தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் வசனங்கள் தமிழில் மிகவும் புகழ்பெற்றன. ‘சாமி’ படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. அதே போல விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் கோட்டா சீனிவாச ராவ் ஏற்று நடித்த ’சனியன் சகடை’ என்ற கதாபாத்திரமும் பெரும் வரவேற்பை பெற்றது. வில்லன் கதாபாத்திரம் தவிர்த்து பல்வேறு குணச்சித்திர, நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருந்தார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் பெண் வேடமிட்ட சந்தானத்துடன் கோட்டா சீனிவாச ராவ் நடித்த காட்சிகளை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது.…
Author: admin
விழுப்புரம்: வீட்டில் ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரத்தில், தனியார் நிறுவன ஆய்வுக்குப் பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனர் ராமதாஸ், “தைலாபுரத்தில் எனது வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டுகேட்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வாங்கப்பட்ட, விலை மதிப்புமிக்க இக்கருவியை 2 நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தோம். யார் வைத்தது, எதற்காக வைத்தார்கள் என ஆய்வு நடைபெறுகிறது” என்றார். இந்நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில், ஒட்டுகேட்பு கருவியை ஆய்வு செய்தவற்காக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 5 துப்பறியும் நிபுணர்கள் நேற்று வந்தனர். இக்குழுவினர் 3 மணி நேரம் ஒட்டுகேட்பு கருவியை ஆய்வு செய்தனர். பின்னர் ராமதாஸ் கூறும்போது, “என்னை சந்திக்க பாட்டாளி சொந்தங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் நான் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எனது வீட்டில் வைக்கப்பட்ட…
ஒரு சமீபத்திய ஆய்வில், மன அழுத்தம் நினைவக குறியாக்கம் மற்றும் மீட்டெடுப்பை கணிசமாக மாற்றுகிறது, இது PTSD போன்ற நிலைமைகளை அதிகரிக்கும். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள், மன அழுத்தம் எண்டோகன்னபினாய்டுகளின் வெளியீட்டைத் தூண்டுகிறது, நினைவக பொறிகளை விரிவுபடுத்துகிறது மற்றும் பயம் பொதுமைப்படுத்தலை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடித்தனர். இந்த முன்னேற்றம் எண்டோகான்னாபினாய்டு ஏற்பிகளைத் தடுப்பதன் மூலமும், நினைவக விவரக்குறிப்பை மீட்டெடுப்பதன் மூலமும், பலவீனப்படுத்தும் PTSD அறிகுறிகளைத் தணிப்பதன் மூலமும் இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான நம்பிக்கையை வழங்குகிறது. வேலையில் காலக்கெடுவைத் துரத்துவதற்கும் தனிப்பட்ட கடமைகளை சமப்படுத்த முயற்சிப்பதற்கும் இடையில், மன அழுத்தம் பலருக்கு ஒரு நிலையான தோழராக மாறியுள்ளது. பல ஆய்வுகள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுடன் நாள்பட்ட மன அழுத்தத்தை இணைத்துள்ள நிலையில், புதிய தரவு நீங்கள் விஷயங்களை எவ்வாறு நினைவில் வைத்திருக்கிறது என்பதை கூட பாதிக்கலாம் என்று கூறுகிறது. ஆம், அது சரி. மன அழுத்தம் நாம் எப்படி உணர்கிறோம் என்பது…
புதுடெல்லி: மகாராஷ்டிராவின் 11 மராட்டிய கோட்டைகளை, உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது. உலகம் முழுவதும் பழங்கால கட்டிடங்களை ஆய்வு செய்து உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து வருகிறது. அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி செய்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த 11 கோட்டைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டை என மொத்தம் 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்திருந்திருந்தது. இந்நிலையில், பாரிஸ் நகரில் 47-வது உலக பாரம்பரிய சின்னம் தொடர்பான கமிட்டி கூடி, பல்வேறு நாடுகள் பரிந்துரைத்த சின்னங்கள் குறித்து ஆய்வு நடத்தின. முடிவில் இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்பை வெளிப்படுத்தும் 11 கோட்டைகள் மற்றும் தமிழகத்தின் செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. மகாராஷ்டிராவில் மராட்டியர்கள் ஆட்சி காலத்தில் ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் பல இடங்களில் பாதுகாப்பான கோட்டைகள்…
புதுடெல்லி: திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் 1911-ல் ஏற்பட்ட ஜின்ஹை புரட்சிக்குப் பிறகு திபெத் தனி நாடாக பிரிந்தது. எனினும், 1950-ல் திபெத்தை சீனா மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதையடுத்து, திபெத்திலிருந்து வெளியேறிய 14-வது தலாய் லாமா இந்தியாவில் வசித்து வருகிறார். இதனிடையே அடுத்த தலாய் லாமாவை நாங்கள் தேர்வு செய்வோம் என சீனா கூறியது. இதற்கு அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது என தலாய் லாமா தெரிவித்தார். இந்நிலையில், திபெத் ஆக் ஷன் நிறுவனம் (டிஏஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் குழந்தைகள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 முதல் 6 வயதுக்குட்பட்ட சுமார் 1 லட்சம் குழந்தைகளும் அடங்குவர். ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த இந்தக் குழந்தைகளை…
