Author: admin

சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக ஜூலை 27, 28-ம் தேதி​களில் தமிழகம் வரு​கிறார். அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் நடை​பெறும் ஆடி திரு​வா​திரை விழா மற்​றும் பெரம்​பலூர், தஞ்​சாவூரில் நடை​பெறும் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க உள்​ளார். தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் அடுத்த ஆண்டு நடை​பெற உள்ளது. தேர்​தலுக்கு இன்​னும் 10 மாதங்​களே உள்ள நிலை​யில், அனைத்து கட்​சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்​தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜகவும் உறு​தி​யாக உள்ளது. இந்த நிலை​யில், கடந்த ஏப்​ரல் மாதம் சென்னை வந்​த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, அதி​முக​வுடன் கூட்​ட​ணியை உறுதி செய்​தார். அதன்​பிறகு, பாஜக தேசிய தலை​வர் ஜெ.பி.நட்டா தமிழகம் வந்​தார். அப்​போது, கூட்​டணி கட்​சிகளு​டன் பாஜக நிர்​வாகி​கள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என நிர்​வாகி​களுக்கு அறி​வுறுத்​தி​னார். அதை தொடர்ந்​து, கடந்த மாதம் மதுரை​யில் நடை​பெற்ற பாஜக நிர்​வாகி​கள் ஆலோ​சனை கூட்​டத்​தில்…

Read More

சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அங்கிருந்து தமிழகம் வரும் 20 சாலை வழிகளிலும் கண்காணிப்பை பொது சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. கேரளாவின் மலப்புரம், பாலக்காடு பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வருவோருக்கு காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யவும், தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உள்ளது. பொதுவாகவே விதிமுறைகளின்படி, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோவை…

Read More

சென்னை: ‘அ​தி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான மனுக்​கள் மீது எப்​போது முடி​வு எடுக்​கப்​படும் என கால​வரம்பை குறிப்​பிட்​டு, ஜூலை 21-ம் தேதிக்​குள் எழுத்​துப்​பூர்​வ​மாக விளக்​கம் தரவேண்​டும்’ என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பாக அளிக்​கப்​பட்ட புகார்​கள் மீதான ஆரம்​பக்​கட்ட விசா​ரணையை நடத்தி முடிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு கால​வரம்பு நிர்​ண​யிக்க வேண்​டும். 2026 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு தயா​ராக வேண்​டி​யுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்​கை​களில் ஈடு​படு​வோர், இதை தங்​களுக்கு சாதக​மாகப் பயன்​படுத்த வாய்ப்​பு உள்​ளது. இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. நீதிப​தி​கள் ஆர்​.சுப்பி​ரமணி​யன், கே.சுரேந்​தர் அமர்​வில் இந்த மனு விசா​ரணைக்கு வந்​தது. அப்போது நடந்த வாதம்: பழனி​சாமி தரப்​பு: சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தேர்​தல் ஆணை​யம் விசா​ரணை நடத்தி 2 மாதங்​கள் நிறைவடைந்த பின்​னரும், இதுவரை எந்த உத்​தர​வும் பிறப்​பிக்​க​வில்​லை. இது​போன்ற வழக்​கு​களில் 3…

