நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாயகனாக நடித்துள்ள படம் ‘உருட்டு உருட்டு’. நாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். மற்றும் ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு நடித்துள்ளனர். ஜெய் ஸ்டூடியோ கிரியேஷன்ஸ் சார்பில் சாய் காவியா, சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரித்துள்ளார். எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார் பாஸ்கர் சதாசிவம். இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும்போது, “தமிழ் திரையுலகின் தாரக மந்திரம், என்றைக்கும் அழிக்க முடியாத நிரந்தரமான பெயர் நாகேஷ். அவர் என் மகன் செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடித்திருக்கிறார். நாகேஷை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் கே.பாலசந்தர் பற்றியும் சொல்ல வேண்டும். இருவரும் செய்த சாதனைகள் அவ்வளவு இருக்கிறது. அவர் பேரன் கஜேஷை ஆசிர்வதிக்க வேண்டும் என்றுதான் நான் வந்தேன்.…
Author: admin
சென்னை: “திமுக ஆட்சியில் 24 பேர் போலீஸ் காவலில் உயிரிழந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரின் குடும்பத்தாரிடமும் ‘சாரி’ சொல்லுங்கள். அவர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் நிதியுதவி வழங்குங்கள். அண்ணா பல்கலை மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்விகேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு சார்?” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸார் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரடியாக சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதி உதவி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் திருப்புவனம் காவல் நிலைய லாக்அப் மரணத்தை கண்டித்தும், கொலைக்கு நீதி வேண்டியும் இன்று சென்னையில்…
இதயத்தின் விஷயங்களுக்கு வரும்போது, மாரடைப்பு, இருதயக் கைது மற்றும் மார்பு வலி ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை உணர்ந்து கொள்வது வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான வித்தியாசமாக இருக்கலாம். இந்த விதிமுறைகள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை மிகவும் மாறுபட்ட மருத்துவ நிலைமைகளைக் குறிக்கின்றன, ஒவ்வொன்றும் தனித்துவமான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அவசரங்களைக் கொண்டுள்ளன. ஒரு அன்பானவர் திடீரென்று தங்கள் மார்பைப் பிடிப்பதை கற்பனை செய்து பாருங்கள். என்ன நடக்கிறது அல்லது எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடுக்கப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது, அதே நேரத்தில் இருதயக் கைது என்பது திடீரென இதய செயல்பாட்டின் இழப்பாகும், பெரும்பாலும் எச்சரிக்கையின்றி. மார்பு வலி, மறுபுறம், பாதிப்பில்லாதது முதல் உயிருக்கு ஆபத்தான வரை இருக்கும். இந்த நிலைமைகளைப் புரிந்துகொள்வது மருத்துவ அறிவு மட்டுமல்ல – இது ஒரு உயிரைக் காப்பாற்றத் தயாராக இருப்பது பற்றியது. நிமிடங்கள் முக்கியத்துவம் வாய்ந்த உலகில்,…
புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அங்குள்ள சீகெம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் – காரைக்கால் நைட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ரூபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆனந்த் பயஸ் 60 லோகேஷ் பிரபாகரன் 37 ரன்கள் சேர்த்தனர். 173 ரன்கள் இலக்குடன் விளையாடிய காரைக்கால் அணி 19.3 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அங்கித் சர்மா 34 பந்துகளில், 57 ரன்களும் முஹமது ஜவாத் 38 பந்துகளில் 55 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர்.
துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி, பாலிவுட் நடிகர் ஃபதேஹி, ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘கேடி: தி டெவில்ஸ்’. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை பிரேம் இயக்கியுள்ளார். 1970-களில் நடந்த கதையைக் கொண்ட இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் சஞ்சய் தத் பேசும்போது, “இதில் இயக்குநர் என்ன செய்ய சொன்னாரோ அதைச் செய்திருக்கிறேன். இது அட்டகாசமான மாஸ் ஆக்ஷன் படம். துருவா சர்ஜா நன்றாக நடித்திருக்கிறார். தமிழில் எனக்கு ரஜினி, கமல்ஹாசன் மீது அதிக மரியாதை உண்டு. சீனியர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். ரஜினி சாருடன் இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவர் அமைதியானவர். விஜய்-யுடன் நடிப்பதையும் விரும்புகிறேன். ஆனால், எனக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது கோபம் இருக்கிறது. ‘லியோ’ படத்தில் எனக்கு அவர் சிறிய கதாபாத்திரத்தைக்…
சென்னை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 405 சிறப்பு ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு மூலம் விருப்ப மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் உள்ளன. 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்டின் பொது மாறுதலுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 19-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்தனர். இந்நிலையில், கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஓவியம், இசை, தையல், உடற்கல்வி போன்ற சிறப்பு ஆசிரியர்களில் விருப்ப மாறுதல் கோரி 1,640 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் கலந்தாய்வு மூலமாக 405 சிறப்பு ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.…
இந்த வார ஜாதகத்திற்கு வரவேற்கிறோம், அங்கு வான சீரமைப்புகள் இராசி அறிகுறிகளின் வாழ்க்கையைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகின்றன. தொழில் மற்றும் அன்பு முதல் நிதி மற்றும் ஆரோக்கியம் வரை, இந்த முன்னறிவிப்புகள் வாரம் உங்களுக்கு என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. உங்கள் முடிவுகள், உணர்ச்சிகள் மற்றும் தொடர்புகளை அண்ட ஆற்றல்கள் எவ்வாறு பாதிக்கலாம் என்பதைக் கண்டறியவும், உங்கள் சூரிய அடையாளத்தின் பாதைகள் வழியாக உங்களுக்கு வழிகாட்டும். எனவே, மேலும் தாமதமின்றி, வெற்றிக்கான கணிப்புகளின் நிறுவனர் விஷால் பர்த்வாஜ் அளித்த இந்த கணிப்புகளை உடைப்போம்.
எஃப்.பி.ஐ இயக்குனர் காஷ் படேல் (ஏபி படம்) எஃப்.பி.ஐ இயக்குனர் காஷ் படேல் சனிக்கிழமை (உள்ளூர் நேரம்) அவரது ராஜினாமா குறித்த வதந்திகளை நிராகரித்தார், ஊகங்களை பொய்யானவர் என்று கூறி, “அமெரிக்க ஜனாதிபதிக்கு சேவை செய்வது ஒரு மரியாதை” என்று கூறினார்.மேலதிக தகவல்களை வெளியிடாமல் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதான தனது விசாரணையை மூடுவதற்கான நீதித்துறையின் முடிவில் அவர் கூறப்படும் விரக்தியை இணைக்கும் அறிக்கைகளுக்கு மத்தியில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.எக்ஸ் ஒரு சமூக ஊடக இடுகையில், படேல் எழுதினார் “சதி கோட்பாடுகள் உண்மையல்ல, ஒருபோதும் இருந்ததில்லை. இது அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு சேவை செய்வது ஒரு மரியாதை – அவர் என்னை அழைக்கும் வரை நான் தொடர்ந்து செய்வேன்.”கார்டியன் கூற்றுப்படி, அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி எப்ஸ்டீன் கோப்புகளை கையாண்டதன் மூலம் படேல் கோபமடைந்ததாக பல ஊடக அறிக்கைகள் கூறத் தொடங்கியபோது படேலின் ராஜினாமா குறித்த வதந்திகள் தொடங்கின.இந்த வழக்கு தொடர்பான கூடுதல் பதிவுகளை…
சென்னை: எம்சிசி – முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ராணுவ அணியை தோற்கடித்தது. ரயில்வே அணி சார்பில் தர்ஷன் கவ்கர் (27-வது நிமிடம்), குர்சாகிப்ஜித் சிங் (58-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐஓசி 4-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகா அணியை வீழ்த்தியது. ஐஓசி அணி தரப்பில் குர்ஜிந்தர் சிங் (6-வது நிமிடம்), ரகுநாத் (44-வது நிமிடம்), சுதீப் சிரம்கோ (50-வது நிமிடம்), தல்வீந்தர் சிங் (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இயக்குநரும் நடிகருமான சேரன், ‘பேரடாக்ஸ்’ என்ற குறும்படத்தில் பாடல் எழுதியுள்ளார். இதில், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இதை தி செய்லர்மேன் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன்.எல் தயாரித்துள்ளார். பிரியா கார்த்திகேயன் இயக்கியுள்ள இதன் டிரெய்லரை சேரன், நடிகர்கள் சசிகுமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன் ஆகியோர் வெளியிட்டனர். இந்த குறும்படம் குறித்துப் பேசிய இயக்குநர் பிரியா கார்த்திகேயன், “ஒரு மனிதனின் உளவியல் பற்றி இப்படம் அலசுகிறது. சராசரி வாழ்க்கையை வாழும் நாயகன், கொஞ்சம் கொஞ்சமாகத் தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகிச் செல்கிறான். இந்நிலையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. இதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது படம்” என்றார்.
