Author: admin

அல்சைமர் நோய் என்பது விஞ்ஞானிகளை புதிர் செய்யும் ஒரு நிலை. அதற்கு என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், மோசமான தூக்கத்திற்கும் அல்சைமர் வளர்ப்பதற்கான அபாயத்திற்கும் இடையிலான வலுவான தொடர்புகளை ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. உண்மையில், நினைவக இழப்பு மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தூக்கக் கலக்கம் தோன்றக்கூடும்.2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, தூக்க மாத்திரைகளின் உதவியுடன் கூட தூக்கத்தை மேம்படுத்துவது அல்சைமர் உடன் தொடர்புடைய மூளையில் புரதங்களை உருவாக்குவதைக் குறைக்கலாம் என்பதைக் காட்டுகிறது. தூக்க மாத்திரைகள் தான் பதில் என்று சொல்வது மிக விரைவாக இருந்தாலும், இந்த ஆய்வு நல்ல தூக்கம் வெறும் நிதானமாக இல்லை என்பதற்கான வளர்ந்து வரும் ஆதாரங்களை சேர்க்கிறது, அது பாதுகாப்பாக இருக்கலாம். அல்சைமர் நோயை எதிர்த்துப் போராட தூக்க மாத்திரைகள் எவ்வாறு உதவும்செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு 2023 ஆம் ஆண்டில்…

Read More

புதுடெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்வாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக சமூக வலை தளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது பல்வேறு வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பி உள்ளார். அவரை இந்தியா வரவேற்கிறது. கலவரம், வன்முறையால் பாதிக்​கப்​பட்​டிருக்​கும் மணிப்​பூர் மாநிலம், கடந்த 2 ஆண்​டு​களாக பிரதமர் நரேந்​திர மோடி​யின் வரு​கையை எதிர்​பார்த்து காத்​திருக்​கிறது. வெளி​நாட்​டில் இருந்து இந்​தியா திரும்​பி​யிருக்​கும் அவர் இப்​போ​தாவது சிறிது நேரம் ஒதுக்கி மணிப்​பூர் செல்​வா​ரா? காஷ்மீரில் பஹல்​காமில் சுற்​றுலாப் பயணி​கள் மீது தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​கள் இது​வரை நீதி​யின் முன்பு நிறுத்​தப்​பட​வில்​லை. இதுகுறித்து பிரதமர் ஆய்வு செய்​வா​ரா? பிரதமர் மோடி​யின் குஜ​ராத் மாநிலம் இயற்கை சீற்​றத்​தால் சீர்​குலைந்​திருக்​கிறது. இமாச்சல பிரதேசம் பெரு​வெள்​ளத்​தால் மிக மோச​மாகப் பாதிக்​கப்​பட்டு இருக்​கிறது.…

Read More

சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ படத்தின் வெளியீட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூலை 10-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் ‘ஃப்ரீடம்’. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள், பத்திரிகையாளர் காட்சி என அனைத்தும் முடிந்துவிட்டன. ஆனால், திட்டமிட்டப்படி படம் வெளியாகவில்லை. மாலையில் ஜூலை 11-ம் தேதி வெளியாகும் என்று திட்டமிடப்பட்டது. இன்றும் இப்படம் வெளியாகவில்லை. எப்போது வெளியீடு என்று குறிப்பிடாமல், ‘ஃப்ரீடம்’ வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், மு. ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஃப்ரீடம்’. தமிழகத்தில் இலங்கை அகதிகள் மத்தியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது. சசிகுமார் நடிப்பில் ‘டூரிஸ்ட் பேமிலி’ பெரும் வெற்றிக்குப் பிறகு இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ’ஃப்ரீடம்’ படத்தின் ஒளிப்பதிவாளராக உதயகுமார், எடிட்டராக ஸ்ரீகாந்த் மற்றும் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ள இப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Read More

அரியலூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளபட்டுள்ளார் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். அரியலூர் நகரில், ரூ.14 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 11) நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். முதல் நாள் பேசியதையே, மறுநாள் மறுத்துப் பேசுகிறார். அடுத்த நாள் வேறொரு புதுக் கதையை, அவரே திரித்துப் பேசுகிறார். தான் பேசியதையே வேறு யாரோ கண், காது, மூக்கு வைத்து திரித்துப் பேசுவதாக அவரே பேசுகிறார். பாஜக, பழனிசாமி தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டு, பாஜகவின் கொள்கைகளை பழனிசாமி பேசுகின்ற சூழலுக்கு கொண்டு வந்து விட்டது. எனவே,…

