Author: admin

திருப்பூர்: இளம்பெண் ரிதன்யா மரணத்துக்கு நீதி கேட்டு, அவிநாசியில் திங்கள்கிழமை மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த ரிதன்யா திருமணம் நடந்த 78 நாளில் கணவர் குடும்பத்தினரின் கொடுமை தாங்காமல் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தைக்கு அவர் அனுப்பிய வாட்ஸ் அப் ஆடியோ, சமூகத்தில் பலரையும் உலுக்கியது. இதுதொடர்பாக, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரிதன்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதில் பெண்கள், பல்வேறு சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக பங்கேற்று ரிதன்யா உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டுதான்…

Read More

புதுடெல்லி: பெரும்பான்மை சமூகமான இந்துக்களைக் காட்டிலும் சிறுபான்மை சமூகங்கள்தான் அரசிடம் இருந்து அதிக நிதியையும் ஆதரவையும் பெறுவதாக மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, அனைவரின் ஆதரவுடன், அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் முயற்சிகளுடன் அனைவரின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவது என்ற கொள்கையை முன்னெடுத்து வருகிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றி, சிறுபான்மை விவகார அமைச்சகம் கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறது. இதனால், சிறுபான்மை சமூகங்கள் நாட்டின் வளர்ச்சியுடன் இணைந்து சுறுசுறுப்பான, சமமான பங்கேற்பாளர்களாக இருக்கிறார்கள். நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், பெரும்பான்மை சமூகமான இந்துக்களைக் காட்டிலும் சிறுபான்மை சமூகங்கள் அரசிடம் இருந்து அதிக நிதியையும் ஆதரவையும் பெறுகின்றன. இந்துக்களுக்கு என்ன கிடைக்கிறதோ, அது சிறுபான்மையினருக்கும் கிடைக்கிறது. ஆனால், சிறுபான்மையினருக்கு என்ன…

Read More

கோவை: “இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்று பேசினாலும், ‘மதவாத கட்சி பாஜக’ என்று கூறுகிறார். அன்று பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது ‘மதவாத கட்சி’ என்பது தெரியவில்லையா?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தனது பிரச்சார பயணத்தை இன்று (ஜூலை 7) தொடங்கினார். மேட்டுப்பாளையம் பகுதியில் ரோடு ஷோவில் பங்கேற்ற அவர், பிரச்சார வேனில் நின்றவாறு பொதுமக்களிடையே பேசும்போது, “அதிமுக கூட்டணிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு என்பது வெள்ளத்தில் நீந்தி வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு உள்ளது. கோவை மக்களின் இந்த ஆதரவை கண்டிருந்தால் முதல்வருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கும். இதன் மூலம், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்பது உறுதி…

Read More

சரி, இப்போது வேடிக்கையான பகுதிக்கு, உண்மையில் அதை எவ்வாறு பயன்படுத்துவது. கவலைப்பட வேண்டாம், இது சூப்பர் சில் மற்றும் உங்கள் வழக்கத்தில் சேர்க்க எளிதானது.இங்கே நீங்கள் அதை எவ்வாறு தயாரிக்கிறார்:உலர்ந்த கோண்ட் கட்டிராவின் 1-2 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்ஒரே இரவில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைக்கவும்காலையில், இது ஒரு தெளிவான, ஜெல்லி போன்ற குமிழியாக மாறும்அதை ஒரு முறை துவைத்து ஏற்றம், அது உருட்ட தயாராக உள்ளது

Read More

ஹைதராபாத்: இந்துக்களைக் காட்டிலும் சிறுபான்மையினர் தான் அரசிடம் இருந்து அதிக நிதி, ஆதரவை பெறுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு எதிர்வினையாற்றியுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘சிறுபான்மையினருக்கு கிடைப்பது அடிப்படை உரிமை; நன்கொடை அல்ல” என்று பதிலடி தந்துள்ளார். “குடியரசு நாடான இந்தியாவின் அமைச்சர் நீங்கள். மன்னர் அல்ல. நீங்கள் அரசமைப்பின் முறைப்படி பதவியில் உள்ளீர்கள். சிறுபான்மையினருக்கு கிடைப்பது அடிப்படை உரிமை; நன்கொடை அல்ல. பாகிஸ்தானியர், வங்கதேசத்தவர், ஜிஹாதி, ரோஹிங்கியா மக்கள் என அன்றாடம் சொல்வதுதான் ஆதாயமா? கூட்டமாக இணைந்து தாக்குவதுதான் பாதுகாப்பா? இந்திய மக்கள் கடத்தப்பட்டு வங்கதேசத்தில் வலுக்கட்டாயமாக புகுத்துவது பாதுகாப்பா? அதுவும் இல்லையென்றால் எங்களது வீடுகள், வழிபாட்டு கூடங்களை புல்டோசர் கொண்டு இடிப்பதா? அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக நசுக்கப்படுவது பாதுகாப்பா? அனைத்துக்கும் மேலாக பிரதமரின் வெறுப்பு பேச்சுகளுக்கு டார்கெட்டாக இருப்பதா? இந்தியாவில் முஸ்லிம்கள் குடிமக்களாக சமமான முறையில் நடத்தப்படுவதில்லை. இரண்டாம் தர…

