Author: admin

இதயத் தசை இரத்தத்தை பம்ப் செய்யாதபோது இதய செயலிழப்பு ஏற்படுகிறது. இதய செயலிழப்பு அறிகுறிகள் சில நேரங்களில் நுட்பமானவை அல்லது எளிதில் தள்ளுபடி செய்யப்படலாம், ஆனால் பொதுவான அறிகுறிகளில் குறிப்பாக செயல்பாட்டின் போது அல்லது படுத்துக் கொள்ளும்போது, சோர்வு மற்றும் கால்கள் மற்றும் கணுக்கால் வீக்கம் ஆகியவை அடங்கும். இதய செயலிழப்பின் முன்னேற்றம் படிப்படியாக இருக்கும், காலப்போக்கில் அறிகுறிகள் மோசமடைகின்றன. இந்த அறிகுறிகளின் ஏதேனும் கலவையை நீங்கள் அனுபவித்தால், குறிப்பாக அவை தொடர்ந்து அல்லது மோசமடைந்து வந்தால், மருத்துவரை அணுகுவது மிக முக்கியம். இதய செயலிழப்பு ஒரு அமைதியான கொலையாளியாக இருக்கலாம், மேலும் தாமதமாகிவிடும் முன் அறிகுறிகளை அங்கீகரிப்பது அவசியம்.சரியான சிகிச்சையானது இதய செயலிழப்பின் அறிகுறிகளை மேம்படுத்தக்கூடும், மேலும் சிலருக்கு நீண்ட காலம் வாழ உதவும். வாழ்க்கை முறை மாற்றங்கள் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தலாம். உடல் எடையை குறைக்க முயற்சிக்கவும், உடற்பயிற்சி செய்யவும், குறைந்த உப்பு பயன்படுத்தவும், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்…

Read More

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஒருசில பழங்குடி சமூகங்களில் ஒரே குலம் அல்லது கோத்திரத்தை சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கோராபுட் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் காளைகளை பூட்டுவது போல நுகத்தடியில் பூட்டி கிராம மக்கள் நிலத்தை உழச் செய்தனர். அப்போது குச்சியை கொண்டு அந்த ஜோடியை அடிக்கவும் செய்தனர். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒடிசாவில் கஞ்சமஜிரா என்ற கிராமத்தில் ஒரு பெண் தனது அத்தை மகனை திருமணம் செய்து கொண்டதற்காக அவர்களை சில நாட்களுக்கு முன் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்தனர். இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Read More

பெங்களூரு: தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) பெங்களூருவில் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த சரோஜா தேவிக்கு நேற்று காலை 9.30 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுதினர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக சரோஜா தேவியின் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. சரோஜா தேவியின் உடலுக்கு கன்னட முன்னணி நடிகர்கள் சிவராஜ் குமார், உபேந்திரா, கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பெங்களூருவை சேர்ந்த ஏராளமான எம்ஜிஆர் ரசிகர்கள் அவருக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். சரோஜா தேவியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா,…

Read More

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் வழக்​கில் 2 நீதிப​தி​களும் மாறு​பட்ட தீர்ப்பு வழங்​கி​யிருப்​ப​தால் 3-வது நீதிப​தி​யின் விசா​ரணைக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டது. இதையடுத்து இந்த வழக்கை விசா​ரிக்​கும் 3-வது நீதிப​தி​யாக ஆர்​.​விஜயகு​மார் நியமிக்​கப்​பட்​டார். அதைத்​தொடர்ந்​து, இந்த வழக்கு நீதிபதி ஆர்​.​விஜயகு​மார் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி, “2 நீதிப​தி​களும் தள்​ளு​ படி செய்த மனுக்​களும், ஒரே மாதிரி​யான உத்​தரவு பிறப்​பித்த மனுக்​களும் விசாரணைக்கு எடுக்​கப்​ப​டாது. 2 நீதிப​தி​களும் முரண்​பட்டு தீர்ப்​பளித்த (சோலைக்​கண்​ணன், ராமலிங்​கம், பரமசிவம், ஒசீர்​கான் மனுக்​கள்) மனுக்​கள் மட்​டுமே விசா​ரிக்​கப்படும்’’ என்று கூறி வழக்கு வி​சாரணையை ஜூலை 28-க்கு தள்​ளிவைத்தார்

Read More

சென்னை: தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். சேலத்துக்கு புதிய காவல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவு: சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய ஐஜியாக இருந்த மகேந்தர் குமார் ரத்தோட், டிஜிபி அலுவலக தலைமையிடத்து ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி அனில் குமார் கிரி, சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள் ளார். சென்னை பெருநகர காவல் நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் தர்மராஜன், வேலூர் சரக டிஐஜியாக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு பிரிவு எஸ்பி சிஐடி அருளரசு தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் சுஜித் குமார், கோயம்பேடு துணை ஆணையராகவும், அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையர் புக்யா சினேக பிரியா, தேனி எஸ்பியாகவும், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டிய ராஜன், பழனி பட்டாலியன் கமாண்டண்ட் எஸ்பியாகவும், கோயம்பேடு…

