Author: admin

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை நகராட்​சி, மாநக​ராட்​சி​யாகத் தரம் உயர்த்​தப்​பட்​டதையடுத்து நேற்று மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் மேயருக்கு தங்​கச் சங்​கி​லி, செங்​கோல் மற்​றும் அங்கி அணிவிக்​கும் விழா நடந்​தது. அமைச்​சர் எ.வ.வேலு தலைமை வகித்​தார். சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் கு.பிச்​சாண்​டி, எம்​.பி. அண்​ணாதுரை, ஆட்​சி​யர் க.தர்ப்​பக​ராஜ் முன்​னிலை வகித்தனர். துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், மேயர் நிர்​மலா வேல்​மாறனுக்கு தங்​கச் சங்​கி​லி, வெள்ளி செங்​கோல் வழங்​கி, மேயருக்​கான அங்​கியை அணி​வித்​தார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இங்கு ஆண் கவுன்​சிலர்​களை​விட பெண் கவுன்​சிலர்​கள்​தான் அதி​கம் உள்​ளனர். மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள், மேயர் அனை​வரும் மக்​கள் பணி​யில் முழு​மை​யாக ஈடு​படுத்​திக்​கொண்டு உழைக்க வேண்​டும். இங்​குள்ள மக்​களின் நீண்​ட​நாள் கோரிக்​கையை திரா​விட மாடல் அரசு நிறைவேற்றி உள்​ளது. திரு​வண்​ணா​மலை சர்​வ​தேச அளவில் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நகர​மாகி​விட்​டது. பாதாள சாக்கடை திட்டம்: திரு​வண்​ணா​மலை மாவட்ட வளர்ச்​சிக்கு கடந்த 4 ஆண்​டு​களில் பல்​வேறு திட்​டங்​களை முதல்​வரிடம் கோரிக்​கை​வைத்​து, அமைச்​சர் எ.வ.வேலு கொண்டு வந்​துள்​ளார். ரூ.40…

Read More

சென்னை: நபார்டு வங்​கி​யின் 44-வது ஆண்டு தொடக்க விழாவில் கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக்குப் பயன்படக்கூடிய வகையில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை கிண்​டி​யில் உள்ள தனி​யார் விடு​தி​யில் நபார்டு வங்​கி​யின் 44-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. நபார்டு தலை​வர் ஸ்ரீஷாஜி தலைமை வகித்​தார். சிறப்பு விருந்​தினர்​களாக மத்​திய நிதித் துறை செயலர் எம்​.​நாக​ராஜு, தமிழக தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் ஆகியோர் பங்​கேற்​றனர். இந்த நிகழ்ச்​சி​யில், லடாக் யூனியன் பிரதேசத்​தில் உள்ள லே நகரில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள நபார்டு துணை அலு​வல​கத்தை மத்​திய நிதித் துறை செயலர் நாக​ராஜு திறந்து வைத்​தார். மேலும், நபார்​டுக்​கான வாட்​ஸ்​-அப் சேனல், படித்த கிராமப்​புற பெண்​களுக்​கான வரு​வாய் ஈட்​டும் திட்​டம், கிராமப்​புறங்​களில் தொழில்​நுட்​பங்​களை விரி​வாக்​கம் செய்​யும் திட்​டம் ஆகிய​வற்​றையும் தொடங்கி வைத்​தார். தொடர்ந்​,து நபார்டு வங்​கி​யின் சாதனை விளக்​க புத்​தகங்​களை தமிழக அரசின் தலை​மைச் செயலர் முரு​கானந்​தம் வெளி​யிட்​டார். அவர் பேசும்​போது, ‘‘நாட்​டின் வளார்ச்​சி,…