Read More

சென்னை: உலக மக்​கள்​தொகை தினத்​தையொட்​டி, சுகா​தா​ரத் துறை சார்​பில் பேரணி, விழிப்​புணர்வு போட்​டி, கருத்​தரங்​கம் நடை​பெற்​றன. 39-வது உலக மக்​கள்​தொகை தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, செம்​மொழி பூங்​கா​வில் விழிப்​புணர்வு பேரணியை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார். தேனாம்​பேட்டை டிஎம்​எஸ் வளாகத்​தில் பேரணி நிறைவடைந்​தது. பின்​னர், அமைச்​சர் தலை​மை​யில்அதி​காரி​கள், ஊழியர்​கள் விழிப்​புணர்வு உறு​தி​மொழி ஏற்​றனர். தொடர்ந்து கருத்​தரங்​கம் நடந்தது. இளம் பரு​வத்​தினருக்​கான விழிப்​புணர்வு நல கையேடு, குடும்​பநல விளக்க கையேடு​களை வெளி​யிட்ட அமைச்​சர், விழிப்​புணர்வு போட்​டி​யில் வெற்றி பெற்ற செவிலிய மாணவி​களுக்கு பாராட்டு சான்​றிதழ், கேட​யங்​களை வழங்​கி​னார். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:‘ஆரோக்​கிய​மான போதிய இடைவெளி​யுடன் பிள்​ளைப் பேறு, திட்​ட​மிட்ட பெற்​றோருக்​கான அடை​யாளம்’ என்​பதே இந்த ஆண்​டின் மக்​கள்​தொகை தின கருப் பொருள். தமிழக சுகா​தா​ரத் துறை எடுத்த பல்​வேறு நடவடிக்​கைகளால், பேறு காலத்​தில் தாய்​மார்​கள் உயி​ரிழப்பு விகிதம் 39.4 சதவீதம் அளவுக்குகுறைந்​துள்​ளது. சிசு உயிரிழப்பு விகிதம் 1,000-க்கு…

Read More

சென்னை: பெற்​றோ​ரால் கைவிடப்​படும், ஒப்​படைக்​கப்​படும் குழந்​தைகளை தானாக தத்​தெடுத்​தால் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தேசிய மருத்​துவ ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்​எம்​சி) வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில் கூறி​யிருப்​ப​தாவது: மருத்​து​வ​மனை​களில் கைவிடப்​பட்ட நிலை​யில் கண்​டறியப்​படும் குழந்​தைகள், மற்​றவர்​களால் கொண்டு வந்து ஒப்​படைக்​கப்​படும் குழந்​தைகள் குறித்து சட்​ட​வி​தி​களின்​படி தகவல்​கள் அளிக்​கப்​படு​வ​தில்​லை. அந்த குழந்​தைகளை உரிய விதி​களுக்கு உட்​ப​டா​மல் தத்​தெடுக்​கும் சம்​பவங்​கள் நடக்​கிறது என்று மத்​திய பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்டு அமைச்​சகம் சமீபத்​தில் தேசிய மருத்​துவ ஆணை​யத்​துக்கு கடிதம் எழு​தி​யிருந்​தது. எந்த ஒரு தனி நபருக்​கோ, நிறு​வனத்​துக்​கோ, மருத்​து​வ​மனைக்கோ கைவிடப்​பட்ட நிலை​யில் ஆதர​வற்ற குழந்​தைகள் இருப்​பது தெரிய​வந்​தால், அதுகுறித்து குழந்​தைகள் உதவி மையம் (1098), குழந்​தைகள் நலக்​குழு, மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு பிரிவு, காவல் துறைக்கு உடனடி​யாக தகவல் தெரி​விப்​பது கட்​டா​யம் ஆகும். அதே​போல், தங்​களது குழந்​தையை வளர்க்க இயலாமல், ஒப்​படைக்க பெற்​றோர் முன்​வந்​தால், அதுகுறித்து மருத்​து​வமனை நிர்​வாகம் குழந்​தைகள்…

Read More

யோக பாரம்பரியத்தில், நீங்கள் எதையும் சமைத்தால், அது சமைத்த 1.5 மணி நேரத்திற்குள் நுகரப்பட வேண்டும். இல்லையென்றால், அதிகபட்சம் 4 மணிநேரம், சம்பந்தப்பட்ட உருப்படிகள் மற்றும் சமையல் முறையைப் பொறுத்து. அதையும் மீறி, அதைத் தொடக்கூடாது, ஏனென்றால் அது வயிற்றில் வாயுக்களை மட்டுமே உருவாக்கும், மேலும் அமைதியற்ற தன்மை மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது சுவாச ஆரோக்கியம், மன ஆரோக்கியம், வாசனை உணர்வு மற்றும் பசியையும் பாதிக்கிறது என்று சத்குரு கூறுகிறார். எல்லா படங்களும் மரியாதை: இஸ்டாக்

