Last Updated : 09 Jul, 2025 07:08 AM Published : 09 Jul 2025 07:08 AM Last Updated : 09 Jul 2025 07:08 AM மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தமிழில் தனுஷின் ‘சீடன்’, சசிகுமார், சூரியுடன் ‘கருடன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர், தனது இன்ஸ்டாகிராம் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேஸ்புக்கில் தெரிவித்துள்ள அவர், “எனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கணக்கிலிருந்து தகவல் வந்தால் அது என்னுடையது அல்ல. அதிலிருந்து வரும் சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை கிளிக் செய்யவோ அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ வேண்டாம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மீட்கப்பட்டதும் அறிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!
Author: admin
சென்னை: தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காக நவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய செயலியின் செயல்பாடு குறித்து, கட்சியின் நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. தவெக சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சார பயிற்சிப் பட்டறை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் தலைமை வகித்தார். இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், அந்த மாவட்டத்தின் தொழில்நுட்ப அணியில் இருந்து 2 ஐடி விங் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சி பட்டறையின் போது தவெக உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து வீடுவீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கை அதிகரிப்பது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஏற்கெனவே உறுப்பினர் சேர்க்கைக்கு செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தொடர்ந்து தவெக சார்பில் நவீன வசதிகளுடன் ‘மை-டிவிகே’ என்ற செயலி உருவாக்கப்பட்டு அதன்மூலம் உறுப்பினர்கள்…
புதுடெல்லி: சைப்ரஸ், டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த கப்பல் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த இன்டர்ஓரியண்ட் நேவிகேஷன் கம்பெனியும், டென்மார்க்கைச் சேர்ந்த டென்ஷிப் & பார்ட்னர்ஸ் நிறுவனமும் இந்தியாவில் இந்த முதலீட்டைச் செய்யவுள்ளது. இந்த முதலீடு நேரடி அன்னிய முதலீட்டுத் திட்டத்தின் (எப்டிஐ) கீழ் செய்யப்படவுள்ளது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் செய்யப்படும் மிகப்பெரிய நேரடி அன்னிய முதலீடாகும் இது. ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இந்த நிறுவனங்கள் இந்தியாவின் கப்பல் தொழில்துறையில் முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம் இந்தியாவின் கடல்சார் வளமும், வர்த்தகமும் அதிகரிக்கும். அதேநேரத்தில் இந்த முதலீடுகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான பேர் வேலை வாய்ப்புகளைப் பெறுவர். இந்திய கொடி இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, இங்கு தயாரிக்கப்படும் அனைத்து கப்பல்களும் இந்தியக் கொடியின் கீழ் பதிவு செய்யப்படும். இதனால் இந்தியாவின் கப்பல் திறன் திறம்பட விரிவுபடுத்தப்படும். 1979-ல்…
நாம் அனைவரும் கண்ணாடியின் முன் இடைநிறுத்தப்படும் ஒரு கணம் இருக்கிறது. ஒருவேளை அது ஒரு முடி இழை, அது மிக எளிதாக வெளியே விழுந்தது. அல்லது வழக்கத்தை விட சோர்வாக இருக்கும் தோல். அல்லது உரிக்கப்படாமல் வளராத நகங்கள். இது முதலில் நுட்பமானது, ஆனால் காலப்போக்கில், நாங்கள் ஆச்சரியப்படத் தொடங்குகிறோம்: என் உடலுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை நான் கொடுக்கிறேனா?ஒரு சீரான உணவு எப்போதுமே அடித்தளமாக இருக்கும்போது, சில நேரங்களில் உணவு மட்டும் போதாது, குறிப்பாக மன அழுத்தம், மாசுபாடு மற்றும் ஒழுங்கற்ற நடைமுறைகள். அங்குதான் சப்ளிமெண்ட்ஸ் அடியெடுத்து வைக்கவும். மந்திர மாத்திரைகள் அல்ல, ஆனால் உங்கள் உடல் ஏற்கனவே செய்ய முயற்சிப்பதை ஆதரிக்கும் மென்மையான உதவியாளர்களாக.முடி, தோல் மற்றும் நகங்களுக்கான சில சிறந்த கூடுதல் மற்றும் அவை உண்மையில் என்ன செய்கின்றன என்பதைப் பாருங்கள்.பயோட்டின் (வைட்டமின் பி 7)பயோட்டின் முடி ஆரோக்கியத்துடன் கிட்டத்தட்ட ஒத்ததாகிவிட்டது, நல்ல காரணத்திற்காக. உங்கள்…
தாஜ் மாலிக் டெய்லர் (இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வ கணக்கு) புளோரிடாவிலிருந்து வர்ஜீனியாவுக்கு ஒரு விமானம் அவசரகால தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஒரு பயணி தனது மடிக்கணினி வெடிகுண்டு என்று கூறி பீதியைத் தூண்டினார் என்று யுஎஸ்ஏ டுடே தெரிவித்துள்ளது. தாஜ் மாலிக் டெய்லர் என அடையாளம் காணப்பட்ட நபர், 27 ஞாயிற்றுக்கிழமை அலெஜியண்ட் ஏர் விமானம் 1023 இல் இருந்தார். இந்த விமானம் புளோரிடாவில் உள்ள செயின்ட் பீட்-கிளியர் வாட்டர் சர்வதேச விமான நிலையத்தை விட்டு வெளியேறி, வர்ஜீனியாவில் உள்ள ரோனோக்-பிளாக்ஸ்பர்க் பிராந்திய விமான நிலையத்திற்கு 177 பயணிகள் மற்றும் ஆறு குழு உறுப்பினர்களுடன் சென்று கொண்டிருந்ததாக பினெல்லாஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.புறப்பட்ட சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, டெய்லர் தனக்கு அடுத்த நபரிடம் இரண்டு முறை, “எனக்கு ஒரு குண்டு உள்ளது” என்று கூறி, பின்னர் யுஎஸ்ஏ டுடே பெற்ற எஃப்.பி.ஐ பிரமாணப் பத்திரத்தின்படி, “எனது மடிக்கணினி ஒரு…
