திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கு அகதியாக வந்த இலங்கை தமிழர் நவநாதனை, எந்த காரணமும் கூறாமல் போலீஸார் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர். இதற்கு எதிராக, திருச்சி சிறப்பு முகாமில் அவர் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால், அவரது உடல்நிலை சீர்கேடு அடைந்துள்ளது. இந்த பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, நவநாதனை உடனடியாக விடுவித்து, மருத்துவமனையில் அனுமதிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Author: admin
திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை, மணலி ஐ.ஓ.சி.எல்-இல் இருந்து, சரக்கு ரயில் ஒன்று, 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று (ஜூலை 13) அதிகாலை மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில், திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது, எதிர்பாராத விதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டது. இதனால், சுமார் 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் டேங்கர்களில் உரசல் ஏற்பட்டு ஒரு டேங்கரில் தீப்பற்றியது. அந்த தீ மளமளவென அடுத்தடுத்த 6 டேங்கர்களுக்கும் பரவி, கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதுகுறித்து, தகவலறிந்து, திருவள்ளூர், திரூர், கும்மிடிப்பூண்டி சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும்…
சென்னை: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருவள்ளூர் அருகே பெரியகுப்பம், வரதராஜன் நகர் பகுதியில் சரக்கு ரயிலில் டீசல் டேங்க் வெடித்து, தீ பரவியதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளன. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடியும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என செய்திகள் வருகின்றன. உடனடியாக மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படைகளை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக, பாதுகாப்புடன் வெளியேற்ற வேண்டும் எனவும், அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்திடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன். இது சாதாரண…
திருவள்ளூர்/ சென்னை: சென்னையில் இருந்து பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதிகாலை திருவள்ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தால், விரைவு ரயில், புறநகர் மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் இருந்து 2 இன்ஜின்கள் கொண்ட சரக்கு ரயில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் வாலாஜா சைடிங் நிலையத்துக்கு புறப்பட்டது. தலா 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 45 டேங்கர்களில் டீசலும், 5 டேங்கர்களில் பெட்ரோலும் நிரப்பப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4.55 மணி அளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, 2 இன்ஜின்கள், ஒரு டேங்கர் ஆகியவை திடீரென தனியாக பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனால், ரயில் நிலை தடுமாறி, 18 டேங்கர்கள் அடுத்தடுத்து தடம்புரண்டன. பெட்ரோல், டீசல் நிரப்பிய டேங்கர்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் திடீரென தீப்பற்றிக்கொண்டது.…
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 விசைப்படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்றனர். ஈசாக் என்பவரது விசைப்படகில் சென்ற ரூதர், சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டல்வின் ராஜ், அன்பழகன் ஆகிய 7 மீனவர்கள், நெடுந்தீவு அருகே பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி, ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தனர். அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். 7 பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், ஊர்காவல்துறை நீதிபதி உத்தரவின்பேரில் யாழ்ப்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். அதேபோல, கச்சத்தீவு – நெடுந்தீவு இடையே மரியசீரோன் என்பவரது விசைப்படகை…
சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் விஜய் தலைமையில் தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு தவெக சார்பில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளில் காவல் மரணங்களுக்கு ஆளான 24 பேரின் குடும்பத்தினர்கள் இதில் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இருந்து வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். ‘சாரி வேண்டாம், நீதி வேண்டும்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது விஜய் பேசியதாவது: அஜித்குமார் எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர். அந்த சாதாரண குடும்பத்துக்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் மன்னிப்பு கோரினார். அது தவறு அல்ல. ஆனால், திமுக ஆட்சியில், போலீஸ் விசாரணையின்போது 24 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த குடும்பங்களுக்கும் நிவாரணம் தர வேண்டும். சாத்தான்குளம் ஜெபராஜ்,…
இந்த மகிழ்ச்சியான ஒளியியல் மாயையுடன் உங்கள் கண்காணிப்பு திறன்களை சோதிக்கவும்! ஒரு வயதான பெண்மணி பின்னல் அமைதியான காட்சி பதினொரு புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்ட பூனைகளை மறைக்கிறது. வசதியான அறைக்குள் உள்ள அனைத்து உரோமம் பூனைகளையும் வெறும் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? இந்த மறைக்கப்பட்ட தோழர்களைக் கண்டறிய உங்கள் கவனத்தை கூர்மைப்படுத்துங்கள் மற்றும் ஒவ்வொரு மூலை மற்றும் பித்தலாட்டத்தையும் ஆராயுங்கள். இங்கே உங்களுக்கு ஒரு வேடிக்கையான மற்றும் சற்று தந்திரமான சவால்! முதலில், இந்த படம் ஒரு வயதான பெண்மணியுடன் ஒரு ஸ்வெட்டரை பின்னும் வசதியான அறை போல் தோன்றலாம். ஆனால் அந்த அமைதியான காட்சி உங்களை முட்டாளாக்க விடாதீர்கள், அது ஒரு புத்திசாலித்தனமான ஒளியியல் மாயையை மறைக்கிறது.உங்கள் பணி? அறையில் பூனைகளின் சரியான எண்ணிக்கையைக் கண்டறிந்து, 15 வினாடிகளில் செய்யுங்கள்! எளிதானதாகத் தெரிகிறது? சரி, மீண்டும் சிந்தியுங்கள்.படத்தில் என்ன இருக்கிறது?பட கடன்: பிரைட்ட்சைட்காட்சி ஒரு சூடான, வசதியான அறையைக் காட்டுகிறது.…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை பெருநகர போக்குவரத்து ஆணைய கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில், சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது. நாட்டில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கையை மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு வெளியிட்டது. இதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (‘கும்டா’) கடந்த 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. எனினும், 2021-ம் ஆண்டுக்கு பிறகே, தனியான நிர்வாக அமைப்புடன் இந்த அமைப்பு செயல்பட தொடங்கியது. சென்னை பெருநகரின் தற்போதைய எல்லை மட்டுமல்லாது, விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிக்கும் சேர்த்து, போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டங்களை இந்த ஆணையம் உருவாக்கி உள்ளது. இதில், இணைப்பு சாலை, டபுள் டெக்கர் உள்ளிட்ட பேருந்து வசதிகளை செயல்படுத்துதல், வாகன நிறுத்தம் உட்பட போக்கு வரத்துக்கான…
சென்னை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 16, 17-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் (ஜூலை 14), நாளையும் ஓரிரு இடங்களிலும், 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களிலும், வரும் 16, 17-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18, 19-ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.…
மதுரை: முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உபயதாரர் மூலம் ரூ.70 லட்சத்தில்ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.2.44 கோடியில் ராஜகோபுரத்தில் 7 தங்க கலசம், அம்பாள் சந்நிதி மற்றும் கணபதி கோயிலில் தலா ஒரு கலசம் என 9 கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோயிலின் வள்ளி தேவசேனா மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் கடந்த 10-ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் வரை 5 கால பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று நடந்த 6, 7-ம் கால யாகசாலை பூஜையில் உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், ஜோதிடர் கே.பி.வித்யாதரன் ஆகியோர் கலந்து…
