சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஆலையின் 16 அறைகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில்பட்டியில் நாக்பூர் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்று இயங்குகிறது. இங்கு பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. 50-க்கும் மேற்பட்ட அறைகளில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் வெளி மாநிலத்தினர். இவர்கள் ஆலை வளாகத்திலேயே தங்கி பணியாற்றுகின்றனர். விடுமுறை தினமான நேற்றும் இந்த ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடந்தது. ஓர் அறையில் பேன்சி பட்டாசுகளுக்கான மருந்தை செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்ததில், 16 அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாகின. இந்த விபத்தில் பனையடிப்பட்டியை சேர்ந்த பாலகுருசாமி (47) உயிரிழந்தார்.…
Author: admin
சென்னை: ஐசிஎஃப் ஆலையில் இந்த நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை தயாரித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஏசி மின்சார ரயில்கள் தயாரிப்பு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை ஐசிஎஃப்-ல் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை) பல்வேறு வகைகளில் 73 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. அதிலும், தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது வரை 88 வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கும் வகையில், அம்ரித் பாரத் ரயில் (சாதாரண வந்தே பாரத் ரயில்) தயாரிக்க முயற்சி எடுக்கப்பட்டது. அதாவது நீண்ட தூர பயணத்துக்கு பொதுவான வசதிகளுடன் ஏசி அல்லாத அம்ரித் பாரத் ரயில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து,கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் ரயில்வே வாரியத்திடம்…
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 12-ம் தேதி சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும்.…
சென்னை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி, 25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ளுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு மதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை கேட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கூறிவருவது திமுக தலைமையிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ‘கூட்டணி கட்சியில் இருந்து விலகிவருபவர்களை திமுகவில் சேர்ப்பதில்லை’ என்ற கொள்கையில் இருந்து விலகி, மதிமுக நிர்வாகிகளை சமீபத்தில் சேர்த்துக் கொண்டது திமுக. இது மதிமுகவுக்கு மட்டுமின்றி மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கெனவே, வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படாத நிலையில், திமுகவின் இந்த நடவடிக்கை மதிமுக தொண்டர்களிடம் கடும் எதிர்ப்புஅலைகளை ஏற்படுத்தியது. பொதுக்குழு உள்ளிட்ட ஆலோசனை கூட்டங்களில் நிர்வாகிகள் இதை காட்டமாகவே வெளிப்படுத்தினர். எனினும், ‘திமுகவுடன் கூட்டணி தொடரும்’ என திட்டவட்டமாக தெரிவித்த வைகோ, தொண்டர்களையும் சமாதானம் செய்து வருகிறார். இதற்கிடையே, மதிமுக முதன்மை செயலாளர்…
சென்னை: தமிழகத்தில் வரும் 2026-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக, தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை ஜூலை 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து 3-ம் தேதி முதல் வீடுவீடாகச் சென்று புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரிலான திமுக உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை யில் வீடு, வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் முதல் கட்சி உறுப்பினர்கள் வரை அனைவரும் அவரவர் வாக்குச்சாவடிகளில் இருக்கும் வீடுகளுக்குச் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொலைபேசி வாயிலாகப் பேசினார். அப்போது அவர்களிடம் உறுப்பினர்…
சென்னை: இலவச கட்டாய கல்வி திட்டத்தில் சேர்க்கை பெற்ற ஏழை குழந்தைகளை கல்வி கட்டணம் செலுத்துமாறு பல தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் வழங்கப்படும். அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேரும் குழந்தைகள் 8-ம் வகுப்பு வரை இலவசமாக படிக்கலாம். அவர்களுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தனியார் பள்ளிகளுக்கு வழங்கும். தமிழகத்தில் கடந்த 2013-ல் அமல்படுத்தப்பட்ட ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 4 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இதற்கிடையே, புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பதால், பள்ளிக்கல்வி திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.…
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். முன்னதாக, விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள் திரண்டு மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரிக்ஸ் கூட்டமைப்பு 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள் திரண்டு, உற்சாக வரவேற்பு அளித்தனர். உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று ‘சர்வதேச அமைதி, பாதுகாப்பு, சீர்திருத்தம், நிர்வாகம்’ குறித்த சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (7-ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்று, கும்பாபிஷேக விழா ஜூன் 26-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. கடந்த 1-ம் தேதி மாலையாகசாலை பூஜைகள் தொடங்கின. கரியமாணிக்க விநாயகர், பார்வதி அம்மன், மூலவர், வள்ளி, தெய்வானைக்கு கோயில் உள்புறம் தந்திரி சுப்பிரமணியரு தலைமையிலும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு ராஜகோபுரத்தின் கீழ் உள்ள பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோம குண்டங்கள் அமைத்து, 700 கும்பங்கள் வைக்கப்பட்டு. 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையிலும் பூஜைகள் நடைபெற்றன. திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பெருமாளுக்கு தனியாக 5 ஹோம குண்டங்கள் வைத்து, பட்டாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று (ஜூலை 7) அதிகாலை 4…
மதுரை: உள்ளாட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும், வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் மனித நேய மக்கள் கட்சி மாநாடு நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் உமர் வரவேற்றார். கட்சியின் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான அப்துல்சமது பேசும்போது, “நாட்டில் படிப்படியாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதி நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் சதி செய்து பிரதிநிதித்துவம் குறைக்கப்படுகிறது. நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொண்டு வரப்பட வேண்டும்” என்றார். மாநாட்டில், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பர்ராஜ், ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் ஆகியோர் பேசினர். பேராசிரியர் அருணன், வழக்கறிஞர் ஹென்றிதிபேன், முன்னாள் எம்எல்ஏ முருகவேல்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, மதுரை பாண்டிகோயில் சந்திப்பு பகுதியிலிருந்து மாநாட்டுத் திடல் வரை பேரணி நடைபெற்றது.…
சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இணைய வழியில் இன்று (ஜூலை 7) தொடங்குகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு நடப்பாண்டில் 2 லட்சத்து 41,641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 7) தொடங்குகிறது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்புப் பிரிவில் வரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளது. இதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 9 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 128 பேரும், விளையாட்டு பிரிவில் 356 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 14 முதல் பொதுப்பிரிவு: மாணவர்கள் இன்று…
