Author: admin

குவாஹாட்டி: அசாம் ஐக்கிய சுதந்திர முன்னணி-இண்டிபென்டன்ட் (உல்பா-ஐ), அசாம் மாநிலத்துக்கு தனி நாடு அந்தஸ்து கோரி வருகிறது. மத்திய அரசால் தடை செய்யப் பட்ட இந்த அமைப்பின் கிழக்கு தலைமையகம் மியான்மர் எல்லையில் உள்ளது. இதன் மீது இந்திய ராணுவம் நேற்று அதிகாலையில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நயன் மெதி உட்பட 19 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 19 பேர் காயமடைந்ததாகவும் உல்பா-ஐ அமைப்பு நேற்று தெரிவித்தது. ஆனால் இந்திய ராணுவம் இதை மறுத்துள்ளது. இதுகுறித்து ராணுவ (குவா ஹாட்டி) மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறும்போது, “இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தவில்லை’’ என்றார். இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “உல்பா-ஐ அமைப்பினர் மீது அசாம் போலீஸார் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. இதுபோல அசாம் மண்ணில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படவில்லை. ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்தால்…

Read More

சென்னை: எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் ஹாக்கி கர்நாடகாவைச் சாய்த்தது. கடற்படை அணியின் சுஷில் தன்வார் 3 கோல்களையும் (3, 20, 34-வது நிமிடங்கள்), பிரசாந்த் ஒரு கோலையும் அடித்தனர். கர்நாடகா அணி தரப்பில் பாரத் மகாலிங்கப்பா (12-வது நிமிடம்), விஷ்வாஸ் (35-வது நிமிடம்) தலா ஒரு கோலடித்தனர். ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு (எச்யுடி), போபால் சாய் (என்சிஇ) அணி​கள் மோதிய ஆட்​டம் 4-4 என்ற கோல்​கள் கணக்​கில் டிரா​வில் முடிந்​தது. எச்​யுடி அணிக்​காக பட்​ராஸ் டிர்க்​கி(3-வது நிமிடம்) ஒரு கோலும், சோமண்ணா 2 கோலும்​(15, 41-வது நிமிடம்), பாலச்​சந்​தர் ஒரு கோலும்​(44-வது நிமிடம்) அடித்​தனர். என்​சிஇ அணிக்​காக முகமது ஜைத் கான்​(20-வது நிமிடம்), மன்​ஜீத்…

Read More

சென்னை: கடந்த தேர்​தலைவிட இரண்டு மடங்கு தொகு​தி​களை பெறு​வ​தில் விசிக உறு​தி​யாக இருப்​ப​தாக கட்சி வட்​டாரத்​தினர் கூறுகின்​றனர். கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்ற விசிக 6 தொகுதிகளில் போட்​டி​யிட்டு 4 தொகு​தி​யில் வெற்றி பெற்​றது. இதைத் தொடர்ந்​து, நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தலில் 2 தனித்தொகு​தி, 1 பொதுத்​தொகு​திக்​காக கடுமை​யாக போ​ராடியது. ஆனால், 2 தொகு​தி​களை மட்​டுமே திமுக ஒதுக்​கிய நிலை​யில், இரண்​டிலும் சொந்த சின்​னத் தில் போட்​டி​யிட்டு மாநில கட்சி என்னும் அங்​கீ​காரத்​தை​யும் பெற்​றது. இந்த அங்​கீ​காரத்தை தக்க வைக்க வேண்​டிய நிலை​யில் விசிக உள்​ளது. இதற்​காக குறைந்த​பட்​சம் 8 தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டும். அப்​படி​யா​னால் இரட்டை இலக்​கத் தொகு​தி​யில் போட்​டி​யிடு​வது அவசியம். அந்த வகை​யில் விசிக​வின் வளர்ச்​சியை முன்​வைத்து திமுக​விடம் தொகு​தியை கேட்​டுப் பெறு​வதற்​கான திட்​டங்​கள் வகுக்கப்பட்டு வரு​கின்​றன. இது தொடர்​பான அழுத்​தங்​களை முதல்​வரை சந்​திக்​கும்​போதும், திமுக மூத்த நிர்​வாகி​கள் மத்தியிலும்…

