ஆக்சியம் -4 குழுவினர் (பட வரவு: அனி) பெங்களூரு: வானிலை அனுமதி, இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா (ஷக்ஸ்) உள்ளிட்ட நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஆக்சியம் -4 மிஷன் (ஏஎக்ஸ் -4) குழுவினர் திங்களன்று (ஜூலை 14) ஐ.எஸ்.டி. நாசா கமர்ஷியல் க்ரூ திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச் திறக்கப்படாத தேதியை உறுதிப்படுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஆக்சியம் ஸ்பேஸ் திறப்பதற்கான இலக்கு நேரத்தை உறுதிப்படுத்தியது, குழுவினரின் வீட்டுப் பயணத்தைத் தொடங்கி, ஒரு ஸ்பிளாஷவுன் மற்றும் மீட்புடன் முடிவடைந்தது. ஜூன் 25 அன்று தொடங்கப்பட்டு அடுத்த நாள் ஐ.எஸ்.எஸ் உடன் நறுக்கப்பட்ட குழுவினர், ஆர்பிட்டல் ஆய்வகத்தில் தனது திட்டமிடப்பட்ட 14 நாள் பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளனர், மேலும் இரண்டு வாரங்கள் முடிந்ததும் “ஓய்வு நாளை அனுபவித்தனர்”.இப்போது, ஆக்சியம், நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் அணிகள் குழுவினரின் பூமிக்கு திரும்பத் தயாராகி வருகின்றன, தளபதி பெக்கி விட்சன், பைலட் ஷக்ஸ் மற்றும் மிஷன்…
Author: admin
மாநிலத் துறையின் தலைமையகம் (AP படம்) ட்ரம்ப் நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரம்) 1,300 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.வெளியுறவுத்துறை ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பின்படி, பணிநீக்கங்களில் 1107 சிவில் சேவை ஊழியர்கள் மற்றும் 246 வெளிநாட்டு சேவை அதிகாரிகள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக, கிட்டத்தட்ட 3000 பேர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஊழியர்களின் நிறுவன கட்டமைப்பையும் திணைக்களம் மறுசீரமைத்து வருகிறது. இந்த பணிநீக்கங்கள், அதிகாரப்பூர்வமாக “குறைப்பு-சக்தி” அல்லது RIF என்று அழைக்கப்படுகின்றன, அவை பல மாதங்களாக திட்டமிடப்பட்டுள்ளன. அதிகாரிகள் மறுசீரமைப்பு திட்டத்தை மார்ச் மாதம் காங்கிரசுக்கு அனுப்பினர், நகல் அலுவலகங்களை அகற்றவும், திணைக்களத்தின் முக்கிய பொறுப்புகளில் கவனம் செலுத்தவும் வெட்டுக்கள் அவசியம் என்று கூறினார்.இருப்பினும், இந்த வெட்டுக்கள் வெளியுறவுத்துறையின் வேலை திறனை பாதிக்கும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். செனட் வெளியுறவுக் குழுவின் அனைத்து…
திருமலை: மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்பின்னர், கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதன் பின்னர், கோயிலுக்கு வெளியே அவர் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தவறான சான்றிதழ்கள் கொடுத்து, தாங்கள் இந்துக்கள்தான் என சித்தரித்து, வேலை வாய்ப்பை பெற்று சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதர மதத்தினர் தேவஸ்தானத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை உடனடியாக இனம் கண்டு அனைவரையும் வேலையை விட்டு நீக்க வேண்டும். இவர்களுக்கு சனாதனம் மீது நம்பிக்கை இல்லாத போது, எதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிய வேண்டும். இந்துக்களில் யாராவது இது போல், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் ஊழியர்களாக பணி செய்ய அந்த மதத்தவர் ஒப்புக்கொள்வார்களா? இவர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றுவதன் மூலம் உண்மையான இந்துக்களுக்கு அந்த வேலை பறிபோனது. ஆட்சிகள்…
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 5-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார். இதில் 6-4, 5-7, 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். 22 வயதான அல்கராஸ் 2023 மற்றும் 2024-ல் விம்பிள்டனில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். நடப்பு சாம்பியனான அவர் இப்போது மீண்டும் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்புடன் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளார். மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னரும் பலப்பரீட்சை மேற்கொண்டனர். இதில் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சின்னர் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் அல்கராஸ் உடன் சின்னர்…
திரைத்துறையினர் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனம் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் கார்த்திக் ஸ்ரீநிவாஸ், மகாவீர் அசோக் தயாரிக்கும் படத்தை ‘நாய் சேகர்’ திரைப்படத்தை இயக்கியவரும், ‘கோமாளி’, ‘கைதி’, ‘விஐபி 2’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கீ’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கி, நாயகனாக நடிக்கிறார். மலையாள நடிகையும் ‘கொட்டுக்காளி’ படத்தில் நடித்தவருமான அன்னா பென் நாயகியாக நடிக்கிறார். படம் பற்றிப் பேசிய கிஷோர் ராஜ்குமார், “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. ‘ஃபீல் குட்’ உணர்வைத் தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் கே.பாக்யராஜ் சார். அவர் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் படங்கள் வருவதில்லையே என்ற குறையை இந்தப் படம் போக்கும். ஜோடி பொருத்தம் பற்றி பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும்.…
