Author: admin

வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா,ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் எலான் மஸ்க். இதையடுத்து, ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசு செயல் திறன்துறை (டிஓஜிஇ) தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உள்நாட்டு செலவினம், வரி குறைப்பு தொடர்பான மசோதாவை ட்ரம்ப் கொண்டு வந்ததால்,இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, புதிய கட்சி தொடங்குவது குறித்து மக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிலையில், ‘அமெரிக்கா பார்ட்டி’ எனும் புதிய கட்சியை எலான் மஸ்க் 5-ம் தேதி தொடங்கியுள்ளார். ‘2 கட்சி மட்டுமே அமெரிக்காவை ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப் போக்கை முறியடிப்போம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read More

ராமேசுவரம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகள் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து, சுவாமி தரிசனம் செய்தார். தூளி பாத பூஜை: தமிழகத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகள் நேற்று முன்தினம் மாலை ராமேசுவரம் வந்தார். ராமேசுவரம் சிருங்கேரி மடத்தில் தூளி பாத பூஜை செய்த சிருங்கேரி சுவாமிகள், இரவு ராமநாத சுவாமி கோயில் 3-ம் பிரகாரத்தில் ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வர பூஜையை நடத்தினார். நேற்று காலை ராமநாத சுவாமி கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் செய்த சிருங்கேரி சுவாமிகள், ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். பின்னர் தனுஷ்கோடி சென்ற சிருங்கேரி சுவாமிகள், மணலில் வரையப்பட்ட ராம தனுஷ் உருவத்துக்கு பூஜை செய்து, தனுஷ்கோடி கடலில் சேது ஸ்நானம் செய்தார். இந்த நிகழ்வுகளில் திரளான…

Read More

ஜூலை 18-ம் தேதி ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் திரையரங்குகளில் பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், ஓடிடி தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்த வரவேற்பை முன்வைத்து அடுத்த படத்தையும் முடித்துவிட்டார்கள். ’ஜென்ம நட்சத்திரம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விரைவில் ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு. ஹாரர் த்ரில்லர் கதையாக ‘ஜென்ம நட்சத்திரம்’ உருவாகி இருக்கிறது. இதனை அமோஹம் ஸ்டூடியோஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளராக கே.ஜி, இசையமைப்பாளராக சஞ்சய் மாணிக்கம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதில் தமன் அக்‌ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்‌ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தினை உலகமெங்கும்…

Read More

திருப்பூர்: இளம்பெண் ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்​கவேல் கூறி​னார். திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி​யில் கணவன் குடும்​பத்​தார் கொடுமை​யால் தற்​கொலை செய்​து​கொண்ட ரிதன்​யா​வின் வீட்​டுக்கு நேற்று சென்ற முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்​கவேல், ரிதன்​யா​வின் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரி​வித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எனக்​கும் ரிதன்​யா​வின் குடும்​பத்​துக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை. ரிதன்யா கடைசி​யாக அவரது தந்​தைக்கு அனுப்​பிய ஆடியோவை கேட்ட பின்​பு​தான், அவர்​களுக்கு ஆறு​தல் கூற வேண்​டுமென தனிப்​பட்ட முறை​யில் நான் இங்கு வந்​துள்​ளேன். ரிதன்யா உயி​ரிழப்​புக்கு முன்பு அனுப்​பிய ஆடியோ மிக​வும் முக்​கிய​மான சாட்​சி​யாக உள்​ளது. ரிதன்யா தரப்பு வழக்​கறிஞரிடம் பேசினேன். முதல் தகவல் அறிக்​கை​யை​யும் படித்​தேன். இளம்பெண் ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும். மன ரீதி​யாக, உடல் ரீதி​யாக யார், யார் துன்​புறுத்​தினர் என அதில் கூறி​யுள்​ளார். ரிதன்​யா​வின் செல்​போன் நீதி​மன்​றத்​தில்…

Read More

சென்னை: தமிழகத்​தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்​தைகளை கணக்​கெடுக்​கும் களப்​பணிமாநிலம் முழு​வதும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்​கு​கிறது. இதுகுறித்து ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்வி மாநிலத் திட்ட இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை​: தமிழகத்​தில் 2025-26-ம் கல்​வி​யாண்​டுக்​கான பள்ளி செல்​லாத குழந்​தைகள், இடைநின்ற குழந்​தைகளை அடை​யாளம் காண்​ப​தற்​கான கணக்​கெடுப்பு பணி​கள் ஆகஸ்ட் 1-ல் தொடங்​க​வுள்​ளது. இந்த கணக்​கெடுப்பு பணி​யில் மண்டல மேற்​பார்​வை​யாளர்​கள், ஆசிரியர் பயிற்​றுநர்​கள், கல்வி மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர்​கள், பள்ளி தலை​மை​யாசிரியர்​கள், பள்ளி ஆசிரியர்​கள், சிறப்பு பயிற்​றுநர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​கள், இல்​லம் தேடிக் கல்​வித் திட்ட தன்​னார்​வலர்​கள் உள்​ளிட்​டோர் ஈடுபட உள்​ளனர். இந்த களப்​பணி​யின்​போது பள்ளி செல்​லாத குழந்​தைகளை கண்​டறிந்து அதற்​கான காரணம் பதிவு செய்​யப்பட வேண்​டும். அதன்​பின் அவர்​களை அருகே உள்ள அரசு மற்​றும் தனி​யார் பள்​ளி​களில் சேர்க்​க​வும், இது​சார்ந்து பெற்​றோர்​களுக்கு உளவியல் ஆலோ​சனை வழங்​க​வும் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதுத​விர இந்​தக்…