சென்னை: உலகில் உள்ள 7 கண்டங்களில், உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த வீராங்கனைக்கு , சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ஜோக்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவர் தற்போது சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் உலகில் உள்ள 7 கண்டங்களின், உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைக்க திட்டமிட்டு, பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2023-ல் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தார். இதையடுத்து முத்தமிழ் செல்விக்கு, தமிழ்நாடு அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தது. மேலும் அவருக்கு அரசு சார்பில் பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. இதையடுத்து மீதமுள்ள 6 கண்டங்களில் உள்ள, உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைத்து வந்தார். கடந்த ஜூன் 16-ல், 7வது கண்டமாக, வட அமெரிக்காவில் உள்ள…
பிரேசிலியா: பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ரியோ டி ஜெனிரோவில் இருந்து அவர் நேற்று முன்தினம் இரவு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு சென்றார். அங்கு விமான நிலையத்தில் பிரேசில் பெண் கலைஞர்கள் ட்ரம்ஸ் இசைத்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஏராளமான இந்தியர்கள் திரண்டு வந்து அவரை வாழ்த்தி வரவேற்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரேசிலியாவில் இந்திய சமூகத்தினரின் வரவேற்பு மறக்க முடியாத அனுபவம். எங்கு வாழ்ந்தாலும் இந்திய கலாச்சாரத்தோடு அவர்கள் ஒன்றிணைந்து உள்ளனர். பிரேசிலியா விமான நிலையத்தில் படாலோ முண்டோ குழுவினரின் ஆப்பிரிக்க- பிரேசில் இசை மிகவும் அற்புதமாக இருந்தது. குறிப்பாக சம்பா நடனம்…
Last Updated : 09 Jul, 2025 07:11 AM Published : 09 Jul 2025 07:11 AM Last Updated : 09 Jul 2025 07:11 AM இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் இணைந்து நடித்த இந்திப் படம் ‘வார்’. யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படமான இதன் அடுத்த பாகம் ‘வார் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார். கியாரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்தப் படம் ஆக.14-ல் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டாலும் தற்போது இந்தப் படத்துக்காக ஒரு பாடலைப் படமாக்கியுள்ளனர். இந்நிலையில்இதன் படப்பிடிப்பில் ஹிருத்திக் ரோஷனிடம் இருந்து, தான் அதிகம் கற்றுக் கொண்டதாக ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், “ஹிருத்திக்குடன் படப்பிடிப்புதளத்தில் இருப்பது எப்போதும் உற்சாகம் தரும்.…
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளர் பணியிடங்களை அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. மேலும், மொத்த விற்பனையகங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகள், உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தும் பணியில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். போலி மருந்துகளோ, தரமற்ற மருந்துகளோ கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் மருந்து விற்பனையகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் 120 மருந்து ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர். காலியாக உள்ள 18 இடங்களை நிரப்பக் கோரி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அதில் 14 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி நிரவல்…
ஜப்பானின் கன்சாய் சர்வதேச விமான நிலையம் மூழ்கி வருகிறது ஜப்பானில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையம் (கிக்ஸ்) நீண்ட காலமாக ஒரு பொறியியல் அற்புதம் என்று கருதப்படுகிறது. ஒசாகா விரிகுடாவில் ஒரு செயற்கை தீவில் முழுக்க முழுக்க கட்டப்பட்ட இது, ஒவ்வொரு ஆண்டும் 30 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை 25 நாடுகளில் 91 நகரங்களுடன் இணைக்கும் ஒரு பெரிய விமான மையமாக செயல்படுகிறது. 1994 இல் திறக்கப்பட்டதிலிருந்து, கிக்ஸ் ஆசியாவின் பரபரப்பான மற்றும் மிகவும் விமர்சன சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஆனால் இந்த வெற்றிக் கதையின் பின்னால் ஒரு தொடர்ச்சியான மற்றும் மோசமான பிரச்சினை உள்ளது: முழு விமான நிலையமும் அதன் மென்மையான களிமண் அடித்தளத்தில் மூழ்கி வருகிறது.தென் சீனா மார்னிங் போஸ்டின் அறிக்கையின்படி, அசல் தீவு திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 12.5 அடி மூழ்கியுள்ளது. விரிவாக்கத்தின் போது பின்னர் சேர்க்கப்பட்ட இரண்டாவது தீவு, நிலப்பரப்பு பணிகள் தொடங்கி…
