Author: admin

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விவிசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது பேராசிரியை நிதிதா நகை திருட்டுப் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து அஜித்குமார் காவல் மரணம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீஸார் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும், அஜித்குமார் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அஜித்குமார் மரணம் தொடர்பாக மதுரை 4வது கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.…

Read More

டாக்டர் நேனே அரிதாக தலைப்புச் செய்திகளை உருவாக்கும் ஒன்றை எடுத்துரைத்தார்: 20% நிகழ்வுகளில், மாரடைப்பு எந்த அறிகுறிகளையும் முன்வைக்கவில்லை. இவை “அமைதியான மாரடைப்பு” என்று அழைக்கப்படுகின்றன. நசுக்கிய மார்பு வலி இல்லை, மூச்சுக்கு மூச்சுத்திணறல் இல்லை, உடல் எப்படி உணர்கிறது என்பதில் ஒரு நுட்பமான மாற்றம்.இந்த அமைதியான நிகழ்வுகளில் பலவற்றில், தனிநபர்கள் திடீரென சரிந்து, மயக்கம் அடைகிறார்கள், அல்லது உயிரியல் ரீதியாக உணர்கிறார்கள். விவரிக்க கடினமாக இருக்கும் அமைதியின் உணர்வு இருக்கலாம். இங்கே உண்மையில் என்ன நடக்கிறது என்பது மிகவும் தீவிரமானது: இதயம் திறம்பட உந்தி, இரத்தத்தை அடைவதை நிறுத்துகிறது, இருதயக் கைது பின்பற்றப்படலாம். இது வியத்தகு அல்ல, இது திடீர் மற்றும் ஆபத்தானது.

Read More

புதுடெல்லி: “நான் ஒரு பகுதிநேர நடிகர்; முழுநேர அரசியல்வாதி” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்மிருதி இரானி. பாஜகவில் இணைந்த அவர், தொடர்ந்து கட்சிப் பணிகளை ஆற்றிவந்தார். 2014 முதல் 2024 வரை மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, 2024 தேர்தல் தோல்வியால் மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். `கியூன்கி சாஸ் பி கபி பஹு தி: ரீபூட்’ என்ற டி.வி. தொடரின் புரமோ நேற்று வெளியானது. அதில், ஸ்மிருதி இரானி நடித்துள்ளார். இந்தத் தொடரில் துளசி விர்வானி என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றியுள்ளார். மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருப்பது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்மிருதி இரானி, “முதலில் நான் ஓர் அரசியல்வாதி; முழுநேர அரசியல்வாதி. அதேநேரத்தில், பகுதிநேர நடிகர். மீண்டும் நடிக்க வந்திருப்பது…

Read More

கடலூர்: கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், கேட் கீப்பர் செயலைச் சுட்டிக்காட்டி விதிகள் மற்றும் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, ‘இந்த லெவல் கிராசிங் கேட்டில் ரயில்வே நிதியுடன் சுரங்கப்பாதை அமைக்க ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஓர் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை’ என்று குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு 4 மாணவர்களுடன் சென்ற பள்ளி வாகனம் கடலூர் – ஆலப்பாக்கம் ரயில் நிலையம் இடையே 170 எண் கொண்ட ரயில்வே லெவல் கிராசிங் கேட் கடக்க முயன்றபோது, ஒரு துரதிருஷ்டவசமான விபத்து ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்…

Read More

இந்த நாட்களில் உளவியல் அடிப்படையிலான ஆளுமை சோதனைகள் மிகவும் பிரபலமாக உள்ளன, ஏனெனில் மக்கள் தங்களைப் பற்றி மேலும் அறிய ஆர்வமாக உள்ளனர். இந்த சோதனைகள் நடத்தை, விருப்பத்தேர்வுகள் மற்றும் முடிவெடுக்கும் முறைகளை பகுப்பாய்வு செய்ய உளவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்துகின்றன, பயனர்களுக்கு அவர்களின் ஆளுமைப் பண்புகளைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்குகின்றன. வேடிக்கையான பட அடிப்படையிலான மாயைகள் முதல் மிகவும் கட்டமைக்கப்பட்ட வினாடி வினாக்கள் வரை, அவை தன்னை நன்றாக புரிந்துகொள்ள விரைவான மற்றும் ஈர்க்கக்கூடிய வழிகளை வழங்குகின்றன. சமூக ஊடகங்களில் அவர்கள் எழுந்தால் சார்பியல், பகிர்வு மற்றும் புரிந்துகொள்ளும் மனித விருப்பம் ஆகியவற்றால் தூண்டப்படுகிறது. பொழுதுபோக்கு அல்லது சுய வளர்ச்சியாக இருந்தாலும், இந்த சோதனைகள் பயனர்களை பிரதிபலிக்க, மற்றவர்களுடன் இணைக்க, மற்றும் தனிப்பட்ட பலங்கள், உணர்ச்சி போக்குகள் மற்றும் உறவு இயக்கவியல் ஆகியவற்றில் ஒளி, அணுகக்கூடிய வழியில் தெளிவைப் பெற அனுமதிக்கின்றன.உதாரணமாக, இந்த குறிப்பிட்ட சோதனையில் நான்கு வெவ்வேறு விலங்குகள்…