Read More

ஒரு பெரிய முன்னேற்றத்தில், டெல் அவிவ் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஃபார் உயிரியல் ஆராய்ச்சி (ஐபிஐபிஎல்) விஞ்ஞானிகள் உலகின் முதல் எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர், இது ஒரு கொடிய, ஆண்டிபயாடிக்-எதிர்ப்பு பாக்டீரியத்தை எதிர்த்துப் போராடுகிறது.கோவ் -19 ஷாட்களைப் போலவே, இந்த தடுப்பூசி பாதுகாப்பை வழங்க லிப்பிட் நானோ துகள்களைப் பயன்படுத்துகிறது-மேலும் இதைப் பெறுகிறது-இது அங்குள்ள மிக மோசமான பாக்டீரியா நோய்த்தொற்றுகளில் ஒன்றான நியூமோனிக் பிளேக்கிற்கு எதிரான விலங்கு சோதனைகளில் 100% செயல்திறனைக் காட்டியது.மேம்பட்ட அறிவியல் இதழின் அட்டைப்படத்தை கூட தரையிறக்கிய இந்த ஆராய்ச்சி, பேராசிரியர் டான் பியர் மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் அவரது குழு, ஐ.ஐ.பி.ஆரின் விஞ்ஞானிகளுடன் தலைமை தாங்கியது. நட்சத்திர குழுவில் டாக்டர் எடோ கோன், டாக்டர். இன்பால் ஹசன்-ஹாலேவி, மற்றும் பிஎச்.டி மாணவர் சனி பெனாரோச்.”யெர்சினியா பூச்சிகளுக்கு எதிராக ஒரு பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்க பல தசாப்தங்களாக விரிவான உலகளாவிய முயற்சிகள்…

Read More

ராய்ப்பூர்: வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் இந்​தி​யா​வில் இருந்து மாவோ​யிஸ்ட் தீவிர​வாதம் வேரறுக்​கப்​படும் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​துள்​ளார். இதன்​படி சத்​தீஸ்​கர், ஒடி​சா, ஜார்க்​கண்ட், பிஹார் உள்​ளிட்ட மாநிலங்​களில் மாவோ​யிஸ்ட் தீவிர​வா​தி​களுக்கு எதி​ராக அதிதீ​விர நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த மாநிலங்​களில் தீவிர​வா​தி​கள் சரண் அடைய​வும் வாய்ப்பு வழங்​கப்​பட்டு உள்​ளது. இதன்​படி கடந்த 2024-ம் ஆண்டு முதல் இது​வரை சத்​தீஸ்​கரில் 1,450 மாவோ​யிஸ்ட் தீவிர​வா​தி​கள் சரண் அடைந்​துள்​ளனர். 1,400-க்​கும் மேற்​பட்டோர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். மாவோ​யிஸ்ட் தீவிர​வாத அமைப்​பில் இணைந்த இளைஞர்​கள் மற்​றும் இளம்​பெண்​களுக்கு வலுக்​கட்​டாய​மாக கருத்​தடை செய்​யப்​பட்டு உள்​ளது. இதன்​காரண​மாக சரணடைந்த தீவிர​வா​தி​கள், திரு​மணம் செய்து குழந்தை பெற்​றுக் கொள்​வ​தில் சிரமங்​கள் எழுந்​துள்​ளன. இதுதொடர்​பாக சத்​தீஸ்​கர் உள்​துறை அமைச்​சர் விஜய் சர்மா கூறும்​போது, “சரணடைந்த, கருத்​தடை செய்​யப்​பட்ட தீவிர​வா​தி​கள் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்​றுக் கொள்ள அரசு சார்​பில் உதவி​கள் வழங்​கப்​படும்​’’…

Read More

விருதுநகர்: ​விருதுநகரில் சங்​கக் கட்​டிடத்தை நிர்​வகிப்​பது யார் என்​பது தொடர்​பாக அரசு ஊழியர் சங்​கத்​தினரிடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. இது தொடர்​பாக 44 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். விருதுநகர் முத்​து​ராமலிங்​கம் தெரு​வில் 3,700 சதுர அடியில் கட்​டிய அரசு ஊழியர் சங்​கக் கட்​டிடம் உள்​ளது. கடந்த 2019-ல் தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​தின் மாநிலப் பொதுச் செய​லா​ளர் அன்​பரசனுக்​கும், விருதுநகர் மாவட்ட நிர்​வாகி​களுக்​கும் இடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​ட​தால், மாவட்​டக் குழுவை மாநில குழு கலைத்​தது. இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட சங்​கம் தொடர்ந்த வழக்​கில், மாவட்ட குழு கலைக்​கப்​பட்​டது செல்​லாது என்று நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது. 2019 முதல் விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்​கக் கட்​டிடத்தை மாவட்ட நிர்​வாகி​களே பராமரித்து வந்​தனர். 2023ல் விருதுநகரில் தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​துக்கு மாற்​றாக, ‘தமிழ்​நாடு அரசு ஊழியர்​கள் சங்​கம்’ என்ற புதிய சங்கத்தைமாவட்​டக் குழு நிர்​வாகி​கள் தொடங்​கினர். அதே​நேரம், சங்​கத்​தின்…

