புதுடெல்லி: ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள விவகாரத்தில் அரசு இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். கேரள நர்ஸ் நிமிஷாவின் கழுத்துக்கு தூக்குக் கயிறு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவரைக் காப்பாற்ற மத்திய அரசின் தலையீட்டைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று ஆஜரான அட்டர்னி ஜெனரல் இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த ‘கைவிரிப்பு’, நிமிஷா தண்டனை நிறைவேற்றத்தை ஏறக்குறைய உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. அட்டர்னி ஜெனரல் ஆர்.வேங்கடரமணி நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கூறியது: ‘கேரள நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கில் இந்திய அரசாங்கம் எத்தனை தூரம் செல்ல இயலுமோ அதுவரை சென்று முயன்றுவிட்டது. உலகின் பிற நாடுகளைப்போல் அல்ல ஏமன். சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசி நிலைமையை இன்னும் சிக்கலானதாக மாற்ற நாங்கள்…
Author: admin
புதுச்சேரி: பாஜகவைச் சேர்ந்த ஜான்குமார் அமைச்சராக பதவியேற்றதை கண்டித்து இந்து முன்னணி, மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதோடு, பாஜகவையும் கடுமையாக விமர்சித்துள்ளது. புதுச்சேரி மாநில இந்து முன்னணி சார்பில் காமாட்சி அம்மன் கோயில் சொத்துகளை அபகரித்தவர்களிடம் இருந்து கோயில் சொத்துகளை மீட்க கோரியும், கோயில் சொத்துகளை அபகரித்த பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்குவதை கண்டித்தும் சுதேசி மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சனில்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் பங்கேற்று, ஜான்குமாரை கண்டித்தும், அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து செய்தியாளர்களிடம் மாநில தலைவர் சனில்குமார் கூறுகையில், “புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் நிலத்தை அபகரித்த விவகாரத்தில் ஜான்குமார் சிக்கியிருக்கிறார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இவருக்கு அமைச்சர் பதவி வழங்கக்…
அதிகாலை நேரம் நீண்ட காலமாக உற்பத்தித்திறன், தெளிவு மற்றும் சாதனை உணர்வோடு தொடர்புடையது. பலருக்கு, ஒரு காலை நடை என்பது ஒரு நேசத்துக்குரிய சடங்காகும், இது முன்னோக்கி இருக்கும் நாளுக்கான தொனியை அமைக்கிறது. ஆனால் பெரும்பாலும் இயற்கையின் அமைதியில், விடியற்காலையில் வெளியேற மக்களைத் தூண்டுவது எது?ஒரு கண்கவர் ஆய்வு காலை நடப்பவர்களின் உந்துதல்கள் மற்றும் நடத்தைகள் குறித்து வெளிச்சம் போடுகிறது, அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மனநிலையைப் பற்றிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்துகிறது. காலை நடப்பவர்களின் உலகத்தை ஆராய்வதன் மூலம், இந்த எளிய மற்றும் சக்திவாய்ந்த நடைமுறையின் நன்மைகள் மற்றும் சந்தோஷங்களைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறலாம், மேலும் நமது அன்றாட நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கூட காணலாம். ஒரு காலை நடைப்பயணத்தில் ஹார்மோன்களின் பங்குசமூக ஊடக தளமான எக்ஸ் குறித்த நேர்மையான மற்றும் நுண்ணறிவான இடுகையில், தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனர் டாக்டர் ஏ. வெலுமானி, காலை நடைகளை எடுக்க மக்களை ஊக்குவிப்பதில்…
