Author: admin

பழநி: பழநி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஜூலை 15-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை மொத்தம் 31 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) ஆகிய வசதிகள் உள்ளன. இழுவை ரயிலில் 7 நிமிடங்களிலும், ரோப் காரில் 3 நிமிடங்களிலும் மலைக்கோயிலை அடையலாம். பழநி மலையின் அழகை ரசித்தபடி, ரோப் காரில் செல்லவே பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மாதந்தோறும் ஒரு முறையும், ஆண்டுதோறும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக 30 முதல் 40 நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. அதன்படி, வரும் ஜூலை 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை, மொத்தம் 31…

Read More

சென்னை: ​திரு​மலா பால் நிறு​வன மேலா​ளரின் மர்ம மரணம் குறித்து குறித்து கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை ‘திருமலா’ பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதியாமல் அவர் விசாரிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்ததாகவும் செய்திகள் வருகின்றன. நவீன் தூக்கில் இருந்த குடிசையில் எந்த சேரும் இல்லை; அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தன என்று செய்திகள் வருகின்றன. கைகள் கட்டப்பட்ட ஒருவர், சேர் இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்? இந்த வழக்கின் அடிப்படையான…

Read More

உலகெங்கிலும் உள்ள போகிமொன் ரசிகர்கள் ஜேம்ஸ் கார்ட்டர் காட்கார்ட்டின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கின்றனர், இது டீம் ராக்கெட்டின் ஜேம்ஸ், மியாவ், பேராசிரியர் ஓக் மற்றும் கேரி ஓக். உரிமையாளரின் மறக்கமுடியாத சில கதாபாத்திரங்களுக்கு ஆற்றலையும் கவர்ச்சியையும் கொண்டுவருவதற்காக அறியப்பட்ட காட்கார்ட், ஜூலை 8, 2025 அன்று தனது 71 வயதில், தொண்டை புற்றுநோயுடன் தைரியமான போருக்குப் பிறகு காலமானார். இன்ஸ்டாகிராம் வழியாக சக போகிமொன் குரல் நடிகர் எரிகா ஷ்ரோடர் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். அவரது பங்களிப்புகள் மில்லியன் கணக்கான குழந்தைகளின் குழந்தை பருவத்தை வடிவமைக்க உதவியது, மேலும் அவரது மரபு ஒரு தலைமுறையை வரையறுக்கும் குரல்களில் வாழ்கிறது.போகிமொன் குரல் நடிகர் ஜேம்ஸ் கார்ட்டர் தொண்டை புற்றுநோய் காரணமாக இறந்துவிடுகிறார்ஜேம்ஸ் கார்ட்டர் காட்கார்ட் 2006 ஆம் ஆண்டில் ஜேம்ஸ், மியோவ், பேராசிரியர் ஓக் மற்றும் கேரி ஓக் ஆகியோரின் பாத்திரங்களை ஏற்றுக்கொண்டார், அப்போது ரூபி மற்றும் சபையர் சகாப்தத்தின் போது போகிமொன்…

Read More

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ஆமிர் கான், சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். ஆக.14-ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. பெரிய ஆர்ப்பாட்டமின்றி சற்றே அடக்கி வாசிக்கப்பட்ட அனிருத்தின் இசையில் ‘மோனிகா’ பாடல் துள்ளளும் இதமும் கலந்துள்ளது. விஷ்ணுவின் எளிமையான வரிகளும் பாடலுக்கு வலு சேர்த்துள்ளது. சுப்லாஷினி, அனிருத்தின் குரல்களுடன் அசல் கோலாரின் ராப் கச்சிதமாக செட் ஆகியிருக்கிறது. குறிப்பாக, ‘மோனிகா பெல்லூசி’ பெயருக்கு நியாயம் சேர்க்கும் விதமாக பாடல் முழுவதும் சிவப்பு உடையில் நடன அசைவுகளால் ரசிகர்களின் மனம் ஈர்க்கிறார் பூஜா ஹெக்டே. இந்தப் பாடல் வீடியோவின் மெகா ஆச்சரியங்களுள் முதன்மையானதாக இருக்கிறது சவுபின் சாஹிரின் பங்களிப்பு. ஆம், மலையாளத்தில் உணர்வுபூர்வ நடிப்பால் வசீகரிக்கும் சவுபின் இங்கே முழு எனர்ஜியுடன் அட்டகாசமாக குத்தாட்டம்…

Read More

கடலூர்: “என் வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது” என்று விருத்தாசலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 11) நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மதியம் 12.30 மணி அளவில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “இது பிரம்மாண்ட கூட்டம். மாநில பொதுக்குழு கூட்டத்தில் 2700 பேர் கலந்து கொண்டனர், அதைவிட இது பெரிய கூட்டம். என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்காக பாமக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், என்எல்சி நிறுவனம் செவி சாய்க்கவில்லை. எங்கள் போராட்டம் தொடரும். இந்தியாவின் மிகப் பெரிய பழமையான சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு நான் மருத்துவ தொழில் பார்த்து வந்தேன். இந்த மக்களின் வாழ்நிலையைப் பார்த்து இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று…