Read More

புதுடெல்லி: மும்​பையை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் வேதாந்தா நிறுவனம் சுரங்க தொழிலில் கோலோச்சி வரு​கிறது. அந்த நிறு​வனம் சார்​பில் கோவா, கர்​நாட​கா உட்பட பல மாநிலங்கள் மற்றும் லைபீரியா உள்​ளிட்ட வெளி​நாடு​களி​லும் சுரங்​கங்​கள் உள்​ளன. இந்த சூழலில் 2024-25-ம் நிதி​யாண்​டில் பல்​வேறு கட்​சிகளுக்கு வழங்​கிய நன்​கொடை விவரங்​களை வேதாந்தா நிறுவனம் வெளி​யிட்டு இருக்​கிறது. இதன்​படி அந்த நிறு​வனம் சார்​பில் பாஜக​வுக்கு ரூ.97 கோடி நன்​கொடை வழங்​கப்​பட்டு உள்​ளது. அதற்கு முந்​தைய ஆண்டு பாஜக​வுக்கு ரூ.26 கோடி மட்​டுமே நன்​கொடை​யாக வழங்​கப்​பட்​டது. இதன்​படி பாஜக​வுக்கு வேதாந்தா வழங்​கிய நன்​கொடை 4 மடங்​காக உயர்ந்​துள்​ளது. ஒடி​சாவை சேர்ந்த பிர​தான எதிர்க்​கட்​சி​யான பிஜு ஜனதா தளத்​துக்கு வேதாந்தா நிறுவனம் சார்​பில் ரூ.25 கோடி, ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்​சாவுக்கு ரூ.20 கோடி, காங்​கிரஸுக்கு ரூ.10 கோடி வழங்​கப்​பட்டு உள்​ளது. இதற்கு முந்​தைய நிதி​யாண்​டில் காங்​கிரஸுக்கு ரூ.49 கோடி நன்​கொடை வழங்​கியுள்ளது. 2024-25-ம் நிதி​யாண்​டில் ரூ.10 கோடி மட்​டுமே…

Read More

முதல் காலத்தின் வயது எதிர்காலத்தில் இதயம், வளர்சிதை மாற்ற மற்றும் இனப்பெருக்க அபாயங்களுக்கு தடயங்களை வழங்குகிறது. வாழ்க்கையில் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக ஆரோக்கியத்திற்கு வரும்போது. பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் வரையறுப்பதில் மாதவிடாய் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டு. மாறிவிடும், உங்கள் முதல் காலகட்டத்தின் வயதில் வாழ்க்கையின் பிற்பகுதியில் என்ன வரப்போகிறது என்பதில் பெரும் பங்கு உண்டு. ஒரு பெண் தனது முதல் காலகட்டத்தை அனுபவிக்கும் வயது அவரது நீண்டகால ஆரோக்கியத்தைப் பற்றிய முக்கியமான தடயங்களை வழங்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் காட்டுகிறது.எண்டோ 2025 இல் வழங்கப்பட்ட புதிய பிரேசிலிய ஆய்வின்படி, கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் எண்டோகிரைன் சொசைட்டியின் வருடாந்திர கூட்டத்தில், முதல் காலகட்டத்தின் வயது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள் போன்ற நிலைமைகளுக்கு ஒரு பெண்ணின் நீண்டகால ஆபத்து குறித்து மதிப்புமிக்க தடயங்களை வழங்க முடியும்.என்ன மெனார்ச்மெனார்ச் ஒரு பெண் இளம்…

Read More

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த சில மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையடுத்​து, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது. தேர்​தல் அலு​வலர்​கள் வீடு வீடாக சென்று வாக்​காளர் பட்​டியலில் உள்​ளவர்​களின் பிறப்பு சான்​றிதழ் உள்​ளிட்ட ஆவணங்​களை சரி​பார்த்து வரு​கின்​றனர். இந்த நடவடிக்​கையை எதிர்த்து எதிர்க்​கட்​சிகள் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளன. இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், ஆதார், வாக்​காளர் அட்​டை, ரேஷன் அட்​டையை அடை​யாள ஆவண​மாக ஏற்​பது குறித்து தேர்​தல் ஆணை​யம் பரிசீலிக்க வேண்​டும் என உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், பிஹாரில் நேபாளம், வங்​கதேசம் மற்​றும் மியான்​மர் நாடு​களை சேர்ந்த ஏராள​மானோர் வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றிருப்​பது தெரிய​வந்​துள்​ள​தாக தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். பக்​கத்து நாடு​களில் இருந்து சட்​ட​விரோத​மாக குடியேறிய​வர்​கள் அடை​யாளம் காணப்​பட்டு அவர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​படு​வார்​கள் என அந்த அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். அதன் பிறகு வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி இறுதி வாக்​காளர்…