Read More

Last Updated : 12 Jul, 2025 12:39 AM Published : 12 Jul 2025 12:39 AM Last Updated : 12 Jul 2025 12:39 AM கோப்புப் படம் சென்னை: ​மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் கண்​ணப்​பன் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்​டில் பள்​ளிக்கல்​வித் துறை​யில் வரும் மாவட்ட கல்வி அலு​வலர் பதவி​யில் மொத்​தம் 60 காலிபணி​யிடங்​கள் உள்​ளன. பதவி உயர்​வு, பணி​யிட மாறு​தல் மூலம் அவற்றை நிரப்ப தகு​தி​யான தலைமை ஆசிரியர்​கள் பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டது. அதில் 2 பேர் பணி ஓய்வு பெற்​றனர். எஞ்​சிய 34 தலைமை ஆசிரியர்​களுக்கு பதவி உயர்வு தரப்​பட்​டுள்​ளது. இதே​போல, 24 மாவட்டகல்வி அலு​வலர்களுக்கு பணி​யிட மாறு​தல் வழங்​கப்​பட்​டுள்​ளது. சம்​பந்​தப்​பட்ட மாவட்ட கல்வி அலு​வலர்​கள் உரிய வழி​காட்டு நெறி​முறை​களை பின்​பற்றி புதிய பொறுப்​பு​களை ஏற்க வேண்​டும். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை…

Read More

சென்னை: தமிழகத்​தில் வரும் 15-ம் தேதி முதல் 3 நாட்​களுக்கு கோவை, நீல​கிரி மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக​மாறு​பாடு காரண​மாக தமிழகத்​தில் இன்று ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். வரும் 11 முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும், 16, 17-ம் தேதி​களில் சில இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். மேலும், 15 முதல் 17-ம் தேதி வரை நீல​கிரி மற்​றும் கோவை மாவட்​டத்​தின் மலைப் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. தமிழகத்​தில் இன்​றும் நாளை​யும் சில இடங்​களில் அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 7 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை அதி​க​மாக இருக்​கக்​கூடும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

நயாகரா நீர்வீழ்ச்சி உலகின் மிகவும் அதிர்ச்சியூட்டும் இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும், இது யாரும் மறுக்க முடியாது என்பது உண்மை. ஒவ்வொரு பருவத்திலும் இது அழகாக இருந்தாலும், குளிர்காலம் எடுத்துக் கொள்ளும்போது, ​​நயாகரா ஒரு உறுமும் அடுக்கிலிருந்து ஒரு மந்திர உறைந்த உலகமாக மாறுகிறது.பார்ப்போம்:

Read More

நாக்பூர்: தலை​வர்​கள் 75 வயதில் ஓய்வுபெற வேண்​டும் என்று ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தெரி​வித்​துள்​ளார். வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடை​யும் சூழலில் அவர் இவ்​வாறு கூறி​யிருப்​பது பாஜக​வில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஆர்​எஸ்​எஸ் மூத்த தலை​வர் மோரோ பந்த் பிங்க்லே குறித்த புத்தக வெளி​யீட்டு விழா நாக்​பூரில் 9-ம் தேதி நடை​பெற்​றது. ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் கலந்​து​கொண்​டு, புத்​தகத்தை வெளி​யிட்​டார். விழா​வில் அவர் பேசும்​போது, ‘‘உங்​களுக்கு 75 வயது ஆகிறது என்​றால், நீங்​கள் ஒதுங்​கிக் கொண்டு மற்​றவர்​களுக்கு வழி​விட வேண்​டும்’’ என்​றார். வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைகிறது. இதை சுட்​டிக்​காட்​டியே, மோகன் பாகவத் இவ்​வாறு கூறிய​தாக எதிர்க்​கட்​சிகள் தெரி​வித்​துள்​ளன. அவரது கருத்து பாஜக​வில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: பிரதமர் மோடிக்கு செப்​டம்​பர் 17-ம் தேதி 75…

Read More