மூலவர்: வாசுதேவ பெருமாள் அம்பாள்: செங்கமல வல்லி தல வரலாறு: இலங்கையில் யுத்தம் முடிந்து ராமபிரான், அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். அப்போது நாரதர் ராமபிரானிடம், “இலங்கையில் யுத்தம் முடிந்தாலும், அரக்கர்களின் வாரிசுகள் இன்னும் உயிருடன் உள்ளனர். ராவணனின் அழிவால், கோபத்துடன் இருக்கும் அவர்கள் உன்னை அழிப்பதாக சபதம் செய்துள்ளனர். கடலுக்கடியில் அசுரர்களான இரக்கபிந்து, இரக்தராட்சகன் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவம் பூர்த்தியானால், இறந்துபோன அனைத்து அசுரர்களும் உயிர் பெற்றுவிடுவர். எனவே நீ அவர்களை அழித்து தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய வேண்டும்” என்றார். உடனே ராமன், “குறிப்பிட்ட காலத்துக்குள் நான் அயோத்தி திரும்பாவிட்டால் தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி உயிரை விட்டு விடுவான். எனவே நீங்கள் வேறு ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். இதையடுத்து பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு அனுமனை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அனுமனுக்கு திருமால் சங்கு, சக்கரத்தையும், பிரம்மா பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும்,…
சென்னை: திமுகவில் புதிய உறுப்பினர்கள் 49.11 லட்சம் பேர் உட்பட 77.35 லட்சம் உறுப்பினர்கள் ஓரணியில் தமிழ்நாடு மூலம் இணைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை கண்காணிக்க திமுக தகவல் தொழில்நுட்ப அணியினரால் ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம், இங்கிருந்தபடியே தமிழகம் முழுவதும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் எந்த அளவில் உள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில் முதல்வர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: நமது திமுக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லி, தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்கதிமுகவில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும் போது, ‘‘அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது. அதேசமயம் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்தள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல; தமிழகத்தை, தமிழகத்தின்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (AP படம்) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களையும் கூட்டாளிகளையும் அட்டர்னி ஜெனரல் பாம் போண்டியைத் தாக்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார், அவர் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறார் என்றும் அவரது வேலையில் கவனம் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். உண்மை சமூகத்தைப் பற்றிய ஒரு நீண்ட பதவியில், டிரம்ப் மாகா இயக்கத்திற்குள் ஒற்றுமைக்காக முறையிட்டார், மேலும் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கோப்புகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட சர்ச்சையை விமர்சித்தார், இது எஃப்.பி.ஐ மற்றும் நீதித்துறைக்கு இடையில் ஆழமான மோதல்களைத் தூண்டியுள்ளது.”பாம் போண்டி தனது வேலையைச் செய்யட்டும் – அவள் பெரியவள்!” கூட்டாட்சி சட்ட அமலாக்கத்திற்குள் பதட்டங்கள் அதிகரித்ததாகக் கூறப்படுவதால் டிரம்ப் ஒரு நேரடி வேண்டுகோளை எழுதினார். எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களைக் கையாள்வதில் கொந்தளிப்பின் மத்தியில் எஃப்.பி.ஐ துணை இயக்குநர் டான் போங்கினோவும் பதவி விலகக்கூடும் என்ற எதிர்பார்ப்பின் பின்னர் எஃப்.பி.ஐ இயக்குனர் காஷ் படேல் தனது…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 11.18 லட்சம் பேர் தேர்வை எழுதி உள்ளனர். எத்தனை தேர்வு மையங்கள், எத்தனை ஆயிரம் பணியாளர்கள், எத்தனை லட்சம் தேர்வர்கள்.. அனைவரையும் ஒருங்கிணைத்து மிகுந்த கவனத்துடன் தேர்வாணையம் செயல்பட்டு இருக்கிறது. ஆணையத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து பல குற்றச்சாட்டுகள், விமர்சனங்களை பலர் எழுப்பலாம். அதன் உண்மைத் தன்மைக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், தேர்வுக்கான ஏற்பாடுகளைப் பொருத்தமட்டில் பெரிதாகக் குறையேதும் இல்லை என்பதே உண்மை. தேர்வு எழுதிய பல இளைஞர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில், எல்லாத் தேர்வு மையங்களிலும் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவே கூறினார்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் திட்டமிடல், உழைப்பு,அர்ப்பணிப்பு பாராட்டுக்கு உரியது. இனி… வினாத்தாள்! தமிழ், பொது அறிவு என இரண்டு பிரிவுகள்; ஒவ்வொன்றிலும் 100 வினாக்கள்; ஒவ்வொன்றுக்கும் ஒன்றரை மதிப்பெண்கள்; இரு பிரிவுகளும் சேர்த்து 300 மதிப்பெண்கள். ஆமாம்.…
சென்னை: ஜூலை 14, 16 தேதிகளில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான ஜூலை 14 மற்றும் 16-ம் தேதிகளில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைள் வந்தன. அதன் அடிப்படையில், இந்தத் தேதிகளில் ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்களும் 2 சார்பதிவாளர் உள்ள அலுவகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்களும் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