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 13 வரை மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மொத்தம் 98 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இமாச்சல் அரசு இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் மழை, வெள்ள பாதிப்புகளில் சிக்கி 98 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் 57 பேர் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகள் போன்ற பேரிடர் பாதிப்புகளில் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 41 பேர் மழை காரணமாக ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். இதில் மேக வெடிப்புகளால் 15 பேர், நீரில் மூழ்கி 9 பேர், திடீர் வெள்ளத்தில் 8 பேர், பாம்புக் கடியால் 4 பேர், நிலச்சரிவு மற்றும் தீ விபத்தில் தலா ஒருவர், மின்சார தாக்குதல் உள்ளிட்ட பிற காரணங்களால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பருவமழையில் மண்டி…
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், உயர் நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து மாவட்ட நீதிபதியின் விசாரணை அறிக்கை, வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவரை விசாரணைக்காக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அஜித்குமார் உயிரிழந்தார். இதையடுத்து கோயில் பசு மடத்தில் வைத்து அஜித்குமாரை தனிப்படை போலீஸார் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தனிப்படை காவலர்கள் 5 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அஜித்குமார் சட்டவிரோத காவல் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்…
மழைக்காலம் கோடை வெப்பத்திலிருந்து நிவாரணம் தருகிறது, ஆனால் இது பெண்கள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு (யுடிஐக்கள்) அதிக வாய்ப்புள்ள நேரமாகும். ஈரப்பதம், ஈரப்பதம் மற்றும் மோசமான சுகாதாரம் ஆகியவற்றின் கலவையானது பாக்டீரியா வளர்ச்சிக்கு ஒரு சிறந்த சூழலை உருவாக்குகிறது, இது யுடிஐக்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நல்ல சுகாதாரத்தை பராமரிக்கவும், தொற்றுநோய்களைத் தடுக்கவும் இந்த நேரத்தில் பெண்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அபாயங்களைப் பற்றி அறிந்திருப்பதன் மூலமும், தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும், பெண்கள் யுடிஐக்களைப் பற்றி கவலைப்படாமல் மழைக்காலத்தை அனுபவிக்க முடியும். நல்ல சுகாதார நடைமுறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இந்த நோய்த்தொற்றுகளைத் தடுப்பதில் நீண்ட தூரம் செல்லக்கூடும்.யுடிஐ என்றால் என்னஒரு யுடிஐ என்பது சிறுநீர் அமைப்பின் எந்தப் பகுதியிலும் நிகழும் ஒரு தொற்று ஆகும், இதில் சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் ஆகியவை அடங்கும். ஆண்களை விட பெண்கள் யுடிஐக்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்,…
குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா, இந்திய விமானப்படை அதிகாரி மற்றும் ஆக்சியம் -4 விண்வெளி வீரர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) தனது பணியை முடித்த பின்னர் பூமிக்குத் திரும்புகிறார். தேசம் தனது வீட்டுக்கு காத்திருக்கையில், உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள அவரது குடும்பத்தினர் உணர்ச்சியுடனும் பெருமையுடனும் அதிகமாக உள்ளனர். அவரது தாயார் ஆஷா சுக்லா மற்றும் சகோதரி, ஷுச்சி மிஸ்ரா சிறப்பு பிரார்த்தனைகளை வழங்கினர், மேலும் அவர் பணிக்கு புறப்பட்ட தருணத்தை நினைவு கூர்ந்தார். அவர்களைப் பொறுத்தவரை, சுபன்ஷுவின் வருகை மீண்டும் ஒன்றிணைவதை விட அதிகம் – இது விண்வெளி ஆய்வில் இந்தியாவின் வளர்ந்து வரும் தடம் கொண்டாட்டமாகும். இந்த வரலாற்று தருணத்தை குடும்பம் எவ்வாறு குறித்தது என்பதும், சுபன்ஷு விண்வெளியில் இருந்து என்ன சொல்ல வேண்டும் என்பதும் இங்கே.சுபன்ஷு சுக்லா ஹோம்கமிங்: பெருமை, பிரார்த்தனைகள் மற்றும் கொண்டாட்டம் லக்னோவில் விண்வெளி வீரர் காத்திருங்கள்இந்திய விமானப்படையின் அலங்கரிக்கப்பட்ட அதிகாரியான குழு கேப்டன்…
