நீங்கள் எப்போதாவது ஃபிட்னஸ் இன்ஸ்டாகிராம் மூலம் உருட்டியிருந்தால், காலை 5 மணிக்கு மராத்தான்களை இயக்காதது, சக்தி-தூக்குதல் அல்லது பூட்கேம்ப்களைச் செய்யாததற்காக குற்ற உணர்ச்சியை உணர்ந்தால், ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள்-மற்றும் 10 நிமிட நடைப்பயணத்திற்குச் செல்லுங்கள். அவ்வளவுதான். வியர்வை நனைந்த டி-ஷர்ட்கள் இல்லை. இடைவெளி டைமர்கள் இல்லை. வெறும் பத்து நிமிட நடைபயிற்சி. ஏனெனில், ஆச்சரியப்படுவது போல், உங்கள் இதயம் அதை விரும்பக்கூடும்.உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும்போது, குறுகிய, சீரான நடைகள் அவ்வப்போது 10 கி ஓட்டத்தை விட சக்திவாய்ந்ததாக இருக்கலாம், இல்லையென்றால். இங்கே ஏன்.“கடினமாகச் செல்லுங்கள் அல்லது வீட்டிற்குச் செல்லுங்கள்” என்ற கட்டுக்கதைபல ஆண்டுகளாக, உடற்பயிற்சி தொழில் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளையும் மகிமைப்படுத்தியுள்ளது. தீவிரமான செயல்பாட்டின் நன்மைகளை (குறிப்பாக சகிப்புத்தன்மை மற்றும் வளர்சிதை மாற்ற ஊக்கத்திற்காக) மறுக்கவில்லை என்றாலும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க நீங்கள் ஸ்பிரிண்ட்ஸ் அல்லது நீண்ட தூர ஓட்டங்கள் மூலம் பாதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம்? அது…
Author: admin
லத்தூர்: மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு தேவையான எருதுகள் அல்லது டிராக்டரை வாங்க அவருக்கு வசதி இல்லை. அவற்றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்பதால், தானே எருதாக மாறி அம்பதாஸ் பவாரும் அவரது மனைவி முக்தாபாயும் பல ஆண்டுகளாக நிலத்தை ஒரு மரக்கலப்பை மூலம் உழுது விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய கடனை கூட அடைக்க முடியாமல் மிகவும் வறுமையில் வாடி வருகின்றனர். இந்த வீடியோ கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் பரிதாபப்பட்டு கருத்துகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மகாராஷ்டிர கூட்டுறவுத் துறை அமைச்சர் பாபாசாகேப் பாட்டில் கடந்த சனிக்கிழமை அம்பதாஸ் பவார் வீட்டுக்கு நேரடியாக சென்றார். மேலும், கூட்டுறவு சொசைட்டியில் பவார் பெயரில் இருந்த…
சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ஐசிஎஃப் 25-21, 25-9, 25-14 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ஐஓபி 25-22, 25-22, 25-21 என்ற செட் கணக்கில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி அணியை தோற்கடித்து பட்டம் வென்றது. பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையுடன் தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் தலைவர் பொன் கவுதம் சிகாமணி, வருமான வரித்துறை ஆணையர் பாண்டியன், எஸ்என்ஜே குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயமுருகன், ஜிஎஸ்டி ஆணையர் மாணிக்கவேல், ரோமா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ராஜன், தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் பொருளாளர் செல்வகணேஷ், பொதுச் செயலாளர் மார்ட்டின் சுதாகர்,…
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 4ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 5-ம் தேதி டெக்சாஸ் மாகாணம், ஹில் கன்ட்ரி பகுதியில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 37 பேர் உயிரிழந்தனர். மேற்கு கெர் பகுதியில் மாணவிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 750 மாணவிகள் தங்கியிருந்தனர். குவாடலூப் நதி வெள்ளத்தில் சிறப்பு முகாமின் கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பெரும்பாலான மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.…
கோவை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்குகிறார். இதையொட்டி ரோடு ஷோ நடத்தும் அவர் பல்வேறு இடங்களில் மக்களிடம் பேசுகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை இன்று தொடங்குகிறார். காலை 9 மணிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ர காளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். மாலை 4.35 மணிக்கு மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே ரோடு ஷோ நடத்துகிறார். தொடர்ந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், காரமடை பேருந்து நிறுத்தம், பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம், துடியலூர் ரவுண்டானா மற்றும் சரவணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இரவு கோவையில் தங்கும் அவர்…