Read More

ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் இந்த நாட்களில் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த சோதனைகள் உளவியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட வித்தியாசமான தோற்றப் படங்களை அடிப்படையாகக் கொண்டவை. முதலில் உங்கள் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்து, இதுபோன்ற சோதனைகள் உங்கள் மறைக்கப்பட்ட அல்லது குறைவாக அறியப்பட்ட ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த குறிப்பிட்ட சோதனை, உதாரணமாக, ஒரு விசித்திரமான படத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலே உள்ள படத்தை முதல் பார்வையில், ஒரு நபர் ஒரு மனிதனின் கால்கள் அல்லது ஒரு பெண்ணின் கால்களைக் காணலாம். நீங்கள் முதலில் கண்டறிந்ததை அடிப்படையாகக் கொண்டு, படம் உங்கள் தகவல்தொடர்பு பாணியை வெளிப்படுத்தலாம், முக்கியமாக- நீங்கள் நேரடி மற்றும் நம்பிக்கையுடன் அல்லது கனிவான மற்றும் அக்கறையுள்ளவராக இருந்தால்.எனவே, சோதனை எடுக்க தயாரா? வெறுமனே கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுங்கள். இப்போது, ​​கண்களைத் திறந்து, மேலே உள்ள படத்தை புதிய கண்ணோட்டத்துடன் பாருங்கள், நீங்கள் முதலில்…

Read More

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் மத்​திய விசா​ரணை அமைப்​பு​களான சிபிஐ, என்​ஐஏ, அமலாக்​கத் துறை மற்​றும் வருமானவரி துறைக்கு எதி​ராக திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த தலை​வர்​கள் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​துக்கு முன்பாக போ​ராட்​டம் நடத்​தினர். அப்​போது, பாஜக தலை​மையி​லான மத்​திய அரசின் உத்​தர​வின்​பேரில் மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள் எதிர்க்​கட்​சிகளை குறிவைப்​ப​தாக அவர்​கள் குற்​றம்​சாட்​டினர். 144 தடை உத்​தரவு அமலில் இருந்த நிலை​யில் அதனை மீறி தேர்​தல் ஆணைய அலு​வல​கத்​தின் முன்பு போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தாக கூறி திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர்​கள் மீது டெல்லி காவல் துறை வழக்​குப் பதிவு செய்​தது. இந்த வழக்கு நேற்று டெல்லி நீதி​மன்ற கூடு​தல் தலைமை நீதித்​துறை மாஜிஸ்​திரேட் நேஹா மிட்​டல் முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, இந்த வழக்​கி​லிருந்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி தலை​வர் டெரிக் ஓ பிரையன் உட்பட 10 பேரை விடு​விப்​ப​தாக நீதிபதி அறி​வித்​தார்.

Read More

சூப்பர் ஹீரோ காமிக்ஸ் கலாச்சாரம் அமெரிக்காவில் பெரும் பிரபலமாக தொடங்கிய காலம் முதல் இன்று வரை உலகமெங்கும் ரசிகர்கள் மனதில் தனி இடம்பிடித்திருக்கும் ஒரு கதாபாத்திரம் என்றால் அது ‘சூப்பர்மேன்’ தான். இன்று பிரபலமாக இருக்கும் பல சூப்பர்ஹீரோக்களுக்கு முன்னோடியான இந்த கதாபாத்திரத்தை வைத்து 1978 முதல் பல திரைப்படங்கள் வந்துவிட்டன. க்ரிஸ்டோபர் ரீவ் தொடங்கி ஹென்றி கவில் வரை சூப்பர்மேனாக நடித்து புகழ் பெற்றவர்கள் பலர். அந்த வரிசையில் தற்போது புதிய சூப்பர்மேனாக களமிறங்கியுள்ள டேவிட் காரன்ஸ்வெட், மார்வெல் படங்களிலிருந்து விலகி டிசி நிறுவனத்தில் இணைந்திருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் படம்தான் ‘சூப்பர்மேன்’. இதுவரை வெளியான சூப்பர்மேன் படங்கள், கார்ட்டூன்களிலேயே சூப்பர்மேனின் தோற்றம், அவர் எப்படி பூமிக்கு வந்தார், அவருடைய இளமைப் பருவம் ஆகியவை விலாவரியாக காட்டப்பட்டு விட்டதால் இப்படத்தில் நேரடியாக கதைக்குள் வந்துவிடுகிறார் இயக்குநர் ஜேம்ஸ் கன். சூப்பர்மேன் என்ற ஹீரோ மக்களுக்கு பரிச்சயமாகி 3…

