Author: admin

புரி: புரி ஜெகந்​நாதருக்கு நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. கடந்த 1460-ம் ஆண்​டில் அப்​போதைய கலிங்க மன்​னர் கபிலேந்​திர தேவா, தக்​காணத்து போர்​களில் வெற்றி பெற்று தங்க நகைகள், வைரங்​களு​டன் ஒடிசா திரும்​பி​னார். இந்த தங்க நகைகள், வைரங்​களை புரி ஜெகந்​நாதர் கோயிலுக்கு அவர் காணிக்​கை​யாக வழங்​கி​னார். அப்​போது ​முதல் புரி ஜெகந்​நாதர் கோயி​லில் சுனா பேஷா என்ற சிறப்பு நிகழ்ச்சி நடை​பெறுகிறது. ஆரம்ப காலத்​தில் சுமார் 138 தங்க நகைகளால் ஜெகந்​நாதருக்கு அலங்​காரம் செய்​யப்​பட்​டது. தற்​போது இந்த எண்​ணிக்கை 20 முதல் 30 ஆகக் குறைந்​துள்​ளது. கடந்த ஜூன் 27-ம் தேதி ஒடி​சா​வின் புரி ஜெகந்​நாதர் கோயில் ரத யாத்​திரை தொடங்​கியது. இந்த ரத யாத்​திரை​யின் 10-வது நாளான நேற்று சுனா பேஷா நிகழ்ச்சி நடை​பெற்​றது. அப்​போது ஜெகந்​நாதர் மற்​றும் பால பத்​ரர், சுபத்ரா தேவிக்கு 208 கிலோ தங்க நகைகளால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. மாலை…

Read More

அஸ்தானா: உலக குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி, அமெரிக்காவின் யோஸ்லின் பெரெஸை எதிர்த்து விளையாடினார். இதில் தனது அதிரடியான தாக்குதல்களால் யோஸ்லின் பெரேஸை நிலைகுலையச் செய்தார் சாக்‌ஷி. இதனால் 3 நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி சாக்‌ஷி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மீனாக்‌ஷி 2-3 என்ற கணக்கில் கஜகஸ்தானின் நாசிம் கைசைபேவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

Read More

நாம் அனைவரும் பாப்கார்னை விரும்புகிறோம். குழந்தைகளும் பாப்கார்ன் சாப்பிடுகிறார்கள். இருப்பினும், இந்த கடையில் வாங்கிய பாப்கார்ன்களில் சோளத்தை விட அதிகம். உடலில் அழிவை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் அவற்றில் உள்ளன. பல பிராண்டுகளில் பெர்- மற்றும் பாலிஃப்ளூரோஅல்கில் பொருட்கள் (பி.எஃப்.ஏ), ‘என்றென்றும் கெமிக்கல்ஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றன, அவற்றின் பை லைனிங். மேலும், பாப்கார்னின் வெண்ணெய் சுவை அஸ்டியாசெட்டிலேண்ட் அதன் மாற்று, 2,3-பென்டானெடியோன் (அசிடைல் புரோபியோனில்) சுவை கொண்ட ரசாயனங்களிலிருந்து வருகிறது. இந்த இரசாயனங்கள் சுகாதார அபாயங்கள். பெரிய அளவில் உள்ளிழுக்கும்போது அவை சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.சரி, உங்கள் குழந்தைகளுக்கு பாப்கார்னை முழுவதுமாக வழங்குவதைத் தவிர்க்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. கடையில் வாங்கிய தயாராக இருக்கும் பாப்கார்ன் பாக்கெட்டுகளுக்கு பதிலாக, கரிம வெற்று கர்னல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வீட்டிலேயே செய்யுங்கள். இது நிச்சயமாக அதிக நேரம் நுகரும், ஆனால் அது அனைத்து உடல்நல அபாயங்களையும் அகற்றும்.

