Author: admin

சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நிலையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் முதன்முறையாக ஆஜராகி செந்தில்பாலாஜி நேற்று கையெழுத்திட்டார். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக பதிவான வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த மூல வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் கணக்கில் வராத ரூ.1.34 கோடி பணம், அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி அவரை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர், அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தனது அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் செந்தில்…

Read More

புதுடெல்லி: நடிகர் அஜித் குமார், லட்சுமிபதி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பத்ம விருதுகளை வழங்கினார். குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான கடந்த ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இதில் பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேர், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேர், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்தம் 139 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், பத்ம…

Read More

சென்னை: சென்னையில் ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஸூம் போன் சேவை இந்தியாவில் அறிமுகமானது. முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தச் சேவை பயனர்களுக்கு கிடைத்தது. இந்நிலையில், சென்னையில் தற்போது ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. கடந்த 2011-ல் நிறுவப்பட்டது ஸூம் வீடியோ கம்யூனிகேஷன் நிறுவனம். பரவலாக ஸூம் என அறியப்படுகிறது. மீட்டிங், சாட், குரல் வழி அழைப்பு மேற்கொள்ள இந்த தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. கரோனா பரவலின்போது உலக அளவில் ஸூம் தளம் பயன்படுத்தப்பட்டது. அலுவலகம், பள்ளி, கல்லூரி என பெரும்பாலான இடங்களில் ஸூம் சேவை அவசியமானதாக அமைந்தது. பயனர்கள் இதனை பயன்படுத்துவதும் எளிது. சென்னையில் ஸூம் போன் சேவை: இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவை அடிப்படையாக கொண்டுள்ள நிறுவனங்களுக்கு சிறப்பான தொலைத்தொடர்பு சேவையை வழங்க வேண்டும் என்கிற…

Read More

மதுரை: “படிப்பதற்காக செல்போன்களை வெறும் 5 முதல் 10 சதவீதம் மாணவர்கள்தான் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமூக வலைதள பயன்பாட்டுக்காகவே, தற்போது மாணவர்கள் செல்போன்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்,” என்று மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா கவலை தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி மற்றும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (ஏப்.9) தமுக்கம் மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், ஆணையர் சித்ரா பேசுகையில், “மாணவ, மாணவிகள் சிறப்பாக 12ம் வகுப்பு தேர்வுகளை எழுதியிருந்தால் நல்லது. மோசமாக எழுதியிருந்தாலும் கவலைப்படாதீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வி திறனுக்கு தகுந்தவாறு, உயர் கல்வியை தேர்ந்தெடுப்பதற்காகதான் இதுபோன்ற உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். பொறியியல், மருத்துவம், ஐடி மற்றும் கட்டிடக்கலை படிப்புகளை தாண்டி, எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள உயர்கல்வியில் நிறைய படிப்புகள் உள்ளன. அந்த படிப்புகளை எப்படி தேர்ந்தெடுக்கலாம்?, என்ன படிக்கலாம்?, அரசு உதவிகள் எப்படி…

Read More

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. வெற்றிக்குப் பின்னர் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறும்போது, “ஒவ்வொரு ஆட்டமும் இங்கிருந்து முக்கியமானது. ஏனென்றால் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் முதல் 2 இடங்களுக்குள் வர விரும்புகிறோம். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேஸிங்கில் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் அழுத்தத்தில் இருந்தோம், ஆனால் விராட் கோலியும், கிருணல் பாண்டியாவும் தங்கள் இன்னிங்ஸை கணக்கிட்டு விளையாடிய விதம், பார்க்க மிகவும் நன்றாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதமும் பார்க்க நன்றாக இருந்தது. நான் முன்பு கூறியது போல், நாங்கள் மைதானங்களை பார்த்து விளையாடும் அணி அல்ல. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்” என்றார்.

Read More

வாஷிங்டன்: “வரிப் பிரச்சினையில் இனி சீனா தான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவர்களிடம் தான் முடிவு இருக்கிறது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரஸ்பர வரி பட்டியலை கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரி 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் அறிவித்தது. இந்தச் சூழலில் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப். எனினும் இது…