Read More

இந்த ஆப்டிகல் மாயை சிவப்பு மற்றும் வெள்ளை கோடிட்ட நாற்காலிகள் மற்றும் குடைகளால் நிரப்பப்பட்ட ஒரு கடற்கரை காட்சியில் புத்திசாலித்தனமாக மாறுவேடமிட்டுள்ள ஸ்கைஸின் தொகுப்பைக் கண்டுபிடிக்க பார்வையாளருக்கு சவால் விடுகிறது. முதல் பார்வையில், எல்லாம் ஒரே மாதிரியாகத் தெரிகிறது, ஆனால் காத்திருங்கள்! மற்றொரு தோற்றத்தைப் பாருங்கள், ஸ்கைஸ் உங்களை முகத்தில் சரியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது, வடிவங்களுக்குள் உருமறைப்பு.இது விதிவிலக்கான பார்வைக் கூர்மை கொண்ட நபர்களை மட்டுமே எடுக்கும் -சவால் “4 கே விஷுவல் பவர்” என்று விவரிக்கிறது – ஸ்கைஸை 5 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க. நீங்கள் வெற்றிகரமாக இருந்தால், இது விவரம், வேகமான முறை அங்கீகாரம் மற்றும் உயர்மட்ட இடஞ்சார்ந்த விழிப்புணர்வு ஆகியவற்றில் அதிக கவனத்தின் பிரதிபலிப்பாகும்.இந்த வகையான மாயைகள் வேடிக்கையாக உள்ளன; முரண்பாடுகளைக் கண்டறிந்து கவனத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் மூளையின் திறனையும் அவை சோதிக்கின்றன. உங்களுக்கு என்ன தேவை என்று நினைக்கிறீர்களா? டைமரை அமைத்து ஸ்கேனிங் செய்யத் தொடங்குங்கள்; அதை…

Read More

சென்னை: மனை பட்டா உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முகநூல் நேரலையில் அவர் பேசியது: “புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், 3 மாவட்டச் செயலாளர்களை தவிர்த்து விட்டு ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவதாக அறிகிறேன். இது கட்சி விதிகளுக்கு முரணானது. மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. இதை முன்னனி நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் புகார் பரிசீலனையில் இருக்கிறது. இப்படிப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் 144 மாவட்டச் செயலாளர்களையும் நான் உடனடியாக நீக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அணுக முடியாது. போராட்டக் களத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சிதான் உயிர்ப்போடு இருக்கும். நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் செல்வதையே கட்சிப் பணிகள்…

Read More

கீல், யூரிக் அமிலம் கட்டமைப்பால் ஏற்படும் கீல்வாதத்தின் ஒரு வடிவம், பெரும்பாலும் திடீர், தீவிரமான கால் வலியாக வெளிப்படுகிறது, குறிப்பாக பெருவிரலில். ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு வீக்கம், சிவத்தல் மற்றும் விறைப்பு போன்ற அறிகுறிகளை அங்கீகரிப்பது முக்கியமானது. ஆண்கள், சில சுகாதார நிலைமைகளைக் கொண்ட நபர்கள் மற்றும் குறிப்பிட்ட உணவுப் பழக்கம் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். கால் வலி என்பது ஒரு பொதுவான புகார், இது பல காரணங்களால் இருக்கலாம். இருப்பினும், வலி ​​திடீர், தீவிரமானது மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்டால், அது கவலைக்கு ஒரு காரணமாகும். இந்த படப்பிடிப்பு வலியின் பின்னால் ஒரு பொதுவான குற்றவாளி கீல்வாதம். கீல்வாதம் என்பது இரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலத்தால் தூண்டப்படும் ஒரு வகை கீல்வாதம். ஆனால் உங்கள் கால் வலி கீல்வாதம் அல்லது வேறு நிபந்தனையாக இருந்தால் எப்படி சொல்ல முடியும்? ஆரம்பத்தில் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. இது சரியான…

Read More

புதுடெல்லி: “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களைச் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “பிரதமர் தனது விமானத்தில் பறக்கும்போது, ​​அவர் கீழே பார்த்து, ‘அது எந்த நாடு?’ என்று கேட்பார். அது எந்த நாடு என்பதைக் கூறுவார்கள். ​​‘கவலைப்பட வேண்டாம், நாம் செல்லும் இடத்துக்கு ஒரு மணி நேரம் தாமதமாகச் செல்வோம்; இப்போது இங்கே தரையிறங்கலாம்’ என்று பிரதமர் கூறுவார். ஏனெனில், அவர் எங்கு வேண்டுமானாலும் தரையிறங்குவார். அப்படித்தான் அவர் பாகிஸ்தானிலும் தரையிறங்கினார். அங்கு பிரியாணி சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்தார். நாங்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது, ஆனால், அவர் அங்கு தரையிறங்கலாம்!” என்று கிண்டலாகப் பேசினார். கடந்த 2015-ம் ஆண்டு, பிரதமர் மோடி அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பைச் சந்திக்க பாகிஸ்தானுக்கு திடீர்…

Read More

தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வகத்தில் தலா 10 கணினிகள், எல்சிடி புரஜெக்டர், கேமரா, தொடுதிரை, மும்முனை மின்சாரம், தடையில்லா மின்சாரம் வழங்க பேட்டரியில் இயங்கும் மின்கலம், 100 எம்பிஎஸ் வேகம் கொண்ட இணையதள வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த ஆய்வகங்கள் அமைய உள்ளன. இந்த ஆய்வகத்துக்கென்று பொறுப்பாசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அவருக்கான பணிகள் பட்டியலிட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என பொறுப்பாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகத்தில் உள்ள ஒவ்வொரு கணிணிக்கும் அடையாள எண் கொடுக்கப்பட்டு,…

Read More