ஜூலை 2025 இல், வருண் மோகன் இணைந்து நிறுவிய ஒரு அதிநவீன AI தொடக்கமான விண்ட்சர்ஃப் உருவாக்கிய தொழில்நுட்பங்களுக்கு கூகிள் 2.4 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்துடன், மோகன் மற்றும் அவரது குழுவின் பல முக்கிய உறுப்பினர்கள் கூகிள் டீப் மைண்டில் சேர்ந்தனர், இந்த ஆண்டு AI திறமை நிலப்பரப்பில் மிக உயர்ந்த இயக்கங்களில் ஒன்றைக் குறிக்கின்றன. இந்த ஒப்பந்தம் ஒரு பெரிய நிதி மைல்கல்லைக் குறிப்பது மட்டுமல்லாமல், மேம்பட்ட AI மேம்பாட்டுக் கருவிகளை அதன் உலகளாவிய மென்பொருள் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒருங்கிணைப்பதற்கான கூகிளின் மூலோபாய உந்துதலையும் சமிக்ஞை செய்கிறது.இந்த மைல்கல் ஒப்பந்தம் AI- இயங்கும் மென்பொருள் வளர்ச்சியில் விண்ட்சர்பின் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், மோகனின் விதிவிலக்கான பாதைக்கு உலகளாவிய கவனத்தையும் கொண்டு வந்தது. உயர்நிலைப் பள்ளியில் ஒரு கணித ஒலிம்பியாட் ஆர்வலரிடமிருந்து எம்ஐடி பயிற்சி பெற்ற பொறியியலாளர் மற்றும் AI தொழில்முனைவோருக்கு அவர் மேற்கொண்ட பயணம் கல்வி,…
ஸ்ரீநகர்: தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார். ஜம்மு காஷ்மீரை மகாராஜா ஹரி சிங் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது 1931-ம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியில் கொல்லப்பட்ட 21 பேரின் நினைவாக ஸ்ரீநகரில் தியாகிகளின் கல்லறை அமைக்கப்பட்டது. அவர்களின் நினைவாக ஜூலை 13-ம் தேதியை தியாகிகள் நினைவு தினமாக தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட சில இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு தியாகிகள் நினைவு தினமான நேற்று உமர் அப்துல்லா டெல்லியில் இருந்தார். இதை பலர் விமர்சித்த நிலையில், நேற்று மதியம் டெல்லியில் இருந்து உமர் அப்துல்லா டெல்லி வந்தார். இதனிடையே, தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்வதற்கு தடை விதித்து போலீஸார் உத்தரவு பிறப்பித்திருந்தனர். மேலும், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் நினைவிடம் நோக்கி உமர் அப்துல்லா சென்றபோது போலீஸார் அவரை…
புதுச்சேரி: புதுச்சேரி புதிய அமைச்சராக ஜான்குமார், நியமன எம்எல்ஏக்களாக மூவர் இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புறக்கணித்தனர். புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முதல்வர் உட்பட 4 அமைச்சர்களும், பாஜக தரப்பில் தேர்வானோரில் பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்களாக நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் இருந்தனர். பதவி கிடைக்காத பாஜக எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர், அமைச்சர் பதவி கோரி வந்தனர். மேலும், அவர்கள் அரசுக்கும், கட்சி மேலிடத்துக்கும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஆட்சி நிறைவு பெறவுள்ள சூழலில் சுழற்சி அடிப்படையில் மற்றொருவருக்கு அமைச்சர் பதவி தர பாஜக தலைமை முடிவு செய்தது. அதேபோல மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்ட 3 எம்எல்ஏக்களையும் மாற்ற முடிவு செய்தது. இதற்காக கடந்த மாதம் 27-ம் தேதி பாஜக அமைச்சர் சாய் சரவணக்குமார் தனது பதவியை…