Read More

புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்த நிலையில் தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர். மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாராவின் 400 ரன் சாதனையை தகர்க்கும் வாய்ப்பு இருந்தும் அதை அவர் தவிர்த்தார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நடப்பு டெஸ்ட் உலக சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணியில் சீனியர் வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ள நிலையில், இளம் வீரர்கள் உடன் அந்த அணி இந்த தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது தென் ஆப்பிரிக்கா. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புலவாயோவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, பந்து வீச முடிவு…

Read More

விழுப்புரம்: ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் பரபரப்பன சூழலில், விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக செயற்குழு நாளை (ஜூலை 8) காலை கூடுகிறது. இக்கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தை அன்புமணி புறக்கக்கணிக்கக் கூடும் என தெரிகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் பாமக பிளவுப் பட்டு உள்ளது. இரு கோஷ்டிகளாக நிர்வாகிகள் மற்றும் தொண்டனர் பிரிந்துள்ளனர். நீயா, நானா என பார்த்து விடுவோம் என்ற முடிவில் இருவரும் உள்ளனர். ராமதாஸும், அன்புமணியும் தங்களது எதிர் முகாமில் உள்ளவர்களை பரஸ்பரம் நீக்கி வருகின்றனர். இதன் உச்சமாக, பாமக கொறடா பொறுப்பில் இருந்து ராமதாஸ் ஆதரவு பெற்றவரான சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை நீக்குமாறு சட்டப்பேரவைத் தலைவரிடம் அன்புமணியின் கடிதத்தை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் கொடுத்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில், பாமக கொறடா பொறுப்பில் எம்எல்ஏ அருள்…

Read More

செல்வத்தையும் செழிப்பையும் அடையாளப்படுத்தும் லட்சுமி தெய்வத்தின் ஆசீர்வாதங்களைத் தேடுவதிலிருந்து, துர்கா தெய்வத்தின் உமிழும் ஆற்றலைத் தூண்டுவது வரை, சிவப்பு நிறமானது நீண்ட காலமாக இந்து கலாச்சாரத்தில் ஒரு புனிதமான இடத்தை வைத்திருக்கிறது. ஒரு நிழலை விட, சிவப்பு சக்தியை, தெய்வீக பெண்பால் சக்தியைக் குறிக்கிறது. இது காதல், பாதுகாப்பு, கருவுறுதல், ஆர்வம் மற்றும் பின்னடைவு ஆகியவற்றைக் குறிக்கிறது. இது வெறுமனே ஒரு பண்டிகை நிறம் அல்ல, ஆனால் துணியால் மூடப்பட்ட ஒரு ஆன்மீக சக்தி. ஆகவே, இந்த சவான் சோம்வார், சிவபெருமானுக்கு உங்கள் பிரார்த்தனைகளை வழங்கும்போது, ​​ஒரு பாரம்பரிய சிவப்பு சேலையில் உங்களை நீட்டி, உங்கள் உள் தெய்வத்தை சேனல் செய்யுங்கள். வண்ணம் உங்கள் ஒளியை உயர்த்தட்டும், பக்தி மற்றும் பாணி இரண்டையும் கருணையுடன் கொண்டாடட்டும். நீங்கள் சில உத்வேகங்களைத் தேடுகிறீர்களானால், இந்த அதிர்ச்சியூட்டும் தென்னிந்திய நடிகைகள் சிவப்பு புடவைகளை பாரம்பரியம், நேர்த்தியுடன் மற்றும் தெய்வீக ஆற்றலின் அடையாளங்களாக மாற்றும் கலையை…

Read More

சாதாரண இரத்த அழுத்தத்துடன் எப்போதாவது ஒரு மருத்துவரின் அலுவலகத்திற்குள் நுழைந்தார், ஆனால் மருத்துவர் அதை எடுக்கும்போது அது அதிகமாக மாறும்? இல்லை, நீங்கள் தனியாக இல்லை. இது நம்மில் பலருக்கு நிகழும் மிகவும் உண்மையான காட்சி. இது வெள்ளை கோட் உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது பாதிப்பில்லாதது என்று நீண்ட காலமாக நினைத்தாலும், அது இப்போது ஓரளவு தொடர்புடையதாக மாறிவிடும். பார்ப்போம் …வெள்ளை கோட் உயர் இரத்த அழுத்தம் என்றால் என்னவெள்ளை கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு மருத்துவரின் கிளினிக் அல்லது மருத்துவமனையில் அளவிடும்போது, ​​வீட்டிலோ அல்லது பிற இடங்களிலோ இருப்பதை விட உங்கள் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பெரும்பாலும் அணியும் வெள்ளை கோட்டுகளிலிருந்து இந்த பெயர் வருகிறது. சிலருக்கு, மருத்துவர்களைச் சுற்றி இருப்பது அவர்களை பதட்டமாகவோ அல்லது ஆர்வமாகவோ ஆக்குகிறது, இது அவர்களின் இரத்த அழுத்தம் தற்காலிகமாக…

Read More

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது; காணாமல் போனோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 4-ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டடு, சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது. இதனால் கடந்த 5-ம் தேதி டெக்​சாஸ் மாகாணம், ஹில் கன்ட்ரி பகு​தி​யில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடு​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்லப்​பட்​டன. டெக்சாஸில் வெள்ளப் பாதிப்பு காரணமாக இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேர் காணாமல் போயுள்ளதாகவும், காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அம்மாகாண ஆளுநர் கிரெக் அபோட் கூறினார். மீட்புப் பணிகள்…

Read More