Read More

மூலவர்: பயற்ணீசுவரர் அம்பாள்: நறுமலர்பூங்குழல் நாயகி தல வரலாறு: சோழ நாட்டில் சுங்கச்சாவடி வழியாக ஒரு வணிகன் மாடுகளின் மேல் மிளகு ஏற்றிக் கொண்டு வந்தான். அதை பார்த்த அதிகாரிகள் வரி கேட்டனர். மிளகு மூட்டை என்று சொன்னால் வரி அதிகமாக விதிப்பார்கள் என்று நினைத்து, வணிகன் அதிகாரிகளை நம்ப வைப்பதற்கு, ‘இந்த ஊர் இறைவன் சாட்சியாக இது பயிர் மூட்டைகள்’ என்று கூறி, அதற்கு உண்டான வரியை செலுத்தினான். பிறகு வெகு தூரம் சென்று மூட்டைகளை அவிழ்க்கும்போது எல்லாம் பயிராக இருந்தது. தான் சொன்ன பொய்யால்தான் இந்த தண்டனை என்று நினைத்து பழமலைநாத சுவாமியிடம் முறையிட்டான். அப்போது ஓர் அசரீரி குரல்,அவனை மன்னித்துவிட்டதாகவும், இனி பயிர் அனைத்தும் மிளகாக மாறும் எனவும் கூறியது. மிளகைப் பயிறாக மாற்றியதால் சிவபெருமான் பயிறணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஊர் பத்ராரண்யம், பயறணீச்சுரம், முற்கபுரி என்று அழைக்கப்படுகிறது. கோயில் சிறப்பு: பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது நீரின்றி…

Read More

தான் கடுமையான உடல்நிலை பிரச்சினையை எதிர்கொண்டு இருப்பதாக நடிகை பவித்ரா லட்சுமி தெரிவித்துள்ளார். மேலும், தனது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கடினமாக்க வேண்டாம் என்று அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. சில படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். சில மாதங்களாகவே இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டுள்ளார் என்று செய்திகள் பரவியது. இது தொடர்பாக சில விளக்கங்கள் கொடுத்திருந்தார் பவித்ரா லட்சுமி. மேலும், அவரது சமீபத்திய சமூக வலைதள புகைப்படங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் மீண்டும் வதந்திகள் பரவ தொடங்கியது. இது தொடர்பாக நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பவித்ரா லட்சுமி. அதில் “என் தோற்றம் மற்றும் எடை குறித்து என்னைப் பற்றி நிறைய ஊகங்கள் பரவி வருகின்றன. என் தரப்பில் இருந்து அதற்கு விளக்கங்கள் கொடுத்த பிறகும், அவை நிறுத்தப்படவில்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து…

Read More

சென்னை: தமிழகம் முழு​வதும் 77 மாவட்ட அமர்வு நீதிப​தி​களை இடமாற்​றம் செய்து உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் எஸ்​.அல்லி உத்​தர​விட்​டுள்​ளார். அதன் விவரம் வருமாறு: அரசு சொத்​தாட்​சி​யர் மற்​றும் நிர்​வாக அறங்​காவல​ராக பதவி வகித்த மாவட்ட நீதிபதி டி.லிங்​கேஸ்​வரன், மயி​லாடு​துறை மாவட்ட நீதிப​தி​யாக​வும், சென்னை தொழிலா​ளர் தீர்ப்​பா​யம் நீதிபதி டி.சந்​திரசேகரன், செங்​கல்​பட்டு மாவட்ட முதன்மை நீதிப​தி​யாக​வும், ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.​முரு​கேசன், சென்னை 8-வது சிபிஐ நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும், அங்கு பணிபுரிந்த நீதிபதி எஸ்​.ஈஸ்​வரன், சென்னை 9-வது சிபிஐ நீதி​மன்ற கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும் மாற்​றப்​பட்​டுள்​ளனர். சென்னை 2-வது பெருநகர கூடு​தல் நீதிபதி எஸ்​.தஸ்​னீம், திரு​வள்​ளூர் மாவட்ட முதலா​வது கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும், சென்னை 16-வது பெருநகர கூடு​தல் அமர்வு நீதிபதி எல்​.ஆபிர​காம் லிங்​கன், வில்​லிபுத்​தூர் மகளிர் நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும், செங்​கல்​பட்டு மாவட்ட கூடு​தல் அமர்வு நீதிபதி கே.​கா​யத்​ரி, வேலூர் விரைவு நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும், சென்னை 5-வது குடும்​ப நல…

Read More

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத உள்ளடக்கத்தை பரப்பியதற்காக மொத்தம் 6.3 கோடி சந்தாதாரர்களை கொண்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. டான், சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார், ஜியோ நியூஸ், சுனோ நியூஸ் உள்ளிட்ட செய்தி சேனல்களுக்கும் பத்திரிகையாளர்கள் இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா, முனீப் ஃபரூக் ஆகியோரின் யூடியூப் சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், சமா ஸ்போர்ட்ஸ், உசேர் கிரிக்கெட், ராசி நாமா ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சேனல்களை ஒருவர் அணுக முயன்றால், “தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு தொடர்பான அரசின் உத்தரவு காரணமாக இந்த சேனல் தற்போது இந்த நாட்டில் கிடைக்கவில்லை. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து கூகுள் வெளிப்படைத்தன்மை அறிக்கையை (transparencyreport.google.com) பார்வையிடவும்” என்று…

Read More