சென்னை: சொந்த இடத்தில் கட்சிக் கொடியேற்ற வேண்டும் என மதிமுக தொண்டர்களுக்கு கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிகளை அகற்றுவதற்கு நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றப்படுகின்றன. இந்நிலையில், நாமே முன்முயற்சி எடுத்து, கட்சிக் கொடிக் கம்பங்களை பாதுகாப்பாக அகற்றி, கொடி மற்றும் கம்பம் உள்ளிட்ட உடைமைகளை சொந்த இடங்களில் நிறுவ வேண்டும். அதனடிப்படையில், நேற்று முன்தினம் சென்னை, அண்ணாநகர் இல்லத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு பொதுச்செயலாளர் வைகோவால் கொடியேற்றப்பட்டது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் அல்லது மக்கள் கூடும் பிரதான சாலைகளின் அருகில் சொந்த இடம் வைத்திருக்கும் நிர்வாகிகள், அங்கு கொடிக்கம்பம் அமைத்து கட்சிக் கொடியைப் பறக்கவிட விரும்பினால், அதற்கான உதவி தேவைப்பட்டால், மதிமுக அதற்கான செலவை ஏற்று, நிரந்தரமாக…
Author: admin
ஜோவர், அல்லது சோளம், ஒரு பண்டைய தானியமாகும், இது நம்பமுடியாத சத்தானதாகும். இந்த பசையம் இல்லாத தானியத்தில் ஏராளமான புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. ஜோவர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளார், இது எடை கட்டுப்பாட்டுக்கு சிறந்தது, நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கிறது, மேலும் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது – இது ஒரு சீரான உணவுக்கு ஏற்றதாக இருக்கும்.ஜோவர் ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்க உதவும் மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கக்கூடும். இது உங்கள் அன்றாட உணவுகளில் எளிதில் பொருந்தும். இது ஆயுர்வேத தோற்றம் கொண்டது மற்றும் பலர் நவீன உணவுகளில் அதன் முக்கியத்துவத்தை மீண்டும் கண்டுபிடித்து வருகின்றனர். அதன் சுற்றுச்சூழல் நட்பு சாகுபடி ஜோவரை சுகாதார உணர்வுள்ள மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நுகர்வோருக்கு நிலையான தேர்வாக ஆக்குகிறது.ஜோவரின் ஊட்டச்சத்து கலவைகள் ஆரோக்கியமானவை சூப்பர் கிரெய்ன்புரதம்: ஜோவர் தாவர அடிப்படையிலான புரதத்தின் ஒரு…
ஜம்மு: தெற்கு காஷ்மீரில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. அங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்த ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம், கந்தர்பால் மாவட்டத்தில் பல்தல் ஆகிய இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரையை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கடந்த 2-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுவரை சுமார் 1.28 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், ஜம்மு அடிவார முகாமில் இருந்து 7,307 பக்தர்களை கொண்ட 9-வது குழு நேற்று அமர்நாத் புறப்பட்டது. இக்குழுவில் 5,534 ஆண்கள், 1,586 பெண்கள், 25 குழந்தைகள் மற்றும் 162 சாதுக்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 284 வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் பஹல்காம் மற்றும் பல்தல் நோக்கிச் சென்றனர்.…
ப்ரைம் வீடியோவில் ஜூலை 18-ம் தேதி ‘குபேரா’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’. அனைத்து மொழிகளிலும் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இப்படத்தினை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது இப்படம் ஜூலை 18-ம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் நடிப்புக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று பலரும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் திரையரங்கில் பார்க்காதவர்கள் பலரும் ஓடிடி வெளியீட்டுக்காக காத்திருந்தார்கள். ’குபேரா’ வெற்றியினைத் தொடர்ந்து, தற்போது விக்னேஷ் ராஜா படத்தின் பணிகளை படப்பூஜையுடன் தொடங்கியிருக்கிறார் தனுஷ். வேல்ஸ் நிறுவனம் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்து வருகிறது.
