Author: admin

சென்னை: பிஐஎஸ் தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய சாலைகளில் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மோட்டார் வாகனச் சட்டம்-1988-ன் கீழ் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். அந்த தலைக் கவசங்களுக்கு, செயல்திறன் தர மதிப்பீடும் உள்ளது. தரமற்ற தலைக்கவசங்கள் பாதுகாப்பு அம்சங்களை விட்டுக் கொடுத்து விடுவதால் சாலைப் பாதுகாப்பு என்ற நோக்கத்தை சிதைப்பதாக அவை இருக்கின்றன. இதை நிவர்த்தி செய்வதற்காக, 2021-ம் ஆண்டு முதல் தரக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் உள்ளது. இது அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் பிஐஎஸ் தரநிலைகளின் கீழ் (ஐஎஸ் 4151:2015) சான்றளிக்கப்பட்ட, ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட தலைக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read More

சென்னை: மடப்புரம் கோயில் காவலாளியை சித்ரவதை செய்து கொலை செய்த போலீஸாரிடமிருந்து ரூ.1 கோடி வசூலித்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்த பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் மும்முரமாகக் களமிறங்கியுள்ள நிலையில், நல்லிணக்கச் சூழலைக் காக்க, மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். காவல் துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கோயில் காவலர் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விரைந்து எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில், காவல் வன்முறைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். காவல் துறையினருக்கு மனித உரிமைகள் குறித்துப் பயிற்சி அளிப்பதோடு,…

Read More

கொட்டைகள் ஒரு ஸ்மார்ட் சிற்றுண்டி; அவை சுவையாகவும், நிரப்பவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஆனால் ஆரோக்கியத்திற்கு வரும்போது, ​​மக்கள் பெரும்பாலும் ஆச்சரியப்படுகிறார்கள்: எது சிறந்தது, அக்ரூட் பருப்புகள் அல்லது பிஸ்தா? இரண்டுமே நல்ல கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றால் ஏற்றப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு நட்டு அதன் பலத்தையும் கொண்டுள்ளது.அக்ரூட் பருப்புகள் மற்றும் பிஸ்தா இரண்டும் பல சுகாதார நன்மைகளை வழங்குகின்றன, இதயம், மூளை, குடல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கின்றன. அவர்கள் இதேபோன்ற ஊட்டச்சத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​அவர்களின் சுகாதார நன்மைகளில் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது உங்கள் உணவு இலக்குகளுக்கு எந்த நட்டு – அல்லது இரண்டும் மிகவும் பொருத்தமானது என்பதை தீர்மானிக்க உதவும்.அக்ரூட் பருப்புகள் மற்றும் பிஸ்தாஸின் சுகாதார நன்மைகள் பரேட்.காம் இந்த கொட்டைகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகளை பட்டியலிடுகிறது, இது மூளை, இதயம், குடல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான அவற்றின் தனித்துவமான நன்மைகளை…

Read More

பர்மிங்காம்: இந்திய அணி உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5-ம் நாளான இன்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 536 ரன்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில், இந்தப் போட்டி நடைபெறும் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் பகுதியில் நிலவும் வானிலை குறித்து பார்ப்போம். ஆண்டர்சன் சச்சின் டிராபி தொடரில் இரண்டாவது போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. வானிலை நிலவரம்: இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு 5-ம் நாள் ஆட்டம் தொடங்குகிறது. இறுதி நாள் என்பதால் 90 ஓவர்களையும் முழுவதுமாக வீச வேண்டும் என நடுவர்கள் பணிக்க வாய்ப்புள்ளது. ஆட்டத்தின் முடிவை எட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும் அதை விரும்பும். இந்நிலையில், இன்று (ஜூலை 6) நண்பகல் வரையில் எட்ஜ்பாஸ்டனில் மழை பொழிவுக்கு…

Read More

‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப் தொடர், ஜீ 5 ஒடிடி தளத்தில் ஜூலை 18-ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, சரவணன் ஹீரோவாகவும் நம்ரிதா எம்.வி. நாயகியாகவும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ளார். 18 கிரியேட்டர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார். “இந்த வெப் தொடர், குரலற்றவர்களின் குரல் எனும் கருத்திலிருந்து உருவாகி இருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அதை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனுக்காகவும் நிற்கும் சாதாரண மனிதரின் கதைதான் இது. மனதை உலுக்கும் நீதிமன்ற காட்சிகள், உணர்வுகள் சூழ்ந்த கதாபாத்திரங்கள், மற்றும் முக்கியமான மெசேஜ் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

திமுக, அதிமுக, பாஜக தேர்தல் வியூகங்களை வகுக்க குழு வைத்திருப்பதை போல, தமிழக வெற்றிக் கழகமும் வியூக வகுப்பாளர்களை வைத்துள்ளது. ஏற்கனவே, விஜய்க்கு ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மேலும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் விஜய் கட்சிக்கு தேர்தல் உத்திகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த பிப்ரவரியில் நடந்த தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோர், “விஜய் ஒரு அரசியல் தலைவர் அல்ல. தமிழகத்தின் புதிய நம்பிக்கை. புதிய அரசியலை விரும்பும் கோடிக்கணக்கானோருக்கான இயக்கம் தவெக. மாற்றத்தை கொண்டு வரும் இலக்கை நிர்ணயிக்க நானும் சிறிதளவு உதவ இருக்கிறேன்” என்றார். அதன்படி, பிரசாந்த் கிஷோரின் சிம்ப்பிள் சென்ஸ் அனல்ட்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் பணியாளர்கள், தவெக உடன் இணைந்து 234 தொகுதிகளிலும் தேர்தல் உத்திகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்,…

