சென்னை: புதிதாக பணிக்கு சேருவோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதனால் ரூ.3 கோடியே 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.99.45 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் ஆக. 1 முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பொருந்தும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (பிஎப்) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், முதல்முறையாக பணியில் இணைந்து வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை இரு தவணைகளாக வழங்கப்படும். இத்தொகை, நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தொழில் நிறுவனங்களுக்கும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2 ஆண்டுகளுக்கு மாதத்துக்கு…
Author: admin
மலச்சிக்கல் உங்களை வீங்கியதாகவும், மந்தமாகவும், வெளிப்படையான சங்கடமாகவும் உணரக்கூடும். ஓவர்-தி-கவுண்டர் மலமிளக்கிகள் விரைவான நிவாரணத்தை வழங்கக்கூடும் என்றாலும், அவை எப்போதும் சிறந்த நீண்ட கால தீர்வாக இருக்காது. அதிர்ஷ்டவசமாக, ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும் போது மலச்சிக்கலை மெதுவாக எளிதாக்கும் பயனுள்ள இயற்கை வைத்தியம் உள்ளது. இந்த எளிய, வீட்டு அடிப்படையிலான உத்திகள் விஷயங்களை இயற்கையாக நகர்த்த உதவும்.மலச்சிக்கலைக் குறைப்பதற்கும் ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிப்பதற்கும் இயற்கை வழிகள்இயற்கையாகவே மலச்சிக்கலை எளிதாக்க உடல் இயக்கம்உடல் செயல்பாடு உங்கள் குடலில் உள்ள தசைகளைத் தூண்ட உதவுகிறது. 20 முதல் 30 நிமிட விறுவிறுப்பான நடை கூட குடல் அசைவுகளை மேம்படுத்தலாம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். மென்மையான யோகா போஸ்கள், குறிப்பாக அடிவயிற்றில் கவனம் செலுத்தும் திருப்பங்கள் மற்றும் நீளங்களும் சிறந்த செரிமானத்தை ஆதரிக்கின்றன. வழக்கமான இயக்கம் உங்கள் செரிமான அமைப்பை செயலில் வைத்திருக்கிறது மற்றும் இயற்கையாகவே மலச்சிக்கலை நீக்க உதவுகிறது.அதிக தண்ணீரைக் குடிப்பது இயற்கையாகவே…
மாட்ரிட்: உலகக் கோப்பை வில்வித்தை போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, பிரனீத் கவுர், பிரித்திகா பிரதீத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 225-227 என்ற கணக்கில் சீன தைபேவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா 147-148 என்ற கணக்கில் இங்கிலாந்தின் எல்லா கிப்சனிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி நடித்து ஜூலை 4-ம் தேதி வெளியான படம், ‘பீனிக்ஸ்’. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், படத்தில் நடித்த மூணாறு ரமேஷ், ஆடுகளம் முருகதாஸ், நடிகர் திலீபன், காக்கா முட்டை விக்னேஷ், தயாரிப்பாளர் ராஜலட்சுமி அனல் அரசு என பலர் கலந்துகொண்டனர். இயக்குநர் அனல் அரசு பேசும்போது, “நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்த பிறகு இயக்குநராக முடிவு செய்தேன். 32 வருடங்களாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். ஒரு படத்தைத் தயாரிக்கும் அளவுக்கு இன்று வளர்ந்துள்ளேன். இந்த படத்தின் வெற்றி எனக்கு மட்டும் பயன் அளிக்காது. இதில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் பயனளிக்கும். சூர்யாவை விமர்சித்து டிரோல் செய்வோருக்கு நான் சொல்லிக்கொள்வது, “நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை. இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில் எட்டிப்பார்த்துள்ள அனைவருடைய வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள். இதை சூர்யா விஜய் சேதுபதி படமாக…
சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் சென்னை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் கூறியதாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி திருச்சியில் பாதுகாப்புத் துறை ஓய்வூதியர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புத் துறை ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். அன்றைய தினமே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 2000 குறைகள் ஒரு மாத காலத்தில் தீர்க்கப்படும். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஓய்வூதியர்களின் குறைகளைக் கேட்டறிய 5 பிரச்சார வாகனங்கள் அனுப்பப்பட்டன. இந்த வாகனங்கள் மூலம் 5100 புகார்கள் பெறப்பட்டு அதில் 3 ஆயிரம் புகார்களுக்கு அப்போதே தீர்வு காணப்பட்டது. அதே இடத்தில் தீர்வுகாண முடியாத 2000 புகார்களுக்கு 21 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இந்தியாவிலேயே ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று குறைகளுக்குத் தீர்வு காணப்படுவது இது முதல்முறை. தமிழகத்தில் அடுத்தகட்டமாக மதுரையில் நவம்பர் மாதமும்,…
