சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் துறை செயலர் அமுதா, இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: முதல்வர் தனி பிரிவில் (‘சிஎம் செல்’) பெறப்படும் மனுக்கள், அவரது பயணத்தின்போது மக்கள் தரும் மனுக்கள், அழைப்பு மையத்தில் பெறப்படும் கோரிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தீர்வு காணும் நோக்கில் ‘முதல்வரின் முகவரி துறை’ கடந்த 2021 நவம்பரில் தொடங்கப்பட்டது. அதன்கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டு, கடந்த ஜூன் 30 வரை 1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 2023-ல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் நகர பகுதிகளில் 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. இதன் அடுத்த கட்டமாக தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் நகர்ப்புறத்தில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், ஊரக பகுதிகளில்…
Author: admin
எண்டோ 2025 இல் வழங்கப்பட்ட சமீபத்திய ஆய்வில், சமூக தனிமைப்படுத்தலுக்கும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து மற்றும் வயதானவர்களில் மோசமான இரத்த சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பை வெளிப்படுத்துகிறது. தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கணக்கெடுப்பின் (NHANES) தரவை பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயை உருவாக்குவதற்கும் இரத்த சர்க்கரை நிர்வாகத்துடன் போராடுவதற்கும் கணிசமாக அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தனிமை உங்கள் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். இது உங்கள் உணர்வுகளை பாதிக்காது, ஆனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், மேலும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். ஆம், அது சரி. சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு சில நோய்களை உருவாக்கும் ஆபத்து அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த எண்டோகிரைன் சொசைட்டியின் வருடாந்திர கூட்டமான எண்டோ 2025 இல் வழங்கப்பட்ட சமீபத்திய ஆய்வில்,…
தகுதி, திறமையை நீங்கள் வளர்த்துக் கொண்டே இருந்தால் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் தானாகவே வந்து சேரும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கே.அண்ணாமலை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். சென்னை உத்தண்டியில் இந்து பவுன்டேசன் எனும் அமைப்பு சார்பில் சுத்தானந்தா ஆசிரமத்தில் தலைமைத்துவம், அரசியல் மற்றும் ஆளுமை தொடர்பாக இரண்டு நாள் பயிலரங்கம் நேற்று தொடங்கியது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலத் தலைவருமான கே.அண்ணாமலை, தேசிய மாநில செயலாளர், ஆந்திர பிரதேச மாநிலத்தின் பார்வையாளர் சுனில் தியோதர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். 70 பேர் பங்கேற்றுள்ள இப்பயிலரங்கு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் அண்ணாமலை பேசியதாவது: காமராஜர், கக்கன் போன்றவர்கள் முன்பு தலைவராக இருந்தனர். அரசியல் தலைவராக வர இரண்டு தகுதிகள் முக்கியம். நீங்கள் அரசியல் தலைவராக வேண்டும் என்றால் சமூகம் உங்களுக்கு ஒரு தேர்வை வைக்கும். அதன்படி நீங்கள் மனித நேயம் மிக்கவராக இருக்க…
திருவள்ளூர்: படிப்பை தொடர வசதி இல்லாத தால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரை சேந்த வேங்கடசாமி என்பவரின் மகள் ஹெப் சிபா. இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை: இதனால் மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர்,உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மாணவியிடம் விசா ரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி படிப்பை தொடர வசதி இல்லாததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து திருமுல்லைவாயில் காவல் நிலைய காவலர்கள் சேர்ந்து மாணவியின் படிப்புக்காக உதவ முன்வந்தனர். திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் மில்லர், துணை ஆய்வாளர்கள் பாமா, அமுல் ஆகியோர் மாணவியை நேரில் அழைந்து…
கடலூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, சென்னை தாம்பரத்தில் இருந்து ரயில் மூலம் சிதம்பரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வந்தார். வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமையில் ரயில் நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கீழவீதியில் உள்ள ஓட்டலில் முதல்வர் நேற்று இரவு தங்கினார். இன்று காமராஜர் பிறந்தநாள் என்பதால், காலை 9 மணிக்கு, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அவரது படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, சிதம்பரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்,…