Read More

பாட்னா: வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு கோடி இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அளிக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்​தில் மேலும் கூறி​யுள்​ள​தாவது: இது​வரை, மாநிலத்​தில் 10 லட்​சம் இளைஞர்​களுக்கு அரசு வேலைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன, ஒட்​டுமொத்த அளவில் 39 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, 50 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கும் இலக்கு நிச்​சய​மாக எட்​டப்​படும். இந்த சூழலில், அடுத்த ஐந்து ஆண்​டு​களுக்கு (2025-2030) ஒரு கோடி இளைஞர்​களுக்கு வேலை வாய்ப்பை வழங்​கு​வதன் மூலம் இலக்கை இரட்​டிப்​பாக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதனை அடைய தனி​யார் துறை அதி​லும் குறிப்​பாக தொழில்​துறை பிரிவு​களில் புதிய வேலை வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும். இதற்​காக ஒரு உயர்​மட்​டக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு நிதிஷ் குமார் கூறியுள்​ளார். பிஹார் மாநில தேர்​தல் இந்த ஆண்டு இறு​தி​யில் அக்​டோபர் அல்​லது நவம்​பரில் நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனினும், இதற்​கான கால அட்​ட​வணையை தேர்​தல் ஆணை​யும்…

Read More

புதுடெல்லி: இந்திய தடகள வீரரும், ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரருமான அவினாஷ் சாப்ளே காயமடைந்துள்ளார். மொனாக்கோவில் தற்போது டயமண்ட் லீக் தடகள தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆடவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் பங்கேற்ற அவினாஷ் சாப்ளே தவறி கீழே விழுந்து காயமடைந்தார். வாட்டர் ஜம்ப் பகுதியில் அவர் குதிக்கும்போது கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு மூட்டு, கால், தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரின் பயிற்சியாளர் அம்ரிஷ் குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “மூட்டுப் பகுதியில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார். ஓரிரு வாரங்களில் அவர் குணமடைந்து வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவார்” என்றார்.

Read More

வாஷிங்டன்: இந்​தி​யா​வால் தேடப்​படும் முக்​கிய நபர் உட்பட 8 காலிஸ்​தான் தீவிர​வா​தி​களை அமெரிக்க புல​னாய்​வுத்​துறை (எப்​பிஐ) கைது செய்​தது. இந்​தி​யா​வில் குற்றச் செயல்​களில் ஈடு​பட்ட காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள், ரவுடிகள் பலர் அமெரிக்கா மற்​றும் கனடாவுக்​குள் சட்​ட​விரோத​மாக செல்​லும் சம்​பவங்​கள் கடந்த சில ஆண்​டு​களாக நடை​பெற்று வந்​தது. இவர்​கள் அங்​கும் ஆயுதங்​களை காட்டி மிரட்​டு​தல், ஆள்​கடத்​தல், சித்​ர​வதை போன்ற குற்​றங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இவர்​களில் முக்​கிய​மான நபர் பவித்​தர் சிங் பதாலா. இவர் பாபர் கல்சா இன்​டர்​நேஷனல் (பிகேஐ) என்ற தடை செய்​யப்​பட்ட அமைப்​பைச் சேர்ந்​தவர். பல தீவிர​வாத வழக்​கு​களில் தொடர்புடைய இவரை தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) தேடி வந்​தது. இந்​நிலை​யில் பவித்​தர் சிங் பதாலா உட்பட 8 காலிஸ்​தான் தீவிர​வா​தி​களை அமெரிக்க புல​னாய்வு அமைப்பு (எப்​பிஐ) கடந்த வெள்​ளிக்​கிழமை கைது செய்​தது. இவர்​கள் சான் ஜோகு​வின் மாகாணத்​தில் ரவுடி கும்​பல் போல் செயல்​பட்டு ஆள் கடத்​தல், சித்​ர​வதை செய்​தல் போன்ற…

Read More

சென்னை: ​காது கேளாத, வாய் பேச முடி​யாத மாற்​றுத் திற​னாளி​களுக்கு பதவி உயர்​வில் மொழி திறன் தேர்ச்​சி​யில் இருந்து மின் வாரி​யம் விலக்கு அளித்​துள்​ளது. தமிழகத்​தில் அரசு பணி​யில் உள்​ளவர்​கள் தமிழ் மொழி அறிந்​தவர்​களாக இருக்க வேண்​டும் என்பது விதி. தற்​போது டிஎன்​பிஎஸ்சி மூலம் நடத்​தப்​படும் தேர்​வு​களில் தமிழ் மொழி தாள் இடம்​பெற்​றுள்​ளது. அதில் தேர்ச்சி பெற்றால்​தான் அடுத்​தகட்ட தேர்வு நடை​முறைக்​குச் செல்ல முடி​யும். ஆனால் டிஎன்​பிஎஸ்​சி-க்கு முன் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்கு பதவி உயர்வு வழங்​கும்​போது தமிழ் மொழி தேர்​வில் தேர்ச்சி பெற்ற சான்​றிதழை சமர்​பிக்க வேண்​டும். தமிழக அரசு பணி​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு 4 சதவீதம் இடஒதுக்​கீடு உள்​ள​தால், அனைத்து அரசு துறை​களி​லும் மாற்றுத்திற​னாளி​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இதில் காது கேளாத, வாய் பேச முடி​யாத மாற்​றுத் திற​னாளி​களும் உள்ள நிலையில் அவர்​களால் தமிழ் மொழிக்​கான எழுத்​துத் தேர்​வில் பங்​கேற்க முடி​யும், ஆனால் நேர்​முகத் தேர்​வில் பங்​கேற்க முடி​யாது, எனவே…