Read More

விஜய் கார்த்திகேயா அடுத்து இயக்கவுள்ள படத்திலும் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கிச்சா சுதீப் நாயகனாக நடிக்கும் 47-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தினை விஜய் கார்த்திகேயா இயக்கவுள்ளார். இவர் கிச்சா சுதீப் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘மேக்ஸ்’ படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. தாணு தயாரிப்பில் வெளியான படம் ‘மேக்ஸ்’. பலரும் ‘கைதி’ பட பாணியில் உருவாக்கி இருக்கிறார்கள் என்று கூறினாலும், விறுவிறுப்பான திரைக்கதையினால் வரவேற்பைப் பெற்றது. இதனால் மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் கிச்சா சுதீப். தற்போது கிச்சா சுதீப் உடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘கே 47’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக சேகர் சந்திரா, இசையமைப்பாளராக அஜ்னிஷ் லோக்நாத், எடிட்டராக கணேஷ் பாபு ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு…

Read More

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி ஆற்​றில் விநாடிக்கு 58,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 51,401 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 40,500 கனஅடி​யாக​வும், மாலை 50,500 கனஅடி​யாக​வும் பதி​வானது. அணைக்கு நீர்​வரத்து உயர்ந்​துள்ள நிலை​யில், அணையி​லிருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு நேற்று காலை 10 மணிக்கு விநாடிக்கு 50,000 கனஅடி​யாக​வும், மாலை 5 மணிக்கு 58,000 கனஅடி​யாக​வும் அதி​கரிக்​கப்​பட்​டது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் நேற்று 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று 57 ஆயிரம் கனஅடி​யாக உயர்ந்​தது. கபினி அணை​யில் இருந்து வரும் நீரின் அளவு மற்​றும் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​யில் பெய்து வரும் மழை​யின் அளவு…

Read More

தெலுங்கில் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹாய்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது ‘ஜெய ஜெய ஜெயஹே’. மலையாளத்தில் பேசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’. விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தருண் பாஸ்கர், இஷா ரெப்பா ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹாய்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 1-ல் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. விரைவில் டீஸர், ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்த உள்ளது படக்குழு. அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.சஜீவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ருஜன் யாரபோலு, ஆதித்யா பிட்டி, அனுப் சந்திரசேகரன், சாதிக் சைக், நவீன் சனிவரப்பு உள்ளிட்ட பலர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Read More

‘வார் 2’ படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறார் நாக வம்சி. இவர் ஜூனியர் என்.டி.ஆருக்கு நெருங்கிய நண்பர் ஆவார். இந்த உரிமையை சுமார் 90 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாக வம்சி வாங்கியிருப்பதால் தெலுங்கில் பிரம்மாண்ட வெளியீடு உறுதி என்று ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள். இந்தியில் ஜூனியர் என்.டி.ஆர் அறிமுகமாகும் படம் ‘வார் 2’. இதில் ஹ்ரித்திக் ரோஷன், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹ்ரித்திக் ரோஷன் – ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்கும் இடையே ஆன காட்சிகள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றன. அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. ஆந்திராவில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் விநியோக உரிமையை ஏசியன் சினிமாஸ், தில் ராஜு மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து கைப்பற்றி இருக்கிறார்கள். ஆனால், ‘வார் 2’ உரிமையினை நாக…

Read More

சென்னை: ‘அ​தி​முக​வுக்கு பாஜக சுமை​யாக இருக்​கக் கூடாது; நமது இலக்கு 2026 அல்ல; 2029 நாடாளு​மன்ற தேர்​தல்​தான்’ என பூத் கமிட்டி கூட்​டத்​தில் மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார். தமிழக பாஜக பூத் கமிட்​டியை வலிமைப்​படுத்​து​வது தொடர்​பாக வாக்​குச்​சாவடி பொறுப்​பாளர்​களுக்​கான பயிலரங்​கம் சென்​னையை அடுத்த காட்​டாங்​கொளத்​தூரில் உள்ள ஒரு தனி​யார் பல்​கலைக்​கழக வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சிக்கு பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தலைமை தாங்​கி​னார். மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், அமைப்பு பொதுச்​செய​லா​ளர் கேசவ விநாயகன், மேலிட பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்​பாளர் சுதாகர் ரெட்​டி, முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், தேசிய செயற்​குழு உறுப்​பினர் ஹெச்​.​ராஜா, மகளிர் அணி தேசிய தலை​வர் வானதி சீனி​வாசன், மாநில துணை தலை​வர் கரு.​நாக​ராஜன், பொதுச் செய​லா​ளர் ஏ.பி.​முரு​கானந்​தம் உள்பட மூத்த நிர்​வாகி​கள், 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடி பொறுப்​பாளர்​கள் கலந்து கொண்​டனர். கூட்​டத்​தில், 2026…

Read More