சென்னை: மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குனேரி ஆகிய 4 சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் அரசு பேருந்துகளுக்கான சுங்க கட்டண நிலுவைத்தொகையாக ரூ.276 கோடி உள்ளதாகக்கூறி சம்பந்தப்பட்ட தனியார் சுங்கச் சாவடி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், சுங்க கட்டணமும் கோடிக்கணக்கில் நிலுவையில் இருப்பதால் ஜூலை 10 முதல் இந்த 4 சுங்கச்சாவடிகளின் வழியாக எந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளையும் இயக்க அனுமதிக்கக்கூடாது என கடந்த இரு தினங்களுக்கு முன்பாக உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் முறையிடப்பட்டது. அதன்படி இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சுங்க…
ஒரு சமையலறை என்பது சமைப்பதற்கான ஒரு இடத்தை விட அதிகம் – இது அன்றாட நினைவுகள் அமைதியாக தயாரிக்கப்படுகின்றன. இது காலை சாய் மீது தூக்க உரையாடல்களைப் பகிர்ந்துகொண்டாலும் அல்லது இதயத்திலிருந்து இதயத்திற்கு அரட்டையடிக்கும் போது நள்ளிரவு சிற்றுண்டிகளைத் தயாரித்தாலும், சமையலறை பெரும்பாலும் ஒரு வீட்டின் உணர்ச்சி மையமாக மாறும். இந்த ஆழமான இணைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், இன்று பல வீட்டு உரிமையாளர்கள் முற்றிலும் செயல்பாட்டு, நடுநிலை-நிறமுடைய தளவமைப்புகளுக்கு அப்பால் நகர்கிறார்கள், இது வெளிர் சமையலறை உட்புறங்களைத் தழுவுகிறது, இது சூடாகவும், இனிமையானதாகவும், வெளிப்படையாகவும் உணர்கிறது.இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் – பெங்களூரு மற்றும் குருகிராமில் உள்ள நவீன அடுக்குமாடி குடியிருப்புகள் இந்தூர் அல்லது நாக்பூரில் உள்ள வீடுகளை கச்சிதமானவை வரை இந்த மாற்றம் பெருகிய முறையில் காணப்படுகிறது. சமையலறை வடிவமைப்புகளுக்கு வளர்ந்து வரும் விருப்பம் உள்ளது, அது அமைதியாகவும் வரவேற்புடனும், ஸ்டைலானதாகவும், மென்மையாகவும் உணர்கிறது. பாஸ்டல்கள் சரியான சமநிலையை வழங்குகின்றன.…
சூரியனின் மிக நெருக்கமான பார்வை (படம்: யூடியூப்/ நாசகோடார்ட்) விண்வெளி அறிவியலுக்கான ஒரு முக்கிய வளர்ச்சியில் நாசா, சூரியனின் வன்முறை நடவடிக்கையின் ஒருபோதும் காணப்படாத நெருக்கமான காட்சிகளை வெளியிட்டுள்ளது, இது பதிவு செய்யப்பட்டது பார்க்கர் சூரிய ஆய்வு.படங்கள் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும் ஒரு அரிய, நிகழ்நேர தோற்றத்தை வழங்குகின்றன கொரோனல் வெகுஜன வெளியேற்றங்கள் (CMES) எப்போதும் கைப்பற்றப்படவில்லை.2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பார்க்கர் சோலார் ஆய்வு சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை – கொரோனாவைப் படிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24, 2024 அன்று, அது அதன் மிக நெருக்கமான அணுகுமுறையை உருவாக்கியது, சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெறும் 3.8 மில்லியன் மைல் தொலைவில் பறக்கிறது, மேலும் ஒரு CME இன் மிக விரிவான படங்களை அதன் உள் கேமரா அமைப்பான WISPR (பார்க்கர் சூரிய ஆய்வுக்கான பரந்த-புலம் இமேஜர்) பயன்படுத்தி கைப்பற்றியது.சூரியனின் வளிமண்டலத்தில் இதுவரை எடுக்கப்பட்ட மிக நெருக்கமான படங்கள்காட்சிகள் CME க்குள்…
புதுடெல்லி: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான ஆட்சேபகரமான கார்ட்டூனை சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாளவியா முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாளவியா-வுக்கு எதிராக வழக்கறிஞரும் ஆர்எஸ்எஸ் பிரமுகருமான வினய் ஜோஷி என்பவர், இந்தூரில் உள்ள லசுடியா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், ஹேமந்த் மாளவியாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. வினய் ஜோஷி தனது புகாரில், “இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், சிபெருமான், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ அவமதிக்கும் நோக்கிலும் ஏராளமான கார்ட்டூன்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், கருத்துக்களை ஹேமந்த் மாளவியா சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அரசியலமைப்பு பிரிவு 19(1)(a)-ன்படி அவர் கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி உள்ளார். எனவே, அவர் மது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கோரி இருந்தார். இந்த…
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கின. முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு ஜூலை 14-ம் தேதி அதிகாலை 5.25 மணிமுதல் 6.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனையொட்டி வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நேற்று மாலை 5 மணியளவில் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இரண்டாவது நாள் (ஜூலை 11) 2, 3-ம் கால யாகபூஜைகளும், மூன்றாம் நாள் (ஜூலை 12) 4, 5-ம் கால யாக பூஜைகளும், நான்காம் நாள் (ஜூலை 13) 6, 7 கால யாகபூஜைகளும் நடைபெறும். அன்றிரவு மதுரையிலிருந்து வரும் மீனாட்சி, சுந்தரேசுவரரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஐந்தாம் நாள் (ஜூலை 14) கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு எட்டாம்…
விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தி திருமகன்’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘சக்தி திருமகன்’. விஜய் ஆண்டனியே நாயகனாக நடித்து, இசையமைத்து தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது செப்டம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இப்படத்துக்கு முதலில் ‘பராசக்தி’ என்று தலைப்பிடப்பட்டது. பின்பு பேச்சுவார்த்தையின் மூலம் ‘சக்தி திருமகன்’ என்று மாற்றினார்கள். சமீபத்தில் வெளியான ‘மார்கன்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் விஜய் ஆண்டனி. இதனால் ‘சக்தி திருமகன்’ மீது பெரும் நம்பிக்கையுடன் செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார். ’சக்தி திருமகன்’ படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபழனி, செல் முருகன், கிரண் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்திருக்கிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக ஷெலி கலிஸ்ட்,…