கனடாவில் இந்தியர்கள் ரிவர் கிரெடிட் வங்கியில் ‘கங்கா ஆர்த்தி’ நிகழ்த்தினர் கனடாவின் மிசிசாகாவில் உள்ள கிரெடிட் ஆற்றின் கரையில் இந்திய சமூகம் “கங்கா ஆர்த்தி” ஐ நிகழ்த்தியது, சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகளை ஈர்த்துள்ளது.பாரம்பரிய இந்து விழா, பொதுவாக கங்கா நதியின் கரையில் நிகழ்த்தப்பட்டது, அணி வானொலி திஷூம் ஏற்பாடு செய்தது மற்றும் பாரம்பரிய உடையில் உடையணிந்த இந்திய புலம்பெயர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்தியாவின் துணைத் தூதரகம், டொராண்டோ, நிகழ்வின் காட்சிகளை அவர்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கைப்பிடியில் பகிர்ந்து கொண்டது, தூதரகம் சஞ்சீவ் சக்லானி தூதரகத்தை “தெய்வீக மந்திரங்கள் மற்றும் பக்தியுள்ள மந்திரங்களின் ஆத்மார்த்தமான மாலை” என்று விவரித்ததைக் குறிப்பிட்டார்.விழாவில் வேத சடங்குகள், மந்திரம் கோஷம் மற்றும் கிரெடிட் ஆற்றில் விளக்குகள் மிதப்பது ஆகியவை அடங்கும், சமூக ஊடக பயனர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளை வரைந்தன.”கடன் அல்ல கங்கா அல்ல. அவர்கள் என்ன வணங்குகிறார்கள்?” மற்றவர்கள் இதை நம்பிக்கை மற்றும்…
திருவனந்தபுரம்: செவிலியர் நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ரூ.8.60 கோடி குருதிப் பணம் தருவதற்கு குடும்பத்தார் முன்வந்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர், செவிலியர் நிமிஷா பிரியா. 38 வயதாகும் நிமிஷா பிரியா மேற்காசிய நாடான ஏமனில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அங்கு தன்னுடன் பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்தி என்பவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவருக்கு வரும் 16-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மரண தண்டனையை தடுத்து நிறுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பாலக்காட்டில் உள்ள அவரது குடும்பத்தார் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் தலால் அப்டோ மெஹ்தி குடும்பத்தாருக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணத்தைக்…
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று 8-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். விம்பிள்டன் தொடரில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். ஒட்டுமொத்தமாக இகா ஸ்வியாடெக் வென்றுள்ள 6-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். முன்னதாக நேற்று முன்தினம் இரவு ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 3-6, 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப்…
சென்னை: கடலுார் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதிய சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வேயில் லெவல் கிராசிங் பகுதிகளில் ரயில்வே அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் ரயில்வே ‘கேட்’ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 9-ம் தேதி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, அரக்கோணம் – செங்கல்பட்டு தடத்தில் ரயில்வே அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியபோது, திருமால்பூர் அருகில் 40 மற்றும் 44 ரயில் கேட்டுகளில், இரவு பணியின்போது இரண்டு கேட் கீப்பர்கள், தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கேட் கீப்பர்கள் ஆஷிஸ்குமார், கார்த்திகேயன் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, லெவல் கிராசிங்கில் பணியாற்றும் கேட்கீப்பர்கள் மிகக் கவனமாக பணியாற்ற வேண்டும் என்றும், ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே…
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் நுவபாடா மாவட்டம் சிகாபாஹல் கிராமத்தைச் சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி மங்கல்பாரி மஹாரா. தள்ளாத வயதில் இவரால் நடப்பதற்கு முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் இவரது வீட்டின் அருகே இருந்த தெரு நாய் ஒன்று, மூதாட்டி மஹாராவை கடித்தது. இதற்காக, மூதாட்டிக்கு உள்ளூர் ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், நாய் கடித்துள்ளதால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி இல்லாததால் வெளியூர் சென்று செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார மைய அதிகாரி தெரிவித்தார். இதனால் மஹாரா, தடுப்பூசி போடுவதற்காக தனது கிராமத்துக்கு அருகிலுள்ள சினாப்பள்ளி சமூக சுகாதார மையத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் அந்த மாவட்ட டிரைவர்கள் சங்கத்தினர் ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனால் அவருக்கு வாகனங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து 10 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் அமைந்துள்ள சினாப்பள்ளிக்குச் மஹாரா கால்நடையாகவே புறப்பட்டார். தள்ளாத வயதில் மிகவும்…