Read More

படம்: ஜூலை 6, 1907 ஒரு உண்மையான ஐகானின் பிறந்தநாளைக் குறிக்கிறது – ஃபிரிடா கஹ்லோ. ஆனால் 117 ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் கலை வரலாற்றில் ஒரு பெயர் மட்டுமல்ல; அவள் ஒரு வாழ்க்கை, சுவாச பிராண்ட். செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் ஹேஷ்டேக்குகளுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இன்று பிரபல கலாச்சாரத்தை நாம் எவ்வாறு அனுபவிக்கிறோம் என்பதில் எதிரொலிக்கும் வகையில் சுய விளக்கக்காட்சி, அடையாளம் மற்றும் தெரிவுநிலையை அவர் தேர்ச்சி பெற்றார்.ஃப்ரிடா எழுந்து வண்ணம் தீட்டவில்லை – அவள் ஒவ்வொரு விவரத்திற்கும் அவளுடைய பொது உருவத்தை நிர்வகித்தாள்; தெஹுவானா ஆடைகள் முதல் தைரியமான புருவம் வரை. அவர் பாரம்பரிய மெக்ஸிகன் உடையை அணிந்திருந்தார், நகைகள் மீது குவிந்தார், மற்றும் அவரது தலைமுடியை ரிப்பன்கள் மற்றும் பூக்களால் சடை செய்தார் -வெறுமனே தோற்றத்திற்காக அல்ல, ஆனால் கலாச்சார பெருமை, அரசியல் மீறல் மற்றும் தனிப்பட்ட கதைசொல்லல் ஆகியவற்றின் அறிக்கையாக. செல்பி அல்லது சுய-முத்திரைக்கு…

Read More

அறிமுக இயக்குநர் லோகன் இயக்கும் படம் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நடிகராகிறார். இந்தப் படத்தை ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் என்ற புதிய பட நிறுவனம் மூலம் டி. சரவணகுமார் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். நிகழ்வில் வீடியோ மூலம் பேசிய சுரேஷ் ரெய்னாவிடம் அவருடைய தோழரான எம்.எஸ். தோனியும் இதில் நடிக்க வாய்ப்பிருக்கிறதா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு “தோனிதான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்” என்றார். சென்னையில் நடந்த இதன் தொடக்க விழாவில் கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே கலந்துகொண்டார்.

Read More

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்து மருந்துகளுக்கும் இறக்குமதி உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த லியுங் காய் ஃபூக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், கோடாலி தைலத்தை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த தைலத்தை சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆக்சென் மார்க்கெட்டிங் இந்தியா என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கோடாலி தைலத்துக்கு இறக்குமதிக்கான உரிமம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியின் சான்று பெற வேண்டும் என ஆக்சென் நிறுவனத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோடாலி தைலம் அடங்கிய பண்டல்களை யும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து முடக்கி வைத்தனர். அதையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட கோடாலி தைலத்தை விடுவிக்கக் கோரி ஆக்சென் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த…

Read More

ஒரு சமீபத்திய ஆய்வு மூளை பாதிப்பு மற்றும் குற்றவியல் நடத்தைக்கு இடையிலான சாத்தியமான தொடர்பை வெளிப்படுத்துகிறது, குறிப்பாக அசிங்க் ஃபாஸிகுலஸ் பாதையின் சீர்குலைவை எடுத்துக்காட்டுகிறது. உணர்ச்சி மற்றும் முடிவெடுக்கும் பிராந்தியங்களை இணைக்கும் இந்த பகுதிக்கு சேதம் அதிகரித்த குற்றச் செயல்களுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். கண்டுபிடிப்புகள் குற்றவாளி மற்றும் சட்டப் பொறுப்பில் மூளைக் காயத்தின் பங்கு பற்றிய நெறிமுறை கேள்விகளை எழுப்புகின்றன. குற்றவியல் நடத்தை உண்மையில் மூளையில் ஏற்படும் மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதா? மூளையில் ஏற்படும் மாற்றங்கள் உண்மையில் சட்டத்தை மதிக்கும் குடிமக்களை குற்றவாளிகளாக மாற்ற முடியுமா? மூளையின் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு சேதம் குற்றவியல் அல்லது வன்முறை நடத்தைக்கு பங்களிக்கக்கூடும் என்று ஒரு அற்புதமான ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொலராடோ பல்கலைக்கழக அன்சூட்ஸ் மருத்துவ வளாகம், ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனை மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான புதிய ஆய்வில் வன்முறை மற்றும் தார்மீக முடிவெடுக்கும் நரம்பியல்…

Read More