Read More

நாமக்​கல்: பழநி மலை​யில் மாலிப்​டினம் சுரங்​கம் தோண்​டி​னால், முருக பக்​தர்​களை ஒருங்​கிணைத்து போராட்​டம் நடத்​து​வோம் என்று கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈஸ்​வரன் எம்​எல்ஏ தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி மலைப் பகு​தி​யில் மத்​திய புவி​யியல் துறை மூலம் மாலிப்​டினம் உலோகம் இருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மாலிப்​டினம் சுரங்​கம் தோண்டி எடுத்​தால் பழநி மலைப் பகு​தி​கள் அனைத்​தும் அழிந்து போகும். பழநி மலை​யின் மீதும் அங்​குள்ள முரு​கன் மீதும் உலகம் முழு​வதும் உள்ள தமிழர்​கள் அனை​வரும் மிகுந்த பற்று வைத்​துள்​ளனர். மதுரை மாவட்​டம் அரிட்​டாப்​பட்​டியைப்​போல, இப்​பகு​தி​யில் சமண படு​கைகளும், மிகப்​பெரிய பல்​லு​யிர் தளங்​களும் உள்​ளன. இங்கு சுரங்​கம் தோண்​டி​னால் பழநி மலை மற்​றும் இடும்​பன் மலை, ஐவர் மலை, நெய்க்​காரப்​பட்​டி, கரடிக்​குட்​டம், சத்​திரப்​பட்டி ஆகிய பகு​தி​கள் பாதிக்​கப்​படும். மதுரை​யில் முரு​கன் மாநாடு நடத்​துபவர்​கள், பழநி முரு​கன் கோயி​லில் சுரங்​கம் தோண்ட நினைப்​பது…

Read More

நியூயார்க்: இரண்டு வாடிக்​கை​யாளர்​களுக்கு பார்​வை​யிழப்பு ஏற்​பட்​ட​தாக புகார் எழுந்​த​தால், 8.5 லட்​சம் ஸ்டீல் தண்​ணீர் பாட்​டில்​களை திரும்​பப் பெறுவதாக வால்​மார்ட் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. அமெரிக்​காவைச் சேர்ந்த சில்​லறை வர்த்தக நிறு​வன​மான வால்​மார்ட், ‘ஓசார்க் டிரயல் 64 ஆஸ் ஸ்டெ​யின்​லெஸ் ஸ்டீல் இன்​சுலேட்​டடு வாட்​டர் பாட்​டிலை’ கடந்த 2017-ம் ஆண்டு முதல் அமெரிக்​கா​வில் விற்​பனை செய்து வரு​கிறது. இந்​நிலை​யில், அமெரிக்க நுகர்​பொருள் தயாரிப்பு பாது​காப்பு ஆணை​யம் (சிபிஎஸ்​சி) வெளி​யிட்ட அறிவிக்​கை​யில், “வால்​மார்ட்​டின் ஸ்டீல் தண்​ணீர் பாட்​டிலில் கார்​பன் ஏற்​றப்​பட்ட பானங்​கள் அல்​லது பழச்​சாறு அல்​லது பால் போன்ற கெட்​டுப்​போகக் கூடிய பானங்​களை அடைத்து வைத்​து​விட்டு திறந்​த​போது அதன் மூடி அதிக அழுத்​தத்​துடன் வெளிப்​படு​வ​தாக புகார் எழுந்​துள்​ளது. குறிப்​பாக, அவ்​வாறு திறந்​த​போது அதன் மூடி முகத்​தில் தாக்​கிய​தில் காயமடைந்​த​தாக 3 வாடிக்​கை​யாளர்​கள் வால்​மார்ட் நிறு​வனத்​திடம் புகார் தெரி​வித்​துள்​ளனர். இதில் 2 பேரின் கண்​ணில் மூடி பட்​ட​தால் பார்வை நிரந்​தர​மாக பறி​போய் உள்​ளது. எனவே, இந்த…

Read More