Read More

லக்னோ: நக்​சல் ஒழிப்பு நடவடிக்​கை​யில் மத்​திய அரசு கடந்த சில ஆண்​டு​களாக தீவிர​மான நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இந்​நிலை​யில் நக்​சலைட்​கள் கண்​காணிப்பு பணிக்​காக ட்ரோன்​களை பயன்​படுத்​து​வது கண்​டறியப்​பட்​டது. இது குறித்து தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) தீவிர விசா​ரணை நடத்​தி​ய​தில் உத்தர பிரதேசம் மது​ராவைச் சேர்ந்த விஷால் சிங் என்​பவர் நக்​சலைட்​களுக்கு ட்ரோன்​களை விநி​யோகம் செய்​தது கண்​டறியப்​பட்​டது. அவர் கடந்த மாதம் 29-ம் தேதி டெல்​லி​யில் கைது செய்​யப்பட்டார். அவரிடம் நடத்திய விசா​ரணையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அவ்​வப்​போது அறி​முக​மாகும் நவீன ட்ரோன்​களை பிஹாரின் சக்​கர்​பந்தா -பச்​ரு​கியா வனப்​பகு​தி​யில் உள்ள நக்​சல் தலை​வர்​களுக்கு விநி​யோகித்த​து தெரியவந்தது. அதோடு வனப்​பகு​தி​யில் உள்ள நக்​சலைட் முகாம்​களுக்கே சென்று நக்​சலைட்​களுக்கு ட்ரோன்​களை இயக்​கு​வதற்​கான பயிற்​சி​யை​யும் இவர் அளித்​துள்​ளார். மேலும் நக்​சல் வேட்​டை​யில் ஹார்டு டிஸ்க், பென் டிரைவ், செல்​போன்​கள் உட்பட பல பொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. நக்​சலைட்​களின் திட்​டங்​களை அறிய இந்த டிஜிட்​டல் பொருட்​களை எல்​லாம்…

Read More

பர்மிங்காம்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார். அதேவேளையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 184, ஹாரி புரூக் 158 ரன்கள் விளாசினர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்களை வீழ்த்தினர். 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 83 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 427 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 161, ரவீந்திர ஜடேஜா 69, ரிஷப் பந்த் 65, கே.எல் ராகுல் 55 ரன்கள் சேர்த்தனர்.…

Read More

திருப்புவனம்: தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கு தொடர்​பாக விசா​ரணை நடத்​திய மதுரை மாவட்ட நீதிப​தி, தனது அறிக்​கையை நாளை தாக்​கல் செய்​கிறார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மாரிடம், நகை திருட்டு தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அப்​போது அஜித்​கு​மார் மற்​றும் அவரது சகோ​தரர் நவீன்​கு​மார் ஆகியோரை போலீ​ஸார் தாக்​கி​யுள்​ளனர். பின்​னர் நவீன்​கு​மாரை விட்​டு​விட்​டு, அஜித்​கு​மாரை டிஎஸ்​பி-​யின் தனிப்​படை போலீ​ஸார் தாக்​கி​யுள்​ளனர். இதில் அவர் உயி​ரிழந்​தார்.இது தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் ராஜா, பிரபு, கண்​ணன்,ஆனந்த், சங்கர மணி​கண்​டன் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வு, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்​தர்​லால் சுரேஷ் விசா​ரணை நடத்​தி, ஜூலை 8-ம் தேதிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டது. அதன்​படி, மாவட்ட நீதிபதி கடந்த 2-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை…

Read More

புதுடெல்லி: “உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது” என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. ‘வறுமை மற்றும் சமத்துவம்’ தொடர்பான கினி குறியீட்டு அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. கினி குறியீடு என்பது ஒரு நாட்டின் மக்கள்தொகையில் வருவாய் மற்றும் செல்வ சமத்துவமின்மை தொடர்பான அளவீடாகும். கினி அட்டவணையின்படி 0 (சரியான சமத்துவம்) முதல் 100 (முழுமையான சமத்துவமின்மை) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், குறைந்த மதிப்பெண் பெறும் நாடுகளில் மிகவும் சமமான விநியோகம் உள்ளதை குறிக்கும். இந்த அறிக்​கை​யில் இந்​தி​யாவை பற்றி கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா 25.5 என்ற கினி குறி​யீட்டு மதிப்​பெண் பெற்​றுள்​ளது, இது வரு​வாய் சமத்​து​வத்​தில் உலகள​வில் 4-வது சமமான நாடாக உள்​ளது. ஸ்லோ​வாக் குடியரசு, ஸ்லோவேனியா மற்​றும் பெலாரஸ் நாடு​களுக்கு அடுத்து இந்​தியா 4-வது இடத்​தைப் பிடித்​துள்​ளது. கினி குறி​யீட்​டின்​படி இந்​தியா 25.5 புள்​ளி​களை பெற்​றுள்​ளது. கடந்த 2011-ம் ஆண்டு கினி அட்​ட​வணை​யில் இந்​தியா 28.8…

