 90-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தலாய் லாமா நீண்ட காலம் வாழ்வதற்கான பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. இதில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா காண்டு, புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கெரே உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலாய் லாமா கூறும்போது, “பல தீர்க்க தரிசனங்களைப் பார்க்கும்போது, அவலோகிதேஸ்வரரின் ஆசீர்வாதம் எனக்கு இருப்பதாக உணர்கிறேன். இதுவரை மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். இன்னும் 30 – 40 ஆண்டுகளுக்கு உயிர் வாழ்வேன் என நம்புகிறேன். இதுவரை உங்கள் பிரார்த்தனைகள் பலன் அளித்துள்ளன” என்றார்.
சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் பிரிவில் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரை இறுதி ஆட்டத்தில் சென்னை ஐசிஎஃப் அணி 25-15, 25-19, 25-17 என்ற செட் கணக்கில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி அணியை தோற்கடித்தது. ஆடவர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் சென்னை ஐஓபி 20-25, 22-25, 25-15, 25-20, 15-9 என்ற செட் கணக்கில் போராடி ஜிஎஸ்டி அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
புதுடெல்லி: குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். இந்தியாவில் வைர வியாபாரம் செய்த நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில், தனது பங்குதாரர்கள் மற்றும் தனது மாமா மெகுல் ஷோக்ஸி ஆகியோருடன் இணைந்து ரூ.28,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்தார். இந்த பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப இவரது தம்பி நெஹல் மோடி உதவினார். இருவர் மீதும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ, மோசடி மற்றும் குற்றச் சதி வழக்கு பதிவு செய்தது. இவர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடப்பட்டது. லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர வழக்கு நடைபெற்று வருகிறது. அதேபோல் அமெரிக்காவில் உள்ள நீரவ் மோடியின் சகோதரர் நெஹல் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் வரும் 17-ம் தேதி…