டாக்டர் ச ura ரப் சேத்தி உணவின் மருத்துவ சக்தியை எடுத்துக்காட்டுகிறார், பொதுவான சுகாதார பிரச்சினைகளுக்கு உணவு மாற்றங்களை பரிந்துரைக்கிறார். அவற்றின் நைட்ரேட் உள்ளடக்கத்தை மேற்கோள் காட்டி, உயர் இரத்த அழுத்தத்திற்கு பீட்ஸை அவர் பரிந்துரைக்கிறார். ஓட்ஸ் நீரிழிவு நிர்வாகத்திற்கு அவற்றின் கரையக்கூடிய நார்ச்சத்து காரணமாக பரிந்துரைக்கப்படுகிறது. கெமோமில் தேநீர் பதட்டத்தை குறைக்கும், அதே நேரத்தில் அவுரிநெல்லிகள் மனச்சோர்வை எதிர்த்துப் போராடுகின்றன. உணவு ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் சாப்பிடுவது நம் உடல்கள், மனம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் உணவு மருந்து என்று நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?டாக்டர் படி. கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ச ura ரப் சேத்தி, சரியான உணவுகள் நம்மை வளர்ப்பது மட்டுமல்லாமல் குணமாகும். “உங்கள் உணவுத் தேர்வுகள் உங்கள் ஆற்றலை மட்டுமல்ல, உங்கள் இரத்த…
ரேவா: பழங்கால நாணயங்களுக்கு ரூ. 2 கோடி வரை தருவதாக கூறி சைபர் மோசடியில் சிக்கி ஏமாந்த 65 வயது முதியவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் ரேவா நகரைச் சேர்ந்தவர் சரோஜ் துபே (65). இவர் பள்ளி ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஜூலை 1-ம் தேதி அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. பழங்கால நாணய நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொண்டு அலங்கார மற்றும் பாரம்பரிய நோக்கங்களுக்காக அரசு பழங்கால நாணயங்களை வாங்குவதாகவும் அதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதாகவும் ஆசை காட்டியுள்ளார். இதனை நம்பி தான் வைத்துள்ள பழங்கால நாணயங்களின் படங்களை சைபர் மோசடி நபருக்கு துபே அனுப்பியுள்ளார். இதற்காக ரூ.66.75 லட்சம் வழங்குவதாகவும் செயலாக்க கட்டணமாக ரூ.520 செலுத்துமாறும் அந்த மோசடி கும்பல் துபேயிடம் கூறியுள்ளது. இதனை உண்மை என நம்பி…
Last Updated : 07 Jul, 2025 06:34 AM Published : 07 Jul 2025 06:34 AM Last Updated : 07 Jul 2025 06:34 AM புதுடெல்லி: ரெடிட் சமூக ஊடகத்தில் ஒருவர் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு உடலில் அரிப்பு, வீக்கம், உணர்வின்மை, தலைவலி என விவரிக்க முடியாத பல அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. அவர் அனைத்து வகையான பரிசோதனைகளையும் எடுத்தார். ஆனால் அவரது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கு மருத்துவ நிபுணர்களால் சரியான காரணத்தை கடந்த 10 ஆண்டுகளாக கண்டறிய முடியவில்லை. இதனால் அவர் சாட் ஜிபிடி தளத்தில் தனது உடலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தேடியுள்ளார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சாட் ஜிபிடி அளித்த தகவலில், அவருக்கு homozygous A1298C MTHFR mutation பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. மரபணு மாற்றத்தால் ஏற்படும் இந்த பாதிப்பு 7 முதல் 12 சதவீதம் பேருக்கு…
சென்னை: கல்லூரி படிப்பை முடித்துவிட்டு புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவிலான வேலைவாய்ப்பு இணையதளமான இன்டீட், ‘இன்னாகுரல் பேமேப் சர்வே’ என்ற பெயரில் ஆய்வு மேற்கொண்டது. கரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் சம்பள அளவு, துறைசார் போக்கு மற்றும் தொழிலாளர் மனநிலையை புரிந்து கொள்வதற்காக, பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் 1,311 அதிகாரிகள் மற்றும் 2,531 ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் சம்பள கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. புதியவர்களுக்கான (0 முதல் 2 ஆண்டு அனுபவம்) தொடக்க நிலை சம்பளப் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. புதியவர்கள் மாதம் ரூ.30,100 சம்பாதிக்கிறார்கள். இதுபோல மும்பை, ஹைதராபாத்தில் புதியவர்களுக்கான மாத சம்பளம் 28,500 ஆகவும் பெங்களூருவில் ரூ.28,400 ஆகவும் உள்ளது. மென்பொருள் மேம்பாடு முதல் பொறியாளர்கள் வரை பல்வேறு பணிகளில் சேரும் புதியவர்கள் சராசரியாக…
கள்ளக்குறிச்சி: பாமக தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சி தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 3 மாதங்களாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்த ராமதாஸ், தலைவர் பதவியில் தான் தொடர்வதாக தெரிவித்தார். ஆனால், தன்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு இல்லை என்று அன்புமணி கூறி வருகிறார். இதற்கிடையே, கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், அவர்களுக்கு அன்புமணி பதவி வழங்குவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தைலாபுரத்தில் நேற்று முன்தினம் பாமக தலைமை நிர்வாக குழுவை கூட்டினார் ராமதாஸ். இக்குழுவில் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி, தீரன் உள்ளிட்ட 19 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த கூட்டத்தில் அன்புமணி, வடிவேல் ராவணன், திலகபாமா, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர்…