Read More

உயர் இரத்த சர்க்கரை அல்லது நீரிழிவு, ஒரு நாள்பட்ட, பெரும்பாலும் ஆயுட்காலம் என்பது உடல் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலின் திறம்பட பயன்படுத்த முடியாது, இது அதிக இரத்த சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கிறது. இன்சுலின், ஒரு ஹார்மோன், இரத்த குளுக்கோஸை ஒழுங்குபடுத்துகிறது. போதுமான இன்சுலின் இல்லாதபோது அல்லது அது சரியாகப் பயன்படுத்தப்படாதபோது, ​​குளுக்கோஸ் இரத்தத்தில் உருவாகிறது, இது காலப்போக்கில் பல்வேறு உறுப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். நீரிழிவு நோயைச் சரிபார்க்க சிறந்த வழி இரத்த பரிசோதனை மூலம் இருந்தாலும், உங்கள் உடலில் சில அறிகுறிகள் உள்ளன. அவற்றில் 7 இங்கே. இவற்றில் சிலவற்றை நீங்கள் கவனித்தால், தயவுசெய்து சோதனை செய்யுங்கள்.அடிக்கடி சிறுநீர் கழித்தல்நீரிழிவு நோயின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியம், குறிப்பாக இரவில், உங்கள் நீர் உட்கொள்ளல் அப்படியே இருந்தபோதிலும். இரத்த சர்க்கரை அளவு…

Read More

சிலியில் ஒரு மலை, நாட்கள் வறண்டு, இரவுகள் தெளிவாக உள்ளன, விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் குழு சமீபத்திய காலங்களில் மிக முக்கியமான வானியல் பணிகளில் ஒன்றிற்கு தயாராகி வருகிறது. அவர்களில் க்ஷிதிஜா கெல்கர்யாருடைய வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தை எடுத்துள்ளது.இருபது ஆண்டுகளுக்கு முன்பு புனேவில், அவர் முதலில் வந்த நகரம், கெல்கர் ஒரு டிஜிட்டல் கேமராவுடன் எடுத்திருந்த சந்திர கிரகணத்தின் புகைப்படத்தை ஸ்கை மற்றும் தொலைநோக்கி என்ற பிரபலமான வானியல் பத்திரிகைக்கு அனுப்பினார். வெளியீடு புகைப்படத்தை ஏற்றுக்கொண்டு அதன் இணையதளத்தில் ‘வாரத்தின் புகைப்படம்’ கீழ் வெளியிட்டது.ஊக்கமளித்த, கெல்கர் வானியல் ஒரு தொழிலாக மாறுவார், மேலும் புனே பல்கலைக்கழகம், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் விண்மீன் திரள்கள் அவற்றின் கொத்துக்களில் எவ்வாறு மாறுகின்றன என்பது குறித்த முனைவர் பட்டவர்களில் இருந்து பட்டம் பெற்ற பிறகு, தனது ஆராய்ச்சிக்கு தொலைநோக்கிகளைப் பயன்படுத்துவதற்கான மானியத்தில் சிலிக்கு வந்த அவர் சிலிக்கு வந்தார்.இன்று, அந்த புகைப்படத்திற்குப் பிறகு அவர்…

Read More

Last Updated : 07 Jul, 2025 07:28 AM Published : 07 Jul 2025 07:28 AM Last Updated : 07 Jul 2025 07:28 AM திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானத்தை சரி செய்ய பிரிட்டிஷ் விமான பொறியாளர்கள் திருவனந்தபுரம் வந்துள்ளனர். இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபவதற்காக பிரிட்டிஷ் கடற்படையின் எச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த மாதம் வந்தது. இதில் இருந்து புறப்பட்ட எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி அவசரமாக தரையிறங்கியது. இதை பழுது பார்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்த விமானத்தின் இறக்கைகளை பிரித்து ஜம்போ விமானத்தில் ஏற்றிச் செல்வதிலும் சிரமங்கள் இருந்தன. இதனால் பிரிட்​டிஷ் விமான பொறி​யாளர்​கள் குழு, ராயல் விமானப்​படை​யின் ஏர்​பஸ் ரக…

Read More