Read More

நாம் வழிநடத்தும் உட்கார்ந்த வாழ்க்கை முறைகள் பல்வேறு வாழ்க்கை முறை நோய்களுக்கு ஒரு காரணமாகும், அதில் கொழுப்பு கல்லீரல் பெருகிய முறையில் பொதுவானது. கல்லீரல் அதிகப்படியான கொழுப்பைக் குவிக்கும் போது, அது கொழுப்பு கல்லீரல் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்ப கட்ட தரங்கள் 1 மற்றும் 2 ஐ உள்ளடக்கிய இரண்டு முக்கிய தரங்களுக்கு ஒதுக்குவதன் மூலம் மருத்துவர்கள் வழக்கமாக இந்த நிலையின் தீவிரத்தை தீர்மானிக்கிறார்கள். ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படும்போது இரு நிபந்தனைகளும் அடிப்படை வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சிகிச்சையளிக்க முடியும். கொழுப்பு கல்லீரலின் வெவ்வேறு கட்டங்களை கடந்து செல்வோம், அதை எவ்வாறு மாற்றலாம் …கொழுப்பு கல்லீரலைப் புரிந்துகொள்வது: தரம் 1 மற்றும் தரம் 2 என்றால் என்னகொழுப்பு கல்லீரல் என்றால் என்னகல்லீரல் திசுக்களில் எடையால் 5-10% க்கும் அதிகமான கொழுப்பைக் கொண்டிருக்கும்போது கல்லீரல் ஸ்டீடோசிஸ் அல்லது கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் அதிகப்படியான மது அருந்துதல்…

Read More

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டம் சங்காரியா நகரைச் சேர்ந்தவர் தாராசந்த் அகர்வால் (71). இவருடன் பிறந்தவர்கள் 8 பேர். இதில் 4-வதாக பிறந்த அகர்வால் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர் வங்கியில் (இப்போது எஸ்பிஐ) துணைப் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். 38 ஆண்டு பணிக் காலத்துக்குப் பிறகு கடந்த 2014-ல் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மனைவி உயிரிழந்ததால் அகர்வால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் அவருடைய பிள்ளைகள் ஆலோசனையின் பேரில் பகவத் கீதை உள்ளிட்ட நூல்களை படிக்கத் தொடங்கி உள்ளார். பின்னர், பட்டயக் கணக்காளர் (சிஏ) தேர்வை எழுதுமாறு அவருடைய பேத்தி கூறியுள்ளார். இதன்படி 2021-ம் ஆண்டு சிஏ தேர்வுக்காக பதிவு செய்துள்ளார். 2022-ம் ஆண்டு மே மாதம் பவுண்டேஷன் தேர்விலும் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இன்டர்மீடியட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் இறுதித் தேர்வு…

Read More

சென்னை: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி 2-ம் கட்ட பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்​கி, 36 தொகு​தி​களுக்கு செல்​கிறார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 2026 தேர்​தலை முன்​னிட்டு பல்​வேறு பகு​தி​களில் உள்ள நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் மற்​றும் திமுக அரசை கண்​டித்து அதி​முக ஆர்ப்​பாட்​டங்​களை அறி​வித்து வரு​கிறது. இதனிடையே “மக்​களை காப்​போம்: தமிழகத்தை மீட்​போம்” என்ற தலைப்பில் கடந்த ஜூலை 7-ம் தேதி முதல்​கட்ட பிரச்​சார சுற்றுப்​பயணத்தை பழனி​சாமி கோவை​யில் தொடங்​கி​னார். தொகு​தி​வாரி​யாக பிரச்​சா​ரம் செய்​து​வரும் நிலை​யில், செல்​லும் வழிகளில், ஆங்​காங்கே அதிக அளவில் ஒரே தொழிலை செய்​யும் நெச​வாளர்​கள், விவ​சா​யிகள், குறு, சிறு, நடுத்தர தொழில் செய்​வோர் உள்​ளிட்​டோரை சந்​தித்​து, அவர்​களின் குறை​களை கேட்டு வரு​கிறார். சில தொகு​தி​களில் 2026-ல் அதி​முக ஆட்சி அமைந்​ததும், அனை​வருக்​கும் தீர்வு கிடைக்​கும் என உறு​தி​யளித்து வரு​கிறார். சில தொகு​தி​களில் சாலை வலம் சென்​று, மக்​களை சந்​திக்​கிறார். இவரது முதற்​கட்ட பிரச்​சா​ரம் வரும்…

Read More