சென்னை: அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, சந்தேகமோ தேவையில்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன் என்று தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்து தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாமக வரும் ஜூலை 16-ம் தேதி 36 ஆண்டுகளை நிறைவு செய்து, 37-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பாமகவின் துணை இல்லாமல், மக்களுக்கான எந்த நியாயமும், மத்தியிலோ, மாநிலத்திலோ இதுவரை யாராலும் பெற்று தரப்படவில்லை என்ற ஒன்றே போதுமானது. மக்கள் நலன்சார்ந்து எப்போதும் யாரையும் எதிர்த்து நிற்கிற கட்சியாக பாமக இருந்து வருவதை நினைத்து பெருமையடைகிறேன். அரசியல்ரீதியாக மட்டுமல்ல, சட்டரீதியாகவும், சமூக வலைதளங்கள், ஊடகங்கள், திரளான மக்கள் போராட்டத்தின் மூலமாக எனக்கு போராட தெரியும். நியாயம் பெற்றுத்தரவும் முடியும். எப்போதும்போல துடிதுடிப்புடன் உங்கள் ஒவ்வொருவரின் குரல்களையும் நான்…
Author: admin
கடலூர் / புதுச்சேரி: தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று மாலை கடலூருக்கு வந்த பழனிசாமிக்கு, ரெட்டிச்சாவடியில் கடலூர் வடக்கு மாவட்டச்செயலாளர் எம்.சி.சம்பத்தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பொதுமக்களிடையே பழனிசாமி பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் தானே புயலின்போது நாங்கள் ஓடிவந்து நிவாரண உதவிகளை செய்தோம். கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விலைஇல்லா கறவை மாடு, ஆடு, கோழிகளை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்போது, இவை வழங்கப்படும். ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும். ஸ்டாலின் கடன் வாங்குவதில்தான் சூப்பர் முதல்வராக உள்ளார். வரி, கட்டணங்களை உயர்த்தி மக்களைப் பரிதவிக்கச் செய்துள்ளனர். குப்பைக்கு வரி போட்டது திமுக அரசுதான். சொன்னதைச் செய்யாமல், மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதில் விஞ்ஞான மூளைக்காரர்கள்…
நாகர்கோவில்: மனிதரை விண்ணுக்கு ராக்கெட்டில் அனுப்பும் ககன்யான் திட்டத்தில், ஆளில்லா ராக்கெட் பரிசோதனை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான சிறப்பு பயிலரங்கில் பங்கேற்ற வி.நாராயணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ககன்யான்’ என்ற திட்டத்தை இஸ்ரோ நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின்படி, இந்தியர் ஒருவரை ஏ.ஓ.ஜி. முறைப்படி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி, அவரை அங்கே பாதுகாப்பாக வைத்திருந்து, மீண்டும் அவரை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வர இருக்கிறோம். இதற்கான, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டம் 2012 ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த திட்டத்துக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது தற்போது ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட் அனுப்பப்படும். தொடர்ந்து இதுபோல 2 ராக்கெட்கள்…
இணையத்தில் கடுமையான ட்ரோலுக்கு ஆளாகி இருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். அதன் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது. கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’ படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இணையத்தில் கிண்டலுக்கு ஆளானார் சாய் அபயங்கர். இதற்கான காரணம் என்னவென்றால், ‘இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை, அதற்குள் 8 படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமா? என்பதுதான். சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டூயூட்’, ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘பென்ஸ்’, ஷான் நிகாம் நடித்துள்ள ‘பல்டி’, சிம்பு நடிக்கவுள்ள ‘எஸ்டிஆர் 49’, அல்லு அர்ஜுன் – அட்லி இணையும் படம், சிவகார்த்திகேயன் – விநாயக் இணையும் படம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் சாய் அபயங்கர். இதில் எந்தவொரு படமுமே இன்னும் வெளியாகவில்லை. இதனை முன்வைத்து தான் இணையத்தில் மீம்ஸ்களும், கிண்டல்களும் பறந்தன. ‘அவதார் 4’…
திருச்சி: மதிமுகவுக்கு இத்தனை தொகுதிகள்தான் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. தேர்தல் நேரத்தில்தான் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திருச்சியில் செப். 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளோம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, என்னை தனது சுவீகார புத்திரன் என்றார். அப்போது நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்தாலும், எங்களது கொள்கைகளை என்றும் விட்டுக்கொடுத்தது இல்லை. மதிமுகவுக்கு அங்கீகாரம் வழங்கியதே அதிமுகதான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எதிர்க்கட்சியான அதிமுகவினர் அப்படித்தான் பேசுவார்கள். பாஜக தமிழகத்தை கபளீகரம் செய்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மோடி பிரதமராக பதவி ஏற்றபோது, அந்த விழாவில் அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்ச கலந்து கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,கூட்டணியை விட்டு வெளியேறினோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். கூட்டணி…