Read More

சென்னை: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ – மாணவியர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ – மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இந்த மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரையும் வேதனையையும் தருகிறது. இவ்விபத்தில் படுகாயமுற்றவர்களுக்கு முதல்வரின் உத்தரவின் பேரில் உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது மாதிரியான விபத்துகள் இனியும் தொடராத வகையில் அனைத்து தரப்பிலிருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார். கடலூர் விபத்து பின்னணி: கடலூர் தனியார் பள்ளி…

Read More

இது உங்கள் சருமத்திற்கு ஒரு இனிமையான விருந்து, அதாவது.என்ன செய்வது:ஒரு சிறிய சிட்டிகை இலவங்கப்பட்டை கொண்டு ஒரு ஸ்பூன் தேன் கலக்கவும். பிளாக்ஹெட்ஸ் உள்ள பகுதிகளில் அதைத் தட்டவும், 10-15 நிமிடங்கள் காத்திருங்கள், பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.இது ஏன் வேலை செய்கிறது:தேன் பாக்டீரியாவுடன் போராடுகிறது, இலவங்கப்பட்டை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஒன்றாக, அவர்கள் உங்கள் துளைகளில் குப்பைகளை அழித்து, உங்கள் சருமத்தை மகிழ்ச்சியாகவும் சுத்தமாகவும் உணர்கிறார்கள்.நீங்கள் இருக்கும்போது சில விரைவான உதவிக்குறிப்புகள்:உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு 10 முறை கழுவ வேண்டாம். அது அதை உலர்த்துகிறது மற்றும் அதிக எண்ணெயை ஏற்படுத்துகிறது.உங்கள் தலையணை பெட்டியை அடிக்கடி மாற்றவும். இது எண்ணெய், அழுக்கு மற்றும் பாக்டீரியா மீது வைத்திருக்கிறது.எப்போதும் நீரேற்றமாக இருங்கள். நீர் = பளபளப்பு.உங்கள் பிளாக்ஹெட்ஸை அழுத்துவதையோ அல்லது குத்துவதையோ தவிர்க்கவும். இது விஷயங்களை மோசமாக்குகிறது (மேலும் வடுக்களை விடலாம்).

Read More

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பெஞ்சமின் நெதன்யாகு, நேற்றிரவு (திங்கள்கிழமை) டொனால்டு ட்ரம்ப்பின் இரவு விருந்தில் பங்கேற்றார். முன்னதாக, ட்ரம்ப்பிடம் நெதன்யாகு ஒரு கடிதம் வழங்கினார். அப்போது பேசிய அவர், “அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒன்றன் பின் ஒன்றாக நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அமைதியை ஏற்படுத்துகிறார். எனவே, நோபல் பரிசு கமிட்டிக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை நான் தற்போது தங்களுக்கு வழங்குகிறேன். அமைதிக்கான நோபல் பரிசு பெற நீங்கள் தகுதியானவர். நீங்கள் அதைப் பெற வேண்டும்” என கூறினார். நெதன்யாகுவின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய டொனால்டு ட்ரம்ப், “மிக்க நன்றி. நீங்கள் பரிந்துரை கடிதம் அனுப்பி இருப்பது எனக்குத் தெரியாது. குறிப்பாக, நீங்கள் என்னை பரிந்துரைத்திருப்பது உண்மையில் அர்த்தம் நிறைந்தது. மிக்க நன்றி. நான் போர்களை நிறுத்துகிறேன். மக்கள் கொல்லப்படுவதை நான்…

Read More

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. தைலக்காப்பு சாற்றப்பட்டதால் 48 நாள் பெருமாளின் திருமேனியில் முகம் மட்டுமே காண முடியும். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆறு அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்தனர். அங்கு கோயில் வழக்கப்படி கோயில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் காவிரி ஆற்றில் 1 தங்கக் குடம், 28 வெள்ளிக் குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து 7 மணிக்கு தங்கக்குடத்தில்…

Read More

சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 18-07-2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார். ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. சுதந்​திர தினத்தை முன்​னிட்டு ஆகஸ்ட் 13, 14-ல்…

Read More