Read More

புதுடெல்லி: கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார். பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை​யில் மெஹ்​திக்​கு,நிமிஷா மயக்க ஊசியை செலுத்​தி​னார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சூழலில் அவரை காப்​பாற்ற மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க உத்​தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா அமர்வு முன்பு வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் அட்​டர்னி ஜெனரல் வெங்​கடரமணி ஆஜராகி, ‘‘ஏமனில் நிமிஷா பிரி​யாவை காப்​பாற்ற மத்​திய அரசு சார்​பில் அனைத்து முயற்​சிகளும் மேற்​கொள்​ளப்​பட்​டன. நிமிஷா​வின் குடும்​பத்​தினர் ஏமனில் முகாமிட்டு உள்​ளனர். அவர்​களுக்கு மத்​திய அரசு உறு​துணை​யாக இருக்​கும்’’ என்றார். பின்னர் நீதிப​தி​கள்…

Read More

திருச்சி: ‘அரசியலில் அப்பா – மகன் உறவு மிக முக்கியம், அப்பா பேச்சை கேட்காத மகன் என்கிற பெயரை வாங்கி விடக்கூடாது’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சி திருவெறும்பூர் திமுக முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: இந்த திருமணத்தில் மணமகளுக்கு இரண்டு முடிச்சுதான் போட வேண்டும் என தாய் கூறியதைக் கேட்காமல் மணமகன் மூன்று முடிச்சு போட்டு உள்ளார். காரணம் ஏற்கெனவே மூன்று முடிச்சும் நீங்கள்தான் போட வேண்டும் என மணப்பெண் கூறியிருக்கிறார். மணமகன் தற்போதே மனைவியின் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டார். மனைவியின் பேச்சை கேட்பது தவறு கிடையாது. அதே நேரம் மனைவி பேச்சை மட்டும் கேட்காமல் அம்மா, அப்பாவின் பேச்சையும் கேட்க வேண்டும். அரசியலில் அப்பா – மகன் உறவு மிக முக்கியம். அப்பா பேச்சை கேட்காத மகன் என்கிற பெயரை வாங்கிவிடக் கூடாது.…

Read More

புதுடெல்லி: நமது நாட்டில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமோசா, ஜிலேபி போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பலகைகள் வைக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புப் பலகையில் நாம் தினமும் உண்ணும் அன்றாட சிற்றுண்டி உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல் இடம்பெறவுள்ளது. உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதன் மூலம் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்று…

Read More

புதுடெல்லி: சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வு செய்த இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்​கலத்​தில் பூமிக்கு புறப்​பட்​டார். அவரது விண்​கலம் இன்று பிற்​பகல் அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா பசிபிக் கடலில் இறங்​கு​கிறது. அமெரிக்​கா​வின் அக்​ஸி​யம் ஸ்பேஸ், நாசா, இஸ்​ரோ, ஐரோப்​பிய விண்​வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு பால்​கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்​கலத்தை அனுப்​பின. இந்த விண்​கலத்​தில் இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்​லா, அமெரிக்​கா​வின் பெக்கி விட்​சன், போலந்​தின் ஸ்லா​வோகி உஸ்​னான்​ஸ்​கி, ஹங்​கேரி​யின் திபோர் கபு ஆகியோர் 28 மணி நேரம் பயணம் செய்து கடந்த 26-ம் தேதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடைந்​தனர். கடந்த 28-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் சுக்லா உரை​யாடி​னார். கடந்த 3, 4, 8 ஆகிய தேதி​களில் திரு​வனந்​த​புரம், பெங்​களூரு, லக்​னோவை சேர்ந்த 500 மாணவ,​மாணவி​களு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார். கடந்த 6-ம் தேதி இஸ்ரோ…

Read More

வடிவம், அளவு மற்றும் வண்ணத்தை மாற்றும் மோல்கள் மெலனோமாவிற்கான எச்சரிக்கை குறிகாட்டிகளாகும், இது தோல் புற்றுநோயின் கொடிய வடிவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாற்றங்களின் எச்சரிக்கை குறிகாட்டிகள் கவனிக்கப்படாமல் போகும் அளவுக்கு மென்மையாக இருக்கும். இருப்பினும், இந்த மாற்றங்களை மனதில் வைத்திருங்கள்:மோல்களில் சமச்சீரற்ற தன்மை ஏற்படும்போது, இடது மற்றும் வலது பகுதிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன.இந்த உளவாளிகளின் எல்லைக் கோடுகள் கண்ணுக்கு ஒழுங்கற்ற அல்லது மங்கலாகத் தோன்றும்.மோல்கள் பல்வேறு வண்ணங்களைக் காண்பிக்கின்றன மற்றும் அவற்றின் கட்டமைப்பிற்குள் பல வண்ணங்களைக் கொண்டுள்ளன.6 மிமீ விட்டம் அடையும் மோல்கள் ஒரு நிலையான பென்சில் அழிப்பான் அளவோடு பொருந்துகின்றன.புண்கள் வளர்ச்சியின் செயல்முறையின் மூலம் உருவாகின்றன, அதே நேரத்தில் இரத்தப்போக்கு மற்றும் அரிப்பு.புதிய மோலின் திடீர் தோற்றத்திற்கு மருத்துவ மதிப்பீடு தேவைப்படுகிறது. சமச்சீரற்ற தன்மை, எல்லை ஒழுங்கற்ற தன்மை, வண்ண மாறுபாடு, 6 மிமீக்கு மேல் விட்டம் மற்றும் பரிணாமம் அல்லது நேரத்தை சார்ந்த மாற்றங்கள் மூலம் தோல்…

Read More