சென்னை: வடகிழக்கு மாநிலங்களில் நபார்டு வங்கி பிரபலமாகவில்லை. நபார்டு வங்கியின் சேவைகள் பழங்குடியின மக்களை முழுமையாக சென்றடையவில்லை என்று மத்திய நிதி துறை செயலர் நாகராஜு கூறினார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நபார்டு வங்கியின் 44-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நபார்டு தலைவர் ஸ்ரீஷாஜி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய நிதித் துறை செயலர் எம்.நாகராஜு, தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நபார்டு துணை அலுவலகத்தை மத்திய நிதித் துறை செயலர் நாகராஜு திறந்து வைத்தார். மேலும், நபார்டுக்கான வாட்ஸ்-அப் சேனல், படித்த கிராமப்புற பெண்களுக்கான வருவாய் ஈட்டும் திட்டம், கிராமப்புறங்களில் தொழில்நுட்பங்களை விரிவாக்கம் செய்யும் திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்,து நபார்டு வங்கியின் சாதனை விளக்க புத்தகங்களை தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம்…
ஆக்ஸிஜனேற்றியாக இருக்கும் வைட்டமின் ஈ, ஆரோக்கியமான தோல் மற்றும் கூந்தலுக்கு தேவைப்படுகிறது. குறைபாடு உலர்ந்த, செதில் தோல் அல்லது உடையக்கூடிய, மெலிந்த கூந்தலை ஏற்படுத்தும். உயிரணு மீளுருவாக்கம் மற்றும் பழுது இல்லாததால் தோல் கடினமான அல்லது வீக்கமடைந்து காயம் குணப்படுத்துவது தாமதமாகும்.பெரும்பாலான மக்கள் கிரீம்கள் அல்லது எண்ணெய்கள் மூலம் வெளிப்புறமாக வைட்டமின் ஈ பயன்படுத்துகிறார்கள் என்றாலும், உள் குறைபாட்டிற்கு உணவு அல்லது துணை திருத்தம் தேவை. பாதாம், சூரியகாந்தி விதைகள், கீரை மற்றும் வெண்ணெய் போன்ற வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவு உணவுகளை வழக்கமான அடிப்படையில் உணவில் இணைக்க வேண்டும்.ஆரோக்கியமான பார்வைக்கு வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. குறைபாடு விழித்திரை மற்றும் பிற கண் கட்டமைப்புகளுக்கு கண் சேதத்தை ஏற்படுத்துகிறது, மேலும் பார்வை இடையூறுகள் ஏற்படலாம். இவை அனைத்தும் ஆரம்பத்தில் எச்சரிக்கை அறிகுறிகள், மங்கலான பார்வை, கவனம் செலுத்துவதில் சிரமம் அல்லது ஒளி உணர்திறன். நாள்பட்ட குறைபாடு விழித்திரை சிதைவு போன்ற…
சென்னை: மாணவர்களுக்கு சரிசமமான கற்றலை உறுதிசெய்யும் விதமாக பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: வகுப்பறையில் வசதியான இருக்கை ஏற்பாடு கற்றலை மேம்படுத்துவதிலும், மாணவர்களை ஆசிரியர் நன்கு தொடர்பு கொண்டு உரையாடவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதை கருத்தில் கொண்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளார். இந்த அமைப்பில் ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர் மற்றும் கரும்பலகையை தெளிவாகப் பார்க்க முடியும். வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் எளிதில் தொடர்பு கொள்ள இயலும். மேலும், மாணவர்களின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் துல்லியமாக கண்காணிக்க முடியும். இதுதவிர கலந்துரையாடல்கள், கேள்வி பதில் அமர்வுகள், கருத்துகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ‘ப’ வடிவ இருக்கை வசதி சமவாய்ப்பை வழங்குகிறது. அதேபோல் தொழில்நுட்ப செயல்முறை…
‘மாரீசன்’ படத்தின் கதைக்களம் என்ன என்பதை இயக்குநரே பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார். ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தின் கதைக்களம் என்ன என்பதை இயக்குநர் சுதீஷ் சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதன்படி வடிவேலு ஒரு பணக்காரர் மட்டுமன்றி அல்சைமர் நோயாளி. ஒரு கட்டத்தில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கிறார் வடிவேலு. இதனை ஃபகத் ஃபாசில் பார்த்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து வடிவேலுவிடம் இருந்து அந்தப் பணத்தை எடுத்துவிட வேண்டும் என முனைகிறார். இதனால் நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு ஃபகத் ஃபாசில் பைக்கில் இறக்கி விடுவதாக அழைத்து வருகிறார். இந்தப் பயணத்தில் என்ன நடந்தது என்பதுதான் கதை. இறுதியில் வடிவேலுமிடம் இருந்து ஃபகத் ஃபாசிலுக்கு பணம் கிடைத்ததா, இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ். சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தை ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், லிவிங்ஸ்டன், கோவை சரளா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு…
மதுரை: மதுரையில் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்றுவதற்கு திமுகவினர் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை மாநகராட்சியில் வீடுகளுக்கு சொத்து வரி நிர்ணயிப்பதில் நடந்த பல கோடி முறைகேட்டைக் கண்டித்து பாஜக சார்பில் கோ.புதூர் பேருந்து நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: 2026 தேர்தலில் முருகன் சூரசம்ஹாரம் செய்வார். மதுரைக்கும், திமுவுக்கும் ராசி கிடையாது. ஆனால், மதுரையில் பாஜகவின் எல்லா கூட்டங்களும் வெற்றிகரமாக அமைந்துள்ளன. 2026 தேர்தலில் மீனாட்சியின் ஆட்சி தமிழகத்தில் மலரும். மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். கே.கே. நகர் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்றுவதற்காக, வணிக வளாக…