Read More

விழுப்புரம்: திண்டிவனத்தில் நேற்று இரவு நடைபெற்ற ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவிட்டு, அடுத்தாண்டு தேர்தல் வர உள்ள நிலையில், அரசு மூலமாக ‘உங்களுடன் முதல்வர்’ என மீண்டும் ஏமாற்றுகிறார். தேர்தல் வந்தால்தான் மக்களை, மற்ற நேரங்களில் வீட்டு மக்களை மட்டுமே நினைப்பவர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் பெரும்பான்மையை நிருபித்த போது, நம்மிடம் இருந்த எட்டப்பர்கள் துணையுடன் பேரவை தலைவர் நாற்காலியில் திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்தனர். மேலும் சட்டையை கிழித்துக் கொண்டு ஸ்டாலின் வெளியே சென்றார். 2026-ல் மற்றொரு முறை சட்டையை கிழித்து கொள்ளும் நிலை வரும். கூட்டணியை நம்பி திமுக உள்ளது. கூட்டணி இல்லை என்றால் திமுக இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் அதிமுக பலமாக இருக்கும். கொள்கை வேறு, கூட்டணி வேறு. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அனைத்தும்…

Read More

விம்பிள்டனில் உள்ள அவ்னீத் கவுரின் வழக்கத்திற்கு மாறான ஆடை, குறைந்த உயரமான மினி பாவாடை மற்றும் புலப்படும் தொடை பச்சை குத்தியது, ஆன்லைனில் ஒரு விவாதத்தைத் தூண்டியது. சிலரால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் தோற்றம், விம்பிள்டனின் பாரம்பரிய நேர்த்தியுடன் மோதியது. இது உயர்நிலை நிகழ்வுகளில் கலந்துகொள்வது மற்றும் நிறுவப்பட்ட ஆடைக் குறியீடுகளை மதிப்பது, அத்தகைய இடங்களில் பாணியின் எல்லைகளை கேள்விக்குள்ளாக்குவது பற்றி ஒரு பரந்த விவாதத்தைத் தூண்டியது. விம்பிள்டன் டென்னிஸைப் பற்றி மட்டுமல்ல, இது தீவிரமான பாணியில் காண்பிப்பதும் காண்பிப்பதும் பற்றியது. ஆனால் இது எல்லாவற்றிற்கும் உங்கள் வழக்கமான ஃபேஷன் இலவசம் அல்ல. ஒரு அதிர்வு உள்ளது: பழைய பள்ளி நேர்த்தியானது, மெருகூட்டப்பட்ட பொருத்தங்கள் மற்றும் முக்கிய “ராயல்ஸ் வித் தி ராயல்ஸ்” ஆற்றலை சிந்தியுங்கள். வீரர்கள் அந்த அனைத்து வெள்ளை ஆடைக் குறியீட்டிலும் ஒட்டிக்கொள்ள வேண்டும், மேலும் கூட்டத்தில் உள்ள பிரபலங்கள் வழக்கமாக அதை கம்பீரமாக வைத்திருப்பார்கள் (உங்களைப் பார்த்து, பிரியங்கா…

Read More

புவனேஸ்வர்: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பிஹார் தேர்தலையும் திருட பாஜக முயல்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “ஒடிசா பாஜக அரசாங்கம் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கிறது. அது, ஏழை மக்களிடமிருந்து ஒடிசாவின் செல்வத்தைத் திருடுவது. முன்பு பிஜு ஜனதா தள அரசு இதைச் செய்தது. இப்போது பாஜக அரசும் அதையே செய்கிறது. ஒருபக்கம், ஒடிசாவின் ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், நலிந்த பிரிவினர், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளனர். மறுபக்கம், 5-6 பெரும் பணக்காரர்களுடன் கை கோத்துக்கொண்டு பாஜக அரசாங்கம் உள்ளது. நான் விவசாயிகள், பெண்கள் குழுக்களைச் சந்தித்தேன். அவர்கள் சொல்வதைக் கேட்டேன். அவர்களின் வலியையும் துன்பத்தையும் கேட்டேன். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள நீர், காடு, நிலம் ஆகியவை அவர்களுக்குச் சொந்தமானவை. ஆனால், பழங்குடியினர்…

Read More