கடன்: இன்ஸ்டாகிராம் ஒலிம்பிக் வெண்கல பதக்கம் வென்றவர் மற்றும் முன்னாள் உலக எண். 1 பூப்பந்து வீரர் சைனா நேவால் தனது கணவர் மற்றும் சக ஷட்ட்லர் பருபள்ளி காஷ்யப்பிலிருந்து ஏழு ஆண்டு கால திருமணத்திற்குப் பிறகு பிரிந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். தனது திருமண பயணத்தின் முடிவை உறுதிப்படுத்தும் ஒரு குறுகிய ஆனால் உணர்ச்சிபூர்வமான செய்தியை வெளியிட்டபோது, சைனாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த செய்தி முதலில் தோன்றியது.சைனாவின் இடுகை கூறியது, “வாழ்க்கை சில நேரங்களில் வெவ்வேறு திசைகளில் நம்மை அழைத்துச் செல்கிறது; நாங்கள் நமக்கும் ஒருவருக்கொருவர் அமைதி, வளர்ச்சி மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றைத் தேர்வு செய்கிறோம். எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதித்ததற்கு நன்றி”என்று அவர் பதிவிட்டார். அவரது இதயப்பூர்வமான இடுகை தனது கணவருடனான பயணத்தை அங்கீகரித்து, அந்த நேரத்தில் ஒன்றாக திரும்பிப் பார்த்தது, நீங்கள் உங்கள் தனி வழிகளில் சென்றாலும், அது மரியாதையுடன் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.கடன்: Instagram/@nehwalsainaஇருவரும் 2018…
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை உயரக் கூடும். இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்ததாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கப் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மேற்கு வங்க பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 15) ஓரிரு இடங்களிலும், 16 முதல் 20-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில்பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்…
பல பெரியவர்கள் மோசமான தூக்கத்துடன் போராடுகிறார்கள், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கின்றனர். மெக்னீசியம் மற்றும் மெலடோனின் போன்ற தீர்வுகள் பிரபலமாக உள்ளன, ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. இலை கீரைகள் போன்ற உணவுகளில் காணப்படும் மெக்னீசியம், நரம்புகளை அமைதிப்படுத்துகிறது மற்றும் தசைகளை தளர்த்துகிறது, காலப்போக்கில் அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கிறது. தூக்க சுழற்சிகளைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் மெலடோனின் வேகமாக செயல்படுகிறது, ஜெட் லேக் அல்லது ஷிப்ட் வேலைக்கு உதவுகிறது. மனித ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிக முக்கியமானது, இன்னும் 60% க்கும் அதிகமான பெரியவர்கள் தூக்க தரத்தை அனுபவிக்கிறார்கள். தூக்கமின்மை இருதய நோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுக்கு பங்களிக்கும். மன அழுத்தம், உணவு, மோசமான தூக்க பழக்கம், மனநல நிலைமைகள் மற்றும் மருத்துவ நிலைமைகள் தூக்கத்தை பாதிக்கலாம். நிதானமான தூக்கத்தை மீட்டெடுக்க, மக்கள் பல தீர்வுகளுக்கு திரும்புகிறார்கள். சாதனங்களில் வெள்ளை சத்தம் கேட்பது முதல் கூடுதல் வரை இவை உள்ளன. ஆதிக்கம் செலுத்தும்…
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா, அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பில் ராஜகோபுரத்தில் 7 தங்கக்கலசம், கோவர்த்தனாம்பிகை சந்நிதி விமானம், வல்லப கணபதி கோயில் விமானம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. உபயதாரர்கள் மூலமும் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. தமிழ் வேதங்கள் முற்றோதல்: அதன்படி, ஜூலை 10-ம் தேதி மாலை வள்ளி தேவசேனா மண்டபத்தில் 75 யாக குண்டங்கள் அமைத்து 200 வாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முதல்கால யாக பூஜை தொடங்கியது. இரண்டாம் நாள்,…
சென்னை: மருத்துவத் துறையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேசிய மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவர் தின விழா- ஆளுநர் ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மருத்துவ ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகித்து மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் 50 ஆளுமைகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது: மருத்துவர்களை ஒவ்வொரு நாளும் போற்றி வாழ்த்த வேண்டும். ஏனென்றால் சமூகத்தில் நிகழும் துயரமான தருணங்களில் நம் நினைவுக்கு முதலில் வருவது மருத்துவர்கள்தான். அதனால்தான் அவர்களை உயிருள்ள கடவுள் என்றழைக்கிறோம். நாம் கார்கில் போரில் இழந்த வீரர்களின் எண்ணிக்கையைவிட கரோனா காலத்தில் இழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையே அதிகம். இது மரணத்தையும் மீறிய மகத்தான தியாகமாகும். பாடப்புத்தகங்களில் ஆசிரியர்களை போல, மருத்துவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மருத்துவத் துறையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக…