கோவை: பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்பனையைத் தடுக்க கடும் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அமைச்சர்கள் கூறினார். மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில், பருத்தி உற்பத்தியை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவன வளாகத்தில் நேற்று நடந்தது. மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுஹான், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறியதாவது: மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான ஆடை தயாரிப்பில் பருத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக அளவு பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது உற்பத்தி மற்றும் தரம் ஆகியவை குறைந்துவிட்டன. விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ‘மோடி மிஷன்’ என்ற பெயரில் நாடு முழுவதும் பருத்தி சாகுபடியை அதிகரிக்க…
நியூமோனிக் பிளேக், மோசமான மற்றும் மிகவும் தொற்றுநோயான பிளேக், சமீபத்தில் வடக்கு அரிசோனாவில் ஒரு உயிரைக் கொன்றது -இது ஒரு அதிர்ச்சி அலை வசதி. பாதிக்கப்பட்டவர் ஜூலை 11 ஆம் தேதி ஃபிளாஸ்ட்ஸ்டாஃப் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதே நாளில் இறந்தார், 2007 முதல் கவுண்டியின் முதல் நியூமோனிக் பிளேக் மரணத்தை குறிக்கிறது.இது யெர்சினியா பெஸ்டிஸ், பிரபலமற்ற பிளேக் பாக்டீரியத்தால் ஏற்படுகிறது. பிளே-பரவும் புபோனிக் பிளேக் பற்றி நாம் சிந்திக்க முனைகிறோம், ஆனால் நியூமோனிக் பிளேக் வேறுபட்டது-இது நுரையீரலைத் தாக்கும். நீங்கள் அதை இருமல் செய்யும் ஒருவரிடமிருந்து நீர்த்துளிகளை உள்ளிழுக்கிறீர்கள், அல்லது புபோனிக் அல்லது செப்டிசெமிக் வடிவங்களுக்குப் பிறகு நீங்கள் அதற்கு முன்னேறுகிறீர்கள். கவனிக்க வேண்டிய அறிகுறிகள்அறிகுறிகள் விரைவாகக் காண்பிக்கப்படுகின்றன -பொதுவாக 1-4 நாட்களுக்குப் பிறகு. அவை காய்ச்சல், குளிர், தலைவலி, உடல் வலிகள் மற்றும் பலவீனம் ஆகியவற்றுடன் தொடங்குகின்றன. ஆனால் பின்னர் விஷயங்கள் தீவிரமடைகின்றன: நீங்கள் ஒரு மிருகத்தனமான…
குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வந்தார். குருகிராமின் சுஷாந்த் லோக் பகுதியில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீ்ட்டில் ராதிகாவை அவரது தந்தை தீபக் யாதவ் (49) துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். இதுகுறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடர்பாளர் சந்தீப் குமார் கூறுகையில், “விசாரணையில் மகளை சுட்டுக்கொன்றதாக தீபக் ஒப்புக்கொண்டுள்ளார். உரிமம் பெற்ற ஒரு துப்பாக்கியை கைப்பற்றியுள்ளோம். ராதிகா, டென்னிஸ் அகாடமி நடத்தி வருவதில் தீபக்கிற்கு உடன்பாடில்லை. நாம் நல்ல நிலையில் இருப்பதால் அகாடமி நடத்த வேண்டிய அவசியமில்லை என்று மகளிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன” என்றார். இன்ஸ்டாகிராமில் ராதிகா ரீல்ஸ் வெளியிடுவதும் மியூசிக் வீடியோ ஒன்றில் தோன்றியதும் தீபக் யாதவுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “கொலைக்கு அத்தகைய ஒரு காரணம் இருப்பதாக இதுவரை…
சென்னை: எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு – இந்திய ராணுவ அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் பாலசந்தர் 34 மற்றும் 59-வது நிமிடங்களில் பீல்டு கோல் அடித்து அசத்தினார். சதீஷ் (14-வது நிமிடம்), பட்ராஸ் திர்கே (32-வது நிமிடம்), மனோஷ் குமார் (57-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மற்ற ஆட்டங்களில் என்சிஒஇ (போபால்) 4-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிராவையும், ஐஓசி 2-0 என்ற கோல் கணக்கில் மத்திய நேரடி வரிகள் வாரியம் அணியையும் தோற்கடித்தன. இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியன் ரயில்வே – இந்திய ராணுவம், கர்நாடகா – ஐஓசி, மலேசிய ஜூனியர் நேஷனல் -…
நியூயார்க்: மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டணம் ஆண்டுதோறும் பணவீக்கத்துக்கு ஏற்ப உயர்த்தப்படும் என்றும் 2026-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறார். மேலும் பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியையும் உயர்த்தி வருகிறார். இதனிடையே, கடந்த ஜூலை 4-ம் தேதி ‘ஒரு மிகப்பெரிய அழகிய மசோதா’ என்ற மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டு, அதனை சட்டமாக்கி உள்ளார். அதன்படி, தொழில்முனைவோர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்தக் கட்டணம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இருப்புத் தொகை என்ற பெயரில் இந்தத் தொகை வசூலிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட…
